தன்னுடைய பிள்ளைகள் மூவரையும் அழைத்து ஒரு பெட்டி நிறைய சீப்புக்களைக்கொடுத்தான். “இந்த சீப்புக்களை நீங்கள் புத்த துறவிகளிடம் விற்க வேண்டும். அதிகளவு சீப்புக்களை விற்பதற்கான தந்ரோபாயம் தெரிந்தவருக்கே என் வியாபாரத்தின் உரிமையை கொடுக்க நினைக்கின்றேன்” என்றும் கூறினான். இதென்ன முடியே இல்லாதவர்களிடம் எப்படி சீப்பு விற்பது? இந்த மனிதனுக்கு வயதாகியதால் அறளை பெயர்ந்துவிட்டதோ? என்று சுற்றியிருந்தவர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள்.
முதலாவது மகன் சீப்புகளுடன் சென்று இரு நாட்களில் திரும்பி வந்தான். “அப்பா நான் துறவிகளிடமே மூன்று சீப்புக்களை விற்றுள்ளேன். சீப்புக்களினால் தலைமுடி வாரிட முடிவதுடன் அப்பப்போ முதுகு சொறிவதற்கும் சீப்புக்கள் பயன்படும் என்று கூறினேன். உடனே மூன்று சீப்புக்கள் வாங்கிவிட்டார்கள்” என்று கூறினான். தந்தையும் அவனது முதுகில் தட்டி” நல்லது” என்று கூறினார்.
இரண்டாவது மகன் நாலைந்து நாளில் திரும்பி வந்தான். வரும் போதே முகத்தில் அப்படியொரு களை. வந்தவுடனேயே காலணிகளை கழட்டி எறிந்த படி “ அப்பா, நான் பத்து சீப்புக்களை விற்றுவிட்டேன். எப்படியென்று தெரியுமா?” என்று கேட்டு அவனே பதிலளிக்க ஆரம்பித்தான். “இந்த புத்த மடாலயத்திற்கு எத்தனை பக்தர்கள் தினமும் வந்து போகின்றார்கள். அதில் பலர் தூரங்களிலிருந்தும் வருகின்றார்கள். அப்படி வருபவர்களுக்கு முகங்கழுவிய பின்னர் சீப்பு இருக்குமாயின் தலைசீவி நேர்த்தியாக இருப்பார்கள். எனவே வழிபாடுகளின் போதும் நேர்த்தியினை உணர முடியும் என்று கூறினேன். உடனேயே நிர்வாகம் என்னிடம் பத்து சீப்புக்களை வாங்கி பக்தர்கள் உடைமாற்றுமிடத்தில் வைத்துள்ளார்கள்” என்று புளுகுடன் அண்ணன்காரனையும் நக்கலுடன் கடைக்கண்ணால் பார்த்தபடி கூறினான். தந்தை அதற்கும் அவனது முதுகில் தட்டி “நல்லது மகனே” என்று புன்னகையுடன் கூறினார்.
குறிப்பு 01. இக்கதை கடந்த வாரம் இடம்பெற்ற பயிற்சியின் போது சொல்லப்பட்ட கதை. இதை கொஞ்சம் அங்கங்கே மெருகூட்டி நான் எழுதியிருக்கின்றேன். எனவே இது என்னுடைய தனிப்பட்ட கதையல்ல. எல்லா கதைகளிலும் மூன்று மகன்கள் மட்டுமே “வியாபார புள்ளியான” தந்தைகளுக்கு இருப்பதுண்டு. இனிமேலாவது வியாபாரத்தினை தொழிலை கொண்டு செல்ல பெண் வாரிசுகள் பிறக்கட்டும். குறைந்தது கதைகளிலாவது இருக்கட்டும்.
குறிப்பு 02. தொழில் முயற்சியாண்மை என்பது எப்படி புத்தாக்கத்துடன் சிந்திப்பது என்பதாகும். மேலும் நேரத்திற்கும் இடத்திற்கும் தக்கபடி சிந்திக்கும் போது தான் நம் உற்பத்திகளை நாம் விற்பனை செய்ய முடியும். புத்தாக்கத்துடன் சிந்தியுங்கள் நண்பர்களே!


No comments:
Post a Comment