Showing posts with label நண்பர்கள். Show all posts
Showing posts with label நண்பர்கள். Show all posts

மெழுகென உருகும் இரவுகள்

1/3PCS LED Black Candle Lamp Creative Simulation Flame Candle Night Light  Tea Light for Party Home Decoration | Daraz.lk இந்த நாட்கள் உலகின் பல வடிவமைப்பாளர்களுடன் கழிந்துகொண்டிருக்கின்றது. பொதுவாகவே இரு பெண்கள் அல்லது பெண் குழு என்றாலே உடை, நகை பற்றித்தான் பேசுவார்கள் எனும் கற்பிதங்களை உடைத்துக்கொண்டிருக்கின்றோம் நாம். நிகழ்விற்காக அழைக்கப்பட்டு எமக்கு வழங்கப்பட்ட தனித்தனி சிறு வீடுகளில் நால்வர் வீதம் தங்கியிருக்கின்றோம். யார் அந்த நால்வர் என்பது எம்முடைய தேர்வு. சிலர் ஆண்கள்- பெண்கள் என கலப்பாகவும் இருக்கின்றார்கள். எமது வீட்டில் நாம் இருவர். என்னுடன் தங்கியிருக்கும் வடிவமைப்பாளர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர். எல்லோரும் கூட்டுச் சேர்ந்த பின்னர் எஞ்சிய நாம் இருவரும் இந்த வீட்டில் தங்கியிருக்கு முடிவுசெய்தோம். எனக்கும் ஒரு ஆணுடன் தங்குவதை விடவும் இவருடன் தங்கியிருப்பது இலகுதன்மையாக இருக்கும் என்று தான் தோன்றியது. 

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வடிவமைப்பாளர்கள் இங்கு வந்து குமிந்துள்ளோம். கடந்த வருடங்களில் விருது வாங்கிய முதல் நூறு வடிவமைப்பாளர்களுக்கும் இவ் அழைப்பு விடுக்கப்பட்டிருந்துத. அத்துடன் இம்முறை விருது பெறும் புதியவர்களும் இணைந்துள்ளார்கள். என்னைப் போன்று சிலர் இவ்வருடமும் விருது பெறுகின்றார்கள். ஆக மொத்தமாக 140 பேரவளவில் இணைந்துள்ளோம். சிறிய நகரமொன்றில் எமக்கான தங்குமிடங்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. இந்த தங்குமிட ஒழுங்கமைப்பில் முக்கியமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்களும் உண்டு.

1.    பொதுவாக நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் போது பாலின அடிப்படையில் ஆண்களுக்கு தனி பெண்களுக்குத. தனியென தான் தங்குமிட வசதிகள் ஒழுங்கமைக்கப்படுவதுண்டு. ஆனால் இந்த நிகழ்வில் அப்படியல்ல. நாம் யாருடன் தங்கப்போகின்றோம் என்பது எம்முடைய தனி விருப்பு மட்டுமல்ல பொறுப்பும் கூட. அதாவது யாருடனாவது தங்கிவிட்டு அவர் என்னை வலுக்கட்டாயப்படுத்தினார் என்றெல்லாம் புலம்ப முடியாது. நமது விருப்பும் பொறுப்பும் ஏற்கனவே எமக்குத் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. 

2.    இங்கு ஆண் - பெண் என்கின்ற பாலின வேறுபாடு, தேர்வினை விடவும் பாலியல் விருப்புகள் தான் மோலோங்கி நிற்பதாகபடுகின்றது. அதாவது எமது குழுவில் lesbian and Gay போன்றவர்கள் தம்முடைய தேர்விற்கு முக்கியத்துவமளித்துள்ளார்கள். இரு ஆண்கள் தாம் வெளிப்படையாகவே Gay என்று சொல்லிவிட்டு தங்குகின்றார்கள் அல்லது பெண்களும் அவ்வாறு செய்கின்றார்கள். ஆனால் நம் ஊர்களிலுள்ளவர்கள் போன்று அதனை கேலி செய்வதுமில்லை. முறைத்துப்பார்ப்பதும் இல்லை. 

