Thursday, September 27, 2012

புலிகளின் வதை முகாமில் பெண்கள்

தமிழர்களைப் பொறுத்தவரை வீரம் என்பது மார்பில் வீரத்தழும்பு வாங்குவது. இது ஒருவர் பற்றி கதைப்பதிலும் அவர்களை விமர்சிப்பதிலும் பின்பற்றுவது தான் தமிழனுக்கு அழகு. ஒருவர் பலமின்றி இருக்கும் போதோ அல்லது அவதானமின்றி இருக்கும் போதோ அல்லது அஞ்ஞான வாசம் செய்யும் போதோ முதுகில் குத்துவதல்ல. அதேபோன்று அன்று விடுதலைப்புலிகளுடன் சேர்ந்திருந்து நன்மைகள் பெற்று நம்பிக்கைக்குறியவர்களாக இருந்துவிட்டு இன்று அவர்கள் இல்லை என்றவுடன் தமது கிறுக்கல்கள் மூலம் முதுகில் குத்துகின்ற பலர் இன்று நம்மிடையே இருக்கிறார்கள்.

எனது முகநூலில் பகிரப்பட்ட அவ்வாறான ஒரு கருத்தே இது

http://padippakam.com/document/UTHR/uthcr002.pdf



Monday, September 24, 2012

(என்னை) சாதிக்க வைத்தவனே (நீ) சாதித்ததென்ன?


மரணித்துவிட்ட -நம்
காதலின் முதலாமாண்டு
நினைவஞ்சலி இன்று......

மதமெனும் மதம் கொண்டவர்கள்
மத்தியில் முதுகெழும்பில்லாமல்
புறமுதுகு காட்டி ஓடியவன் நீ
பெண்ணாயினும் போராடி
தோற்றவள் நான்

உனக்கு தெரியுமா? - நம்
காதலில் மன்னித்துவிடு – என்
உண்மைக்காதலில் - நான்
தோற்றாலும் பேடி நீ
என்னை மாற்றியிருக்கின்றாய்
பல வழிகளில்.......


பூவைக் கூட பறிக்க யோசிக்கும் - நான்
பலருடைய மனங்களை கூட – என்
வார்த்தைகளினால் புதைக்கின்றேன்
கடிக்கும் ஈயைக் கூட அடிக்காதவள் - என்
செயல்களினால் பலரின் உணர்வுகளைக் கூட
கொல்லத்தயங்குவதில்லை
மழைத்துளிக்கு ஒதுங்கும் - நான்
நனைகின்றேன் அடைமழையில் - என்
விழி ஈரம் யாரும்
பார்த்துவிட கூடாதென்று.....
என் குடும்பமே உலகம் - என்று
வாழ்ந்த நான் - இன்று
வெளியுலகத்தில் எனக்கென்று – ஒரு
சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கின்றேன்.

உன்னாலான இம்மாற்றங்கள் கூட
என்னை.....
தைரியசாலியாக
தன்னம்பிக்கை கொண்டவளாக
அடுத்தவர் நிமிர்ந்து பார்ப்பவளாக
செதுக்கியிருக்கிறது.

ஒருவேளை உன் கரம் பற்றியிருந்தால் - ஒரு
கோழைக்கு மனைவியாக வாழ்ந்திருப்பேன்
கடவுள் அருள் தப்பிவிட்டேன் - அன்று
என்னை நடுவில் விட்டோடிவிட்டாலும்
உனக்கு என் நன்றிகள் - நீ
தந்த வலிகளால் என்னை புடமிட்டதற்கு...

உன்னை பிரியும் வரை – உன்னை
கேள்வி கேட்டதில்லை – நான்
இன்று உன்னைப் பிரிந்து – ஒரு
வருட முடிவில் கேட்கின்றேன்....

என்னைச் செதுக்கிய – நீ
இந்த ஒரு வருடத்தில் சாதித்ததென்ன?
ஓரு குழந்தைக்கு மட்டும் தந்தையாகியிருக்கிறாய் - இன்றுவரை
ஒருவனுக்கு மாலையிடாவிட்டாலும்
தாய் தந்தையறியா பல குழந்தைகளுக்கு
தாயாக நான்....

Thursday, September 20, 2012

ஏன் என்னைப் பார்த்தான்?

அலுவலக தாமதத்தினை சரிசெய்ய
சன நெருசலை கூட
பொருட்படுத்தாமல் - பேருந்தில்
ஏறினேன்

ஊர்கின்ற பேரூந்து – என்
எரிச்சலை கூட்ட – என்னை
இரு கண்கள் துளைப்பதனை உணந்து
என் பார்வையை திருப்பினேன்...

கைகொள்ளா கருமையான
வாரப்பட்ட சுருள் முடி
அழுத்தமான சிவந்த உதடுகள்
பெண்மை நிறைந்த
மான் விழிகள் - என
அழகனாய் தான் இருந்தான் - அவன்


விழியின் பார்வை மட்டும் - என்
நெஞ்சைப் பார்ப்பதாக உணர – என்னை
அறியாமல் கையால் தடவி – பின்
குனிந்து பார்த்தேன் - ஏதாவது
என் இளமை தெரிகிறதா? என....

நெரிசல் ஒரு புறம் - அவன்
குத்தும் பார்வை ஒருபுறம் - என
அவஸ்தையாயிருந்தாலும் - அவன்
அருகில் போக வேண்டும் என்ற – என்
பெண்மைக்குரிய ஆவல் மட்டும்
அடங்கவேயில்லை..


தரிப்பிடங்களை தாண்டி
குறைந்துவிட்ட சனங்களிடையே
அவனை நோக்கி
மெல்ல நகர்ந்தேன் - எனது
அலுவலக தரிப்பிடத்தினை
சமீபிக்க – என்
கால்களில் கூட – புரியாத
ஒருவித வேகம்

அப்பாடா நெருங்கி விட்டேன் - என்
இன்றைய சங்கல்ப்பம் ஈடேறப்போகிறது – அவன்
கன்னங்களில் - ஒரு கிள்ளு
கைகளில் - ஒரு முத்தம்
எப்படியோ
சாதித்துவிட்ட திருப்தியில் - பேரூந்தை
விட்டிறங்கிய பின்பும்
திரும்பிப் பார்த்தேன் - என்
மனங்கவர் கள்வனை

அப்போதும் கண்கொட்டாமல் - என்
சட்டையின் - கரு நிற
பொத்தானை பார்த்துக் கொண்டிருந்தான் - தன்
பட்டுக்கைகளை அசைத்துக்கொண்டு – அந்த
சின்னஞ்சிறு மழலை.....

மீராபாரதி

Friday, September 14, 2012

படித்ததில் பிடித்தது (01) - ‘துன்பத்தின் பூக்கள்’ (Fleurs du mal) – Chrles Baudelaire




சார்ல்ஸ் போதலயரின் “துன்பத்தின் பூக்கள்” கவிதைத் தொகுப்பில் நான் படித்த கவிதைகளில் எனக்கு பிடித்த சில வரிகள்...
“அந்நியன்” என்ற இந்த வசன கவிதையில்,

 
சொல் மர்ம மனிதனே நீ யாரை அதிகம் விரும்புகிறாய் ?
தாயை? தந்தையை? சகோதரியை ? சகோதரனை ?
- எனக்குத் தாயுமில்லை, தந்தையுமில்லை, சகொதரியுமில்லை, சகோதரனுமில்லை.
- உனது நண்பர்கள்?
- இதுவரையும் நான் அர்த்தம் அறியாத ஒரு சொல்லை உபயோகித்தல்லவா நீங்கள் பேசுகிறீர்கள்.
- உனது தேசம்?
- அது இவ்வுலகில் எங்கிருக்கிறதென அறியேன்.
- அழகு ?
- ஓ அதுவா ,தேவதையானதும் அழிவற்றதுமான அதில் வேண்டுமானால் நான் விருப்புறுவேன்.
 - தங்கம் ?
- நீங்கள் கடவுளை வெறுப்பதுபோல், நான் அதை வெறுக்கிறேன்.
 - அப்படியானால், அசாதாரண அந்நியனே, நீ எதைத்தான் விரும்புகிறாய் ?
 - நான் மேகங்களை விரும்புகிறேன். அதோ அங்கே.. இங்கேயெல்லாம்… தாண்டிச் செல்லும் மேகங்களை, அற்புதமான அந்த மேகங்களை நான்விரும்புகிறேன்.
—–

எதிரி” என்ற தலைப்புடனான கவிதையில்
– ஓ ! உளஉபாதையே, உளஉபாதையே, காலம் வாழ்வை உண்கிறதே.
புலப்படாத எதிரியான எம் இதயத்தை அரிக்கும்(அபத்தங்களிலாலுருவாகும்) சலிப்போ
நாம் இழக்கும் உதிரத்தை அருந்தி கொழுத்தப் பருக்கிறதே.

“மனச்சோர்வு” என்ற கவிதையில் வரும்

நீள் சலிப்பிற் கிரையாகி முனகும் மனதில் மூடியைப்போல்
பாரமுற்றுப் பதிந்த மேகம் சுமையாகும் போது,
சுற்றிய வட்ட அடிவானம் எங்கிருந்தும் அது
எம்மில் இரவினும் இருண்ட பகலை வார்க்கும் போது,

பூஞ்சணம் பீடித்த மேற்சுவர்களில் தலையை மோதி,
பறக்க மறுக்கும் இறக்கைகளால் சுவர்களைத் தட்டி,
வெளவால் ஒன்றைப்போல் நல்லெதிர்பார்ப்பு விட்டுச் செல்லும்
ஈரநிலவறையாய் இவ்வுலகம் மாறிவிட்ட போது,



பரந்த தன் சுவடுகளை விரவும் மழைக்கதிர்கள் பூமியெனும்
மிக அகன்ற சிறைச்சாலைக் கம்பிகளாய்த் தோற்றமுறும் போது,
நம் மூளைகளின் ஆழத்தில் அருவருக்கும் ஊமைப்
புலிநகச் சிலந்திகளின் கூட்டம் வலைவிரிக்கும்போது,



தேசமின்றியவையும் அலைபவையுமான ஆத்மாக்கள்
பிடிவாதமாய்ச் சிணுங்கி அழுவதுபோல்,
ஆவேசமாய்த் திடீரென (ஆலய) மணிகள் அடித்து
ஆகாயத்தை நோக்கித் தாங்கொணாது அலறுகின்றன.

இசையின்றிப் பறையுமின்றி நீள் பாடைகள் என் உயிருக்குள் மெதுவாய்ஊர்வலம் போகின்றன. தோற்கடிக்கப்பட்ட எதிர்பார்ப்பு அழுகின்றது.கொடூரம் நிறைந்த இனந்தெரியாப்பய உணர்வு தன் கருங்கொடியை
என் சாய்ந்த மண்டையோட்டில் சர்வாதிகாரமாய் நாட்டுகிறது
 சிறுவயதிலிருந்து பலவித துன்பங்களையும் அனுபவித்து வந்த இக் கவிஞனின் வரிகளில் மறக்கமுடியாதவை பல அவற்றுள் இவை சில... ஒருவரின் கவிதைகளில் தெரிகின்ற வலியும் வேதனையும் அசலானவைகள் அதில் எவ்வித பாசாங்குகளும் இருப்பதில்லை... இதில் கவிஞர் வலிந்து எழுதாமல் வலிகளை வடித்துள்ளமையை காணலாம்.






Thursday, September 13, 2012

பிரியும் போது புரியும் பிரியம்



அப்பாவிடம் சலுகைகள் பெறும் போதோ
அம்மாவின் சமையலை ருசிக்கும் போதோ
அண்ணாவை வீணாக கோபப்படுத்தும் போதோ
தம்பியிடம் செல்லமாக சண்டையிடும் போதோ – நான்
நினைத்ததில்லை இவைகளை இழப்பேனென்று......

நண்பிகளுடனான அரட்டையின் போதோ
உறவினர்களுடனான கிண்டல்களின் போதோ
அயலவர்களுடனான பகிர்தல்களின் போதோ – நான்
நினைத்ததில்லை இவைகளை இழப்பேனென்று......

அதிகாலை குட்டித் தூக்கம்
அம்மாவின் சூடான கோப்பி
என் கூண்டுக்கிளிகள்
செல்ல நாய்க்குட்டி
தினமும் நான் எண்ணுகின்ற தோட்டத்துப் பூக்கள்
மொட்டைமாடி ஊஞ்சலாட்டம்
ராஜேஷ்குமாரின் துப்பறியும் நாவல்கள்; - என
நீளும் எனது விருப்பப் பட்டியல்களை – நான்
நினைத்ததில்லை இழப்பேனென்று...

என் குடும்பத்தவர்களின் அன்புத் தொல்லைகளையும்
செல்லக்கிண்டல்களையும்
பாசக்கடிகளையும் - ஏன்
என் சின்ன சின்ன ஆசைகளையும் கூட
சுமையாக நினைத்த நாட்களுண்டு

இன்று தனிமையான - என்
விடுதி வாழ்க்கையில் - இந்த
சுகமான சுமைகள் மீண்டும் வராதா?
என ஏங்குகின்றேன்

இப்போது தான் புரிகிறது...
புரியாத பிரியம்
பிரியும் போது புரியும் என்று

மீராபாரதி

Wednesday, September 12, 2012

தெருத்தூசியோனைக்கு செதுக்கிய கவிதை....


Road sweeper
Clean the streets in the rain
Brush,
lift rubbish, walk
Do
it all over again
Switch the brain off
The
brush seems shackled
To
my hands
No
time to stand and admire
The
moving bleak picture of the rain
Of
the wet urban concrete landscape
The
dirt at the edge of the kerbs

Sweep them into little bundles
Manageable
dirty mounds
That
I shovel up in the rain
The
rain wash the roads-edges
Behind
me
The
barrow begins to fill
Fill
from my graft
A
working graft that uses muscles
No
trade- craft that I've got
No
paper of knowledge
I
don't need knowledge
For
what I've been taught
Provide
for my family
The
best that I can
Never be bitter for what
The
world has offered me
I'm
just an ordinary working man
That
works through the bad
And
the good spells of life
Can
you tell that I take pride in my work?
The
side of the road is perfectly clean
No
dirt on the edge of the kerb
For
weeds to take control
Brush
,shovel, lift
Go
through the motion all over again
In
the street filled rain

Author: Charles Fisher, UK



 

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்(01) – தெருத்தூசியோன்

எழுத்தில் கட்டுப்பாட்டு தன்மை என்பது கட்டாயமானது. ஒரு வரம்புக்குள் இருந்து எழுதவேண்டும். யாரையும் பாதிக்காது, சமூதாயத்தை பாதிக்காது ஒரு படைப்பாளனின் படைப்பு காணப்படவேண்டும். வரம்பு என்பது எதுவரை என்பதை ஒரு படைப்பாளனே தீர்மானிக்க வேண்டும். எழுத்தாளனின் படைப்பானது வாசகனை நல்ல வழியில் சிந்திக்க செய்யக்கூடியதாக உருவாக்கப்பட வேண்டும்'  என்கிறார் எழுத்தாளர் ஆர்.சி.ராஜ்குமார்.

'தெருத்தூசியோன்' என பலராலும் அறியப்பட்ட இவர், பிறவியிலே பார்வைப்புலனற்ற நிலையில் இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் பல்வேறு தடைகளையும் தாண்டி இதுவரை 14 நூல்களை வெளியிட்டுள்ளார்.

கவிதை, கட்டுரை என தனது எழுத்தாற்றலை விரிவுபடுத்திக்கொண்ட இவர்,

'நாம் ஒளி இழந்த போது', 'ஆசைகளின் ஓசைகள்', 'சித்திர பூ வெளி', 'நினைவுகளின் நிழல்', 'நான் காணும் உலகம்', 'குமுறும்; குரல்கள்', 'என்னுடைய ஏக்கங்கள்', 'அனுமதிக்கப்பட்ட அனுபவங்கள்', 'உயிர்த்தெழுந்தவருடன் உறவுகொள்வோம்', 'உங்களை நோக்கி' (மாற்றுத்திரண் கொண்டவர்கள்), 'சிந்தனை செய்' (மாணவர்களை பற்றிய புத்தகங்கள்), 'கடகத்துக்குள் கிடுகுகள்' (இறையியல்), 'முழுதாய் முழுகுவோம்' (வெளியிடப்படவுள்ள புத்தகம்) என இதுவரை 14 நூல்களை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், சுன்னாகத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், கிழக்குப் பல்கலைக்கழத்தில் கலைமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்த பின், சமூக சேவைகள் திணைக்களத்தில் அபிவிருத்தி அலுவலராக பணியாற்றி வருகின்றார்.

ஐம்புலனும் சிறப்பாக அமையப்பெற்றவர்களாலும் சாதித்துவிட முடியாத இவரது சாதனையானது பார்வைப் புலனற்றவர்களுக்கேயான எழுத்து வடிவமாக காணப்படும் பிரெய்ல் எழுத்தின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டது எனலாம்.

தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்காக இவரை நேர்கண்ட போது அவர் பகிர்ந்துக்கொண்டவை...

கேள்வி:- பார்வைபுலனற்ற நிலையில் எவ்வாறு உங்களால் இத்தகையதொரு வளர்ச்சிப் படிநிலையை அடைய முடிந்தது..?

பதில்:- தன்னம்பிக்கை, விசுவாசம், விடாமுயற்சி இவ்வாறான எண்ணங்களினினூடாகவே இந்த ஒரு நிலையை எட்ட முடிந்தது. எதனையும் சாத்தியப்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கும் ஒரு மன உறுதிப்பாடு என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளது என்று சொல்லலாம். சாத்தியமில்லை என்ற சிந்தனை இல்லாமல் அனைத்தையும் சாத்தியப்படுத்தலாம் என்று சிந்திக்கும் மன உறுதிப்பாடு எம்மிடத்தில் இருக்கும்போது வரும் தடைகள் பெரியதொரு விடயமாக தெரியாது. இந்த சிந்தகைளினூடாகவே இவ்வாறு வளர்ச்சியடைய முடிந்தது.

கேள்வி:- இவ்வாறான வளர்ச்சி படிநிலைகளை அடைவதற்காக நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கூறமுடியுமா?

பதில்:- நான் எழுத ஆரம்பித்த காலத்தில் அதிகமான நூல்களை வாசிக்க முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது. முக்கியமாக எனக்கு பார்வைப்புலன் இல்லாத காரணத்தினால் அதிகமான புத்தகங்கள் பிரெய்ல் என்ற எழுத்தில் இருக்கவில்லை. (பிரெய்ல் என்பது பார்வை புலன் அற்றவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள எழுத்து முறைகள்) இவ்வாறு அதிகமான புத்தகங்கள் பிரெய்ல் என்ற எழுத்தில் இல்லாத காரணத்தினால் எப்போதும் ஒருவரில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.

பிரெய்ல் எழுத்துக்களால் வடிவமைக்கப்படாத புத்தகங்களை ஒருவரை கொண்டு வாசித்து அறிந்துக்கொள்ள வேண்டிய தேவை எப்போதும் இருந்தது. அதிகமாக மற்றவர்களது உதவிகள் எனக்கு தேவைப்பட்டது. நான் எதிர்பார்த்த அளவில் பாரியளவிலான உதவிகள் கிடைக்கவில்லை. ஆனபோதும் கிடைத்த உதவிகளை வைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வளர்ச்சியடைய முடிந்தது. ஆனால் அதிகமான நூல்களை வாசிக்க முடியாமல் போனதற்கு காரணம் பிரெய்ல் என்ற எழுத்தில் புத்தகங்கள் அச்சடிக்காமல் போனதுதான். இருந்தாலும் இருந்த சிறிய புத்தகங்களை கொண்டு வாசித்தறிந்து இந்த நிலைமைக்கு வளர்ச்சியடைந்தோம்.

இப்போதும் கூட அந்த தடை இருந்துகொண்டுதான் இருக்கின்றது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையத்தளத்தில் பல சொப்ட்வெயார்களை பதிவிறக்கம் செய்து அதனது உதவியை கொண்டு பலதேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறோம்.

கேள்வி:- தொழில்நுட்ப வளர்ச்சியில் உங்களது எதிர்பார்ப்புகளை ஓரளவிலேனும் நிறைவேற்றிக்கொள்வதற்கான வசதிவாய்ப்புகள் இருக்கின்றனவா?

பதில்:- தொழில்நுட்ப வளர்ச்சி எனும்போது பொருளாதார பிரச்சினை எல்லோருக்கும் உள்ளது. நாங்கள் கடந்த ஆறுவருடங்களாக விஜயா பிரெய்ல் வாங்கியதை போன்று பிரெய்ல் பிரின்டர் இயந்திரத்தை வாங்குவதற்கு முயற்சி செய்து வருகின்றோம். இந்த இயந்திரத்தை வாங்குவதற்காக பண வசூலிப்பு ஒன்றை செய்துக்கொண்டு வருகின்றோம். எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இந்த இயந்திரத்தை வாங்குவதற்குரிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

கேள்வி:- இந்த பிரெய்ல் இயந்திரத்தின் கொள்வனவினூடாக நீங்கள் மேற்கொள்ளப்போகும் செயற்றிட்டங்கள் குறித்து கூறமுடியுமா?

பதில்:- இதனூடாக தமிழ் பண்பாடு, காலசாரத்தை பின்பற்றும் பார்வை புலனற்ற சமூகத்தினருக்கு அறிவியல் தொடர்பான, சமூகவியல் தொடர்பான பல விடயங்களை பிரெய்ல் மூலமாக வழங்கமுடியும். ஏனென்றால் இலங்கையில் பார்வை புலனற்ற நிலையில் வாழும் தமிழ் மொழி பேசுபவர்கள் வாசிக்கக் கூடிய வகையில் பிரெய்ல் புத்தகங்கள் இதுவரை அச்சிடப்படவில்லை.

சிங்கள மொழியில் 'பீச் த பிரெய்ல்' செய்வது போன்றதொரு சாதனையை தமிழில் இதுவரை யாரும் செய்யவில்லை. உண்மையில் விஜய நிறுவனம் சிங்களமொழி பேசுபவர்களுக்காக வெளியிடும் பிரெய்ல் சஞ்சிகையானது ஒரு சாதனை என்றே கூறவேண்டும். ஏனெனில் இலங்கையில் எத்தனையோ பெரிய நிறுவனங்கள் உள்ளன. ஆனபோதும் பார்வை புலனற்றவர்களுக்கு ஒரு தேவை இருக்கின்றது என்பதை இந்த விஜய நிறுவனமே உணர்ந்துகொண்டுள்ளது.
கேள்வி:- உங்களது எழுத்துக்கு துணை நிற்பவர்கள் குறித்து கூறுங்கள்?

பதில்- ஆரம்ப காலத்தில் எனது நண்பர்கள். குடும்ப வாழ்வென்று வந்த பின் எனது மனைவி மற்றும் பிள்ளைகள். பல்வேறுபட்ட காலத்தில் பல்வேறுபட்டவர்கள் உதவிய வண்ணமே உள்ளனர். எங்களது தேவைகளை உணர்ந்து செயற்படுகின்றனர். ஆனால் எப்போதும் ஈடுசெய்ய முடியாத பிரச்சினையாக இருப்பது வாசிப்பு மட்டும்தான். எப்போதும் ஒருவரில் தங்கி இருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஆரம்ப வகுப்பில் கல்வி கற்பதற்கு ஆரம்பித்த நாள் முதல் பல்கலைக்கழக வாழ்க்கை வரை எனது நண்பர்கள் உதவியாக இருந்தார்கள். வாசிப்பு பிரச்சினை இன்றும் இருக்கவே செய்கிறது. ஆனாலும் வாசிக்க வேண்டும். அதற்காகத்தான் பிரெய்ல் இயந்திரத்தினை கொள்வனவு செய்யும் முயற்சியில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றோம். இதனை கொள்வனவு செய்தால் நூறு வீதம் இல்லாவிட்டாலும் எழுபத்தைந்து வீதமாவது இந்த வாசிப்பு பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி: எழுத்துக்களை நீங்கள் பார்க்கும் விதம் குறித்து கூறுங்கள்?

பதில்:- ஓர் எழுத்தாளன் என்று வரும்போது அவனுக்கு பார்வை என்பது அவசியமில்லை. இவ்வாறு பார்வை புலன் அற்றவர்களும் எழுத்து துறையில் சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஜோன் பில்டெர், ஹெலன் கெலர், இதேபோல் இன்னுமொரு பெண்ணொருவர் இருந்துள்ளார். அவர் 13,000 இற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். எனவே எழுத்துக்கு பார்வையென்பது அவசியமானது இல்லை.

அதிகமானவர்கள் தமது மன உணர்வுகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டே கண்ணீர்விட்டவண்ணமுள்ளனர்.

என்னுடைய வேதனைகளை, பிரச்சினைகளை சொல்லக்கூடிய ஓர் ஊடகமாக இந்த எழுத்தை நான் பார்க்கிறேன். இந்த எழுத்தானது தனிமனித புலம்பலாகவும் இருக்கலாம். இல்லாவிட்டால் சமூகம் சார்ந்த புலம்பலாகவும் இருக்கலாம். பிரச்சினைகளை கூறுவதற்கு தொடர்பாடல் என்ற ஒன்று உள்ளது. எழுத்தாளன் என்ற ரீதியில் எல்லோருடைய பிரச்சினைகளையும் எடுத்து அதற்கு வடிவம் கொடுத்து அதனை ஒரு படைப்பாக கொடுக்கின்றோம்.

கேள்வி:- இயற்கை சூழலை உணரமுடியாத நிலை காணப்பட்டாலும் எவ்வாறு இயற்கையை உள்வாங்கிக்கொண்டு எழுதுகின்றீர்கள்?

பதில்:- வெளியில் இருக்கும் விடயங்கள் அனைத்தையும் பார்க்க முடியாது. ஐந்து புலன்களில் ஒன்று இழக்கப்பட்டுள்ளது. இதில் மீதம் இருக்கும் நான்கு புலன் உணர்வுகளைகொண்டு கேட்டல், தொட்டுணர்தல் போன்ற செயற்பாடுகளினூடாக இயற்கை சூழலை உள்வாங்கிக் கொண்டு - பின் அதனை உணர்ந்து ஒரு படைப்பாக வெளிப்படுத்துகிறேன்.

வெளிச்சூழல் பற்றி ஒருவர் எனக்கு தெளிவுபடுத்தி கூறவேண்டும். அதன்பின்புதான் ஒரு விடயத்தை பற்றி நான் தெளிவாக உணர்ந்து எழுத ஆரம்பிப்பேன். நேரடியாக முகத்துக்கு முகம் பார்க்கும் ஒரு புலன் இங்கு இழக்கப்பட்டுள்ளது. அதனால் சோர்ந்து இருந்துவிடவில்லை. அது ஓர் இழப்பாக இருந்தாலும் என்னுடைய முயற்சியால் நான் இந்த நிலைக்கு வளர்ந்துள்ளேன். மற்றவர்களைப் போல் இயங்குவது எனக்கு அவ்வளவு இலகுவானதல்ல. என்னைப்பொறுத்தவரை ஒருவிடயத்தை கேட்டு, அறிந்து அதனை உள்வாங்கிக்கொண்டு எழுத வேண்டும். இலங்கை சூழலில் இத்தகையதொரு நிலையிலிருந்து கொண்டு 14 புத்தகங்களை வெளியிட்டது பெரியவிடயம். நீங்கள் செய்வதைப் போன்று இல்லாமல் நாங்கள் பல மடங்கு முயற்சி எடுக்க வேண்டும்.
கேள்வி:- தற்போது வெளிவரும் படைப்புகள் குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்:- ஓர் எழுத்தாளன் எழுத்தாளனாக பிறக்கின்றான். களிமண்ணை பிடித்து உருவாக்குவது போன்று ஓர் எழுத்தாளனை உருவாக்க முடியாது. எழுத்தாற்றல் என்பது அவனது உணர்வில், இரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும். இல்லாவிட்டல் எல்லோரும் எழுதலாமே? சிறிது காலம் எழுதவிட்டு செல்பவர்களும் இருக்கின்றனர். பாரதிக்குப் பின் ஒரு பாரதி இன்னும் தோன்றவில்லை. கண்ணதாசனுக்குப் பின் ஒரு கண்ணதாசன் இன்னும் தோன்றவில்லை.

ஓர் எழுத்தாளன் எழுத்தாளனாக பிறப்பானானால் அவன் எழுதிக்கொண்டே இருப்பான். எந்த சூழ்நிலையையும் பார்க்க மாட்டான். இருள், வெளிச்சம் என்பவற்றுக்கு அப்பாற்பட்டதுதான் எழுத்து. ஒரு காலக்கட்டத்தில் வெளிச்சம் என்பதே இருக்கவில்லை. ஆனால் அந்த சூழலிலும் எழுதியிருக்கின்றார்கள். உணர்வுகளை தடைசெய்ய முடியாது. ஆனாலும் எழுதும் போது சமூகத்தை சற்று உணர்ந்து எழுத வேண்டும். ஒரு படைப்பை பத்துமுறை வாசிக்க வேண்டும். படைப்பென்று வரும்போது அதை வாசகர்களுக்கு வழங்கும் விதம் என்பது மிக முக்கியமானது. எல்லாவற்றையும் எழுதி, அதை படைப்பாக வழங்க முடியாது.

ஓர் எழுத்தில் கட்டுப்பாட்டு தன்மை என்பது கட்டாயமானது. ஒரு வரம்புக்குள் இருந்து எழுதவேண்டு;ம். யாரையும் பாதிக்காது சமூதாயத்தை பாதிக்காது ஒரு படைப்பாளனின் படைப்பு காணப்படவேண்டும். வரம்பு என்பது எதுவரை என்பதை ஒரு படைப்பாளனே தீர்மானிக்க வேண்டும். எழுத்தாளனின் படைப்பானது வாசகனை நல்ல வழியில் சிந்திக்க செய்யக்கூடியதாக உருவாக்கப்பட வேண்டும். ஒழுக்கத்துக்குள் எழுத வேண்டும்.

இதற்கு சிறந்த உதாரணமாக உப்பு, விளக்கு, கோதுமையை கூறலாம். உப்பு காரமானது. அதிகமானாலும் பிரச்சினை, குறைந்தாலும் பிரச்சினை. எனவே உப்பை போன்று உபயோகமுள்ளதாக படைப்புகள் காணப்படவேண்டும். ஒளி என்பது எமக்கு இன்றியமைதாது. எனவே படைப்புகள் வழிகாட்ட கூடியதாக இருக்க வேண்டும். இதேவேளை கோதுமையை எடுத்துக்கொண்டால், கோதுமையின் விதைகள் மடிந்தால்தான் எமக்கு உணவாகின்றது.

எனவே ஓர் எழுத்தாளன் சமூதாயத்துக்கு உப்பாகவும் விளக்காகவும் கோதுமையைப் போன்றும் காணப்படவேண்டும். உப்புக்கு ஒப்பாய் படைப்புகள் காணப்படவேண்டும்.

கேள்வி:- உங்களது எழுத்துக்களுக்கூடாக நீங்கள் எவ்வாறான செய்திகளை கொடுக்க முனைந்தீர்கள்?

பதில்:- எனது எழுத்துக்களை வாசிக்கும் வாசகனுக்கு அந்த எழுத்தானது அவனது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டுமென்றே நினைக்கின்றேன். ஒரு மனிதனின் காயங்களுக்கு கட்டுப்போடும் வகையிலான சிகிச்சை முறையாக எனது எழுத்துக்கள் அமையவேண்டும் என நினைக்கின்றேன். மருத்துவர் ஒருவர் ஒரு நோயாளனின் நோய்களை இனங்கண்டு அந்நோய்க்கு எவ்வாறு சிகிச்சை வழங்குகின்றாரோ அதேபோல் ஒரு வாசகன் படைப்பை வாசிக்கும் போது சிந்தனை செய்ய வேண்டும். அந்த எழுத்துக்கள் வாசகனின் வாழ்வில் திருப்பு முனையாக அமையவேண்டும்.
கேள்வி:- இன்றைய இளம் சமூகம் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில்:- இன்றை இளம் சந்ததியினருக்கு சரியான வழிகாட்டல் இல்லையென்றே கூறவேண்டும். நல்ல வழிகாட்டல்  இருக்குமாயின் சிறந்த எதிர்கால சந்ததியினரை நாம் காணலாம். நல்லதொரு வழிகாட்டல் தற்போதைய இளம் சந்ததியினருக்கு தேவைப்படுகிறது.

ஆலயங்கள், ஒழுக்க நிலையங்கள் இந்த வழிகாட்டல்களை இன்றைய இளம் சந்ததியினருக்கு வழங்க முன்வரலாம்.

கேள்வி:- நீங்கள் இன்னும் சாதிக்க நினைக்கும் விடயம் எது?

பதில்:- என்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு அதிகமான புத்தகங்களை பிரெய்ல் மூலமாக அச்சடித்துக் கொடுப்பதற்கு நினைக்கின்றேன். நான் இருக்கும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இவ்வாறு உப்பாய், விளக்காய் அதிகமான விடயங்களை பார்வை புலன் அற்றவர்களுக்கு வழங்க நினைக்கின்றேன்.

கேள்வி:- தெருத்தூசியோன் என்ற பெயர் எவ்வாறு வந்தது..?

பதில்:- சிறுவயதில் 'சுவிப்பர்' என்றதொரு கவிதையை வாசித்தேன். அந்தக் கவிதையில் தெருவை கூட்டும் நிகழ்வு தொடர்பில் பலவாறு கவிஞன் எழுதியிருப்பார். இந்த கவிதையை வாசித்த பின் தெருத்தூசியோன் என எனக்கு நானே இந்த பெயரை இட்டுக்கொண்டேன்.

Tuesday, September 11, 2012

பாதுகாப்பு கருத்தரங்கு – 2012



'போருக்கு பிந்திய ஐந்து காரணிகள்” என்ற கருப்பொருளில் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பாதுபாப்பு கருத்தரங்கு நேற்று ஆரம்பமாகியது. மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் 63 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
30 வருட போர் முடிவின் பின்னரான இலங்கையின் மீள் நிர்மாணம், மீள்குடியேற்றம், மீள்வாழ்வு, மீள்ஒருங்கிணைப்பு , மீளிணக்கம் என்ற ஐந்து விடயங்களை உள்ளடக்கியதாக “5சு” என்ற தலைப்பில் மேற் கூறப்பட்டவை பற்றி ஆராயப்பட தீர்மானிக்கப்பட்டது. நேற்றைய முதல் நாள் கருத்தரங்கில் மீள்குடியேற்றம் மற்றும் மீள்கடடுமானம் என்ற இரு காரணிகள் தொனிப்பொருளாக தேர்தெடுக்கப்பட்டிருந்தன. இதன் தொடக்க நிகழ்வாக முன்னாள் ஜெனரல் ஜே.ஜயசூர்ய வரவேற்புரையுடன் கருத்தரங்கினை ஆரம்பித்த வைத்தார்.அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மாநாட்டின் தலைமையுரையினை வழங்கினார்.

இரு கட்டங்களாக இடம்பெற்ற முதல் நாள் நிகழ்வில் முதற்கட்ட நிகழ்வில் போராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிறைவேற்றதிகாரி திரு.எஸ்.பி.தேவரட்னஈ மேஜர்.ஜெனரல்.எம்.ஹத்துருசிங்க, மேஜர்.ஜெனரல் ஜீ.டி.எச்.கே.குணரட்ண ஆகியோர் முறையே வடமாகாண , யாழ்மாவட்ட மற்றும் வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்ற மீள்கட்டுமானம், மீள்குடியேற்றங்கள் பற்றி விளக்கவுரையாற்றினர். இரண்டாம் கட்ட நிகழ்வில் “மீள் கட்டுமானம் ,மீள்குடியேற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பு” என்ற தலைப்பில் இந்திய மேஜர்.ஜெனரல் ஜீ.எஸ்.சேர்கில் இந்திய - இலங்கை நீண்ட கால தொடர்புகள் பற்றியும் இந்தியா மேற்கொள்கின்ற உதவிகள் பற்றியும் “சிவில் மற்றும் இராணுவத்தின் ஒருங்கிணைப்பு” என்ற தொனிப்பொருளில் ஓய்வுபெற்ற அமெரிக்க பிரிகேடியர் ருஷல் ஹாவட் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இறுதி நிகழ்வாக இலங்கையின் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மீள்கட்டுமானம், மீள்குடியேற்றங்கள் பற்றி  இலங்கையின் சமூக சேவை அமைச்சு செயலாளர் திருமதி.இமல்டா சுகுமார் உரையாற்றியதை தொடர்ந்து முதல்நாள் நிகழ்வுகள் முடிவுபெற்றன.
இந்நிகழ்வின் போதான கலந்துரையாடலின் போது இலங்கை பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறுபான்மை ஊழியர்களில் குறைந்தளவான பங்களிப்பு (20 வீதம்) பற்றியும் கோத்தபாயவின் உரையாடலில் விமர்சிக்கப்பட்ட விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பற்றியதான கருத்து முரண்பாடுகள் பற்றியும் இந்திய பிரதிநிதியினால் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு புலம்பெயர்ந்த மக்களினால் வெளிநாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் பற்றி தவறான கருத்துக்கள் வழங்கப்படுவதாகவும் வடக்கு கிழக்கு பகுதிகளில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தழியோகத்தர்களை விடுதலைப்புலிகள் படுகொலை செய்தமையின் காரணமாக மக்களிடையே நிலவகின்ற அச்சமே அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைக்கப்படாமைக்கு காரணமென கோத்தபாய மழுப்பலான விளக்கமளித்ததுடன் இதனை சீர்செய்ய நீண்ட காலமெடுக்கும் எனவும்  தெரிவித்தார்.

“யுத்தத்தின் பின்னரான காரணிகள் “ என்ற தொனிப்பொருளை இம்மாநாடு கொண்டிருந்தாலும் விடுதலைப்புலிகளின் தமிழ் ஈழ பற்றே போருக்கு காரணம் என்ற கருத்தும் இலங்கை இராணுவம் எவ்விதமான அநீதிகளையும் சிறுபான்மையினருக்கு இழைக்கவில்லை என்ற கருத்தையும் வெளிநாடுகளுக்கு முன்வைப்பதாகவும் இலங்கை இராணுவத்தின் போர் தந்திரங்களை(???) விபரிப்பதாகவுமே  இம்மாநாடு அமைந்திருந்தது.

வடக்கு கிழக்கு மீள்குடியேற்றங்கள் பற்றியும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சமூகத்தில் இணைக்கப்பட்டது பற்றியும் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக நடவடிக்கைகள் பற்றியும் பேசப்பட்ட போது எத்தனை வீதம் தமிழ்மக்கள் தம் சொந்தவிடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள்? புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற போராளிகளில் எத்தனை வீதமானவர்கள் இன்று வாழ்வாதாரத்தை மேற்கொள்கிறார்கள்?  புதிய வர்த்தக நடவடிக்கைகளில் சிறுபான்மையினர் எத்தனை வீதம் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்? என்பது பற்றி வெளிநாட்டு பிரதிநிதிகள் கேள்வியெழுப்பவில்லை என்பதுடன் இவற்றிற்கான பதில்களும் அரசாங்கத்திடம் இல்லை என்பதே உண்மை...

Friday, September 7, 2012

மிஸ் பண்ணப் போவதில்லை

இன்று அதிகாலையில் படுக்கையை விட்டெழவே எனக்கு பிடிக்கவில்லை... காரணம் நள்ளிரவு முதல் பெய்கின்ற பலத்த மழை... ஆனாலும்  அலுவலகத்திற்கு செல்வதற்காகவது எழுந்தாகவேண்டிய கட்டாயம். விடுமுறை எடுப்பது கூட இன்று சாத்தமியமில்லை முடிக்கவேண்டிய எனது கடமைகள் மீதம் இருக்கின்றன. பஸ் பிடித்து செல்வதையும் வீதியின் மழை அழுக்கு நீரில் கால் நனைய நடக்கப்போவதை நினைக்கவே மனதுள் இனம் புரியாத ஒரு வெறுப்பு. இன்று குளிப்பதா வேண்டாமா? என்ற சோம்பல் மனதின் வினா மனதில் எழ போர்வையை விலக்காமலேயே தலையணையருகில் துழாவுகின்றேன் என் செல்லிடப்பேசியை. இரவு “அதிர்வு” க்கு மாற்றப்பட்டதன் விளைவு பார்க்கப்படாமல் குவிந்திருக்கின்றன குறுஞ்செய்திகள். அம்மாவின் “எழுந்து விட்டாயா?” பல்கலைக்கழக நண்பர்களின் “காலை வணக்கங்கள்” மற்றும் “கடிகள்” அண்ணாவின் “ நேற்றிரவு படித்தாயா?” என் மேலதிகாரியின் “நான் இன்று வரமாட்டேன் மீதங்களை முடிக்கவும்” என நீளும் பட்டியலில் தேடுகின்றேன் என்னவனின் குறுஞ்செய்தியை....

விடுதி வாழ்க்கையில் தவறவிடுகின்ற அம்மாவின் அதிகாலை முத்தம், சூhடான கோப்பி, அதை தோட்டத்திலமர்ந்து பருகும் இன்பம், சோபாவில் அண்ணாவின் அருகில் அமர்ந்து உணரும் இளஞ்சூடு, நாய்க்குட்டின் பரிஸம்ஈ பல்துலக்காமல் உண்னும் காலையுணவு இப்படியாக தொடரும் என் மழைநாள் பணிகளை ஒரு கணம் நினைத்தவளாக கட்டிலை விட்டு இறங்குகின்றேன். புதிதான இப்புதிய நாளை வரவேற்பதற்கு....

ஆனாலும்  இன்று மாலை அடைமழையிலான எனது நனையலையோ தேங்கி நிற்கும் நீரில் காகித கப்பல்களை விடுவதையோ அம்மாவின் தொலைபேசியினூடான ஏச்சுக்களையோ காய்ச்சல் வராமல் தலையில் ஓடிகொலோன் போட்டு பனடோல் குடிக்கப்போவதையோ நிச்சயம் மிஸ் பண்ணப்போவதில்லை....

அதிகம் வாசிக்கபட்டவை