Wednesday, December 17, 2014

மையமும் எல்லையும்

என்
பிடிவாதங்கள்.....
கவலைகள்.....
பொறுமையின்.... 
எல்லைக்கோட்டின்
புள்ளியில் நீ

உன்
வெறுப்புக்கள்....
சந்தேகங்கள்....
விரண்டாவதங்களின்......
மையப்புள்ளியாகி போகும்
நான்…

மையத்திற்கும் எல்லைக்குமான
தூரத்தினை நகர்த்திடாமல்
உன் இறுக்கங்களும்…..
என் மௌனமும்......



Tuesday, December 2, 2014

விமர்சனம்... - என் எதிர்வினை

கடந்த 17ஆம் திகதி “பாலியல் கல்வி” http://veenaganam.blogspot.com/2014/11/blog-post.html குறித்து பதிவொன்று இட்டிருந்தேன். இது குறித்து பலர் வெளிப்படையான கருத்துக்களை இட்டிருந்தார்கள். இன்னும் சிலர் தொலைபேசியில் இது குறித்து பல விமர்சனங்களை கொட்டியிருந்தார்கள். நேற்று முன்னணி தமிழ்ப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் இன்பொக்ஸில் கீழ்க்கண்டவாறு பேசியிருந்தார். அவருக்கான ஒரு சிறு குறிப்பு ஒன்றினையும் அவர் இன்பொக்ஸில் துப்பியிருந்ததையும் பதிவிடுகின்றேன்.

என்ன நீர் பெண்ணியிம் பேசுறேன்..என்று பேஸ்புக்கில் கொண்டம் பற்றி எல்லாம் எழுதுகிறாய்.

ஏன் அதற்கு என்ன?

நீர் சமூகத்தையும் தமிழ் பேசும் மக்களினதும் கலாசாரத்தை சீரழிக்கின்றாய்.

இதை தைரியமிருந்தால் என்ன பதிவின் கீழேயே இடலாமே.. ஏன் இன்பொக்ஸில்?
  
எனக்கு தைரியம் இருக்கின்றது. எனினும், உமது துணிவுக்கு மரியாதைக் கொடுத்துதான் நான் இப்படி செய்கிறேன். 
உமது பணி வரவேற்கத்தக்கது. எனினும், நீர் பெண் பிள்ளை என்பதால் தவறான கண்ணோட்டத்தில்தான் பதிவுகளை உற்றுநோக்குவார்கள் 

ஓகோ... அங்கு இதே கேள்வியை கேளுங்கள் பதிலளிக்கின்றேன்..
அது அவர்கள் பிரச்சினை எனக்கு என்ன? என்னை எப்படிப் பார்த்தாலும் நான் நான் தான்

நீர் ஓவர் நைட்ல ஒபாமா ஆகுறதுக்கு டை பன்னுறீர் போல...

சின்ன வயதில் உங்களுக்கு அப்படி ஏதாவது நடந்துள்ளதா?

தம்பி ஆணுறையைப் பற்றி கேட்டாரா?

ஒபாமா ஆக எனக்கு உடன்பாடில்லை... எப்போதும் நான் நான் தான்
வார்த்தைகள் பண்பாக இருக்கட்டும்...

சரி...பெண்ணியம் பேசுகிறேன்...என நினைத்து மூகநூலில் ஐடம் என்ற பட்டத்தை வாங்கிடாதே...நம் நட்புக்காகத்தான் இந்த ஆலோசனை.

பாருங்கள் இப்படி கேட்டதும் கொதித்தெழுகின்றீர்கள் அல்லவா? அப்போது உங்களுடைய அந்த பதிவை படிக்கும்போது எவ்வளவு அறுவறுப்பாக இருக்கும்?
என்னை யாரும் விமர்சித்தாலும் அது குறித்து எனக்கு அக்கறை இல்லை சனத்... எப்போதும் பேசாப்பொருள்களை தான் பேவைக்க வேண்டும்...
சரி...அது உங்கள் தேர்வு. புனித மான கார்த்திகை பூவை போட்டுக்கொண்டு , மாவீரர்களை புகழும் அந்தப் பக்கத்தில் காமத்துக்கு ஏன் முக்கியத்துவம் வழங்குகின்றீர்கள்.
 நீர் ஓர் ஊடகவியலாளர் பரந்த அறிவிருக்கும் என்று நினைத்தேன் இவ்வளவு தானா நீர்? வெட்கம் சனத்...
  
சரி.. நீர் ஓர் பெண் என்பதை மறந்துடாதே...சமூகத்துக்காக குரல் கொடுக்கப்போய் உமது வாழ்க்கைய துலைக்கப்போகின்றாயா?.. நீ பாவமடி.
அடுத்தது அன்பானதொரு வேண்டுகோள் என் எழுத்தை விமர்சிப்பதாக இருந்தால் என் பதிவின் கீழேயே விமர்சியும்... பதிலளிக்க நான் தயார் எப்போதும்
http://veenaganam.blogspot.com/2014/11/blog-post.html
இதை எப்படி வாசிப்பது நீயே யோசித்துப் பார்?

என்றும் என் வாழ்வு தொலையாது... அது எப்போதும் நன்றாக தானிருக்கின்றது சகோ
ஏன் தமிழ் வாசிக்க தெரியாதா?
 சரி...ஏதோ என் மனதில் தோன்றியதை கூறிவிட்டேன். இனி உன் வாழ்வு உனது கையில. சரி அந்த பதிவை வாசிக்க முடியுமா?
 ஏன் தமிழ் வாசிக்க தெரியாதா?
 தெரியும். அசிங்கமாக இருக்குது
 சரி...பகிரங்கமாக பெயர்களை குறிப்பிடாது...மறைமுக மாக குறிப்பிடலாம்தானே...
கொண்டம் என்பதற்கு ஆணுறை என்றுகூட சொல்லாம்தானே..
ஆணுறை என்று போட்டு தான் அடைப்பில் கொண்டம் என்று இட்டிருக்கின்றென்...
ஆனால் அந்த இரகசிய விடயங்களான செக்ஸ், ஆண் - பெண் பாலின உறுப்புக்கள், கொண்டம் (ஆணுறை) போன்ற விடயங்கள் குறித்த கேள்விகள் மட்டும் பல ஆண்டுகள் என்னுடன் பயணித்துக்கொண்டுதானிருந்தன.

இந்த வரியை வாசித்தால் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்..ஆயிரம்தான் இருந்தாலும் நீங்கள் ஓர் பெண். அல்லது வேறு பெயரில் புதிய பிளோகர் ஒன்றை திறந்து பதிவுகளை போடவும்.

நான் தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும். தோழி உமது கருத்துகள் நிச்சயம் வரவேற்கத்தக்கது. எனினும், சமூகத்தின் பார்வை எப்படி பட்டது உமக்கு தெரிந்திருக்கும் அல்லவா?

என் நேரத்தை வீணடிக்காமல் வேலையை பாரும்... என்னைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் எனக்கு அது பற்றி கவலையில்லை... உமக்கு இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் பதிவின் கீழே கேளும் பதிலளிக்கின்றேன்.. விமர்சியும் ஏற்றுக்கொள்கின்றேன்... இந்த இரகசிய நேர்காணல் தேவையில்லை
அறிவுரைக்கு மிக்க நன்றி
உன்னுடன் சொற்போருக்கு நான் தயார். ஆனால், நட்பு தடுக்கின்றது.
நட்புக்கும் சொற்போருக்கும் தொடர்பில்லை.. எப்போதும் நட்பு தொடரும் விமர்சனங்களை எப்போதும் வரவேற்கின்றேன் வெளிப்படையாக

நிச்சயம். உனது சவாலை ஏற்கிறேன். இனி ஆட்டம் ஆரம்பம். இறுதியில் அழக்கூடாது. ஓகேயா?  


ok
waitting

வணக்கம் சகோ!

நான் பெண்ணியம் என்ற பெயரில் “கொண்டம்” பற்றி எழுதுகின்றேன் என்று முதல் வசனத்திலேயே சொல்லியிருந்தீர். சிறுவயதில் பாலியல் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் சீரழிகின்ற சிறுவர்களது கதைகள் உமக்கு தெரியுமா? பாலியல் உறவு, அது குறித்த பினவிளைவுகள் தெரியாமல் இளவயது கர்ப்பங்கள் குறித்தும் அதனால் அனாதை ஆச்சிரமங்களிலும், வீதிகளிலும் விடப்படுகின்ற குழந்தைகள் பற்றி தெரியுமா? அல்லது தாய்மை பற்றி அறியாத வயதில் கர்ப்பம் தாங்கி மரணத்தினை தழுவியுள்ள குழந்தைகள் பற்றி அறிந்திருக்கின்றீரா? இன்று பாலியல் நோய்கள் பரவிக்கொண்டிருப்பதாவது உமக்கு தெரியுமா? இவற்றினை எல்லாம் தடுப்பது 100 வித சாத்தியமற்றது. ஆனால் இதனை குறைக்கவாவது செய்யலாம் என்றால் அதற்கு எம் மாணவர்களுக்கு பாலியல் கல்வி முக்கியம்.

“பெண்ணியம்” என்றால் உமது அளவில் சமையல் குறிப்பு , அழகுக்குறிப்பு மட்டுமாக இருக்கலாம் என்னளவில் அது இன்னம் நான் கூட புரிந்துகொண்டிருக்காததொரு பதம். ஏதோ என்னால் முடிந்ததை செய்கின்றேன். அதை நீரும் இன்னும் பலரும் பெண்ணியம் என்கின்றீர்கள். நல்லது அவரவர் அறிதலும் புரிதலும் அவரவர்க்கு. ஆனால் “பெண்ணியம்” என்பதை மேற்குறிப்பிட்ட குறிப்புக்குள் அடக்க தான் நீர் முயல்கின்றீர் என்றால் அந்த கட்டினை உடைக்க நானும் என் சார்ந்த ஏனையவர்களும் தயார்.

பெண் பிள்ளை என்பதால் தவறான கண்ணோட்டத்தில்தான் பதிவுகளை உற்றுநோக்குவார்கள் …. இந்த சமூகம் எதனை தான் தவறாக நோக்கவில்லை. அந்ததந்த காலகட்டத்தில் சமூக கட்டுக்களை உடைந்தவர்களை விமர்சித்துக்கொண்டு தானிருக்கின்றது. இந்த சமூகம் என்பதே நீரும் நானும் தான். நம்மை திருத்திகொண்டாலே போதும். அடுத்தது உமது பிரச்சினை நான் இது குறித்து பேசியதா? அல்லது ஒரு பெண்ணாக நான் இதை பேசியதா? இன்றும் பெண் பேசிடாப்பொருளாக இருப்பவை மூன்று என்னளவில். அதில் ஒன்று காமம். ஏன் இது குறித்து ஒரு பெண் பேசினால் என்ன? உணர்வு ஆனுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது தானே…

சின்ன வயதில் உங்களுக்கு அப்படி ஏதாவது நடந்துள்ளதா? இது வரை பாலியல் தொழில் பற்றி எழுதியிருக்கின்றேன்… வன்முறைகள் குறித்து எழுதியிருக்கின்றேன். அதற்காக நான் பாலியல் தொழில் செய்கின்றேன் என்றா அர்த்தம்? அல்லது வன்முறைக்குட்படுத்தப்பட்டுள்ளேன் என்பதா அர்த்தம்? நான் கடக்கும் பாதையில் இவற்றினை காண்கின்றேன். இவற்றினை பற்றி என் கருத்தினை எழுதுகின்றேன். எல்லாமே செய்வினையாக தானிருக்க வேண்டும் என்பதல்ல செயற்பாட்டு வினையாகவும் இருக்கலாம். எழுத்துக்களை கொண்டு ஒருவரை எடை போடுவதை நிறுத்தும்.

மூகநூலில் ஐடம் என்ற பட்டத்தை வாங்கிடாதே…. “ஐட்டம்” அப்படியென்றால் என்ன? நீயும் உன் சமூகமும் பெண்களுக்கு வைத்திருக்கும் பெயர். அதாவது நடத்தை கெட்டவள் என்று உன் போன்றோர் நினைக்கும் பெண்களுக்கு மறைமுகமாக வைத்திருக்கும் பெயர். அவ்வாறு நடக்கும் ஆணுக்கு என்ன பெயர்? அதைவிட நீர் பட்டம் கொடுக்குமளவு பெரியவரா? முகநூல் என்பது என்னளவில் கருத்திடும் ஊடகமே அன்றி என் முழு உலகமுமல்ல.

புனித மான கார்த்திகை பூவை போட்டுக்கொண்டு இ மாவீரர்களை புகழும் அந்தப் பக்கத்தில் காமத்துக்கு ஏன் முக்கியத்துவம் வழங்குகின்றீர்கள் ஆணுறை பற்றி பேசுவது தான் “காமமா?” மாவீரர்கள் பற்றியும் அவர்கள் பெண்களை சரிநிகராக மதித்து அவர்கள் கருத்துக்கு மதிப்பளித்தது பற்றியும் உமக்கு உள்ள அறிவு இவ்வளவு தானா? அல்லது தமிழ் பெண்ணென்றால் சமையலறை என்ற உம் போன்றோர் அளவு தான் விடுதலைப்புலி இயக்கம் இருந்தது என்கின்ற எண்ணமா உமக்கு? அவர்களவில் ஆண் - பெண் பேதம் என்பதே இருக்கவில்லை. எத்தனையோ பெண் போராளிகள் பல போர்களை தலைமை தாங்கி நடாத்தி வீர சாவெய்தும் இருக்கின்றார்கள். என் பாடசாலைக்காலத்தில் என்னுள் போராட்டம் குறித்து விதைத்தவரும் ஒரு பெண் போராளி தான்.

//உமது வாழ்க்கைய துலைக்கப்போகின்றாயா?. இதில் என் வாழ்க்கை எப்படி தொலையும்? உம் போன்ற சில கிணற்றுத்தவளை ஆண்கள் இருக்க கூடும். ஆனால் என் சமூகத்தில் தெளிவான சிந்தனையுடைய பல ஆண்களை தான் பார்த்திருக்கின்றேன். ஒருவேளை நீர் என் திருமணத்தினை பற்றி யோசிக்கின்றீரோ என்னவோ? பயப்படாதீரும் உம் போன்ற ஒரு சிறுமைப்புத்தியுள்ள ஆணை கரம்பற்றப்போவதில்லை. அது குறித்து இனிமேல் நீரும் உமது சிறு மூளையை குழப்பிக்கொள்ளாதீர்.
இன்னுமொன்று நேற்றே சொல்லியிருந்தேன். என் எழுத்துக்களை பொதுவில் பகிரும் போது அதற்கான கருத்தினையும் பொதுவிலேயே எதிர்பார்க்கின்றேன். விமர்சனங்களை ஏற்கவும் அதனை விளங்கி மாற்ற வேண்டுமாயின் சிந்தனைகளை மாற்றிக்கொள்ளவும் என் பெற்றோர் என்னை பழக்கி தானிருக்கின்றார்கள். உம்மைப் பொன்று தான் ஒரு பெண்ணும் என்னை தரக்குறைவாக பேசியிருந்தார். அவர் இன்று சமூகத்தில் ஓரளவேனும் சரிசமமாக நடமாடுவது கூட என் போன்றோர் முன்னெடுத்திருந்திருந்த போராட்டங்களின் விளைவே..
இவ்வளவு அறிவுரை கூறிய உமக்கும் நான் ஒன்று சொல்லவேண்டும். தயவுசெய்து ஊடகதுறையில் இருக்கும் நீர் இனியாவது உம் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது. நாம் மக்களின் பிரதிநிதிகள். எம் சிந்தனைகள் சிறுமைப்பட்டிருந்தால் எப்படி சமூகத்து விடயங்களை முன்வைக்கப்போகின்றோம். உமது கருத்தின் படி வீரம் உமக்கு இருக்கும் பட்டசத்தில் என் சுயம் பற்றிய விமர்சனங்களை பொதுவில் வையும். சந்திக்க நான் தயார். என்னளவில் வீரம் எனப்படுவது மறைந்திருந்து முதுகில் குத்துவதல்ல… அதில் உமது பெயரை பதியவில்லை. உம்மை அசிங்கப்படுத்துவதல்ல என் நோக்கம். இனி வரும் காலத்தில் ஒரு பெண் தன் கருத்துப்பகிர்விற்கு எதிர்ப்பு வரும் போது அல்லது அவள் குறித்த சுயம் விமர்சிக்கப்படும் போது எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கானதே இது.

அதிகம் வாசிக்கபட்டவை