Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts

சந்தேகம் எனும் நோய்…..


இன்று உளவியல் தொடர்பானதொரு விடயத்தினை தொட்டுச்செல்ல நினைக்கின்றேன். வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கும் ஒன்று. ஏன் நாம் பிறந்தது இந்தத் தாய்க்குத் தான் என்பது கூட நம்பிக்கையில் தான் தொடங்குகின்றது. அந்த நம்பிக்கை தான் இவர் என் தந்தை என்பது தொடங்கி அனைத்திலும் தொடர்கின்றது. அதற்காக “இவரை அவ்வளவு நம்பினன் ஏமாற்றிவிட்டார்” என்று யாராவது சொன்னால் அவர்களது மண்டையில் 100 தடவை குட்டவேண்டும். நம்பிக்கை என்பதும் மண்குதிரையை நம்பி மோசம் போறதும் வேறு விடயங்கள்.

ஓகே நம்மோட சப்டருக்கு போவம். பொதுவாக இந்த நம்பிக்கை என்ற விடயம் இன்று காதலர்கள், தம்பதியர் மற்றும் நண்பர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றியே கூற விரும்புகின்றேன். அதிலும் குறிப்பாக காதலர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எவ்வாறு விளைவுகளை தோற்றுவிக்கின்றது என்பதை நான் கூறுவதே என் வயதிற்கு பொருத்தமானது என நான் நினைக்கின்றேன். இவ்வாறான உறவுகளிடையே நம்பிக்கையிழந்து சந்தேகம் தோன்றுவதற்கு சில விடங்களை உளவியலாளர்கள் முன்வைக்கின்றனர்.

•    உறவுகளிடையேயான தாழ்வுணர்ச்சி
•    சிறுவயது தாக்கங்கள்
•    தம்மை கொண்டே அடுத்தவரையும் மட்டுக்கட்டுவது.

இந்த முதலாவது விடயத்தினை சரிசெய்ய சந்தேகப்படும் நபரை சூழ இருப்பவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அந்த நபரிடம் அவருக்கேயுரிய விசேட இயல்புகளை அடுத்தவரோடு ஒப்பிட்டு அவர்களுக்கான தனித்தன்மைகளை விளங்கிக் கொள்ள செய்து உறவுகளுக்கிடையான நம்பிக்கையினை வளர்க்க முடியும்.

இரண்டாவது வகையினரை கட்டாயம் உளவியல் வைத்தியரிடம் அழைத்து செல்ல வேண்டும. இதனை நன்றாக கையாளத் தெரிந்த ஒருவரால் தான் சிறுவயதில் ஏற்பட்ட மனக்காயங்களை கண்டறிந்து சரிசெய்ய முடியும்.பக்குவம் இல்லாதவர்கள் இதை அணுகுவதை விட அனுபவம் கொண்டவர்களால் இதனை குணப்படுத்த முடியும்.

மூன்றாவது விடயம் தான் இன்று எனது முக்கிய கருப்பொருள். இன்று அதிகமானவர்களிடம் காணப்படுகின்றபொரு விடயம். தான் கள்ளனாயிருப்பதால் அடுத்தவரையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது. தான் இரவில் அடுத்தவருடன் தொலைபேசியில் கதைத்துப் பழகியவனுக்கு அடுத்தவர்களும் இவ்வாறு தானிருப்பார்கள் என்றதொரு பயம் இருக்கும் தான் பலருடனும் தவறாக இரட்டை அர்த்தத்தில் பழகினால் நம்மைச் சார்ந்தவர்கள் அடுத்தவருடனும் இவ்வாறு தான் பழகுகின்றார்களோ என்றதொரு பயமிருக்கும். நமக்கு அடுத்தவர்களுடன் நல்லதொரு உறவு இருக்குமானால் எம்மவர்களின் நட்பின் தூய்மைதான் கண்ணுக்குத் தெரியும். இன்னும் சிலர் ஏதோ தான் மட்டும் வானத்திலிருந்து அப்படியே குதித்த பரிசுத்தர்கள் போலவும் அடுத்தவர்கள் சேற்றிலேயே இருப்பவர்கள் போலவும் காட்டிக் கொள்வார்கள். இப்படியானவர்களுக்கு அதிக சந்தேகம் அடுத்தவர்களிடம் இருக்கும். காரணம் வெளியில் காட்டிக்கொள்வது ஒரு முகம் உண்மை முகம் வேறு. இன்னொரு பகுதியினர் தம்மிடம் பழகுபவர்கள் நல்லவர்கள் என்றும் அடுத்தவர்களுடனான உறவுகள் மட்டும் பிழையானதென்றுத் தப்பர்த்தம் செய்து கொள்வார்கள். இதற்கும் மேற்கூறியதே காரணம் கூடவே தம்மை நல்லவர்கள் என்று நியாயப்படுத்திக்கொள்வதற்கும் இவ்வாறு கூறிக்கொள்வார்கள். இவ்வானவர்களிடம் நம்மை நிரூபிக்க முயல்வதை விட மௌனமாக விலகுவது சிறந்தது. அல்லது தமது தோல்விகளை குறைகளை மறைக்க அடுத்தவர்களை கெட்டவர்களாக சித்தரிக்க முயல்வார்கள்.

நான் முதல் பதிவுகளில் கூறியுள்ளதினைப் போன்று வாழ்க்கைத் தெரிவுகளை மேற்கொள்ளும் போது மிகவும் நேர்த்தியாகவும் , அதிக நேரம் எடுத்தும் வாழ்க்கை துணையை தெரிவுசெய்யுங்கள். ஏனென்றால் வாழ்வை ஒரு தடவை தான் வாழப் போகின்றோம்.(இது எமது வாழ்க்கை முறைக்கானது. மேலைத்தேய வாழ்வு வாழ்பவர்களுக்கல்ல). நமது துணையென்பது அழகானது, அறிவானது என்பதை விட புரிந்துகொள்பவர்களாக இருப்பது மிகமுக்கியமல்லவா? அல்லது எல்லாம் இருந்தும் வாழ்க்கை சூனியமானதாக தெரியும்.



அன்பானவர்களுக்காக சில நிமிடங்கள்


இன்று உலகம் ரொம்ப சுருங்கி விட்டது என்கின்றோம். ஆனால் அதனுடன் கூடவே அன்பும் சுருங்கிவிட்டது என்று நினைக்கத் தோன்றுகின்றது. முன்னர் எல்லாம் தொடர்பாடல் வசதிகள் ஈரக்கவில்லை ஆனாலும் அன்பு பறிமாற்றல்கள் நிறைந்திருந்தன. எனது குடும்பத்தில் அநேகமானவர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்கள் தங்களவர்களுக்கு செய்த அன்பின் பரிமாற்றங்களை இன்றும் கூறி பெருமைப்பட்டுக் கொள்வதை பார்த்திருக்கின்றேன். ( அம்மா கூட அப்பா தன்னை கிறிக்கட் விளையாடும் சாட்டில் சைட் அடித்ததாக கூறியிருக்கிறார்) எனினும் இன்று பலவித தொழில்நுட்ப தொடர்பாடல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ள போதும் அன்புப்பறிமாற்றல்கள் மிகவும் குறைந்தளவே காணப்படுகிறது.
அன்புக்கு “நீர்த்தன்மை” இருக்குதுங்க. மரத்திற்கு ஒரு வேளை நீர் ஊற்றாவிட்டால் இறந்து விடாதாயினும் வாடல் நிச்சயம் ஏற்படும் அதேபோன்று எந்த உறவுமுறையிலும் அவர்களுக்கான நேர ஒதுக்கல்கள் குறையும் போது புரிந்துணர்வுகள் குறைந்து அன்பில் விரிசல்கள் ஏற்பட தொடங்குகின்றன.
நாம் எவ்வளவோ பெரிய மேலதிகாரியாக கூட இருக்கலாம் ஆனால் குடும்பத்திற்கும் , நமது நண்பர்களுக்கும் , உறவுகளுக்கும் அது அப்பாற்பட்ட விடயம். அலுவலத்தில் மட்டும் தான் நமக்கு கீழ் பலர் நமது பதவிக்கு தலைவணங்க கூடும் ஆனால் உறவில் அன்பு தாங்க பிரதானம். “எனக்கு வேலைப்பளு இருக்கின்றது” என கூறுகின்றபவர்களின் தலையில் நூறு தடவையாவது குட்ட வேண்டும். நம் அன்பைக் கூட வெளிப்படுத்த முடியாதளவு ஒரு அலுவலகப்பணியோ அல்லத நமது பதவியோ அமைகின்றது என்றால் அதைவிட கூலி வேலையாவது செய்து கூழ் குடித்துக்கொண்டு அன்பான , ஆரோக்கியமன வாழ்க்கை வாழ்வது மேல்.
ஆனால் இன்று பல வழிகள் அன்பை வளர்க்க இருக்கின்ற போதும் மனதில் தான் இடமில்லாமல் இருப்பதாக தோன்றுகின்றது. எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும் ஒரு நிமிடம் கிடைக்காமல் தான் போய் விடுமா என்ன? இதில் இன்னொரு வகையும் இருக்கின்றது. இன்று அநேகர்கள் மதுவைப் போன்று சமூக ஊடகங்களுக்கும் அடிமையாகவுள்ளனர். அதிலும் சிலருக்கு முகநூலிற்கு (FaceBook) போகாவிட்டால் தூக்கமே வராது. அதிலும் தன் குடும்பத்தினருடன் ஒரு வார்த்தை பேச நேரமில்லை: அன்பானவர்களுடன் பேசுவதற்கு நேரமில்லை. சிலருக்கு குடும்பத்தில் என்ன தான் நடக்கிறது என்பதும் தெரிவதில்லை. அவர்களை சார்ந்த உறவுகள் தம்மை நினைத்து வருந்துவதையோ தமக்காக ஏங்குவதையோ உணர்வதுமில்லை. ஆனால் முதுகு சொறிவதை கூட முகநூலில் இடுவதற்கு நேரம் எப்படியாவது கிடைத்துவிடுகிறது. பலநேரங்களில் அவர்களை பற்றி தெரிவதற்கு முகநூல் கணக்கினை தான்  திறக்க வேண்டியிருக்கின்றது இதென்ன வாழ்க்கை?  “நமக்காக தான் சமூக ஊடகங்களே தவிர அவற்றிற்காக நாமில்லை” என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஊடகங்களை நீங்கள் கையாள கற்றுக்கொள்ளுங்கள்.
அதற்காக எந்த நிமிடமும் நம்மவர்களை கொஞ்சிக்கொண்டிருப்பதுவும் வாழ்க்கையல்ல. ஆனால் அதுவும் வாழ்வின் ஒரு பகுதி என்பதை மறவாதீர்கள்.
தினமும் எம் அன்பானவர்களுக்கு “Good Morning ” சொல்வதற்கோ அல்லது ஒரு “Hai ” சொல்வதற்கோ எவ்வளவு நேரம் செலவாகிடப் போகின்றது? பணத்திற்காக மட்டும் ஓடிக் கொண்டிருக்காமல் பாசத்திற்காகவும் நேரம் ஒதுக்குங்கள். முன்னரெல்லாம் மார்க்கங்கள் இருக்கவில்லை ஆனால் நிறைய பாசம் மனிதரிடையே இருந்தது இன்று நிறைய மார்க்கங்கள் இருக்கின்றன ஆனால் பாசம் காட்டுவதற்கு தான் நேரம் கிடைக்கவில்லை என்கின்றோம். நாம் எவ்வளவு தான் சாதித்தாலும் அன்பினால் உறவுகளை கட்டியெழுப்பாது விட்டால் மிஞ்சுவது எதுவுமில்லை.
நேரம் மீதமாக இருக்கும் போது நம்மவர்களுக்காக ஒதுக்குவதை விட வேலைப்பளுவின் போதும் ஒரு நொடியாவது அவர்களுக்காக செலவளிப்பது தான் உறவுகளுக்கிடையில் பிணைப்பினை வலுப்படுத்தும். அவர்களுக்காக பணம், பொருட்களை கொடுப்பதை விட சில அன்புப்பறிமாற்றங்கள் தான் அன்பை அதிகரிக்கும். ( இது அன்பிற்காக ஏங்குபவர்களுக்கு மட்டும் பணம், பதவி பார்த்து பழகுபவர்களுக்கல்ல )
வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்கள் உறவிலும் சாதிக்க நினைக்க வேண்டும். குடும்பம் மற்றும் எம்மை சூழவுள்ளவர்களுடன் அன்பானதொரு உறவை கட்டியெழுப்பும் போது அது கூட நம்மை இன்னும் சாதிக்க வைக்கும்.
வாழ்க்கையை வாழ்ந்து கடந்த கால பக்கங்களை புரட்டும் போது பல சந்தோஷங்கள் , சில துக்கங்கள், இனிய நினைவுகள் இருக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு “பாட்டி வடை சுட்ட கதை” சொல்வதை விட நமது அன்பின் நிமிடங்களை சொல்ல வேண்டும். “இது என்ன வாழ்க்கை?” என்று இருக்க கூடாது “இது தான் வாழ்க்கை” என்று இருக்க வேண்டும். வாழ்க்கை என்பத அழகிய கவிதையாக இருக்கவேண்டும் வாழ்தல் என்பது கலையாக இருக்க வேண்டும்.

இனக்கவர்ச்சி, காதல், நட்பு


பொதுவாகவே பருவ வயதில் அனைவருக்குமே தோன்றும் இயல்பான உணர்வுகளே இவை. எதிர்பாலாரிடம் எமக்கு இவ்வாறான உணர்வுகள் தோன்றுகின்றன. இவற்றினை நாம் எவ்வாறு கையாள்கின்றோம் என்பதில் தான் இவற்றின் வெற்றி தங்கியிருக்கின்றது இவற்றிற்கான ஆயுளும் தங்கியிருக்கின்றது. அதிலும் இன்றைய சினிமா மற்றும் பொழுது போக்கு ஊடகங்களும் இவற்றிற்கான அடிப்படைகளை அமைத்து கொடுக்கின்றன.
ஒரு பெண்ணைப்பார்க்கின்றோம் அவளுடைய ஏதோவொன்று எம்மைக் கவர்கின்றது அவளுடனான தொடர்பை ஏற்படுத்துவோ அல்லது அதனை வலுப்படுத்தவோ அடிக்கடி கதைக்கின்றோhம் அல்லது நம் பக்கம் அவள் கவனத்தினை திருப்ப முயற்சிக்கின்றோம் அதேவேளை இன்னொரு பெண்ணைக்காணும் போது முன்னவளுடனான உறவைக் குறைக்கவோ அல்லது அவளில் குறை கண்டுபிடித்து உறவை கழற்றிவிடவோ முயற்சிக்கின்றோம். அதுவும் எப்படியென்றால் அவளுக்கு இன்னொருவனுடன் உறவு இருப்பதாக கற்பனைக் கதைகளையோ அல்லது அவள் நம்மிலும் தகுதியில் உயர்ந்தவனை தான் விரும்புகிறாள் என்றோ நம்மைப் போலவே அடுத்தவர்களையும் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம் அவ்வாறான கவாச்சிகளும் இதன் விளைவுகளையும் பழகத் தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே உணரலாம் அல்லது உண்மைச் சாயம் வெளுக்கத்தொடங்கும். ஒருவரால் நீண்ட காலத்திற்கு நல்லவராக நடிப்பதென்பது கடினம். இந்த கவர்ச்சிகளை நம்பி பெண்களே உங்கள் குடும்ப பெயர், படிப்பு என்பவற்றினை இழந்து விடாதீர்கள். எதுவுத் குறுகிய காலத்தில் வருகிறதென்றால் மீண்டும் குறுகிய காலத்திலேயே சென்று விடும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். “மணலில் எழுதுவது எளிது ஆனால் விரைவில் அழிந்து விடும். பாறையில் எழுத அதிக நேரமெடுக்கும் ஆனால் காலங்காலமாக நிலைத்திருக்கும்.”


அடுத்தது நட்பு. இன்று மெல்ல மெல்ல ஆண் - பெண் நட்பினை சமூகம் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது. நட்பு என்பது தூய்மையான ஒரு விடயம். பெற்றோரிடமோ அல்லது சகோதரங்களிடமோ சொல்லத் தோன்றாத எத்தனையோ விடயங்களை நண்பர்களிடம் தான் சொல்லத் தோன்றும். அதற்காக அந்த நண்பர்கள் நம் வாழ்நாள் முழுவதும் எம்முடன் வரவேண்டுமென நினைப்பதும் நமது நண்பியுடன் இன்னொருவரை இணைத்துக்கதைப்பதும் அபர்த்தமான விடயம். நுண்பர்களை தெரிவு செய்யும் போது நல்லவராக தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்து பழகிக் கொண்டே கெட்டவள் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு மறுபுறம் அவளுடன் உறவாடாதீர்கள். அதற்கு சமூக ஊடக காலமிது எல்லோரும் நண்பர்கள் என்று கதையளக்காதீர்கள். ஆண் என்பதால் எவ்வாறும் நடக்கலாம் நமக்கு நல்லதை கணிக்க தெரியும் பெண்ணென்றால் “முள் மேல் சேலை” என்று சிந்திக்க வேண்டுமென்று நியாயப்படுத்தாதீர்கள் “நண்பனை வைத்துத் தான் நம்மையும் கணிப்பார்கள்” இது ஆண் - பெண் இருபாலாருக்கும் பொருந்தும்

இறுதியானது காதல் சில வேளைகளில் புரிந்துணர்வு நிறைந்த நட்புகள் காதலாக மாறுவதுண்டு இவ்வாறானவை வரவேற்கத்தக்க விடயங்களும் கூட அதுவும் அவள் காதலில் தோற்றுவிட்ட பெண்னென்று தெரிந்த பின்பும் குறுகிய காலத்தில் நமது காதலை ஏற்கவில்லையே என நினைத்து அவளை சந்தேகப்படுவதும்  வார்த்தைகளினால் கொல்வதும் நமது அன்பையே கொச்சைப்படுத்திவிடும். பெண்களில் பலவகையுண்டு பலர் பலவித தேவைகளுக்காகவும் காதலிக்கின்றார்கள். ஆனால் நல்லதொரு குடும்பத்திலிருந்து வந்த மென்மையான உணர்வுகளைக்கொண்ட பெண்னென்றால் தனக்கு வரப்போகிறவரிடமிருந்து அன்பையும் பாதுகாப்பையும் நம்பிக்கையினையும் எதிர்பார்ப்பாள். மீண்டும் ஒருவரில் நம்பிக்கையினை பெறுவதற்கு சற்று நீண்ட காலம் எடுக்கலாம். அவள் காலம் தாமதிக்கும் போது அவள் ஏற்கவில்லை என்பதற்காக அவளை தவிர்க்க நினைப்பதும் குறைகளை கண்டுபிடிப்பதும் “உனக்கு ஈகோ” என்று கூறுவதும் நல்லதல்ல. எல்லோராலும் இலகுவில் ஒன்றை பிரதிபண்ண முடியாது. ஆனால் காலம் தாமதித்த எடுக்கும் முடிவுகள் சீரானதாக அமையும் என்பதை மறக்கக்கூடாது. நமது அன்பையும் . அக்கறையையும் தொடர்ந்தளிப்பதன் மூலம் நம்பிக்கையினை ஏற்படுத்த முயல வேண்டும். என்றொவொரு நாள் உங்கள் அன்பு அப்பெண்ணின் மனதை தொடும் உங்களில் ஏற்படுகின்ற நம்பிக்கை உங்கள் தோளில் சாயவைக்கும்.
எவருக்கும் தம் காதலில் தோற்கும் போது உடனடியாக இன்னொரு காதலில் ஈடுபட தோன்றும். நம்மிடம் புதிதாக காதலை தெரிவிப்பவர்கள் அருகில் போய் நிற்கத் தோன்றும். காதலை மறுத்து நட்புகள் பிரியும் போது மிகவும் வலிக்கும் ஏன் நம்மை நேசித்த ஒருவர் இன்nனொரு பெண்ணை பற்றி கதைக்கும் போது பொறாமைப்பட தோன்றும். அதையும் தாண்டி ஒரு இளவயது பெண் மறுக்கின்றாள் என்றால் எவ்வளவு வலிகள் இருக்கும் என யோசித்துப்பாருங்கள். ஏன் என்றால் வலிகளை நினைக்கும் போது மனம்; சுவரில் அடிபட்ட பந்தாக மீண்டுவிடும் என்பதால் தான். “ எவரும் தோற்றுவிடுவோம் என நினைத்து காதலிப்பதில்லை ஆனால் தோற்றுவிட்டால் காதலை மறுபடி நினைப்பதுமில்லை.” (இது உண்மையாக நேர்மையாக காதலித்து தோற்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்.பலருடனும் நட்பு என்ற பெயரில் நேரம் கடத்தி கடலை போடுபவர்களுக்கல்ல அதன் பின் கழற்றிவிடும் போது “நட்பு” பற்றி வரைவிலக்கணம் படிப்பவர்களுக்கும் அல்ல)

உங்கள் காதல் உண்மையானது என்றால் மாற்றத்திற்காக காத்திருங்கள். தொடர்ந்தும் அன்பு செய்யுங்கள். “உண்மைக்காதல் என்றும் தோற்பதில்லை காதலிப்பவர்களை தெரிவு செய்வதில் தான் தோற்கின்றோம்”. எமக்கு கிடைக்கவில்லை என்பதற்காக பழிவாங்காதீர்கள். வார்த்தைகளால் வதைக்காதீர்கள் காத்திருங்கள் காலம் பதில் சொல்லும்.

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை