Showing posts with label என் கானம். Show all posts
Showing posts with label என் கானம். Show all posts

மையமும் எல்லையும்

என்
பிடிவாதங்கள்.....
கவலைகள்.....
பொறுமையின்.... 
எல்லைக்கோட்டின்
புள்ளியில் நீ

உன்
வெறுப்புக்கள்....
சந்தேகங்கள்....
விரண்டாவதங்களின்......
மையப்புள்ளியாகி போகும்
நான்…

மையத்திற்கும் எல்லைக்குமான
தூரத்தினை நகர்த்திடாமல்
உன் இறுக்கங்களும்…..
என் மௌனமும்......



மீள் நிரப்புதல்...

எண்ணெய் குடுவைக்குள்
நீரை நிரப்பிடல் உண்டா?
நீரின் மேற்பரப்பில்
எண்ணெய் படலமாக
உன் நினைவுகள்....

சரமாகும் மல்லிகைக்கு
பதில் தாமரையை
கோர்த்திடலாமா...?
நினைவுச்சரங்களின்
ஒவ்வொரு சிக்கிலும் -
நம் சந்திப்புக்கள்...

விஷச்சாடிக்குள்
பாலூற்றிப் பருகுவதும்..
உன் கனவுளை துடைத்தெறிந்து
விட்டு இன்னொருவன்
நினைவை நிரப்புவதும்
சாத்தியமற்றதாகியே
விடுகின்றது...

கவிதைகள்...
கனவுகள்...
நினைவுகள்... அனைத்திலும்
மீள்நிரப்பிட முடிந்திடா
பொருளாகியே
போகின்றாய்.... – நீ
என்னை (மட்டும்) விட்டே...

நாளை என்
மண மேடையும்
மரண மேடையும் - உன்
நினைவுகளாலான
மீள் நிரப்பலினால்
அலங்கரிக்கப்பட கூடும்...
அந்த நிரப்பல்களின்
மெல்லிய விளிம்புகள் வரை
என் இறுதி மூச்சுக்களே
நிரம்பியிருக்கும்....

சில கிறுக்கல்கள்

"அம்மா" உயிர் கொடுத்து
மெய் காக்கும்
உயிர்மெய்யானவள்
அ – உயிர்
ம் - மெய்
மா – உயிர் மெய்




உன்னை நானும்
என்னை நீயும்
தூறலிலிருந்து
காக்க குடையை
விட்டொதுங்கிய
நிமிடங்களில்
யாரைக் காப்பது
என்ற குழப்பத்தில்
முற்றாக
நனைகிறது அதுவும்...
நம்மை போலவே.....





உள்ளங்கவர் கள்வன்

முதல் காதல்
அழியாக்காதல்
அவனோடு….

ள்வனின் பெயர்?
என் முதல்
கவிதையின் தலைப்பு

னம்?
அவனிடம் கேட்டதில்லை

மொழி?
இதுவரை நேரில்
கதைத்ததில்லை
மௌனங்கள் பேசியதுண்டு
காதலுக்கு மொழியேது....

முதல் சந்திப்பு?
தனிமையின் ஒரு கணத்தில்
கண்ணுக்குள் விழுந்தவன்
இன்று இதயத்துள்
நிறைந்துள்ளவன் - என்
கவியின் கதாநாயகன்

ந்திக்காத நாட்கள்?
திங்கள் ஒரு தடவை
தொலைகின்றவன்…. கூடவே – என்
நினைவுகளை
தொலைக்க வைப்பவன்

காதல் பரிசு?
அவனிடமிருந்தான
இனிய இராப்பொழுதுகள்….
அவனுக்கு நான்
கொடுத்த என்னாலான
முதல் பரிசு கவிதை!!

முத்தம்?
பல முத்தங்கள் பறக்கவிட்டதுண்டு
தீண்டிடாத அசைவக்காதல்
எம்முடையது!!

சீண்டல்?
சீ…சீ…. எம் - தூரம்
போதும்
விரதத்திற்கு….

வனை பிடிக்காதவர்கள்?
என் அம்மா – அப்பா
அவன் குறித்தான
தனிமைகளை திட்டியதுண்டு
ஓரிரவில் அவனுடன்
பேசியதற்கு – என்
அண்ணா கன்னத்தில்
அறைந்ததுண்டு!!

நிச்சயார்த்தம்?
குழந்தையே உண்டு!!

குழந்தை?
என் குழந்தைக்கு
அவனைக்காட்டி தான்
சோறூட்டுகின்றேன்

வன்?
சூரியனின் பகைவன்
அல்லியின் காதலன்
தினமும் என்னவனின்
முகவரி சொல்லும்
சந்திரன்!!!

ட?
உள்ளங்கள் தான்
மோதிக்கொள்ளுமா…- என்
இனிய தனிமை
இரவு
விடுதி முற்றம் - அவனை
காதலிக்க இது போதாதா….??


என் மௌனம்….



என் மௌனங்களின்
வலி நீயறிவாயா?
என் வலிகளையெல்லாம்
பெருக்கித்தந்தால்
வைத்திருக்க முடியுமா
உன்னால்……

சிறு சந்தேகங்களும்
வார்த்தை அம்புகளும்
என்னிதயம்
துளைத்ததை நீயறிவாயா?
உன் புறக்கணிப்புக்கள்
என்னை புண்படுத்தியதை
நீயறிவாயா…..

நம்மிடையான ஊடல்களும்
அதன் கடுமைகளும்
என் தலையணையறியும்…..
நாட்குறிப்பேடு அறியும்……
விடுதி குளியலறை அறியும்……
என் பேனையறியும்….
கடதாசி கிறுக்கல்களில் புரிந்திடும்….
நீயறிவாயா…..?
சேர்த்து தந்திடவா
இவற்றையெல்லாம்…….?

வலி வாங்கும் எனக்கு…
வலிக்கும் வார்த்தைகளை
தந்திட முடியும்…
வாங்கிட முடியுமா
உன்னால்…..?

என்றோ ஒருநாள்
என் கையளவான
வார்த்தைகளை மட்டும்
தந்திடுவேன்….
பாறையின் கனத்தோடும்…..
குழந்தையின் மென்மையோடும்….
பூவின் வாசனையோடும்….







மனம் என்பது.....


கருவறை போன்றது – ஒருவனின்
அனுவை சுவைப்பது போன்று
ஒருவரின் நினைவை மட்டும்
சுமங்கள்……

குழந்தை போன்றது
தொலைத்து விடாதீர்கள்
தவித்துப்போய் விடுவீர்கள்…

சிப்பி போன்றது – சிறு
மழைத்துளியை பல்லாண்டு
சுமந்து முத்தாவது போன்று
சுகமான நினைவுகளை சுமந்து
விலையற்ற முத்துக்களை
உருவாக்குங்கள்…..

கல் போன்றது
வலி எனும் உளி கொண்டு
சிலை செய்யப்பழகுங்கள்….

பஞ்சு போன்றது – அதற்காக
பலரின் நினைவுகளுக்கு
பஞ்சனையாக்கிடாதீர்கள்…

கண்ணாடி போன்றது
சிதறிவிட்டதை சேர்த்தாலும்
வெறும் காட்சிப்பொருளாகுமேயன்றி
காயங்களை களைந்திடமுடியாது….


மலர் போன்றது
மாசில்லாமல் பூத்திருங்கள்
மாலையாகும் நாளொன்று வரும்….

மௌன அஞ்சலி


செய்த பின் தான்
ஞானம் உதித்தது - கூடவே
மனதும் வலித்தது…
எனக்குத் தெரியும்
உன்னைப் இனிப்பெறுவதென்பது
முயற்கொம்பென்று…
திட்டமிட்டு செய்யவில்லை
திடீரென்று தான் நிகழ்ந்தது…

மலரைப் பறித்தாலும்
மனம் பதைபதைப்பவள்… - இன்று
உன்னை…..
மன்னித்துவிடு!
என் ஒரு நொடித் தவறு…
நொடித்து விட்டது
உன் வாழ்வை…

என் சமாதானங்கள்….
சமாளிப்புக்கள்…
வாதங்கள்…. – உன்னை
மீட்டுத் தந்திடுமா….?

என் கண நேர அவசரம்….
எத்தனை கனவுகளோ உனக்குள்….?
காதலியிருக்கிறாளா…?
கறுப்பான உனக்குள்ளும்
என்னனென்ன கவலைகளோ…?



உன் இறுதி நிமிடங்களில்
என்ன நினைத்தாய்...?
சாபமிட்டாயா?
இல்லை சாதித்த
திருப்தியுடன் போய் சேர்ந்தாயா...?


என் தவறா…?
படைப்பின் புதிரா…?
பேனை புள்ளியென்று…
தொட்டுவிட்டேன் - சிறு
பூச்சி நீ…. செத்துவிட்டாய்…
கொலை செய்திட்ட
உறுத்தலுடன் மூடுகிறேன்
நாட்குறிப்புடன் கூடவே
என் விழிகளை….- உன்
அகால மரண
மௌன அஞ்சலிக்காக….





(அண்மையில் புத்தகத்தில் இருந்த புள்ளியென்று நினைத்து பூச்சியை நசுக்கிவிட்டேன். அன்று பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது அதன் விளைவே இது..)









பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை