Tuesday, August 26, 2014

ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்பகத்தின் (ETDRC) ஏற்பாட்டில் வட - கிழக்கில் இலவச நூல் விநியோகம்

ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்பகத்தின் (ETDRC) ஏற்பாட்டில் ஸ்கொட்லாந்தின் புக்ஸ் எப்ரோட் நிறுவனத்தினால் வட - கிழக்கில் இலவச நூல் விநியோகம்

ஸ்கொட்லாந்தில் இருந்து உலகெங்கும் சிறுவர்களின் வாழும் கல்வி முன்னேற்றத்திற்காக இலவசமாக புத்தகங்களை வழங்கும் புக்ஸ் எப்ரோட் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்பகத்தின் (ETDRC)  ஏற்பாட்டில் ஈழத்தின் யாழ்ப்பாண பொதுநூலகத்திற்கும் மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 83 பாடசாலைகளுக்கு சுமார் ஒருலட்சத்தி ஐம்பதினாயிரம் ஆங்கில நூல்களை கடந்தமாதம் நூல்களை வழங்கியுள்ளது. பல தடைகளுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியில் இந்த நூல்கள்  வடக்கு – கிழக்கு தமிழ்ப்பாடசாலைகளுக்கும், நூல் நிலையத்திற்கும்  சென்றடைந்திருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு இன்னும் இந்நூல்கள் பகிர்ந்தளிக்கப்படாமல் முடங்கிக்கிடக்கிறது. 

யாழ் நூலகத்திற்கு மாத்திரம் சிறுவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிப்பதற்காக 20,000 ஆங்கிலப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தக விநியோகமானது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் ஒரு நாட்டிற்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்தவகையில் கடந்த வருடம் வழங்கப்படவேண்டிய புத்தகங்கள் இலங்கை அரசின் சுங்க கட்டுப்பாட்டுவிதிகளினால் ஏற்பட்ட தடைகளினாலும், வடமாகாண ஆளுநரின் முட்டுக்கட்டையினாலும் விநியோகத்தில் பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்டது. இப்பெரும் தடைகளை மிகுந்த பிரயர்தனத்தின் மத்தியில் நீக்கி கடந்த மாதம் வடமாகாணத்திலும், திருகோணமலையிலும் பூரணமாக பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டது. 

இந்நிகழ்வானது ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்பகத்தின் நிறுவனர் நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் மிகுந்த பகீரதப் பிரயர்தனத்தின் மத்தியிலேயே விநியோகிக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 2012 இல் ஜனவரி இறுதியில் புக்ஸ் எப்ரோட் நிறுவனத்தின் இயக்குநர் திரு.ஜோன் கால்டர் அவர்களும் ஈரோப்பிய தமிழர் ஆவணக்காப்பக நிறுவனர் நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்களும் இலங்கைக்கு விஜயம் செய்து யாழ்ப்பாண மாவட்டத்திலும் திருக்கோணமலை மாவட்டத்திலும் சில சந்திப்புகளை மேற்கொண்டு தமது நூல் விநியோகத்திற்கான உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை நேரில் கண்டறியமுனைந்தனர்.

வட மாகாண ஆளுநரின் ஜி.ஏ. சந்திசிறியின் சம்மதமின்றி அணுவும் அசையாது என்ற நிலை யாழ்ப்பாணக் கல்வித் திணைக்களத்தில் அன்றைய காலத்தில் நிலவியதால், கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகளுடனான சந்திப்பு பயனற்றதாக அமைந்தது. காரணம் யாழ்ப்பாணக் கல்வித் திணைகள அதிகாரி இவ் ஆங்கில நூல் விநியோகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து ஆளுநருக்கு யால்ரா போட்டுவிட்டார். 

ஆயினும் புக்ஸ் எப்ரோட் நிறுவனத்தின் இயக்குநர் திரு.ஜோன் கால்டர் அவர்கள் இலங்கை லொட்ரிக்கழகத்தினை அணுகியபோது அவரகள் இந்நூல் விநியோகத்தை வழங்குவதற்கு பூரண உதவியை வழங்கினர். இதன்பின்னர் யாழ்ப்பாணப் பொது நூலகம் மற்றும் சில பாடசாலைகளுக்கு விஜயம் செய்து எதிர்கால நூல் விநியோகம் பற்றிக் கேட்டறிந்தார். இதன்போது சில பாடசாலை அதிபர்களது அலட்சியப் போக்கை அவர்களால் அவதானிக்கப்பட்டிருந்த்து அவர்களது கசப்பான அனுபவமாகும். 
 
யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் சிறுவர்களுக்கான இரவல் வழங்கும் பிரிவொன்றை உருவாக்கும் வகையில் இரண்டு பலட் கொள்ளளவிலான (ஒரு பலட்டில் 230 பெட்டிகள் உள்ளடக்கப்பட்டது) சிறுவர் நூல்களையும், நல்லூர் பிரதேச சபையின் மூன்று நூலகங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் ஒரு பலட் கொள்ளளவிலான சிறுவர் நூல்களையும், புக்ஸ் அப்ரோட் நிறுவனம் வழங்கியது. அந்த மூன்று பலட்களுடன்
  • தெல்லிப்பழை யூனியன் கல்லூரி
  • தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி
  • யாழ்.திருக்குடும்பக் கன்னியர்மடக் கல்லூரி
  • சுண்டிக்குளி மகளிர் கல்லூரி
  • ஊர்காவற்றுறை புனித அந்தனிஸ் கல்லூரி
  • யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்
  • வேம்படி மகளிர் கல்லூரி
  • யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
ஆகிய எட்டு பாடசாலைகளுக்கும் வழங்குவதற்காக ஒரு பலட் நூல்களுமாக மொத்தம் நான்கு பலட்களில் சுமார் 50,000 நூல்கள் யாழ்ப்பாணப் பொதுநூலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து உரிய பாடசாலைகளுக்கும் பொது நூலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.  
 
 
அடுத்து திருக்கோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட நூல்களிலிருந்து ஒரு தொகையை கிளிநொச்சி மாவட்டத்தின் எட்டுப் பாடசாலைகளுக்கு நல்லெண்ண உதவியாக வழங்கப்பட்டன.இதில்
  • அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம்
  • பாரதிபுரம் மகா வித்தியாலயம்
  • இராமநாதபுரம் மேற்கு அரசாங்க தமிழ்கலவன் பாடசாலை
  • ஜெயபுரம் மகா வித்தியாலயம்
  • வேராவில் இந்து மகா வித்தியாலயம்
  • இத்தாவில் வேம்பொடுகேணி கத்தேலிக்க தமிழ் கலவன் பாடசாலை
  • முருகானந்தா பாலர் பாடசாலை
  • பூநகரி முட்கொம்பன் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை
ஆகிய எட்டு பாடசாலைகளுக்கு சுமார் 10,00 வரையான நூல்கள் வழக்கப்பட்டுள்ளன. மேலும் திருக்கோணமலை மாவட்டதிலுள்ள  

  • ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி
  • ஓர்ஸ் ஹில் விவேகானந்தா கல்லூரி
  • ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரி
  • மெதடிஸ்ட் பெண்கள் கல்லூரி
  • ஸாஹிராக் கல்லூரி
  • உப்புவெளி செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயம்
  •  புனித பிரான்சிஸ் சேவியர் மகா வித்தியாலயம்
  • நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம்
  • தம்பலகாமம் ஆதிகோணேஸ்வர மகா வித்தியாலயம்
  • மூதூர் கிளிவெட்டி மகா வித்தியாலயம் 
  • தோப்பூர் பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி
  • மூதூர் முஸ்லிம் பெண்கள் கல்லூரி
  • சீனன்குடா நாலந்தா மகா வித்தியாலயம்
  • கிண்ணியா முஸ்லிம் மகா வித்தியாலயம் 
  • மூதூர் அன்-நாகர் பெண்கள் மகாவித்தியாலயம்
  • பாலையூற்று ஸ்ரீவாணி வித்தியாலயம் 
  • பட்டித்திடல் மகா வித்தியாலயம்
  • மூதூர் ஈச்சிலம்பற்று ஸ்ரீ செண்பக மகா வித்தியாலயம்
  • சேனையூர் மத்திய கல்லூரி
ஆகிய  19 பாடசாலைகளுக்கு 45,000 ஆங்கில நூல்கள் சென்றடைந்துள்ளன. 
மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள 
  • கிரான் மகாவித்தியாலயம்
  • கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயம்
  • சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயம்
  • கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயம்
  • வம்மிவட்டுவான் வித்தியாலயம்
  • கதிரவெளி விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்
  • குமாரவேலியார் சித்திவிநாயகர் வித்தியாலயம் 
  • செங்கல்லடி மத்திய கல்லூரி
  • தன்னாமுனை புனிதவளனார் மகா வித்தியாலயம்
  • மட்டக்களப்பு இந்துக் கல்லூரி
  • பிள்ளையாரடி நல்லையா வித்தியாலயம்
  • தளவை விக்கினேஸ்வரா வித்தியாலயம்
  • அரசடி மகாஜனா கல்லூரி
  • திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலயம்
  • அமிர்தகழி ஸ்ரீசித்திவிநாயகர் மகா வித்தியாலயம்
  • ஸ்ரீமாமாங்கேஸ்வர்ர் வித்தியாலயம்
  • ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயம் 
  • குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம்
  • ஆரையம்பதி மகா வித்தியாலயம்
  • மஞ்சத்தொடுவாய் பாரதி வித்தியாலயம்
  • ஊரணி சரஸ்வதி வித்தியாலயம்
  • மட்டக்களப்பு சென் மைக்கேல் கல்லூரி
  • மைலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயம்
  • மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரி 
  • நாவற்காடு விலவட்டவன் விநாயகர் வித்தியாலயம்
  • ஈச்சந்தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை 
  • வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம்
  • கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை வித்தியாலயம் 
  • கரடியனாறு மகா வித்தியாலயம்
  • பன்குடாவெளி காயங்காடு கண்ணகி வித்தியாலயம்
  • கொக்கட்டிச்சோலை அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்
  • பன்குடாவெளி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
  • கரடியனாறு மரப்பாலம் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை
  • பன்குடாவெளி இலுப்பையடிச்சேனை அம்பாள் வித்தியாலயம்
  • கரடியனாறு கித்துள்வௌ ஸ்ரீகிருஷ்ணா வித்தியாலயம்
  • பெரியபுல்லுமலை ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை
  • செங்கல்லடி உன்னிச்சை அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை
  • கண்ணன்குடா காயன்மடு அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை
  • கொக்கட்டிச்சேலை முதலைக்குடா மகா வித்தியாலயம் 
  • ஆயித்தியமலை மகிளவெட்டுவான் மகா வித்தியாலயம்
  • முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் 
  • அம்பிலாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம்
  • கொக்கட்டிச்சோலை-கட்சேனை அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை
  • கொக்கட்டிச்சோலை ரோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம்
  • பண்டாரியாவெளி அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை 
  • நாவற்காடு நாமகள் வித்தியாலயம் 
  • மாவடிமுன்மாரி அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை
  • வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம்
 ஆகிய நாற்பத்தியெட்டு பாடசாலைகளுகள் 45,000 நூல்களைப் பெறுகின்றன. எனினும் இப்பாடசாலைகளிடம் இந்நூல்கள் கையளிக்கப்படவில்லை. 2011இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, மன்னார் புனித சேவியர் கல்லூரி, ஊர்காவற்றுறை புனித அந்தனிஸ் கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம், வேம்படி மகளிர் கல்லூரி, காரைநகர் துரையப்பா மத்திய மகா வித்தியாலயம், யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்.திருக்குடும்பக் கன்னியர்மடக் கல்லூரி, யாழ்ப்பாணப் பொது நூலகம், நல்லூர் பிரதேச சபையின் கோண்டாவில் பொது நூலகம் ஆகியவற்றுக்கு தலா ஆறுமுதல் எட்டு பெட்டிகள் வீதம் சிறுவர் நூல்களை விநியோகம் செய்திருந்தார்.

தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், குறிப்பிட்ட சில பாடசாலைகள் நூல்கள் கிடைத்தமை பற்றிய அறிக்கையை புக்ஸ் அப்ரோட் நிறுவனத்திற்கு வழங்கத் தவறியமையால் இந்த நூல்கள் அப்பாடசாலைகளால் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற கசப்பான முடிவிற்கு புக்ஸ் அப்ரோட் நிறுவனம் வந்தமையால் அடுத்த முறைக்கான வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதுடன் அப்பாடசாலைகளின் பெயர்களையும் தமது தொடர் உதவிப் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

இது மேற்படி பாடசாலை அதிபர்களின் நிர்வாக சீர்கேட்டினை சுட்டிநிர்ப்பதாகவே தெரிகிறது. இனியாவது உதவி பெற்ற அனைத்துப் பாடசாலைகளும் தமது அறிக்கையை சமர்நப்பிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாண்டும் மிகுந்த சிரமத்தின் மத்தியில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நூல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக புக்ஸ் அப்ரோட் நிறுவனத்தினால் தங்கள் பாடசாலைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புத்தகங்கள் கிடைக்க வேண்டுமெனில் கீழ்க் குறிப்பிடும் விடையங்களை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 

  1.  நூல்கள் கிடைத்த்தும் அதனை மேற்படி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் வாயிலாகவோ தபால் மூலமாகவோ நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும்.
  2.  சுமார் மூன்று மாதங்களில் மேற்படி நூல்கள் அனைத்தும் பட்டியல் இடப்பட்டு நூலகச் சேர்க்கையில் இணைக்கப்பட்ட பின்னர் கிடைத்தவற்றுள் மிகவும் பயனுள்ள நூல்கள் சிலவற்றின் விபரத்தையும் (ஆக்க் கூடியது 10 நூல்களின் தலைப்பு, ஆசிரியர் பெயர், பாட விடயம் என்பவற்றை குறிப்பிடலாம்), பயன்ற்றதெனத் தாம் கருதும் நூல்களில் சிலவற்றின் விபரத்தையும் (இதுவும் முன்னையது போன்றே 10 தலைப்புகளில் அமையலாம்) பட்டியலிட்டு ஒரு கடித்த்தை பாடசாலை அதிபர் வாயிலாக அனுப்பவேண்டும்.   
  3. நூல்கள் கிடைத்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில், பாடசாலையின் ஆங்கில பாட ஆசிரியரின் கண்காணிப்பின்கீழ் மூன்று பிள்ளைகள், தாங்கள் கடந்தகாலங்களில் வாசித்த புக்ஸ் எப்ரோட் நிறுவனத்தின் நூல்களில் ஏதாவது ஒரு நூலைத் தேந்தெடுத்து அந்த நூல் என்ன சொல்கிறது? அதில் தாம் விரும்பும் அம்சம் என்ன ஆகிய தகவல்களை உள்ளடக்கி, 20 வரிகளுக்குள் அமையும் சிறு விமர்சனம் ஒன்றை எழுதி (மூன்று மாணவர்களின் மூன்று விமர்சனங்களும் ஒன்றாக அனுப்ப்ப்படவேண்டும்) புக்ஸ் அப்ரோட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும்

இவை தவிர தமது நூல்களை கண்காட்சிப்படுத்தமுனையும் பாடசாலைகள், பொது நூலகங்கள் அதுபற்றிய புகைப்படங்களையும் பிற தொடர்பாடல்களையும் அனுப்பிவைக்கவேண்டும் புக்ஸ் எப்ரோட் நிறுவனத்துடன் நேரில் தொடர்புகொள்ள விரும்பும் நிறுவனங்கள் கீழ்க்கண்ட முகவரியுடன் தமது தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம். 

BOOKS ABROAD,
Unit 1,
Richmond Avenue Industrial Estate,
Rhynie,
HUNTLY,
Aberdeenshire,
AB54 4HJ,
SCOTLAND, U K.

(மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய பதிவு இது. எழுத்துப்பிழைகள் மட்டும் திருத்தப்பட்டுள்ளன)



 

 

அதிகம் வாசிக்கபட்டவை