இதெல்லாம் பார்க்கவும் கேட்கவும் நன்றாகவிருந்தாலும் இந்த விடயம் எனக்கு கொடுத்துள்ள டுவிஸ்ட் இருக்கே அதனை சொல்லியே ஆகவேண்டும். ஏற்கனவே எமக்கு இந்த ஒழுங்கு குறித்து மின்னஞ்சலில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அப்போதிருந்தே பலரும் தம்முடைய தங்குமிட தோழர்களை தெரிவுசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நான்கு நாட்களுக்கு முன்னர் இந்நாட்டிற்கு வந்திறங்கிய போது விமான நிலையத்திற்கு வந்திருந்த ஒழுங்கமைப்பாளர்களுடன் இணைந்து தங்குமிடங்களுக்கு போகும் போது நானும் இன்னுமொரு பெண்ணும் இன்னும் பதில் சொல்லவில்லை என்பதால் எஞ்சியிருக்கும் எம்மிருவரையும் ஓரு வீட்டில் தங்கவைப்பதற்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக எனக்கு சொல்லப்பட்டு விருப்பம் கேட்கப்பட்டுத. நானும் இன்னுமொரு பெண்ணுடன் தானே தங்கவுள்ளேன் என்பதால் தலையை சந்தோசமாக ஆட்டியும் விட்டேன். என்னுடைய தங்கவுள்ள மற்ற பெண் வடிவமைப்பாளர் ஏற்கனவே தன்னுடைய நாட்டிலிருந்து முதல் நாள் வந்துவிட்டதாகவும் தங்கவைக்கப்பட்டுவிட்டதாகவும் என்னுடைய தங்க அவரும் சம்மதம் தெரிவித்தாகவும் மேலதிகமாக சொல்ல எனக்கும் அப்பாடா என்று தானிருந்தது.

தங்குமிடத்தில் இறக்கிவிட்டு அழைப்பு மணியை அழுத்தினால் குட்டை முடியுடன் ஆறடி உயரத்தில் சிக்ஸ் பக்கில் சூர்யா மாதிரி ஒருவர் கதவை திறந்தார். அப்போது கூட என்னுடன் தங்க வந்துள்ள பெண்ணின் உறவினர் போல என்று தான் நினைத்து கையை குலுக்கிவிட்டு வீட்டுக்குள் வந்து அந்த பெண்ணின் பெயரைச்சொல்லி எங்கவர் என்று விசாரித்தால் இடி சிரிப்புடன் நான் தான் என்றார் இவர். முதன் முதல் என் ஆசியா புத்தி மண்டையில் குட்டிக்கொண்டது. எமக்குள் ஆண் என்றால் இப்படி பெண்ணென்றால் இப்படியென எழுதாவிதிகள் வைத்துள்ளோம் தானே. அதிலும் இவ்வாறான சமூகத்தினருடன் நீண்டகாலமாக இணைந்து பயணிக்கும் என்னைப்போன்றவர்கள் இன்னும் இவ்வாறான விடயங்களை தலைக்குள் வைத்திருப்பதனை என்னவென்று சொல்வது. எனக்கே என்னை நினைத்து வெட்கமாகவுள்ளது. 

மாற்றுப்பாலினர், பாலின விருப்புள்ளவர்களுடன் தொடர்பும் முன்னெடுப்புகளும் இருந்தாலும் இவ்வாறு தனியே தங்குவது இதுவே முதல் தடவை. வந்தவுடன் குளித்துவிட்டு வெளியே வந்தால் கையில் கோப்பியுடன் நிற்கின்றார் என் அறைத்தோழி. கதவைத்திறந்தவுடன் அவர் நின்ற தோரணையில் பயந்து கையில் கோப்பிக்கோப்பையை வாங்கியவுடன் நன்றி சொல்லி கதவை அடைத்துவிட்டேன் நான். சில நிமிடம் கழித்து தான் நான் செய்த மடத்தனம் புரிந்தது. மெதுவாக கதவைத்திறந்து வெளியில் எட்டிப்பார்த்தால் அவர் தொலைக்காட்சியில் குத்துச்சண்டை பார்த்துக்கொண்டிருந்தார். அருகில் போனவுடன் சனலை மாற்றவா என்று கேட்டார். எனக்கும் இந்த குத்துச்சண்டை, கிறிக்கெட் எல்லாம் பெரிதாக பிடிப்பதில்லை. எனவே நடிக்காமல் “யெஸ் பிளீஸ்” என்றேன். ஆங்கில திரைப்படத்திற்கு மாற்றிவிட்டார். ஒரு சோபாவில் சுருண்டு படுத்தபடி நானும் மற்றதில் அமர்ந்தபடி அவரும் பார்த்துக்கொண்டிருந்தோம். எப்போது கண்ணயர்ந்தேன் என்று தெரியாது. எழும்பிய போது போர்வை போர்த்தப்பட்டு தலைக்கு தலையணையும் செருகப்பட்டிருந்தது. 

எழும்பிய பின்னர் தான் வீட்டவர்களுடன் கதைக்கவில்லை என்று தோன்றியது. வந்தவுடன் ஒலிச்செய்தி அனுப்பிவிட்டு கும்பகர்ணி மாதிரி தூங்கிவிட்டேன். வந்து நான்கு மணித்தியாலத்தின் பின் தான் இந்த ஞானோதயம் வந்துத. பறந்தடித்து வீட்டிற்கு அழைத்தால் அனைவரும் வீடியோ அழைப்பிற்கு வந்துவிட்டார்கள். கதைக்கும் போது என்னுடைய தோழி பின்னால் நடப்பதையும் பார்த்துவிட்டார்கள் .முதலில் யார் இந்த பொடியன் என்று தான் கேட்டார்கள். பொடியனில்லை பெட்டை பொறுங்கள் கதைக்க சொல்கின்றேன் என்று ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து கதைக்கவும் கொடுத்தேன். கதைத்த பின் கூட என்ன இது ஆம்பிள்ளை போலுள்ளது குரலும் அப்படியே தான் என்றார்கள். நல்ல காலம் நம்மட ஆக்கள் இப்படியான நேரத்தில் தமிழில் பேசுகின்றார்கள். அல்லது நானும் மாட்டியிருப்பேன். முடிவில் பகிடியாக இவர் என்னுடைய Boy Friend என்று சொல்லிவிட்டு நானும் கட் பண்ணிட்டன். 

சிறிது நேரத்தில் அவரும் வந்து அமர்ந்து தன்னுடைய வீட்டாக்களுக்கு அழைப்பெடுத்து கதைக்க கொடுத்தார். கதைக்கும் போது அவரின் சகோதரி Are you .....'s Girl friend? என்று கேட்டார். என்னடா இது எமது ஊரில் வாயைப்பிளந்து பார்க்கும் விடயத்தினை இலகுவாக கேட்டு விட்டார் அதுவும் முதல் முறை பேசும் போதே என்பது ஆச்சரியம் தான். எமக்கும் அவர்களுக்குமான கலாசார இடைவெளியும் விளங்காமலில்லை. ஆனால் இதற்கு பின் தான் மதுரைக்கு ஏற்பட்டது சோதனை.  

அழைப்பை துண்டித்த பின்னர் இருவரும் சமைப்போமா என்று கேட்டார். சரியென்று எமக்கு வைக்கப்பட்டிருந்தவற்றினை வைத்து இலகுவான சமையலை இருவரும் செய்து முடித்தோம். சாப்பிடும் போது ஒரு மாறுதலுக்கு எனக்கு விருப்பமான candle light dinner இன்று தயார் படுத்துவமா? என்று கேட்டேன். தலையசைத்து விட்டார். வீட்டில் போதியளவு மொழுகுதிரிகள் இருந்தன. அவற்றினையும் நாம் சமைத்தவற்றினையும் வைத்து முன்னறையை தயார் செய்தோம். எனக்கு இங்கு வைக்க பூக்கள் கிடைத்தால் நன்றாயிருக்கும் எனக்கும் பிடிக்கும் என்றேன். அருகில் கடையிருக்கின்றது. நேற்று இங்கு வந்தபின் மாலையில் உலாத்தப் போகும் முன் பார்த்தேன் என்றார். பத்து நிமிடம் பொறு வருகின்றேன் என்று உடனடியாக வெளிக்கிட்டும் போய்விட்டார். வரும் போது கையில் அவ்வளவு பூக்கள். அவற்றினையும் வைத்து அலங்கரித்து மின்குழிழ்களை அணைத்துவிட்டு எம்முடைய மெழுகுதிரி இரவை கொண்டாட ஆரம்பித்தோம். வழமை போன்று நான் மென்பானத்தினை அருந்த தனக்கு பியர் பிடிக்கும் என எமக்கு வைக்கப்பட்டதில் இருந்து எடுத்து அருந்த ஆரம்பித்தார். 

அதுவரை எம்முடைய பயணம் நாம் சமர்ப்பித்த வடிவமைப்புக்கள் குறித்து பேசியபடி இருந்த உரையாடல் தனிப்பட்ட விடயத்திற்கு திரும்பியது. போதையும் அவருக்கு சற்று ஏறிவிட்டதால் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்ததை நானும் உணரத்தொடங்கினேன். தான் குடும்பத்தில் கடைசி பிள்ளை என்றும், தான் படிக்கும் போது காதல் இருந்ததாகவும் அவள் தன்னை விட்டு போய்விட்டதாகவும் கூற ஆரம்பித்தார். அவரது காதல் கதையில் "She" வந்தது முன்னர் உறைக்கவில்லை. அடிக்கடி வர ஆரம்பித்த போது தான் கேட்டேன். தான் லெஸ்பியன் என்றும் தனக்கு காதலி இருந்ததாகவும் அவள் நினைவாக கையில் பச்சை குத்தியதாகவும் பின்னர் அந்த பிள்ளை வேறொரு ஆணை விரும்பி திருமணம் செய்துவிட்டதாகவும் கூறினார்.. கடைசியில் சொன்னது தான் ஹலைட். “ நான் உன்னைப் போன்ற தமிழ்ப்பெண்ணை காதலித்திருந்தால் என்னை விட்டுப்போயிருக்க மாட்டாள்” என்பது தான் அது.

சில ஆண்களிடம் இந்த வசனத்தினை கேட்டிருக்கின்றேன். ஒரு பெண் என் முன்னால் அமர்ந்து சொன்னது இது தான் முதல் தடவை. எனக்குள் பிரளயம் ஆரம்பித்துவிட்டது. சாப்பிட்டதும் சமிபாடடையாமல் இடையில் நின்றுவிட்டது. போதாதற்கு எழுந்து அருகில் வர ஆரம்பித்தார். எனக்கு டென்சனாகி சடாரென எழுந்து அறைக்குள் போய் கதவை மூடிய பின் தான் போன உயிர் வந்தது. இரவுத்தூக்கமும் தொலைந்து போனது. எவ்வளவு நேரம் தான் போனை பார்ப்பது…? எப்போது தூங்கினேன் என்று தெரியாது விழிக்கும் போது அறை முழுவதும் நல்ல வெளிச்சம். கதவைத்திறந்து வந்து தானே ஆகவேண்டும். அன்று நிகழ்வின் ஆரம்ப நாள் வேறு…. 

வெளியில் வந்தால் சாப்பாட்டு மேசையில் கோப்பியுடன் ஒரு சிவப்பு நிற ரோஜாவும் இருந்தது. பின்னால் இருந்து காலை வணக்கத்துடன் மன்னிப்பும் கோரப்பட்டது. எந்தத் தவறும் உணரப்பட்டு மன்னிப்பு கேட்கப்பட்ட பின் மறுக்க என்னவிருக்கின்றது…? காலையுணவின் பின்னர் சிறிது நேரம் அமர்ந்து பேசினோம். நானும் என்னுடைய ஈர்ப்பு ஒரு பெண்ணின் மீது வருவதில்லை. நாம் நல்ல தோழிகளாயிருப்போம் என்று நேருக்குநேரே சொல்லிவிட்டேன். 

கடந்த நான்கு நாட்களாக இருவரும் நிகழ்விற்கு ஒன்றாகவே சென்று வருகின்றோம். அன்றும் நிகழ்வு முடிந்து வந்த பின்னர் நேற்று இரவு என்னிடம் பேச வேண்டும் என்றார். மீண்டும் வேதாளம் முருங்கை ஏறிவிட்டதோ என கொஞ்சம் பயமாகத்தானிருந்தது. இன்றும் ஏதாவது எடக்குமுடக்கு செய்தால் ஏற்பாட்டாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய கைகளை பற்றி அழுதார். மீண்டும் மன்னிப்பு கேட்டார். என்னை விரும்புவதாகவும் சொன்னார்.

என்னை விரும்புவது அவர் தெரிவு. நான் விரும்பவில்லை என்பது என் தெரிவு. ஆனால் அவருடன் அமைதியாக அன்று காலையில் அமர்ந்து பேசியது தனக்குப்பிடித்திருந்ததாக தெரிவித்தார். எனக்கு உண்மையில் ஒன்று மட்டும் புரியவில்லை. ஒருவர் மீதான ஈர்ப்பு சில நாட்களில் வந்து விடுமா…? ஒருவேளை முன்னைய தோல்விக்கும் இவ்வாறான அவசரங்கள் தான் காரணமா…? எதுவாகிலும் ஒரு பெண் என்னை நேசிப்பதாக சொன்னது இது முதல் தடவை. இதே விடயத்தினை நம்முடைய ஊர்களில் பொருத்திப்பாருங்கள். எவ்வாறு நாம் அவர்களை அணுகியிருப்போம்? 
ஆண்- ஆண், பெண்- பெண், ஆண்- பெண் காதல் எல்லாமே ஒன்றுதானென தோன்றுகின்றது. இவர் அழுவது அதனை நிரூபிக்கின்றது. ஏன் இந்த உறவுநிலையில் ஒருவரையொருவர் ஏமாற்ற நினைக்கின்றார்கள்…? நிதானமாக கையாண்டால் தான் என்ன? எல்லாம் அன்பு தானே…. இவரது அன்பின் தன்மை எனக்கு இன்னும் சரியாகப்புரியவில்லை. ஆனால் அன்றிலிருந்து என்னிடம் இது பற்றி பேசாத நேர்மை எனக்குப்பிடித்திருக்கின்றது. ஒருவேளை ஆணாயிருந்தால் மறுத்ததற்காக ஏதாவது ஏடாகூடமாக செய்திருக்க கூடும். அல்லது என்னைக் குறித்து கதை கட்டியிருக்க கூடும். குறைந்த பட்சம் என்னை கண்டுகொள்ளாமல் கூட இருந்திருக்க கூடும். ஆனால் இது எதுவுமே இங்கு நிகழவில்லை. 

General Wax & Candle | Valentine's Day! 8 romantic candlelight dinner ideas  - General Wax & Candle – General Wax Candles 

தினமும் காலையில் சாப்பாட்டு மேசையில் எனக்குப்பிடித்த ….. உடன் ஏதாவதொரு நிறத்துடனான ரோஜா காத்திருக்கின்றது.. குளித்து விட்டு வரும் போது உணவுடன் அவரும் காத்திருந்து முந்தைய நாள் நிகழ்வினை கதைக்கின்றோம் நிறைய வடிவமைப்புக்கள் குறித்து பேசிக்கொள்கின்றோம்…. மாலையில் ரோம் நகரைச் சுற்றி வருகின்றோம். எனக்கு பிடிக்கும் என்று சொன்னதற்காகவே அநேக இரவுகள்       ஒழுங்குசெய்யப்படுகின்றது. 

ஆனால் கண்டதும் உடையை வைத்து ஆணென்றும், லெஸ்பியன் என்றவுடன் பாலுறவு வரையும் சிந்தித்த நான் இன்னும் “திருந்த இடமுண்டு” என்று எமது தேர்ச்சியட்டைகளில் குறிப்பிடப்படுவது போல் எனக்குள் சொல்லிக்கொள்கின்றேன். 

சொல்ல மறந்துவிட்டேன். “முதல் இளம் ஆசிய தமிழ்ப்பெண் கட்டட வடிவமைப்பாளர்” எனும் தலைப்பில் அடுத்த மாத "DWell" இதழில் என் பேட்டி வருகின்றது. கடந்த வருடம் 100 ற்குள் இருந்து இவ்வருடம் 75 ற்குள் வந்திருக்கின்றேன். என் தோழி இம்முறை .......  ஆம் இடத்திற்கு வந்திருக்கின்றார். உடை , நகைகளை குறித்து பேசுவதை தவிர்த்து வடிவமைப்புக்கள், வாய்ப்புக்கள், இயற்கையை நாசப்படுத்தாமல் உருவாக்கும் வடிவமைப்புக்கள் என்று நாம் பேசிக்கொண்டேயிருக்கின்றோம். உண்மையான அன்பென்பது நம்மை செதுக்கும் ஒன்று தானே

Dinner in Candle light மட்டுமல்ல ஒரு உறவை Handle with Care ஆக அணுகுவதும் இனிமையானதொரு அனுபவம் தான் 





நான்கு கட்டங்கள்

அண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கான கலந்துரையாடல் ஒன்றில் பங்கு பற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். அதில் பங்குபற்றிய வேளை அறிஞர் ஒருவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்களில் மிகமுக்கியமானவற்றினை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்

பல உயிர்கள் உலகில் வாழ்கின்றன. இவற்றில் மனிதனின் வாழ்க்கையினை வேறுபடுத்திக்காட்டுவது “பகுத்தறிவு” என்பதே. “பகுத்தறிவு"; என்கின்ற ஒன்றை வைத்துக்கொண்டும் கூட சிலவேளைகளில் நமது வாழ்க்கையின் தெரிவுகளை சரியாக தெரிவு செய்வதற்கு தவறிவிடுகின்றோம். இதன் விளைவால் பாதை மாறியும் சென்றுவிடுகின்றோம். நமது வாழ்க்கையில் இவ்வாறு நாம் தெரிவுசெய்து கொள்ள வேண்டியவை மற்றுமு; அவற்றினை தெரிவுசெய்து கொள்ளவேண்டிய தருணங்கள் பல. ஆயினும் மிக மிக முக்கியமாக தெரிவுசெய்ய வேண்டியவை 4 என சாதித்தவர்களின் வாழ்க்கை எமக்குத் தெரிவிக்கின்றது

•    நல்ல நண்பர்கள்
•    தொழில்
•    நல்ல வாழ்க்கைத்துணை
•    பெற்றோர் அல்லது பிள்ளைகள்


நல்ல நண்பர்கள்
குழந்தைப் பருவத்தினை கடந்து அடுத்து நாம் காலடி வைக்கும் பருவம்; மாணவப்பருவம். எமது வாழ்க்கையினை அமைக்கப்போகும் கல்வி மற்றும் பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ளும் பருவம். இப்பருவத்தில் இடப்படுகின்ற அடித்தளம் தான் எமது பிற்காலத்தினையும் சமூகத்தில் எமது அந்தஸ்த்தினையும் தீர்மானிக்கின்றது. இக்காலத்தில் எமக்கு உருவாகின்ற நண்பர்கள் தான் எமக்கான அடித்தளத்தினை அமைப்பதில் முக்கிய அங்கம் வகிக்கின்றார்கள். “உன் நண்பனை யார்? ஏன்று தெரிந்தால் உன்னைப் பற்றிக் கூறலாம்” என்ற முதுமொழி ஒன்றுள்ளது. உண்மையான நண்பன் என்பவன் நாம் பிழை செய்யும் தனக்கு இலாபம்; கிடைக்குமாயின் பேசமால் கூடவே இருந்து கூத்தடிப்பவனல்ல. அல்லது துன்பம் வந்தவுடன் தூர ஓடுபவனுமல்ல. தவறும் போது தட்டிக் கேட்க வேண்டும். இன்னல் ஏற்படும் போது கைகொடுக்க வேண்டும் இதைத்தான் வள்ளுவர் கூட “உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்கின்றார்.
இன்னொரு விடயம் ஆண் - பெண் நட்பு. அன்றைய சமூகம் போன்று பிழையான கண்ணோட்டத்தில் நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையை கடைப்பிடித்தல் சாலசிறந்தது. நமது நட்பு சமூகத்தில் மதிக்கப்படத்தக்கதாக நமது வாழ்கைத்துணைக்கு அறிமுகப்படுத்தக் கூடியளவு இருக்குமாயின் அது தான் உண்மையான பால் வித்தியாசம் கடந்த நட்பு அல்லது போனால் அந்த ஆண் - பெண் உறவில் எங்கோ ஓர் மூலையில் கள்ளத்தனம் ஒளிந்துள்ளது என்பது கண்கூடு. ஒருவேளை நமது உண்மையான நட்பினை எமது வாழ்க்கைததுணைவரோ காதலர்களோ புரிந்து கொள்ளாவிடின் அவர்களுக்கு நிச்சயம்  ஒரு இருண்ட பக்கமுண்டு.
எமது நண்பன் என்பதில் அடுத்து அடங்குவது நல்ல புத்தகங்கள். அதற்காக புத்தகங்கள் எல்லாமே நல்லது என்பது பொருளல்ல. விடயங்களை கற்கும் போது “அன்னப்பட்சியாக” இருக்க வேண்டும். நல்ல விடயங்களை தேடிக் கற்க வேண்டும்.




தொழில்
ஒருவனை சமூகத்தில் அந்தஸ்துள்ளவனாக காட்டுவது அவனது தொழில் மற்றும் பதவி. இங்கு தொழில் பதவி என குறிப்பிடுவது நேர்மையாக கிடைக்கப்பட்டவை மட்டுமே. காக்கா பிடித்து அடிவருடி பல்லிளித்து கிடைத்தவை அல்ல. அத்துடன் இங்கு அந்தஸ்தை கொடுக்க வேண்டுமென்பதால் அவை கட்டாயமாக  றூவைந உழடநச துழடி ஆக தான் இருக்க வேண்டுமென்பதுமல்ல. “செய்யும் தொழிலே தெய்வம்” நமது வயிற்றினை வளர்க்கும் தொழிலை மதிக்க வேண்டும். உயர்விற்காக பாடுபட வேண்டும். அதேவேளை தொழிலுக்காக குடும்ப அன்பை இழந்துவிடக் கூடாது. சிலர் பதவிக்காக ஓடி பாசத்தினை தவறவிட்டு விடுகின்றார்கள். அதிக செல்வமும் ஆபத்தானது. தூக்கத்தினை கெடுத்துவிடும். அளவான சம்பாத்தியம் அன்பான உறவுகள் கடனற்ற வாழ்க்கை இவற்றை ஒரு தொழில் பெற்றுத் தருமென்றால் அது தான் “நல்ல தொழில்”

பெற்றோர் அல்லது பிள்ளைகள்.
“குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்” என்று கூறுவார்கள். உண்மை தாங்க ஒரு பிள்ளை பிழை செய்யும் போது அதை தட்டிக்கேட்பதற்கு பெற்றோர் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பெற்றோரை எதிர்த்துப் பேச மாட்டாகள். அடுத்த விடயம் அவர்கள் முதல் பயில்வது தம் பெற்றோரிடமிருந்து தான். அவர்கள் முன் மாதிரியாக இருந்தாலே போதும் பிள்ளைகள் தானாகவே நல்வழியில் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அடுத்த விடயம் பெண்களுடைய குரல் என்று வீட்டில் உயர்கின்றதோ அங்கு நிச்சயம் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அங்கு தான் பிள்ளைகளுடைய குரலும் பெற்றோரை விட உயர ஆரம்பிக்கின்றது. பிள்ளைகளுடைய குரல் உயரும் போது நிச்சயம் அவர்களை திருத்த பெற்றோரால் முடியாது போகும். இதற்கான பெண்களை , பிள்ளைகளை அடிமையாக வைத்திருக்க வேண்டுமென்பதல்ல கருத்து. “ஆண் கொழுவாகவும் பெண் கொடியாகவும்” இருக்க வேண்டும் என்பது தான் கருத்து

நல்ல வாழ்க்கைத்துணை

நமது வாழ்வின் அடுத்த முக்கியமான கட்டம் நம்மவர்களை தெரிவு செய்தல். நாம் எமது வாழ்க்கைத்துணையை தெரியும் போது நமக்கு மட்டுமல்ல நமது குடும்பத்தவர் , ஏன் எதிர்கால சந்ததியினை உருவாக்கும் போது நமது பிள்ளைகளுக்கு ஒருவர் நல்ல தந்தையாக அல்லது தாயாக இருப்பாரா என்பதையும் சிந்தித்து தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். மிகமுக்கியமான விடயம் “காதல்”. நாம் காதலில் தோற்பதென்பது நமது காதலில் உள்ள பிழைகளால் அல்ல நம்மவர்களை தெரிவு செய்வதில் தான். நேர்மையாக, வெளிப்படையாக எவர் ஒருவர் இருக்கின்றாரோ அவரை தெரிவுசெய்யுங்கள். இதற்காக சிந்தித்து முடிவுகளை எடுக்க நிறைய நேரம் ஒதுக்குங்கள். உங்கள் காதலை பெற்றோருக்கு மறைக்காதீர்கள். காதலைக் கூட கடவுளுடன் ஆரம்பியுங்கள் (அட நானும் இதை தான் நினைத்தேன்) துணை சிறந்தவர்களாக அமையும் போது தான் நம் இலட்சியங்களும் வெற்றி பெறும் குடும்பமும் கோயிலாக மதிக்கப்படும்.

 (ம்ம்ம்ம்……. முதல் மூன்றும் ஓகே கடைசி தான் கொஞ்சம் இடிக்குது…)

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை