அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……09

 

 Feb 07th - Rose Day:  Expression on Admiration  

Feb 08th - Propose Day:  Sharing feelings and Commitment 

Feb 09th - Chocolate Day:  Symbol of Joy  

Feb 10th - Teddy Day:  Gesture of warmth and care

Feb 11th - Promise Day:  Focus on trust and Intention  

Feb 12th - Hug Day:  Emotional closeness and Reassurance 

Feb 13th - Kiss Day: Expression of affection 

Feb 14th - Valentine’sDay: Celebration of love and companionship 

பக்கம்: 1760

வணக்கம் நாட்குறிப்பே,
அம்மாவுடன் பேசிய பின்னர் இடைப்பட்ட இந்த நாட்கள் மிகவும் கனமானவை. என் அம்மாவிடம் நான் சொன்னவற்றினை அவர் ஜூரணிக்க நேரம் தேவைப்படும் என்பது எனக்குத்தெரியும். இது அதற்கான காலம். அம்மாவும் நானும் சொற்பமாகத் தான் பேசிக்கொள்கின்றோம். ஆனால் எனக்குப் பொருத்தமற்ற வாழ்வை நான் நிராகரித்திருப்பதும் நான் விரும்புவதாக அவரிடம் சொல்லியிருக்கின்றதுமான இரண்டுமே ஒரு தாயினால் அவ்வளவு எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியாது என்பதும் எனக்குத் தெரிந்திருக்கின்றது. அம்மா இறுதியாக என்னிடம் சொல்லியது இ;ன்றும் எதிரொலித்துக்கொண்டுதானிக்கின்றது. எதற்கும் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் மகள் என அம்மா சொல்லியிருப்பதிலும் நியாயமில்லாமலில்லை. ஆனாலும் அம்மா என்னுடைய விருப்பத்திற்கு மதிப்பளித்திருந்த அந்த நேர்மை நான் இதுவரை சந்தித்தவர்களிடம் கண்டதில்லை. 


பக்கம்: 1775

என் நாட்குறிப்பே,
எனக்கு ஓவென்று அழவேண்டும் போலிருக்கின்றது. நீ அஃறிணை. உனக்கு உணர்வுகள் புரியுமா? நேற்று நான் இதேநேரம் இருந்த மனநிலைக்கும் இன்றுள்ளதற்கும் இடையேயான தூரம் மிக மிக நீண்டது. நேற்று நாட்டில் முதன்முதல் வழங்கப்பட்ட விருதொன்றினை பெற்றிருந்தேன். இடம்பெற்ற இடமும் இரு தினங்களுக்கு முன்னர் தான் திறக்கப்பட்டிருந்தது. விருது வாங்க போவதாக சொன்ன போது புதிய இடம், புதிய நிகழ்வு என என் மாணவியொருவரும் இணைவதற்கு கெஞ்சியதால் கூட்டிப்போயிருந்தேன். விருது நிகழ்வு இரவு பதினொன்றினையும் தாண்டி போய்கொண்டிருந்தது. அம்மாவும் எம்முடன் வந்திருந்தார். எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென என்னுடைய மாணவி “ மிஸ் நீங்க சேரிடம் விருப்பம் கேட்டதாம் அவர் வேண்டாம் என்றவராம்…..” என்றாள். எனக்கு அடிநுனி புரியவில்லை. அம்மாவுக்கும் தான். ஆனால் எனக்கு முன்னர் யார், எப்போது இதனை சொன்னது என அம்மா துருவி கேட்டுவிட்டார். அந்த நிமிடத்திலிருந்து அம்மாவின் முகம் மாறியதை நான் அவதானித்துவிட்டேன். அம்மா ஒரு நாளும் மூன்றாம் நபர் முன் குடும்ப விடயம், தனிப்பட்ட விடயம் பேசமாட்டார் என்பதும் தெரியும். 

வீடு வரும் வரை அநேகம் பேசாத அம்மா உடை மாற்றிய பின்னர் என்னை இருத்தி கேட்ட கேள்விகள் இந்த ஜென்மத்திற்கும் போதுமானவை. “ ஒரு ஆண் முகநூலில் இரவு 11 மணிக்கு ஒரு பெண்ணிடம் பேசுவதென்றால் இந்த உறவு என்ன?, ஏன் அந்த பெண்ணிடம் உன்னை குறித்து பேசவேண்டும்? நீ சொன்னது போல் நேர்மையானவர், படித்தவர், முதிர்ச்சியுள்ளவர், நல்ல குடும்பத்தினை சேர்ந்தவர் முக்கியமாக உன்னை நேசிப்பதாக நீ சொன்னவர் செய்யும் வேலையா இது…?”

நாம் ஒருவரை நேசிக்கின்றோம், நேர்மையாக அணுகுகின்றோம், காத்திருக்கின்றோம், எந்த சந்தர்ப்பத்திலும் அவர் மனதை உடைக்க கூடாது என்று நினைத்திருப்போம். ஆனால் உங்கள் உணர்வுகளை, மனதை ஒருவர் உடைக்கும் போது எப்படியிருக்கும் என உணர்ந்திருக்கின்றீர்களா….? இந்த புள்ளியை கடந்திருக்கின்றீர்களா…? மூன்றாம் நபர் என்னை பற்றி பேசிய போது என் அம்மா கண் கலங்கியிருந்ததை நான் பார்த்தேன். அது அவள் வளர்ப்பின் மேல் வந்த சந்தேகம், என் மீது அவள் 28 வருடங்களாக வைத்த நம்பிக்கையின் உடைவு. அவள் கேட்ட கேள்விகளிலும் பார்த்த பார்வையிலும் நிறையவே உடைந்திருக்கின்றேன் நான். இந்த வலி தீர நீண்ட நாளாகும் என புரிகின்றது. 


பக்கம்: 1782

நாட்குறிப்பே,

நிச்சயிக்கப்பட்டவரிடம் எதிர்பார்த்த அன்பும் பாதுகாப்பும் கிடைக்காமல் விலகிவிட நினைக்கின்ற நான். என்ன விலை கொடுத்தாவது என்னை வாங்க நினைக்கின்ற ஒருவர்…. எப்போது நிச்சயார்த்தம் குழம்பும் வீடேறி பெண் கேட்கலாம் என நினைக்கின்ற பலர் என என்னை குழப்ப மேகங்கள் என்னை சுற்றுகின்றன. 

அம்மா இப்போதெல்லாம் என்னிடம் பேசுவதில்லை. குழந்தைகள் மூவரின் மூலமும் வீட்டில் வேலை செய்பவர்கள் மூலமு; தான் பேசுகின்றாள். காத்திருந்து சாப்பிடுவது, காலையில் என்னை வீணையிசைக்க வைத்து கேட்பது, நான் அம்மா மடியில் தூங்குவது எல்லாமே தொலைந்துவிட்டது. அம்மா என்னை நம்பவில்லை. நிச்சயார்த்தம் நிறுத்தப்பட்டதற்கு இந்த தொடர்புதான் காரணமென்று நினைக்கின்றாள். நான் ஒரு காலத்தில் நேசித்தது உண்மை ஆனால் நேரடியாக சொல்லவில்லை. இது பற்றி அவரிடம் பேசியது கூட இல்லை என்று சத்தியம் செய்துவிட்டேன். அவருக்கு இது குறித்து மின்னஞ்சல் அனுப்பியும் பதிலில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் அம்மாவில் மாற்றமில்லை. இது என்னை சுடுகின்றது. தீயாக சூழ்ந்திருக்கின்றது. 


பக்கம்: 1790

இனிய நாட்குறிப்பே,
கடந்த சில நாட்களாகவே பல கதைகள் என்னை வந்து சேருகின்றது. கண்டதும் காதல் என அழைபவருக்கு, கண்ட பெண்களிடம் “பெரிய மனம்” என்று பேசுபவருக்கு, உன்னை நான் சேலையில் படம் பிடிக்கின்றேன் என வழிபவருக்கு, என் உதவியாளராக வா உன் தலையில் குட்டுகின்றேன் என முகநூலில் பெண்களிடம் அலட்டுபவர்களுக்கு, வயது குறைந்த பெண்களிடம் கூட தன்னுடைய பழைய கதைகளை மறைத்து பாலியல் வறட்சிகளை தீர்த்துக்கொள்பவருக்கு என் அன்பு தேட வைக்கும் என நினைத்தது என் முட்டாள்தனம்.நான் விபத்தால் தேங்கி நின்றாலும் இந்த நாட்களில் பல கதைகள் என்னை நோக்கி வந்து சேருகின்றன. எந்த அக்காவிடம் உதவிகேட்க நினைத்தேனோ அதே அக்கா அவர் வீட்டில் தங்கியிருந்த நாட்கள் பற்றி என்னிடமே விபரிக்கின்றார். அவர் வீட்டின் வரவேற்பறையில் படங்கள் கூட மாட்டப்பட்டிருக்கவில்லை. அவர் படுக்கையறையில் ஒரு மேசை, கட்டில் என அந்தரங்கங்களை கடைபரப்புகின்றார். அவருக்கும் இன்னுமொரு இளம் ............குமான நெருக்கத்தை என்னிடமே சொல்கின்றார். மிரிச… மௌன்ட்லாவனியா… கேரளா… இந்தியா என அவருடன் நீண்ட பயணங்கள் பற்றி பல பெண்களின் பல கதைகள்….. ஆக வெளியில் தான் நீரோடை உள்ளுக்குள் குப்பைகள் நிறைந்த சாக்கடை நினைத்த கணங்களை நினைத்து அருவருப்பாகவிருக்கின்றது…. இந்த நிமிடம் இந்த நிலம் பிளந்து என்னை விழுங்கிவிடாதா என்றிருக்கின்றது. 

பக்கம் : 1793

வணக்கம்,
இன்று என் பெரியண்ணாவின் முன் குற்றவாளியாக நின்றிருந்தேன் நான். சத்தியமாக என்னுடைய நினைவ தெரிந்து என் அண்ணா என்னை பெயர் சொல்லி கூப்பிட்ட நாள் இது தான். நிச்சயார்த்த்தினை நான் உடைந்துக்கொள்ள முயன்றது கூட அவர்கள் பார்வையில் பெரிதாக படவில்லை. ஆனால் என் மேல் பூசப்பட்ட பழி இன்னும் ஈரம் காயாமல் தான் இருக்கின்றது. எனக்கும் அவருக்கும் தொடர்பிருந்திருக்க வேண்டும் அதனால் தான் அவ்வாறு அவர் இன்னொரு பெண்ணிடம் பேசியிருக்கின்றார் என என் மொத்த குடும்பமும் நம்புகின்றது. இது எனக்கு வலிக்கின்றது. நம்மை அல்லது நாம் ஒருவரை நேசித்து தோற்றுப்போகின்றோம் என்பதை விடவும் வலியானது நம் தூய்மையான அன்பு களங்கப்படுவது தான். அப்பாவை இழந்திருக்கின்றேன், எம் குடும்பம் பல இழப்புகளை சந்தித்திருக்கின்றது ஆனால் நான் முதன் முதல் அனாதையாக உணர்ந்த தருணம் இது தான். 

பக்கம் : 1797

இனிய நாட்குறிப்பே.
அதிகாலையில் புது இலக்கத்திலிருந்து அழைப்பு. நிச்சயிக்கப்பட்டிருந்தவரின் நண்பர் ஒருவர் தான் பேசினார். “தன்னால் என்னை விட்டுப்போக முடியாது என்றும் என்னைக்குறித்து தான் நிறைய திட்டங்கள் ஏற்கனவே வைத்திருப்பதாகவும்” அவர் தெரிவித்தாக கூறினார். என் உள்ளுணர்வின் படி அவர் அருகில் தான் நிற்கின்றார் என புரிந்திருந்தது. எனக்கு என்ன மொழியில் புரியவைப்பது என்பது விளங்கவில்லை. என்னளவில் ஒரு பந்தம் மனம் சார்ந்து அமைய வேண்டும். இந்த பந்தம் ஒரு தலைமுறைக்கான பந்தம். சின்ன சின்ன அன்பு, அக்கறை, புரிதல், குட்டிச்சண்டைகள், ஊடல்கள் இல்லாத இந்த உறவிற்கான பெயரென்ன? ஒரு இயந்திர மனிதனுடன் என்னைப் போன்ற ஒருவர் வாழ்வது சாத்தியமாகுமா?

என் நண்பிகள் சொல்வது போன்று அமெரிக்க வாழ்க்கை, வைத்திய நிபுணரான கணவர், கம்பீரமான ஆண், நிறைந்த பணம், சொத்து, குலம், கோத்திரம் மட்டும் போதுமா? நண்பிகள் அடிக்கடி என்னை கண்டிப்பது போன்று செட்டிலாவதற்கு ஒரு வாழ்க்கை தேவையா? வாழ்தல் என்பது மென்மையான கவிதையாக இருக்க வேண்டாமா? சிறு சிறு பகிர்தல்கள் வேண்டாமா? ஆழ்ந்த நேசிப்பு வேண்டாமா?

நான் இங்கு நினைப்பதை அவர் அங்கு உணரவேண்டும்… ஒரு நாளில் ஒரு நிமிடமாவது என்னிடம் பேசவேண்டும்…. என்னை , என் குடும்பத்தை, என் மண்ணை நேசிக்க வேண்டும், இன்னாரின் துணைவி என்பதை நான் தலை நிமிர்ந்துசொல்ல வேண்டும்…. வீடென்பது வெறும் கல், மண்ணல்ல. அது உணர்வுகளின் கூட்டிணைவு என்பது புரிந்திருக்க வேண்டும். திருமணத்தின் போதும் கூட சம்பிரதாயத்திற்காக ஒரு மெட்டியை அம்மியில் வைத்து என் காலில் மாட்டினாலும் அடுத்த மெட்டியை தன் உள்ளங்கையில் என் பாதத்தினை ஏந்தி தான் என் இடக்காலின் விரலில் மாட்ட வேண்டும். இது தான் நான் எதிர்பார்க்கும் ஆண்மை. எம் குழந்தைகள் பணம் நிறைந்த மாளிகையில் பிறப்பதை விடவும் உழைப்பும் போராட்டமும், அன்பும் , பண்பும் மிக்கவர்களாக வளர வேண்டும் என்பது தான் என் விருப்பம். 












No comments:

Post a Comment

பதிவுகள்

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பய...

அதிகம் பார்க்கப்பட்டவை