Showing posts with label தோல்வி. Show all posts
Showing posts with label தோல்வி. Show all posts

தோல்வி.....

குரு ஒருவர் தன் சிஷ்யன் ஒருவனுக்கு வில்வித்தை கற்பித்து வந்தார். ஒரு மாலை வேளை அந்த சிஷ்யனுடன் திறந்த வெளியொன்றிற்கு வந்த குரு அவன் முன்னால் பொருள் ஒன்றை நிறுத்தினார். பின் தன் சிஷ்யனைப் பார்த்து “உனக்கு விரும்பியளவு எத்தனை அம்புகள் உபயோகித்தாயினும் குறிபார்த்து அம்பெய்” என்று கூறினார். சிஷ்யனும் விளையாட்டாக அம்பெய்ய ஆரம்பித்தான். அவன் எய்த அம்புகளுள் பெரும்பாலானவை குறியை அடைந்ததுடன் சில அக்குறிக்கருகில் குத்திட்டு நின்றன.

சிறிது நேரத்தின் பின் அவனை அழைத்த குரு “ உனக்கு பத்து பொற்காசுகள் தருகின்றேன். விரும்பியளவு அம்புகளை மட்டும் உபயோகித்து குறியை இலக்கு வைத்து அம்பெய்ய வேண்டும்” என்று கூறினார். சிஷ்யனும் தன்னால் முடியும் என்ற எண்ணத்துடன் கூடவே பத்து பொற்காசுகளை பரிசாக பெறவேண்டும் என்ற அவாவுடன் அம்பெய்ய ஆரம்பித்தான். ஆனால் அந்த அம்புகள் குறி தவிர்ந்த அதனைச் சுற்றியிருந்த இடத்திலேயே குத்திட்டு நின்றன. பரிதாபத்துடன் குருவை திரும்பிப் பார்த்தான். (கண்ணில் பத்து பொற்காசுகளை மிஸ் பண்ணிட்டம் என்ற ஆற்றாமையும் அந்த பார்வையிலிருந்தது.)

அவனை அருகில் அழைத்த குரு மீண்டும் அவனிடம் “ விரும்பியளவு அம்புகளை மட்டும் உபயோகித்து குறியை இலக்கு வைத்து அம்பெய்ய வேண்டும். உன் திறமைக்கு பரிசாக என் மகளை உனக்கு திருமணம் செய்து தருவேன்” என்று கூறினார். உடனேயே கண்ணை மூடி கற்பனையில் ஆழ்ந்தான் சிஷ்யன். “ சிவந்த நிறம், கூர் நாசி , மெல்லிடை, கருங்கூந்தல்…….. யப்பா….. என்னா அழகு…. நமக்கா அந்த அழகுப்பெட்டகம் கிடைக்கப்போகிறது.?....... குருவின் கனைப்பு கற்பனைக்கு கடிவாளமிட அம்புகளை எடுத்து வில்லேற்ற ஆரம்பித்தான்.

ஒன்று…

இரண்டு…

மூன்று…

ஐம்பது…

நூறு….

சை… ஒன்று கூட குறியைத் தாக்கியிருக்கவில்லை. (வட போச்சே…)

இப்படித்தாங்க நம் இலட்சியங்களும். நாம் நிபந்தனையற்ற இலட்சியங்களை கொண்டிருக்கும் போது அவை நேர் பாதையில் இடையூறின்றி பயணிக்கின்றன. ஆனால் என்று மனதில் அவற்றை முன்னிருத்தி வேறு விடங்களை பெற்றுக்கொள்ள நினைக்கின்றோமோ அப்போது நம் இலட்சியங்கள்  சிதற ஆரம்பிக்கின்றன. நாம் அடைய நினைக்கும் இலக்கை நோக்கி கவனத்தினை கலைக்காது செல்லும் போது நம் பயணங்கள் வெற்றி பெறுகின்றன. பாதையிலுள்ள கானல்நீரைக் கண்டு அவற்றினை நெருங்குவதற்காக பாதை மாறும் போது நாம் செல்ல வேண்டிய தூரங்கள் அதிகரிக்கின்றன. கானல்நீரினாலும் எதுவும் கிடைக்கப்போவதில்லை.

ஆகவே இலட்சியங்களை மனமாற காதலியுங்கள். பாதைகளில் ஆயிரம் முட்கள் இருக்கலாம். பலவித மிருகங்கள் பயமுறுத்தலாம். பல பள்ளத்தாக்குகள், புதைகுழிகள் இருக்கலாம். ஆனால் சிந்தையில் தெளிவு, மனதில் கடவுள், செயலில் நேர்மை , வார்த்தையில் உண்மை இருக்கும் போது எதுவும் நம்மை , நமது இலட்சியங்களைத் தடுத்திட முடியாது.

நமது இலட்சிய முடிவில் கூட முள் கொண்ட ரோஜா தான் தரப்படும் அதாவது தோல்வியை அருகில் நிறுத்திய வெற்றி தான் கிடைக்கும். முள் குத்தாமல் கவனமாக ரோஜாவினை இரசிக்க வேண்டுமே அன்றி ரோஜாவை எறியவும் முடியாது. முள்ளைப் களைந்திட்டால் ரோஜாவை வைத்திருக்கும் சுவாரஸ்யமும் போய்விடும்.

“தோல்வியைப் பற்றிய பயமே
தோல்வியைக் கொண்டு வருகிறது.
வெற்றியைப்  பற்றிய மிகைப்பட்ட
ஆசை தான் உன் சக்தியை உறிஞ்சுகிறது”



பிற்குறிப்பு
- சிஷ்யன் கடுப்பாகி அம்பெய்தலில் தோற்கடித்து மகளை மிஸ் பண்ண வைச்சிட்டாயே மாமா சொறி குரு என்று கத்தியதும் அது கத்திச் சண்டையாக மாறியதையும் பற்றி நமக்கு இங்கே தேவையில்லை என்பதால் இதை பற்றி நான் விரிவாக சொல்லவில்லை.

“குலமும் குணமும்”


எனக்கொரு உற்ற நண்பனிருக்கின்றான். எனது குடும்ப நண்பனும் கூட. சமூகத்தில் பொறுப்பானதொரு பதவியிலிருப்பவர். நல்லதொரு ஓவியன். நாமிருவரும் அநேகமாக பல விடயங்கள் பற்றி பேசி விவாதித்துக் கொள்வோம். அரசியல் அறிவில் எனக்கு குருவும் கூட. அரசியல், கலை , இசை பற்றி இருவருக்கும் பல ஒன்றுபட்ட எண்ணங்கள் உண்டென்றாலும் எனக்கு பிடிக்காத ஒரு விடயம் அவரது “சதி வெறி” இது தொடர்பில் நாமிருவரும் முரண்பட்டுக் கொண்டாலும் இந்த சித்திரை புத்தாண்டன்று நடந்த ஒரு விடயம் பற்றி சொல்லிக்கொள் வேண்டும்.
எனக்கு கவிஞர் நண்பர் ஒருவர் இருக்கின்றார். இந்த கவிஞருக்கும் ஓவியருக்கும் என்ன பிரச்சினை எனக்குத் தெரியாது (தனிப்பட்ட முறையில் ஏதுமுண்டோ???) அவரைப் பற்றி இவரும் இவரைப் பற்றி அவரும் பேசி ஒரே மோதிக்கொள்வதுண்டு. நேரடியாகவல்ல இவர்களிருவரினதும் வீரமும்  என்னிடம் தான். (இருதலைக் கொள்ளி எறும்பு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்போது தான் புரிகிறது அந்த எறும்பின் அவதி எப்படியிருக்குமென்று). ஆரம்பத்திலிருந்தே என் ஓவிய நண்பனுக்கு அவர் பற்றி நல்ல அபிப்பிராயமில்லை. “எல்லாம் கொஞ்ச காலம் தான் இன்னொன்றை கண்டவுடன் எல்லாம் போய்விடும்…. கவிஞரா? வழிஞ்சலா? என்பது கொஞ்ச நாளில் தெரியும்” என்று ஒரே கூறுவார்.

கடந்த சில நாட்களாக கவிஞர் நண்பர் என்னுடன் பேசுவதில்லை எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்துகொண்டிக்கின்றார் என்பது உண்மை தான். புதுவருடத்தன்று கூட “ என்னை இனி அழைக்க வேண்டாம் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை” என்று குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார். இது நடக்கும் போது எனது குடும்பத்தினருடன் ஓவிய நண்பன் வீட்டில் விருந்திற்கு சென்றிருந்தோம். கவிஞரின் குறுஞ்செய்தி பார்த்து நான் கண்கலங்கியவுடன் இந்த ஓவியருக்குள் சாத்தான் புகுந்துவிட்டது. “என்ன நான் சொன்னது நடந்து விட்டதா?” என்று தான் கேட்டார். எனக்கு கவிஞரை விட்டுக்கொடுக்க மனமில்லை. “அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் வேலையாக இருக்கிறாராம்” என்று முடித்துக்கொண்டேன். ஆனாலும் இந்த சாத்தான் விட்டதா? திரும்ப திரும்ப “குலத்தளவே குணம்” என்று சொல்லி கடுப்பேத்திக்கொண்டிருந்தது.

இந்த நீண்ட சம்ப விபரித்தலுக்குப்பின் ஒரு விடயத்தினை தான் சொல்ல வருகின்றேன். அதென்ன குலம்….? ஒருவனது குலம் அவனது பிறப்பினால் முடிவாகிவிடுவதல்ல குணத்தினால் முடிவாகும் விடயம். ஒரு வேளை அவர் வேலைப்பளுவினாலோ அல்லது வேறொரு கோபத்தினாலோ அவ்வாறு கூறியிருக்க கூடும். அவரும் பொறுப்பானதொரு பதவியிருப்பவர். அதற்காக அவரது குலம் எப்படி காரணமாகிட முடியும். நான் அவருடன் பல மாதங்களாக நண்பியாக இருக்கின்றேன்.. நான் கூட வேலைப்பளுவினால் அதனால் ஏற்பட்ட அழுத்தங்களினால் பலமுறை  காயப்படுத்தியிருக்கின்றேன். அதற்காக வேறொருவருடன் புது உறவு ஏற்பட்டுவிட்டது என்றோ அல்லது பதிதாக நல்லதொன்றை பார்த்துவிட்டேன் என்பதா அர்த்தம்? அல்லது ஏமாற்றப் போகின்றேன் என்பதா பொருள்?
ஆகவே சும்மா சாதிகளை கொண்டு மனித மனங்களை எடை போடாமல் புரிந்துகொள்ளப் பழகவேண்டும். ஒருவனது பண்பும் அவன் அடுத்தவர் மேல் கொண்டிருக்கின்ற அன்பும் தான் அவனது சாதியை தீர்மானிக்கின்றதே அன்றி ஒருவனது பிறப்பல்ல. படித்து பட்டம் பெற்றுவிட்டால் மட்டும் போதாதுங்க அடுத்தவரை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஓவியத்தினை கிறுக்குவதை விட மனிதத்தினை மதியுங்கள் நண்பரே…..

வெற்றி – தோல்வி

வெற்றி தான் தோல்வியின் முதற்படி என்கிறார்கள்
தோல்வியில் தான் பல பாடங்களும் உண்டு....

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு தான் - ஆனால்
எங்கே தோற்கின்றோம் எதில் வெற்றி பெறுகின்றோம் என்பது முக்கியம்

சில விடயங்களில் தோற்பதில் கூட வெற்றி உண்டு
சில விடயங்களில் வெல்வது கூட தோற்பதற்கு சமனாகின்றது...

நோப்போலியனின் வெற்றிக்கு காரணம் அவன் தோல்விகள்
ஹிட்லரின் தோல்விக்கு காரணம் அவனது வெற்றி

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை