Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

இன்றைய நாள் எப்படி….?

அநேகமாக அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் முழிக்கும் பழக்கமுள்ள எனக்கு காலையிலேயே வழங்கப்பட்ட பணி கோப்பி தயாரித்தல். எழும்பியதும் குளித்து சாமியறைக்குள் புகும் போது 4.30 மணியாகியிருக்கும். விளக்கேற்றி, வீணை வாசித்து, சாமி பாடல்களை பெரிய சத்தமாக போட்டுவிட்டு கொஞ்ச நேரம் மின்னஞ்சல் வேலைகளை பார்ப்பதுண்டு. சரியாக 6 மணிக்கு இந்த பாட்டுக்களை நிறுத்திவிட்டு சக்தி வானொலி அலைவரிசையை ஆரம்பிக்கும் போது “சக்தி கொடு…” பாடல் தொடங்கியிருக்கும். 6.15 க்கு இன்றைய நாள் எப்படி? ஆரம்பிக்கும் வரை கேத்தலில் நீரை கொதிக்க வைத்து இதனை கேட்பதற்காகவே காதை கூர்மையாக வைத்திருப்பேன். எனக்கு பெரிதாக சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையில்லை. ஆனால் அதன் பின்னுள்ள கணக்கிடல் சரியாக இருந்தால் காலம் குறித்த கணிப்பு சரியாகவிருக்கும் என நம்பும் ஆள் நான். “இன்றைய நாள் எப்படி?|” கேட்பதில் எனக்கு ஈடுபாடிருக்க காரணம் அந்த ஐயா சொல்வதை மீற என்ன செய்யலாம் என யோசிப்பதற்கு தான். உதாரணமாக 7 ஆம் இலக்கத்தில் பிறந்தவர்களுக்கு கவலை என்று சொன்னால் அன்று கவலை ஏற்படுத்த கூடிய எதிலும் ஈடுபட மாட்டேன். குறிப்பாக எனக்கு முகத்திற்கு நேரே கதைப்பதாலும், சுட்டிக்காட்டி கதைப்பதாலும் தான் பிரச்சினை அதிகமாக வருவதுண்டு. எனவே இப்படி ஐயா சொன்னால் அன்றைய நாள் மௌனவிரதம் இருப்பேன். அல்லது வாய்க்குள் தண்ணீரை நேரம் கணக்கிட்டு வைத்திருப்பேன். இரவில் படுக்கும் முன் அன்றைய நாள் நிகழ்வுகளை மீட்டிப்பார்க்கும் போது அவர் சொன்னதற்கு முரணாக அன்றைய நாள் கடந்திருந்தால் நான் வெற்றி பெற்றுவிட்டதாக எண்ணிக்கொள்வேன். 

சரி மறுபடியும் அதிகாலைக்கு போவோம். காலையில் எனக்கு கொடுக்கப்பட்ட “கோப்பி போடல்” வேலை இருக்கின்றதே இதனை கேட்கும் போது “சை… இதென்ன சின்ன வேலை தானே” என்று தானே நினைக்கின்றீர்கள்? அப்படி நினைத்தால் தயவுசெய்து மனதில் இருந்து அழித்து விடுங்கள். இதனை விடவும் ஒரு பந்தியை சீராக நடாத்தி விடுவேன் நான். ஒருவருக்கு பால்,சீனி எல்லாம் நன்றாக போட்டிருக்க வேண்டும், இன்னொருவருக்கு சீனி குறைவு பால் கூட போடனும், மற்றவருக்கு வரகு கோப்பி அதாவது பால் இல்லை, ஒருவருக்கு இளம் சூடாயிருக்க வேண்டும், இன்னுமொருவருக்கு கொதிக்க கொதிக்க வேண்டும், கடைசிக்கு நுரை கோப்பி வேண்டும் அதுவும் ஆற்றி கொடுக்க வேண்டும். என்னுடைய பொறுமைக்கு கிடைத்த சோதனை இது. அதுவும் பல வருடங்களாக நான் செய்துகொண்டிருக்கும் பணி… இது நான் போன ஜென்மத்தில் செய்த ஏதோவொரு துரோகத்திற்கு கிடைத்த தண்டணை போல…. இல்லாட்டி இப்படியா அல்லாட விடுவார்கள். ஆனால் ஒன்று இந்த பணியை செய்வதால் இந்த ஜென்மத்தில் எனக்கு பாவக்கணக்கு வெட்டுப்பட்டு செத்தால் நேரடியாக சொர்க்கம் தான்>  அல்லது இயேசுவிற்கு பக்கத்தில் நான் சிறகுடன் ஏஞ்சல் போல் இருப்பேன். எது எப்படியோ எல்லோருக்கும் கோப்பி போட்டு> கதவை தட்டி எழுப்பி கொடுத்து எல்லாம் முடியத்தான் எனக்கு தனியே கோப்பி தயாரிப்பேன். எனக்கு கோப்பி குடிப்பது ஒருவித தனித்துவமான பொழுது. கோப்பி கோப்பையுடன் முற்றத்திற்கு போய் ஊஞ்சலில் இருந்தபடி குடிப்பேன். பின்னர் நடந்த படி பூக்களை பார்த்த படி குடிப்பேன். இப்படி கோப்பி குடிக்காவிட்டால் அன்றைய பொழுதே எனக்கு விடியாது… ஆனால் இன்றைய நாள் எப்படி ஆகிவிட்டது என்று தெரியுமா?

நேற்று நாடு வந்து சேரும் போது மாலை 7 மணி. விமான நிலையத்திலிருந்து நல்லூர். கூப்பிட வந்தவர் தூங்கினால் ஒரேடியாக தூங்கிட வேண்டுமே என்று கதைத்தபடி பயணம். இம்முறை புதுவருடம் யாழ்ப்பாணத்தில். முழுக்குடும்பமும் அங்கு போய் விட்டனர். நான் மட்டும் தான் ஊர்க்குருவி நேற்று பறந்து வந்தடைந்திருந்தேன். நல்லூர் போய் சேர்ந்து விடியங்காலையில் லைட்டைப்போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணி கொண்டு வந்தவற்றை பிரித்துகொடுத்து எனக்கு கண்ணை சொருகும் போது ஒரு கட்டளைக்குரல் “மகள் எல்லாருக்கும் கோப்பி போடுங்களன்” என்று. சரி என்று கோப்பிக்கடையை திறந்தால் வீட்டில் பத்துப்பேரென்றால் இங்கு இருத்தியொரு பேர். பொறுமையை இழுத்துப்பிடித்து கோப்பி போட்டுக்கொடுத்து  கடையை சாத்திவிட்டு சோபாவில் சுருளுவம் என்று வெளிக்கிட்டால் அரைப்பு வைக்க நவாலியூர் போகவேண்டும் என்று சத்தம். ஏன் என்று கேட்டால் அங்கு இருக்கும் சீனியர் வரச்சொன்னதாக பதில் வந்தது. மறுபடி மூட முயன்ற கண்ணை திறந்து மேல் கழுவிவிட்டு மறுபடி பயணம். பயணிக்கும் போது சீனியர் எனக்கு உடுப்பெடுத்து வைத்துள்ளதாகவும் மறுக்காமல் அதனை அணியும் படியும் மறுபடியொரு கட்டளை. அங்கு போய் பார்த்தால் சீனியர் சிட்டிசன்ஸ் எடுத்து வைத்திருந்தது சிவப்பு புடவை. ஏறக்குறைய படையப்பா படத்தில் நீலாம்பரி எடுத்துக்கொடுத்து அதனை சௌந்தர்யா கட்டி அவரை மாடு துரத்துமே அதே நிறம். இதென்ன சோதனை என்று வீட்டாக்களை திரும்பி பார்த்தால் அனைவரும் இரத்த துளிகள் போல சிவப்பில் தான் நின்றிருந்தார்கள். இம்முறை சிவப்பு தான் நிறமாம். எனக்கென வாங்கியது மிகவும் மெல்லிய புடவை வேறு. போதாதற்கு பொன்னிற சரிகை. இனி வருச நாளில் குழம்புவதா என்று உடுக்க வெளிக்கிட்டு பார்த்தால் பிளவுஸ்சில் பின்னுக்கு ஜன்னல், கதவு எல்லாம் இருக்கு. பொறுமை…. பொறுமை…. இன்று மட்டும் பொறுமை…

குடும்பமாக வெளிக்கிட்டு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு பின்னர் கண்டவர்கள், நலம் விசாரித்தவர்களிடம் ஊர்க்கதை பேசி…. இங்கு எனக்குள் வேர்வை மழை! எப்படா வீட்ட போவம் போட்டதுகளை கழட்டி எறிவம் என்று ஒரு மாதிரி வீட்ட போய் சேர்ந்து உடுப்பு மாற்ற போனால் கடைக்கு போவமா என்று மச்சாள் உரிமையுடன் கூப்பிட்டாள். சரி என்று வேறு உடுப்பு மாற்றி மறுபடி பட்டியலுடன் பயணம். கறி, புளி வாங்கி வீட்டிற்கு வந்தால் வாசலில் செருப்பு கூட்டம். வீட்டுக்குள் அரசியல் கூட்டம். சொல்லாமலேயே சமையல் என் தலையில் தானாக வந்து விழுந்தது. கொஞ்சம் வளர்ந்த கிளைகளை கூப்பிட்டு வேலை வாங்கி சமையல் முடித்து வெளியில் வந்தால் வந்திருந்தவர்களில் ஒரு ஆண்டி கல்யாண பேச்சை ஆரம்பிக்க…. மறுபடி குசினிக்குள் புகுந்து அது இதை குடைந்து நேரம் கடத்தி மறுபடி வெளிய வரும் போது 1.40! 

ஓ..கடவுளே! மறுபடி பந்தி பரிமாறி…. அன்புத்தொல்லையாக ஆளாளுக்கு ஊட்டிவிட்ட சோற்றில் வயிறு நிரம்பி…. எல்லோரும் மதிய நித்திரைக்கு தயாராக நானும் தயாராகி திடீர் ஞாபகம் வர கையடக்க தொலைபேசியை உயிர்ப்பித்தால் அன்பான வாழ்த்துக்கள்> நல விசாரிப்புக்கள்> மிஸ் கோல் அலர்ட்கள்….. ஒரு மின்னஞ்சல்! இந்த நேரத்தில் போனை உயிர்ப்பித்தது தான் இந்த வருடத்தில் நான் முதன் முதல் சொந்தக்காசில் வைத்த சூனியம்.  

மாலை 3.30 க்கு கடற்கரை போவதாக ஏற்பாடு. கடைசியில் கடற்கரை போகும் போது 5 ஐ தாண்டிவிட்டது. சேர்ந்து கதைக்க தொடங்கினால் கதை எந்தப்பக்கம் திரும்பும் என்று தெரியும் என்பதால் மெதுவாக நழுவி கடற்கரையோரமாக நடக்க ஆரம்பித்தேன். தூரத்தில் ஒராள். பகீரென்றாகிவிட்டது. இது என்ன சோதனை என்று உற்றுப்பார்த்தால் நம்மட ஆள் இல்லை. அதாவது நான் நினைத்த ஆளில்லை. சை இந்த வருடமாவது மானம் ரோஷத்துடன் நட என்று எனக்குள் நானே என்னை திட்டிக்கொண்டு நடந்து வந்தால் சற்று தூரத்தில் அண்ணா நடந்து போய்க்கொண்டிருந்தார். வழமை போன்று குரங்கு புத்தி தோன்ற விரைவாக நடந்து நெருங்கி இரு கைகளாலும் கண்களைப் பொத்தி….. யாரது என்று கேட்ட குரல் வித்தியாசமாயிருக்க கைகளை விலக்கி விட்டுப்பார்த்தால் அது யாரோ ஒராள்…... சற்றுத்தூரத்தில் இருந்து அந்தாளின் நண்பர்களும் வந்து பகிடி பண்ணி… சை அந்தாளை தொட்டு என் கற்பிலும் கொஞ்சம் போயிட்டுது! போதாதற்கு நாம் வாகனத்தில் ஏறும் வரை அந்த கூட்டம் நக்கலடித்து சிரித்து கொண்டிருந்தது. இது இன்று நானே வைத்த சூனியம் 02! 

வீடு வந்து பயணக்களைப்பு> நித்திரை மயக்கம்> கடற்காற்று எல்லாம் சேர்ந்து சோர்வாக அமர்ந்திருக்க தாய்க்கிழவி என்ன செய்யுது என்று கேட்டபடி அருகில் அமற “எனக்கு தலையிடிக்குது… நித்திரை வருகுது..” என்றேன். எல்லாவிடமும் போய் கண்பட்டுவிட்டது என்று ஒன்பது கண் சிரட்டை எடுத்து, மிளகு, செத்தல் எல்லாம் சேர்ந்து முடிந்து என் தலையை சுற்றி கண்ணூறு போட்டு, இரும்பு சுற்றி போட்டு இப்போது விறகடுப்பில் பானையில் நீரும் விறகுடன் இரும்பும் காய்கின்றது. இன்னும் சற்று நேரம் என்னை காத்திருக்க சொல்லியிருக்கின்றார்கள் கண்ணூறு கழிக்க. கடற்கரை விட்டு வந்த போது படம் பார்க்க போக கூட்பிட்டார்கள். திரையரங்கின் அதிர்வைவிட இங்கு தூங்கலாம் என்று மறுத்துவிட்டேன். ஆனால் இப்போது புரிகின்றது இது சூனியம் 03. 

காலையிலிருந்து நான் இன்னும் கோப்பி குடிக்கவில்லை. போதாதற்கு வைத்தக்கொண்ட சூனியங்கள் வேறு. இன்று காலை புதிய வருடத்தின் முதல் நாள் 07 ஆம் இலக்கத்தில் பிறந்தவர்களுக்கு “இன்றைய நாள் எப்படி?” என்று ஐயா என்ன சொன்னவர்…? தெரிந்தவர்கள் யாராவது இருக்கின்றீர்களா…..? அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

மனம் + மனம் = திருமணம் (02)

 fij - 01 

fij 02  ஒரு போராளியும் துணையும் 



n[fd;> me;Neuk; gpugy;akhapUe;jnjhU ,af;fj;jpd; fpof;F khfhz jsgjp> ngz’fs; rikj;jhy; NghJk;> tPl;ilAk; gps;isfisAk; ghh;j;Jf;nfhz;lhy; NghJk; vd;W epidj;j fhyj;jpy; jd; fhjy; kidtpia fl;lhag;gLj;jp gbf;f itf;fpd;wstpw;F Kw;Nghf;fhdth;. nghUshjhuj;jpy; NtWhd;Wfpd;wnjhU ,dNk jdf;fhd Njrj;jpid fl;bnaOg;Gk; vd cWjpahf ek;Ggth;. ,tUf;F Ie;J Foe;ijfs;> ehd;F Mz;fs; xU ngz;. ,th;fs; tPl;by; rpy vOjg;glhj tpjpfs; cz;L.

· vt;tsT jhd; Vida nkhopfspy; fw;Wj; Njh;e;jhYk; tPl;by; ek;Kila jha;nkhopapy; NgrNtz;Lk;.

· jpdKk; xUNtis xd;whf mkh;e;J cz;z Ntz;Lk;. ,jd; NghJ jj;jkJ ehshe;j tplaq;fis gfph;e;Jnfhs;s Ntz;Lk;.

· khiyapy; Foe;ijfs; gbf;Fk; NghJ n[fDk; kidtpAk; $l xd;whf mkh;e;J jhKk; gbf;f Ntz;Lk;. jpdKk; xU kzpj;jpahyk; Gj;jfq;fs; thrpf;f Ntz;Lk;

· tPl;L Ntiyfisg; gfph;tjpYk; rhp fw;Fk; Jiwia njhpTnra;tjpYk; rhp Mz; ngz; NtWghL ,Uf;f $lhJ

·  midj;Jf; Foe;ijfSf;Fk; ,e;J fj;Njhypf;f rkak; Fwpj;J NtWghL ,Uf;f $lhJ.

· gps;isfs; vg;NghJk; epiwa ,lq;fSf;F gazpf;f Ntz;Lk;. gazq;fs; jhd; fw;Wf;nfhLf;fpd;wd vd;W epidj;j ,j;jk;gjpfs;; fpilf;Fk; tpLKiwfspy; gazq;fis Nkw;nfhs;tJz;L.

(,it ,d;W tiu filg;gpbf;fg;gl;Lk; tUfpd;wd.) ,t;thW fl;Lg;ghLfSk; md;Gkhf mike;j me;j FLk;gj;jpw;F murpay; gpur;rpid Vw;gl Muk;gpj;jJ. 2000 ,d; Muk;gq;fspy; Jiz ,af;f cWg;gpdh; xUtuhy; ngz;nzhUth; ghypay; td;Kiwf;Fl;gLj;jg;gl;l tplak; njhlh;gpy; n[fd; jl;bf;Nfl;f Muk;gpj;j NghJ fpof;fpy; gLnfhiyfSk; fl;likf;fg;gl;bUe;jJ. ,J njhlh;gpy; n[fdhy; Mjhuq;fSld; Gj;jfnkhd;Wk; Mq;fpyj;jpYk; jkpopYk; vOjg;gl;Lf;nfhz;bUe;jJ. ,d;W jk;ik ,d kPl;gh;fs; vd nrhy;ypf;nfhs;fpd;w gy murpay;thjpfspd; ,d;ndhU Kfk; Fwpj;Jk; ,jpy; Fwpg;gplg;gl;bUe;jJ. mj;Jld; ghypay; td;Kiwf;Fl;gLj;jg;gl;l me;j ngz;Zk; ghJfhg;gpw;fhf ,th;fs; tPl;by; jq;fitf;fg;gl;bUe;jhh;.

Fwpg;gpl;l xU ehspy; toik Nghd;W ,isQh;fSf;fhd nghUshjhu tFg;G n[fdpd; tPl;by; elhj;jg;gl;Lf;nfhz;bUe;jJ. gps;isfSk; kidtpAk; tPl;bDs; gbj;Jf;nfhz;bUe;jpUf;fpd;whh;fs;. mg;NghJ rpy egh;fs; jPbnud;W tPl;bf;Fs; GFe;J n[fDld; jhq;fs; Ngr Ntz;Lk; vd;Wk; ntspNa tUk;gbAk; $wpapUf;fpd;whh;fs;. njhpahjth;fSld; ntspapy; te;J NgrNtz;ba Njitapy;iy vd n[fd; Nfhgkhf fj;jpapUf;fpd;whh;. rj;jk; Nfl;L ntspapy; te;j n[fdpd; ,uz;lhtJ kfid gpbj;jpOj;J ntspapy; tuhtpl;lhy; Foe;ijia RLNthk; vd kpul;l gps;isia tpLk; gb Nfl;l n[fd; jd; kidtpaplk; nrhy;yptpl;L tUthf $wp cs;Ns te;jpUf;fpd;whh;. kidtpaplk; "mNefkhf ehd; jpUk;gp tukhl;Nld; vd;d ele;jhYk; gps;isfs; gbg;G kl;Lk; epw;f $lhJ. ehd; ,y;yhtpl;lhYk; ijhpakhf Kd;epd;W midj;Jk; nra;a Ntz;Lk;. vd;id NjLtjpy; gadpUf;fhJ" - vd;W $wpapUf;fpd;whh;.  14 taNjahd jd;Dila %j;j kfdplk; "jk;gp ey;yh gbf;fDk;. tPL ftdk;vd;W nrhy;yp kidtp kw;Wk; Foe;ijfis Kj;jkpl;bUf;fpd;whh;. mth; Kj;jkplhjtUk; nrhy;ypr;nry;yhjtUk; xUth; mq;fpUe;jpUf;fpd;whh;. mth; n[fd; jk;gjpfspd; MwhtJ Mz; Foe;ij. mg;NghJ fUtpypUe;j mjw;F ntWk; %d;W khjk; jhd; taJ.

FLk;gj;jpdh; Kd;dpiyapUk; gbg;gpj;Jf;nfhz;bUe;j khzth;fs; Kd;dpiyapYk; mioj;Jr;nry;yg;gl;l n[fd; kPz;Lk; jpUk;gp tutpy;iy. Neh;ikahdth;fSf;F vg;NghJk; jk;Kila kuzk; kw;Wk; Kbtpid gw;wp Kd;dNu njhpe;jpUg;gJz;L. n[fdpd; jPh;f;fjhprdKk; mJNt. thpirahf epw;Fk; Foe;ijfs;> tapw;wpypUf;Fk; Foe;ij> capUf;fhf ruzile;jpUe;j ngz’ ,th;fis Rkf;fpd;w mj;jid nghWg;Gf;fSk; n[fdpd; kidtpapd; jiyapy; rpy epkplq;fspy; ,wq;fpapUe;jJ.

,Jtiu fhyKk; n[fd; jk;gjpfspd; fhjiy vjph;j;J epd;w ,U gf;f FLk;gq;fSk; mDjhgj;Jld; mDf Muk;gpj;jd. MshSf;F Foe;ijfis gphpj;J tsh;g;Nghk; vd jPh;khdpf;f Kw;gl;ld. ehq;fs; thOk; NghJ vk;ik tho;j;jhj ePq;fs;> cq;fs; gzk; mjdhy; tUk; trjpfs; > ghpjhgq;;fs; vdf;Fj; Njitapy;iy. vkJ gps;isfis tsh;f;Fk; msT kdjpy; fhjYk; vd; Jizthpd; epidTfSk; ,Uf;fpd;wJ. vd;dhy; KbAk; vd jpUkjp. n[fd; cWjpahf Ngr fiye;J Nghapd cwTfs;.

rhjhuz Mrphpauhf Rkf;f Muk;gpj;j ,e;j Rikapid fPNo ,wf;fp itf;f Muk;gpj;j NghJ %j;j %d;W Mz; gps;isfSk; itj;jpa epGzh;fshf cUthfpapUe;jdh;> இரு பிள்ளைகள் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்f கடைசியானவர் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தார் vd;gJ kl;Lky;y jpUkjp n[fDk;; gzpg;ghsuhf jd;id nrJf;fpapUe;jhh;. fhjy; vd;gJ ntWk; tpUk;gpath;fSld; tho;jy; ,y;iy. ek;kth;fspd; ,yf;Ffis Rkh;g;gJk; > ek;ikr; nrJf;fpf;nfhs;tJk;> ek;ik Jhf;fpnawpe;jth;fs; Kd;dhy; tho;e;J fhl;LtJk; jhNd

,e;j FLk;gj;jpd; vOr;rpf;Fk; tho;jYf;Fk; ve;j nrhe;jKk; nghWg;Ngw;wpUf;ftpy;iy.

gpw;Fwpg;G : n[fdpd; nfhjpj;jdKk; tpWf;Fj;jdKk; Fiwa Ntz;Lk; vd;why; nghk;gpsg;gps;isnahd;W Ntz;Lk; vd;ghuhk; kidtp. Kjy; %d;W Foe;ijfSk; Mz;fs; vd;W mbf;fb ftiyg;gLthh;fshk;. ehd;fhtJ gpurtj;jpd; NghJk; ,k;Kiw Mz;; jhd; vd;W kUj;Jth; $wpdhuhk;. gpurtj;jpd; NghJ jhd; ,ul;ilah;fs; vd;W njhpa te;jpUf;fpd;wJ. ,ul;ilapy; KjyhtJ Mz; Foe;ij ntspNawpa gpd;dh; cs;spUf;Fk; Foe;ijia nfhb Rw;wpAs;sJ gpurtk; rpf;;fyhdJ vd;W nrhy;yg;gl;bUe;jpUf;fpd;wJ. Vwj;jho 15 kzp Neu ,ilntspapd; gpd;dh; nfhb mfw;wg;gl;L Foe;ij kPl;fg;gl;ljhk;. mJ ngz; Foe;ij vd;W mwpe;jTld; mg;gbnahU re;Njhrk; ,UtUf;Fk;. cz;ikapNyNa n[fdpd; Kd;Nfhgq;fs; mlq;fpg; NghdjhfTk; Ch; ehl;lhik Ntiy nra;J gpd;dputpy; toikahd tPL jpUk;Ggth; kfs; te;j gpd;dh; Neuj;jpw;F tPL te;jjhfTk; kfshiu neQ;rpy; gLf;f itj;jgb jhd; tpbAk; tiu Jhq;fpajhfTk;> ahuhtJ FuYah;j;jp Ngrpdhy; mO%Q;rp kfshh; fj;Jthh; vd;gjhy; jd; Fuy; cah;j;Jjiy tPl;by; Fiwj;Jf;nfhz;ljhfTk; tuyhW njhptpf;fpd;wJ.

இறுதிக்கதை விரைவில்................. 

 

மனம் + மனம் = திருமணம்


பொதுவாகவே திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன எனும் சொல்லடை உண்டு. ஆனால் சொந்தங்கள் என்பது மருவித்தான் சொர்க்கம் என்றாகி விட்டதோ என்கின்ற சந்தேகம் பல நாட்களாக எனக்குண்டு. ஒரு குழந்தை பிறந்தவுடன் சொந்தங்களுக்கு இனிப்பு வழங்கப்படுவதிலிருந்து ஆரம்பிக்கின்றது இவர்களுடைய தலையீடு. என்ன பிள்ளை பிறந்திருக்கின்றது? எனத் தொடங்கும் அக்குழந்தை குறித்த உரையாடல். முதலாவதே பெண்ணா? குடும்பத்திற்கு கட்டாயம் ஆண் பிள்ளை வேண்டும் என்று அறிவுரையுடன் ஆரம்பிக்கும். சில வருடங்களின் பின் என்ன படிக்குது? பெண்ணென்றால் பெரிய பிள்ளையாகிட்டுதா என இச்சொந்தங்கள் கேட்கும். பின்னர் படிப்பு முடியும் தருவாயில் தலைபோடும். ஆண் என்றால் வேலை கிடைச்சுட்டா என்று கேட்கும் அதுவே பெண்ணென்றால் கல்யாணம் பேசலயா என்று கேட்கும். கல்யாணம் நடக்கும் போது கூப்பிட்டால் கொடுத்த கேக்கை சாப்பிட்டுக்கொண்டே யாரை முடிக்கின்றார்கள் என்பதை குறித்தும் குறை நிறை குறித்தும் ஆராயும். கல்யாணம் முடிந்து ஓராண்டு ஆகிவிட்டால் குழந்தையில்லையா என கேட்கும். மீண்டும் இந்த வட்டம் தொடரும். ஆனால் ஏதாவதொரு தருணத்தில் வாழ்க்கையில் சறுக்கிப்பாருங்கள் கைகொடுத்து தூக்க மட்டும் யாரும் இருக்க மாட்டார்கள். இப்படியாக அடுத்தவர்களுக்காக பேசப்படுகின்ற அல்லது நிச்சயிக்கப்படுகின்ற திருமணங்களில் இரு மன இணைவு இருக்கின்றதா என்று கேட்டால் அது பெரும்பாலும் விடையில்லா கேள்வியே

இந்தப்பதிவில் மூன்ற காலகட்டங்களில் இடம்பெற்ற காதல் வாழ்க்கை குறித்து பேச நினைக்கின்றேன். என்ன தான் மனதில் கடுப்பிருந்தாலும் ஒருவரின் தனிப்பட்ட அடையாளங்களை வெளியிட்டு ஏதாவதொரு புள்ளியில் அவர்களை காயப்படுத்திவிடக் கூடாது என்பதால் சில பெயர்கள் மற்றும் தனியடையாளங்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் முழுவதும் கற்பனையல்ல.  முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

கதை – 01 மட்டக்களப்பானும் - யாழ்ப்பாணத்தாளும்  

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபலமான சட்டத்தரணி பிள்ளை அவர்கள். அவர் வாதாடிய எத்தனையோ வழக்குகள் இன்றும் மேற்கோள்காட்டப்படுகின்றன. இவர் ஒரு கட்டத்தில் இன்று தேசியத்திற்காக போராடுவதாக சொல்கின்ற ( சொல்கின்ற என்பதை மூன்று தடவை வாசித்துக்கொள்ளுங்கள்) கட்சியின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்களித்த ஒருவர். இவர் வாரிசுகள் மற்றும் அள்ளக்கைகள் இன்றும் கட்சியை நடாத்துகின்றார்கள் என்பது கொசுறுத் தகவல். இந்தப் பிள்ளை அவர்களுக்கு இரு முகம் உண்டு. வெளியில் பிரபல்யமானவர், தன்னை கேட்பவர்களுக்கு உதவி செய்பவர், தானம் செய்வதில் கர்ணன் இப்படி நீளும் இவர் பெருமை. ஆனால் அடுத்த முகம் சாதிவெறி , பிரதேசவாத வெறி மற்றும் மதவெறி பிடித்த அசிங்கமான முகம். வீட்டின் உடைகளை சலவை செய்து வருபவருக்கு தண்ணீர் கொடுப்பதற்கென்றே வேறான திண்ணையும் கிண்ணமும் வைத்திருப்பவர். எந்த வில்லனுக்கும் ஒரு புள்ளியில் மென்மை நிலை காணப்படும் என்று உளவியல் சொல்கின்றது. பிள்ளையின் வீக்னஸ் அவரது ஒரே மகள். இரு ஆண்பிள்ளைகளுக்குப் பின் பிறந்த கடைசி மகள். ஆனால் குணத்தில் பிள்ளைக்கு நேரெதிர் ஆனவர். காதல் யாரைத்தான் விட்டது. அது பிள்ளையின் மகளாரையும் விடவில்லை. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது அங்கு பகுதிநேர விரிவுரையாளராக இருந்த மட்டக்களப்பு பொடியன் மீது வந்திருக்கின்றது. பொடியன் இந்து மதத்தினை சார்ந்தவர். காதலையும் கர்ப்பத்தினையும் மறைக்க முடியாதல்லவா? பிள்ளையின் அள்ளக்கையொன்று வீட்டில் கொளுத்திப் போட ஆரம்பித்தது பிரச்சினை. மகளை வீட்டில் பூட்டி வைத்து விட்டு அவசரமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிள்ளையின் மகள் விரும்பிய மட்டக்களப்பான் லேசுப்பட்ட ஆளில்லை. மட்டக்களப்பின் பிரபல்யமான போடியாரின் மூத்த மகன். குடும்பத்திற்கென்றே இரு கோயில்கள் இருக்கின்றன. (இன்று 2024 இலும் இவர்கள் குடும்பம் முன்னின்று பூஜை செய்கின்றதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.) இதெல்லாவற்றினையும் விட மண் மீதும் தன் இன மக்கள் மீதும் பற்றுக்கொண்டவர் இயக்க பெடியன்களுக்கு கூட பொருளாதாரம் படிப்பித்ததாக கதைகளுண்டு. மண்ணை நேசிப்பவர்கள் பொதுவாக பெண்ணையும் அதே உறுதியுடன் நேசிப்பதுண்டு. இந்த மட்டக்களப்பானும் பிள்ளையின் மகளாரின் ஆளுமையை நேசித்ததில் வியப்பிருக்கவில்லை. ஆனால் இவர் பயங்கர கொதியனும் விறுக்கனும் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பிள்ளை அவர்கள் மகளுக்கு கல்யாணம் பேச மட்டக்களப்பான் வீடேறி பேச முயல பிள்ளையின் கோபமும் மட்டக்களப்பானின் விறுக்குத்தனமும் முட்டிக்கொண்டதில் பிள்ளையின் மகள் அனைத்தையும் விட்டு மட்டக்களப்பான் வாங்கிக்கொடுத்த உடுப்பை மட்டும் மாற்றிவிட்டு வெளியேறி விட்டார். “அவனை விட்டுவிட்டு வந்தால் , மறந்திட்டு வந்தால் அல்லது அந்த மட்டக்களப்பான் செத்தால் தான் எனது மரண அறிவித்தலில் கூட மகளின் பெயர் வரவேண்டும்" என்று தன் மகன்களிடமும் குடும்பத்தினரிடமும் சத்தியம் வாங்கி மகளை தலை மூழ்கிவிட்டார் பிள்ளை. 

தன் வருங்கால மனைவியுடன் மட்டக்களப்பு வந்தவருக்கு “வேதக்காரப் பிள்ளை எப்படி மருமகளா வரலாம். கொண்டு போய் விட்டுட்டு வீட்டுக்குள்ள வா என்டு போட்டார் அரிவாளைப் போடியார். விறுக்கு குணம் சும்மாயிருக்குமா? 

சரி இரண்டு பக்கமும் வேண்டாம். எனக்கு நீ உனக்கு நான். எந்தக்காலத்திலும் இரு பக்கத்திலும் எதற்கும் போய் நிற்கக்கூடாது. அப்படி நின்றால் நம் காதல் செத்து விட்டது என்ற அர்த்தம் என்று மட்டக்களப்பான் எடுத்த முடிவிற்கமைய சைவ நாராயண போடியாரின் மகனும் பிரபல கத்தோலிக்க சட்டத்தரணி பிள்ளையின் மகளும் கத்தோலிக்க முறைப்படி மரியாள் தேவாலயத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டு மாமாங்கப்பிள்ளையார் கோவிலில் தாலி கட்டி எளிமையாக வாழ ஆரம்பித்தார்கள். வாழ்தலில் மனம் தானே கணக்கு. முன்னூறு முக்கோடி தேவர்களின்  வாழ்த்துக்கள் அதற்கு போதுமானது தானே 

இந்தக்கல்யாணத்திற்கு எந்த சொந்தமும் பொறுப்பேற்றிருக்கவில்லை. 

பிற்குறிப்பு: திருமணத்தின் பின்னர் இந்தத்தம்பதிகள் செல்லச்சண்டைகள் போடும் போது “என்னை வீட்டை விட்டு வரச்சொல்லி அப்பாவோட சண்டைபோட்ட நேரம் உடுப்பு வாங்கி தந்தீர்களே , அந்த நிறம் எனக்கு பொருத்தமாகவா இருந்தது? உங்களுக்கு உடுப்பெல்லாம் பார்த்து வாங்கத் தெரியா என்று பகிடி பண்ணுவாறாம் மட்டக்களப்பானின் மனைவி

இரண்டாம் கதை விரைவில் பதிவிடப்படும்.........



அன்பின் அம்மாவிற்கு.......



அன்பின் அம்மாவிற்கு

நான் இங்கு விடுதியில் நலம். நீங்க > அம்மம்மா> தம்பி எல்லோரும் எப்படியிருக்கிறீங்க? அப்பா இரண்டு நாளைக்கு முதல்ல என்னோட ஸ்கைப்பில கதைச்சவர். இந்த ஏப்பிரல்ல எப்படியும் லீவுக்கு ஒரு தடவை வந்து போக நினைக்கிறாராம். வீட்டுக்கும் அடுத்த வெள்ளிக்கிழமை கோல் பண்ணி கதைப்பாராம். அண்ணாவும் இரண்டு தரம் போனில் பேசினவர். எனக்கு எப்போது யுனிவர்சிற்றி லீவு விடும் என்றிருக்கின்றது. உங்கள் கையால் சாப்பிட்டு எத்தனை நாளாகின்றது அம்மா. லீவு விட்ட உடனேயே பஸ் ஏறிடுவேன்.

அம்மா இப்போதெல்லாம் காலையில் எழும்பும் போதே ஏதோவொரு பாரம் நெஞ்ச அழுத்துகின்ற மாதிரி உணர்கின்றேன். நீங்கள் சொன்ன விடயத்தை திரும்ப திரும்ப யோசித்து பார்த்த நான் அம்மா. எனக்கு கல்யாணம் கட்டின பிறகு வெளிநாடு போக விரும்பம் இல்லாமல் இருக்கு. இதத்தான் அன்டைக்கும் அப்பாட்ட சொன்ன நேரம் எனக்கு ஏசினவர். திரும்பவும் அப்பாட்ட சொல்ல எனக்கு பயமாக இருக்கு.
 

அம்மா முதல் ஒரு தடவை மாமாவுடன் அம்மமாக்கு மனத்தாங்கல் வந்த நேரம் “அம்மா என்னோட வந்து இருங்கோவன். நீங்க பொம்பிள பிள்ளையோட தானே இருக்கனும் என்னோட வந்து இருங்கம்மா” என்டு தானே சொல்லி நம்மட வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தனீங்க. நாளைக்கு நானும் வெளிநாட்டுக்கு போய்ட்டா நீங்க யாரோட போய் இருக்க போறீங்க? எனக்கு வெளிநாட்டுக்கு போய் படிக்க சான்ஸ் கிடைச்ச நேரம் நீங்களும் அப்பாவும் அங்க தனியா பொம்பள பிள்ளைய அனுப்பேலா என்டு தானே என்ன தடுத்தனீங்க? இப்ப மட்டும் தனியா அனுப்ப போறீங்களா? இத அண்டைக்கும் நான் சொன்ன நேரம் “அது வேற இது கலியாணம் கட்டிப்போற விஷயம் வேற” என்டு அப்பா சொன்னவர். என்னோட ஸ்கூல்ல படிச்ச வித்யாவ உங்களுக்கு ஞாபகம் இருக்கு தானே. அவளுக்கும் வெளிநாட்டாள் ஒராள தான் கல்யாணம் கட்டி அனுப்பினவங்க. அங்க போன பிறகு தான் அந்தாளுக்கு வேற ஒரு குடும்பம் இருக்கிறது தெஞ்சதாம். இப்ப அவள் தனியா வேறயா தான் இருக்கா. எனக்கு அவள்ட கதைய கேட்டதுல இருந்து பயமாயிருக்கு அம்மா.

நான் ஒருக்கா தனியா இரவு பஸ்ல கொழும்புல இருந்து மட்டக்களப்புக்கு வந்ததுக்கே அண்ணாச்சி எனக்கு ஏசினவன். இப்ப எப்படி என்ன அவ்வளவு தூரத்திற்கு அனுப்ப போறீங்க? புதுசா வந்தவற நம்பியோ அனுப்ப போறீங்க? அண்டைக்கு அவங்கட ஆக்கள் வீட்ட வந்த நேரம் அவரு படிச்சிருக்காரு , பீ.ஆர் இருக்கு என்டெல்லாம் சொல்லி கூட சீதனம் கேட்டவங்க என்டும் சாதியப் பத்தி விசாரிச்சவங்க என்டும் அவங்க கதைச்சத தம்பி சொன்னவன் அம்மா.  என்னத்த படிச்சி என்ன? வெளிநாட்டில இருந்தென்ன இன்னம் சாதிய, சீதனத்த பத்தி கதைக்கிறவங்களோடயா என்ன தனியா அனுப்ப போறீங்க? அவரும் இஞ்ச மொறட்டுவயில தானே எஞ்சினியறிங் முடிச்சவர். நானும் அதே யுனிவசிற்றில அவர் படிச்சத தானே படிக்கிறன். பிறகென்ன? ஒரே படிப்பு, ஒரே யுனிவர்சிற்றி அப்பென்டா ஒரே செலவு தானே? பிறகென்னத்துக்கு அவருக்கு படிப்பிச்ச செலவென்டு சீதனம் கேக்கிறாங்க?

என்ட போட்டோவ பார்த்து நிறங்குறைவா இருக்கன்னு சொன்னவங்க என்டு நீங்க வாங்கித் தந்த கீறீம் ரெண்டு மூனு நாள் போட்ட நான் அம்மா. படுக்கக்குள்ள பிசுபிசுப்பா இருக்கு இப்ப நித்தாட்டிட்டன். அவர்ட போட்டோவயும் நான் மெயில்ல பார்த்த நான். அங்கத்தைய கிளைமெட்டால அவர் கொஞ்சம் கலரா இருக்காரு. நம்ம ஊரு வெயிலுக்கு நான் இந்த கலர்ல தானே இருப்பன். அவங்களுக்கு வெள்ளப் பிள்ள தான் வேணுமென்டா வெள்ளக்காரிய கட்றது தானே. என்னத்துக்கு நம்மட நாட்டுல தேடுறாங்க? அல்லாட்டி இங்சருந்து போய் இப்ப வெளிநாட்ல இருக்கிற பிள்ளைய பார்க்கிற தானே..?

அண்டைக்கு வீடு மாறின நேரம் அம்மிய இறக்கக்குள்ள கீழ விழுந்ததுக்கு கவலப்பட்ட நீங்க தானே இது பரம்பர சாமான் என்டு. என்னத்துக்கு இதெல்லாம் சேத்து வச்சிருக்கீங்க? என்னைய வெளிநாட்டுக்கு தான் அனுப்ப போறீங்க என்டா இந்த அம்மி, உரல் எல்லாம் என்ன செய்யப் போறீங்க? இப்பவே யாருக்கும் குடுங்களன். இஞ்ச எனக்கு காச்சல் என்டா ஓடி வந்து கூட்டிட்டு போறீங்க… அங்க போனா என்ன செய்யப் போறீங்க?

நான் தர்க்கம் செய்றன் என்டு நினைக்காதீங்க அம்மா. எனக்கு உங்கள எல்லாம் விட்டுட்டு போக விருப்பமில்ல. அண்ணாக்கு நம்மட நாட்டில தானே கலியாணம் பாக்கிறீங்க.. அத போல எனக்கும் இஞ்சயே பாருங்க.. நான் எப்பவும் அண்ணாவோட பைக்கில ஊர் சுத்தனும், தம்பியோட நிறைய சண்ட பிடிக்கனும்,  அப்பாட்ட பிடிவாதம் பிடிச்சி சாதிக்கனும், உங்கட கையால சாப்பிடனும்.

எல்லாத்தயும் விட என்ட பிள்ளையல நீங்களும் அப்பாவும் வளர்த்து தறனும். உங்க இருவருக்கும் வயசான காலத்தில நான் உங்கள வைச்சு பார்த்து என் கடன் தீர்க்கணும். ப்ளீஸ் அம்மா அப்பாட்டயும் பேசிப்பாருங்களன்.

அம்மா கிணத்தடில நான் நாட்டின வாழ மரம் குலை போட்டிருக்கென்டு தம்பி சொன்னவன். ஒருக்கா முத்திட்டா என்டு பாத்துக்கொள்ளுங்க. உங்களுக்கு போன முற சுகர் கூடவாம் என்டு கேள்விப்பட்டன். நிறைய இனிப்பு சாப்பிடாதீங்க… வந்து குறிஞ்சா சுண்டல் செஞ்சு தாறன். இதோட ஆயிரம் முத்தங்கள் தந்து இந்த கடிதத்த முடிக்கிறன்.

அன்பு மகள்

மீரா

(கடந்த கால யுத்தத்தினாலும் அதனை சாக்காக கொண்டும் புலம்பெயர்க்கப்பட்ட எம்மினத்தின் இருப்பு வேறாகிவிட்டதால் இந்த தலைமுறையில் திருமணத்தினால் புலம்பெயர்க்கப்படவுள்ள என் இன பெண்களுக்கு இது சமர்ப்பணம்)


பிரான்ஸ்லிருந்து வெளிவருகின்ற ஆக்காட்டி இதழில் வெளியாகிய என்னுடைய படைப்பு... 

கா.மு – கா.பி


தலைப்பினை பார்த்ததும் ஏதோ வேற்று மொழி பேச தொடங்கிவிட்டேன் என்று விகல்பமாக யோசிக்காதீர்கள். கா.மு – என்பது காதலுக்கு முன் கா.பி என்பது காதலுக்குப் பின் என்பவற்றின் சுருக்கமே. இந்தப்பதிவினை இன்றைய காலகட்டத்துடன் சம்மந்தப்படுத்தியும் உளவியல் ரீதியாகவும் அணுகுவதே இக்கட்டுரையின் நோக்கம். இப்பதிவினை என் கண்ணோட்டத்திலும் என் சார்ந்தவர்களை மையப்படுத்தியுமே எழுதுகின்றேன். யாரையும் காயப்படுத்துவதோ அல்லது பெண்ணியம் பேசுவதோ இதன் நோக்கமல்ல.

“காதல்” என்பது இன்று பலவித பரிணாமங்களை கடந்துவிட்டது. முன்னர் நம்முடைய தாத்தா – பாட்டி காலத்தில் ஒருவருக்கொருவர் பார்த்துக்கூட இருக்கவில்லை. அவர்களுக்கு இடையில் தொடர்பாடல் சாதனங்களும் இருக்கவில்லை. ஆனாலும் அவர்களது காதல் மிகவும் தூய்மையானதொன்றாக இருந்தது. அவர்கள் காதல் கைகூடாவிட்டால் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது காலம் முழுவதும் ஒருவர் மற்றவருடைய நினைவுகளுடனேயே காலம் கழித்தார்கள். அக்காலத்தில் எல்லாம் ஒரே காதல் என்ற கருத்து தான் நிலவியது. காதலிக்கும் போது எவ்வாறானதொரு புரிந்துணர்வுடன் காதலித்தார்களோ அதே காதல் கைபிடித்த பின்னும் குறைந்திருக்கவில்லை.

இன்று சமூக ஊடகங்கள் மூலமாக நமக்குறியவர்களை தேடி திருமணம் செய்யுமளவிற்கு நாம் வளர்ந்திருக்கின்றோம். நம்முறவுகளை வளர்த்துக்கொள்ள பல தொடர்பாடல் நுட்பங்கள் நம்மிடையே பெருகிக்கிடக்கின்றன. ஆனாலும் தற்போதைய காதலர்களிடையே புரிந்துணர்வு என்பது பஞ்சமாகவே இருக்கின்றது. ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தம் காதலை எதிர்பாலினர் ஏற்கும் வரை கொஞ்சிக்குழாவுகின்றோம், பல மணி நேரங்கள் காத்திருக்கின்றோம், சில தவறுகள் நம்மிடம் இல்லாவிட்டாலும் பொறுத்துப்போவோம், பல தியாகங்கள் செய்கின்றோம். ஆனால் இதுவே காதலிக்க தொடங்கிய பின் படிப்படியாக மாற ஆரம்பிப்பதேன்?

உளவியல் ரீதியாக நோக்கும் போது ஒரு பொருள் அல்லது நபர் நம்முடைய உடமையாகும் போது அதன் மீதான உரிமை அதிகரிக்கிறது. இதனால் கூட இவ்வாறானதொரு மனநிலை உருவாகக்கூடும். இதையே நமது மொழிநடையில் சொல்லப்பொனால் “கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய்விடும்?’ என்ற மனநிலையே இது. இப்படியானதொரு சிந்தனை நம்மில் பல மாற்றங்களை கூட ஏற்படுத்துகிறது. 
  • நமது காதலுக்கு முந்தைய குணவியல்புகளில் மாற்றம் (முன்னர் வழிகின்ற நாம் சிடுமூஞ்சாகின்றோம்)
  • சிறு பிழைகள் கூட பூதாகரமானதொன்றாக தோன்றும்
  • முன்னர் நாட்கணக்கில் அவள் அல்லது அவன் ஒரு வார்த்தை பேசமாட்டாரா என்று ஏங்கும் நாம் சிறுநேர தாமதத்தினை கூட பாரியதொரு பிரிவிற்கான தொடக்கபுள்ளியாக்குவோம்
நம்மில் ஏற்படுகின்ற இம்மாற்றங்கள் எதிர்பாலரிடமும் சில தாக்கங்களை உளவியல் ரீதியாக ஏற்படுத்த கூடும்.
  • திடீரென்றான மாற்றங்கள் ஒருவித பய மனநிலையை தோற்றுவிக்க கூடும்
  • தம்மில் தான் ஏதும் தவறோ என்ற குற்றவுணர்வினை ஏற்படுத்தக்கூடும்
  • தம் மீதான அன்பு குறைவடைகிறதோ என்கின்ற சந்தேகத்தினை உண்டாக்கும்.
  • சுற்றியுள்ளவர்களிடமிருந்து விலகி தனிமையை நாடுகின்ற தன்மையை அல்லது மனவழுத்தத்தினை ஏற்படுத்த கூடும்
  • மாற்று அன்பை தேட கூடும்.
  • ஏனையவர்களுடன் தன் காதலை ஒப்பிட்டு பார்க்க தூண்டும்.
ஆகமொத்தத்தில் காதலில் சிறு கீறல்களை உண்டாக்க ஆரம்பிக்கும். நாம் எப்போதும் தோற்பது காதலில் அல்ல நாம் காதலிப்பவர்களை தெரிவுசெய்வதில் தான் தோற்கின்றோம். நம்முடைய எதிர்பார்ப்புகள் என்ன? நமது எதிர்பார்ப்பு ஏற்ற வகையில் காதலன் அல்லது காதலி அமைவாரா? என்று சிந்திக்க வேண்டும். எப்போதும் தெரிவுகள் நம் கையில் தானிருக்கின்றன.

பலவிடங்களில் “அன்புள்ள அல்லது உரிமை உள்ள இடத்தில் தான் கோபம் உண்டாகும்” என்று வாசித்தும், கேட்டுமிருக்கின்றேன். எனக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை. அன்பை அன்பாக தான் காட்ட வேணுமுங்க…. ஏன் ஒருவரை காயப்படுத்தி தானா நம் அன்பை வெளிப்படுத்த வேண்டும்? சிறு தண்டணைகள், பழிவாங்கல்கள் மூலமாகத்தான் நமது உரிமையை நிரூபிக்க வேண்டுமா? அன்பால் இவற்றினை செய்தால் என்ன? காதலில் சம்மதங்களை தெரிவிக்கும் முன் அன்பை கொட்டுகின்றோம் தானே பின்னர் ஏன் அது குறைவுபடுகிறது? முன்னைய அன்பில் சிறு மாறல் ஏற்படுமாயினும் அது உண்மை அன்பில்லை என்பது என் கருத்து. நாம் சம்மதங்களை பெறுவதற்கு வேஷமிட்டிருக்கின்றோம் என்பது தான் இதன் அர்த்தம். ஒருவரை புரிந்துதான் காதலிக்க ஆரம்பிக்கின்றோம் என்றால் ஏன் நம் காதல் மாறுபட வேண்டும்?

  • நம்மவர் நம்மை சந்திக்க வராதவிடத்து “ஏன் நீ வரவில்லை?” என்று கேட்டதல்ல “ஏதோ நடந்துவிட்டது அதனால் தான் வரவில்லை” என்று சிந்தித்தோமென்றால் அதுதான் புரிந்துணர்வு.
  • “என்னைப்பற்றி நினைத்துப் பார்த்தாயா?” என்பதல்ல “என்னையே நினைத்துக்கொண்டிருப்பா(ள்)(ன்)” என்று சமாதானமாகிவிடுவோமே அது தான் பாசம்
  • “நீ செய்தாய் நானும் செய்கின்றேன்” என்பதல்ல “நீ என்ன செய்தாலும் நான் உண்னை அதே அன்புடன் நேசிப்பேன்” என்பதே அன்பு
  • எடுப்பதல்ல கொடுப்பதே காதல்
கல்யாணத்தில் முடிந்தால் மட்டும் காதல் இல்லைங்க…. அதே கா.மு இருக்கும் அன்புடன் கா.பி இருப்பார்கள் என்றால் அது தாங்க வெற்றியடைந்த உண்மைக்காதல். இந்தக்காதல் கல்லறை வரை தொடருமுங்க… (இது இல்லாட்டி தான் அம்மா,அப்பா கைகாட்டுபவருக்கு கழுத்தை காட்டலாமே… என்னத்திற்கு காதலிக்கனும்…….? அழுது அடம்பிடித்து மூக்கால் வடிந்து எல்லாம் கஷ்டப்பட்டு கைப்பிடிக்கனும்……????)

நம்மவர் மனதில் ஒரு கஷ்டம் என்றால் நமது இதயத்திற்கு வலிக்கனும்!!!!



அண்ணாவின் அழகி


அநேகமாக ஒரு காலத்தில் பலரின் தூக்கங்களை கெடுத்த பெண்கள் பின்னர் சப்பை பிகராவதும் பாடசாலைக்காலத்தில் சப்பை பிகரா இருக்கும் பெண்கள் சூப்பர் பிகராவதும் யதார்த்தமங்க.. ஆனால் பாருங்க எந்தப் பொண்ணும் அவங்க அண்ணன்களுக்கு எப்போதுமே அழகிகள் தான். அது உள்ளுர் கிழவி என்றாலும் அவ கூட ஒரு அண்ணாவிற்கு உலக அழகியாத் தான் இருந்திருப்பா!!!

பெரும்பாலும் இளைய சகோதரனுக்கு தன் சகோதரி மேல் இருக்கும் பாதுகாப்பு உணர்வை விட மூத்த சகோதரனுக்கு தங்கை மேல் இருக்கும் பாசமே தனி தாங்க… இதுக்கு உளவியல் காரணம் கூட உண்டு. பெரும்பாலும் நம்மை விட வயதில் மூத்த ஆண் சகோதரனுக்கு தன் வயதை ஒத்த நண்பர்கள் அடுத்த பெண்ணை எவ்வாறு பார்க்கின்றான் என்பது பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும் என்பது தான் அது. (இவருக்கும் ஒரு நண்பன் இருந்திருக்கும்…. அவனுக்கு ஒரு தங்கச்சி இல்லாமலா இருந்திருக்கும்…. நம்ம அண்ணாவும் தன்னுடைய நண்பன் தங்கச்சிய லுக்கு விட்டிருப்பாரில்லையா????) 

இனி தான் நான் என் வீட்டுப்பிரச்சினைக்கு வரப்போகின்றேன். நமக்கும் ஒருவர் இருக்காரில்ல…. அவருடைய இம்சை இருக்குதே….. அதிலும் உயர்தரம் படிக்கும் போது பிரத்தியேக வகுப்புகளுக்கு அண்ணாவுடன் தான் போவேன். அக்காலகட்டத்தில் (2007)  நீண்டதாகவும் கரையோரம் முக்கோணமாக வெட்டியது போன்றதான அமைப்புடன் ஒரு புதுவடிவமைப்பான பெண்களுக்கான பாவாடை வந்திருந்தது. அன்று காலையில் தான் அம்மாவுடன் போய் வாங்கியிருந்தேன். ஆக வழமை போன்று புது உடைகளை உடனேயே அணிகின்ற எனது மேம்பட்ட கொள்கையுடன் மாலை வகுப்பிற்கு அணிந்து கொண்டு அண்ணாவின் பைக்கிள் கால் வைத்தது தான் தாமதம்… “இறங்குறிங்களா பைக்க விட்டு…” என்று அண்ணா கத்தினார். “ஏன் அண்ணா…?” என்று அப்பாவித்தனமாய் கேட்டேன்….. “இப்ப இந்த ஸ்கேட்டுடன் காலைத் தூக்கி பைக்கிள் ஏறும் போது பின்னால் இருப்பவர்களுக்கு எல்லாம் தெரியும்…” என்றாரே பார்க்கலாம்… இனி என்ன மூச்சை கொஞ்சம் தூக்கிப் பிடித்துக்கொண்டு போய் சல்வார் அணிந்து தான் வகுப்பிற்கு போனேன்….

நான் கொஞ்சம் கம்பியூட்டர் படிப்பில வீக் (வேறென்ன எல்லாத்திலயும் பிர்லியண்டா இருக்க முடியுமா?) அம்மா நான் கத்த கதற அதற்கு காது கொடுக்காம கிளாசில சேர்த்துவிட்டாவா…. அன்று தொடங்கியது அண்ணாவின் அழிச்சாட்டியம். “ரொம் என்டா என்ன? ரம் என்டா என்ன?” என்று உயிரை எடுத்தார். (சத்தியமா எனக்கு இன்றும் இதற்கு சரியான விளக்கம் தெரியாதுங்க) இப்பவும் நம்ம குடும்ப சங்கம் கூடும் போது அண்ணாவும் தம்பியும் சேர்ந்தார்கள் என்றால் இத இப்பவும் கேட்டு என் மானத்தை வாங்குவதுண்டு….

முன் பந்தியில் சொன்னது போல நம்ம அண்ணாவும் நம்மள வேவு பார்த்தாரே அத எப்படி சொல்வது?.... என்னை வகுப்பிற்கு கொண்டு விடும் போது ஒரு நிற டீசேட்டும் பின்னர் வேவு பார்க்க வேறு நிற டீசேட்டும் போட்டு மறைந்து நின்று பார்க்கும் பழக்கம் நம் அண்ணாவிற்கு இருந்தது. (பெரிய சி.ஐ.டி. சுப்ரமணியம் , 007 என்டு நினைப்பு). எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமுண்டு கொஞ்ச நாள் அத தேடித்திரிந்தாரு துப்பு துலக்குவதற்கு…

ஆனாலும் பாருங்க ஒவ்வொரு வில்லன் அண்ணாக்களுக்கும் (என்னை மாதிரி) ஒரு கிரிமினல் தங்கச்சி இருப்பா!! எங்களுக்கும் ஒளித்து வைக்கத் தெரியுமில்ல… எத்தனை தடவை பிழைகள் செய்து விட்டு அவர் தலைமீதே பொய்ச்சத்தியம் பண்ணியிருப்பன். (சத்தியம் பண்ணும் போது லைட்டா “அ” சேர்த்தா அது அசத்தியம் தானே…..) முட்டக்கண்ணீர் வடிச்சு சாதித்திருப்பன். எனக்கு தெரியும் அண்ணாக்கு நான் அழுதா பிடிக்காது என்று…. அவருக்கு தெரியாது அது பீலிங்கில் வந்ததுல்ல நான் ஒரே இடத்தை உற்றுப்பார்த்ததால வந்ததென்று… எது எப்படியோ நம்ம காரியம் ஆனால் சரிதானே.

இன்னொரு இரகசியம் தெரியுமா? எனக்குத் தெரியாமல் என் கைபேசியை நோண்டுவாரென்று எல்லா போய்ஸ் பெயரையும் பொம்பள ப்ரண்ட்ஸ் பெயரில தான் பதிந்திருந்தேன்… அல்லது “ரோங் நம்பர்” எப்புடி?

ஆனாலும் அண்ணா கொஞ்சம் பாசக்காரன் தான்…. காதலர் தினத்தில் யாராவது தங்கச்சிக்கு கிப்ட் குடுப்பாங்களா? ஆனா என் 007 எனக்கு தருவாரே… தம்பிக்கு தெரிந்து ஒன்று தெரியாமல் ஒன்று எனக்கு நிறைய சலுகைகள் காட்டுவார். நாங்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டிருந்தாலும் இருவருக்குமே “பொஸிவ்னஸ்” நிரம்ப இருக்குது. அண்ணாவை கடுப்பேத்த மற்ற அண்ணாக்களிடம் நான் ஓவரா அன்பு காட்டுவதும் என்னைக் கடுப்பேத்த ஒன்றுவிட்ட தங்கைகளை அண்ணா பைக்கிள் ஏற்றி ஊர் சுற்றுவதும் சகஜமானதொன்று…. இதற்காக அவள்களை நான் எத்தனை தடவை பழிவாங்கியிருப்பேன் தெரியுமா? அண்ணாவின் பைக்கை எத்தனை தடவை பஞ்சர் ஆக்கியிருப்பேன்….

இப்போதெல்லாம் நான் போகும் போது அண்ணா வீட்டிற்கு வருவதில்லை. அல்லது அண்ணா போகும் போது எனக்கு வேலையிருக்கும். இன்று நானிருக்கும் இடமும் அண்ணாவிருக்கும் இடமும் சில மைல் தூரங்கள் தான் என்றாலும் சந்தித்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. எப்போதாது சந்தித்தால் நிச்சயம் ஏதாவது ஸ்பெஷல் இருக்கும். நான் புளுகு குணத்தில் இதையெல்லாம் தொலைபேசியில் உடனுக்குடன் சொல்லி தம்பியின் வயிற்றெரிச்சலினை கிளருவதுண்டு. வீதியென்றும் பார்க்காமல் கட்டிப்பிடித்து முத்தமிடும் பழக்கம் கூட இன்றும் தொடர்கிறது.இப்போதும் அண்ணா என்னை வழியனுப்பிவிட்டு தான் தன் விடுதிக்கு போவார். நூறு தடவை கவனம் என்று சொல்லுவார். அடுத்தவர்களுக்கு தான் எனது பதவி, படிப்பு என் தைரியம் பற்றிய பார்வை. என் அண்ணாவிற்கு நான் என்றும் அன்பு குட்டி தங்கச்சி தான்.

வளர வளர நம் பொறுப்புகள் அதிகரிக்க பாசம் காட்டுவதற்கும் செல்லச் சண்டைகள் போடுவதற்கும் நேரம் இருப்பதில்லை. ஆனாலும் பழைய நினைவுகள் தினம் ஒரு தடவையாவது மனதில் மோதாமல் அதன் சாரல் அடிக்காமல் இருப்பதில்லை.

மறுபிறவி எடுத்தால் மீண்டும் தங்கையாகவே பிறக்க வேண்டும். மொக்க பிகர் என்று தெரிந்தும் தன் தங்கை தான் உலக அழகி என்ற எண்ணத்தில் 007 ஆக அண்ணா என்னை தொடர வேண்டும். நானும் அண்ணாவை அதட்டி, வெருட்டி நான் நினைத்தவைகளை சாதிக்க வேண்டும். தூக்கத்தில் அலங்கோலமாக தூங்கும் என் போர்வையை இழுத்துவிட்டு சரி செய்கின்ற அந்த கைகளையே மீண்டும் பற்றி நடை பயில்கின்ற வரம் வேண்டும்.

அண்ணா எனக்காக பாடும் பாடல் - http://www.youtube.com/watch?v=_W7ueHUwyCA

(லைட்டா பாசமலர் சிவாஜி – சாவித்திரியை  பார்த்த பீலிங் உங்களுக்கு வரலயா???)      
 

என் வீட்டு Tom

ஒரு பெண்ணுக்கு எவ்வளவு தான் பொன் பொருள் கொடுத்து அனுப்பினாலும் பெற்றோர் கொடுக்காமலே அவள் புகுந்த வீட்டுக்குச் கொண்டு செல்லும் சொத்து அவளது பிறந்த வீட்டு ஞாபகங்கள்….. அப்பாவின் கோபங்கள் அம்மாவின் திட்டுக்கள் , அண்ணாவின் எச்சரிக்கைகள் , தம்பியின் சண்டைகள் என்று அவளின் ஞாபகக்குறிப்பின் பக்கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

திருமணத்திற்கு முன் அப்பாவின் இளவசிகளாக அம்மாவின் ராஜாத்தியாக வலம் வரும் பெண்கள் திருமணத்தின் பின் நிச்சயம் பிறந்தகத்திலிருந்து ஒரு விலகலை உண்டாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது நிஜம். அதிலும் வீட்டாரை எதிர்த்து திருமணம் செய்தால் கேட்கவே தேவையில்லை… புதிய உறவினால் தாய் - தந்தை – மகள் உறவானது சிறிது விலகிலாலும் அநேகமாக முதல் பிரசவத்துடனோ அல்லது குடும்பத்தின் நல்லது கெட்டதுகளிலோ இணைவதுண்டு. ஆனால் சகோதர பாசமானது பந்த உறவுகளினால் நிச்சயம் பந்தாடப்பட்டு விடுவது பரவலான ஒன்று… நாம் இன்னொரு வீட்டிற்கு விளக்கேற்ற போவது போல் நம் அண்ணன் தம்பி குடும்பத்திலும் விளக்கேற்ற வரும் குத்துவிளக்குகளால் ஒரு நூல் அளவிலான விலகலாவது வராவிட்டால் அது குடும்பமாகவே இருக்காது.

தன் தங்கையை முன் பின்னாக காவல் காத்த அண்ணன்கள் இன்னொருவன் கையில் ஒப்படைத்த திருப்தியுடன் தன் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதும்… அக்காவை சதா சீண்டிக்கொண்டிருக்கும் தம்பிமார் அக்காவின் திருமணத்தின் பின் ஒரு இடைவெளியை பின்பற்றுவதும் எல்லா வீடுகளிலும் நடக்கும் விடயம். அதேபோல் அண்ணாக்களுக்கு பயந்தும் தம்பிகளுக்கு உச்சியில் குட்டிக்கொண்டும் திரியும் பெண்கள் அடக்கமாக கணவனே உலகம் என்று வாழத்தொடங்கிவிடவதுண்டு.

ஆனால் நம் வட்டங்கள் மாறத்தொடங்கினாலும் நம் சகோதரங்களுடனான செல்லச்சண்டைகளும் , கணநேர கோபங்களும் எப்போது புரட்டினாலும் இனிமை தரும் தருணங்கள். 

நீங்கள் டொம் அண்ட் ஜெர்ரி காட்டூன் பார்த்திருப்பீர்கள். இரண்டும் எப்பொது பார்த்தாலும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் இரு குணச்சித்திரங்கள். இப்படித் தாங்க என் வீட்டிலும் ஒரு டொம் இருக்கிறது. என்னுடன் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டும் எடக்குமொடக்காக பேசிக்கொண்டும்… பின்நோக்கி செல்கின்ற என் இனிய அன்புள்ள எதிரி டொம் இன் சில நினைவுகள்..

தம்பிக்கும் எனக்கும் இரு வருடங்கள் வயது வித்தியாசம். அவர் பிறந்திருக்கும் போது நான் பொறாமையில் அவர் தொட்டிலில் தூங்கும் நேரம் பார்த்து கிள்ளிவிட்டு ஓடிவிடுவேனாம். வீறிட்டு அழும் அவனை தாலாட்டிக்கொண்டே அம்மா அப்போதே சொல்லுவாராம் “தம்பி வளர்ந்த பின் உனக்கு அடிப்பான்” என்று. இதை கேட்டு வளர்ந்;ததாலோ என்னவோ அவன் வளர்ந்த பின் அவனிடம் நிறையவே அடிகள் வாங்கி அழுதிருக்கின்றேன்.

இரவில் அம்மாவிற்கு இருபுறமும் தூங்கிக்கொண்டு யார் காலை அம்மா மேல் போடுவது என்று பிடிக்கும் சண்டை கனவில் கூட தொடருவது இனிமை….

நான் பாடசாலை மாணவியாக இருக்கும் போது என்னுடன் காவலுக்கு வீட்டார் என் தம்பியைத் தான் அனுப்புவார்கள். இருவரும் இரு குட்டி சைக்கிள்களில் வீதிக்கு குறுக்கும் நெடுக்குமாக போட்டிக்கு சைக்கிளோட்டிக்கொண்டும் போவதுண்டு அவ்வாறு ஒரு நாள் போகும் போது ஒருவன் என்னை பகிடி பண்ணிய போது வழமையான துடுக்குத் தனத்தில் சைக்கிளை விட்டிறங்கி (சொர்ணா அக்கா ரேஞ்சில்) “என்னடா பயமுறுத்திறாயா? “ என்று கேட்ட போது “அக்காச்சி வாங்க போவம் எனக்கு பயமாயிருக்கு…” என்று சொன்ன என் வீரத்தம்பி இவரை நம்பித் தாங்க அப்போதெல்லாம் என் கூட அனுப்புவாங்க… அவரும் ஏதோ இளவரசியை காக்கின்ற பூதமாட்டம் தான் பில்டப் காட்டுவாரு…  இப்போது அவர் பின்னால் பைக்கில் இருந்து போது அந்த நாட்களை நினைத்துக்கொள்வதுண்டு.

வீட்டில் கணவாய் கறி சமைக்கும் நாட்களில் கைகளில் மோதிரம் போன்று அவற்றை அடுக்கி யாரிடம் கூடுதலான மோதிரம் உண்டென சண்டை பிடித்த நாட்கள் பலவுண்டு

எத்தனையோ டீசெட்டுக்கள் உள்ள போதும் டெனீஸ் ப்ரக்டீஸ்க்கு போகும் போது தம்பியின் டீசெட்டை உடுத்திக்கொண்டு போவதிலுள்ள இன்பம் புது டீசேட்டில் கூட கிடைப்பதில்லை. அதை கழுவி தரும்படி அவன் பிடிக்கும் சண்டைகள் அதை விட அருமை.

தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஒளிபரப்பாகும் நாட்களில் எம்முள்ளும் ரிமோட் கண்ரோலுக்கான சண்டை ஒளிபரப்பாக தொடங்கிவிடும். சுண்டை உச்சமடையும் போது அம்மா இருவரையும் படிக்க அனுப்பி “வடை போச்சே” என்று நினைத்த நாட்களுமுண்டு…

பாடசாலை விடுமுறைகள் இருக்கிறதே… அவை தான் எமது யுத்தகாலங்கள். எம்மிருவரதும் சண்டைகள் முற்றும் சமயம் அம்மாவை தொலைபேசியில் அழைத்து கோள்மூட்டுவதுண்டு. சிலவேளை தொலைபேசியை அணைத்துவிடும் அம்மா மாலை வீடு திரும்பியவுடன் நன்றாக இருவருக்கும் சாத்துவதுமுண்டு.

ஆனாலும் ஒரு உண்மையை சொல்லித்தாங்க ஆகனும் எனக்கு விஞ்ஞான ஒப்படைக்கு கருவிகள் செய்து தருவது அவன் தான்… ஒரு காலத்தில் ஒப்படைக்கு சிவப்பு நிறம் அடிக்கப்பட்டதற்கு அவனது கைவண்ணம் தான் காரணம். (காலம் கடந்த உண்மை)

இப்போதும் விடுதியிலிருந்து வீட்டிற்கு போகும் போது “ அம்மா இந்த ஊத்த மண்ணுக்கு (என்னைத் தான்) விலையேறிட்டு… எப்படியிருந்தவள் இப்படியாகிட்டாள்…” என்றும் நான் கண்ணுக்கு மையடிப்பதை பார்த்து “ஐயோ பேய் மாதிரியிருக்கு…” என்றும் கலாய்க்க தவறுவதில்லை.

ஏனோ இப்போது தூரத்திலிருப்பதாலோ என்னவோ முன்னர் போன்று குடும்பிச் சண்டைகள் பிடிப்பதில்லை. கூடவே இருவரும் வளர்ந்து விட்டோம் என்பதால் ஏற்பட்டுள்ள முதிர்ச்சி, பருவத்தின் அடுத்த படிக்கான முன்செல்லல் என்று தம்பிக்கும் எனக்குமான டொம் - ஜெர்ரி தொடர் வெகுவாக குறைந்துவிட்டது.

ஆனாலும் இப்போதெல்லாம் விடுதி வாழ்க்கையின் தனிமையில் அன்று தொல்லையாக தெரிந்த தம்பியின் சீண்டல்கள் , செல்லச்சண்டைகளை மிஸ் பண்ணுவதை போன்றதொரு பீலிங்… ஆனால் இவையெல்லாம் வெறும் கடதாசியின் பக்கங்களாக இல்லாமல் கல்வெட்டின் செதுக்கல்களாகவே என்றும் இனிக்கும் நிமிடங்கள் என்பது மட்டும் உண்மை. 



அப்பாவின் இளவரசி!

குடும்பம் என்பது ஓர் பல்கலைக்கழகம் என்பார்கள். ஆனால் என்னளவில் கூறுவேன் அது ஓர் அழகிய குருவிக்கூடு போன்றதென்று.. அதிலும் ஓர் பெண்ணுக்கு இரு கூடுகள் உண்டு. பிறந்த வீடு மற்றது புகுந்த வீடு. புகுந்த வீட்டில் அதிஷ்டத்தினை பொறுத்து மகாராணியாக இருக்கலாம் ஆனால் நிச்சயம் பிறந்த வீட்டில் ஒவ்வொரு பெண்ணும் இளவரசி. அதிலும் அப்பாக்களுக்கு தங்கள் பெண் ஒவ்வொருவரும் குட்டி இளவரசி தான்.


தன் மனைவி கருத்தரித்தவுடன் மகிழும் ஒவ்வொரு ஆணும் பிறந்திருப்பது பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவார்களாம். அன்று கையிலேந்தி தங்கள் பெண் குழந்தையில் நெற்றியிலிடும் முத்தம் ஒவ்வொரு தந்தையும் தங்கள் பெண் இளவரசிகளுக்கு வைக்கின்ற குட்டி கீரிடம்…. கூடவே அப்பாக்களுக்கு பொறுப்புகளும் அதிகரிக்கும் நாள்.

ஒருவேளை தமிழ்க்கலாச்சாரத்தில் வரதட்சணை பிரச்சினை இருப்பதால் ஒரு சிலர் பெண் குழந்தைகளை பாரமாக கருதக்கூடும். இது சமூகம் அவர்களுக்கு கொடுக்கின்ற ஒரு விதமான அழுத்தமும் கூட.. ஆயினும் பெண் குழந்தைகளை விரும்பாத, அவர்களது சிறு அசைவுகளைக் கூட குறித்து வைக்காத தந்தையர்கள் மிகமிக குறைவு.

கையில் தூக்கிய தங்கள் வீட்டு தேவதைகளை இன்னொருவனுக்கு கரம்பிடித்து கொடுக்கும் வரை தந்தையர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறைகள் இருக்கின்றதே வார்த்தைகளில் அதை சொல்லிவிட முடியாதுங்க… ஒரு கதைக்கு வேணுமின்றால் ஆண் குழந்தைகளை தங்கள் பெயர் சொல்லப் பிறந்தவர்கள் என்று வெளிப்படையாக சொல்லிக்கொண்டாலும் அப்பாக்களின் பார்வை மட்டும் என்னவோ பெண் குழந்தைகளை விசேடமாக தொடர்வது மறுக்க முடியாத உண்மைங்க.. எந்தவொரு தந்தைக்கும் தம் பெண் குழந்தைகள் தொடர்பில் சில விடயங்களில் மாறுபட்ட கருத்து கிடையாதுங்க
  • தன் பெண் தான் உலக அழகி (சப்ப பிகர் என்றாலும்)
  • அவளைக் கடக்கின்ற எந்த ஆணும் அவளைத் தான் சைட் அடிக்கின்றான் (இவனுகளால் நாம அப்பாவிடம் வாங்கிற அடி…..)
  • தான் தன் பொண்ணை கண்டிக்கலாம், தண்டிக்கலாம் ஆனால் மனைவி கடிந்து கொண்டால் பொறுக்காது
  • வீட்டில் சண்டை வந்தால் 1 வீதமாவது பொண்ணுக்கு சார்பாக தானிருக்கும்
  • வைபவங்களுக்கு என்ன பொருள் எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் பெண்ணுக்கு ஒரு ரூபாவாவது அதிகமாயிருக்கும்.
(இன்னும் பல இரகசியங்கள் இருக்கிறது… பையன்கள் கடுப்பாகிக் கொண்டிருப்பதால் விட்டுவிடுகிறேன்….)

பருவத்தினை எட்டி நிற்கும் போது தாய்மார் உரிய வயதில் திருமணம் செய்து வைக்க வரன் தேடுவார்கள். கூடவே தந்தையர்களை பார்த்து “இந்த மனிசனுக்கு அக்கறையில்லை” என்றும் திட்டுவார்கள். அப்படியெல்லாம் இல்லைங்க… “நம்ம பொண்ணை இன்னொருவனுக்கு மணமுடித்து கொடுத்து விட்டால் தம் உரிமை, தன் மீது பெண் வைத்துள்ள அன்பு பங்கிடப்பட்டுவிடும்” என்கிற கவலை தான் காரணம் என்பது தான் உண்மை.

எனக்கும் அப்படியொரு அனுபவமுண்டு. வீட்டில் வரன் பேசி புகைப்படத்தினை காட்டியிருந்தார்கள். பார்த்து விட்டு அப்பாவிடம் “உங்களுக்கு பிடித்திருக்கின்றதா அப்பா? திருமணம் ஆனால் வெளிநாடு போய்விடுவேனே… உங்கள் சம்மதம் தான் என் சம்மதம்…..” என்று சொன்னேன் பாருங்க.. என்ன சுட்டுச்சோ இல்லையோ விட்டுத்தூர போய்விடுவேன் என்பது நிச்சயம் மனதை தொட்டிருக்கும். அடுத்த நிமிடமே படிப்பு முடிந்த பின் பார்ப்போம் என்று சொல்லிவிட்டார். (எனக்குப் பிடிக்கனும் முதல்ல ஆனாலும் அப்பாக்கு ஐஸ் வைக்க குடுத்த பில்டப்!) அம்மா தான் கடுப்பாகி கத்தினார். (ஹஹஹ… ஆனாலும் தப்பிட்டேனில்ல)
இன்னொரு விடயம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால் அம்மாவிடம் கெஞ்சுவதை விட நான் அப்பாவை கொஞ்சிதான் சாதிப்பதுண்டு. அது தான் இலகுவான குறுக்கு வழி…

என்ன தான் சொல்லுங்க இந்த அம்மாக்களுக்கு தங்கள் ஆண் பிள்ளைகளிடம் தான் அன்பதிகம். அது போல் தாங்க அப்பாக்களுக்கு பெண் பிள்ளைகள் மீது! உளவியல் ரீதியாகவும் இந்த எதிர்ப்பால் கவர்ச்சிகள் பற்றி பல கருத்துக்கள் உண்டு. இவ்வாறான எதிர்ப்பால் கவர்ச்சி இல்லாவிடின் அது “முரண்பாட்டு மனநிலை” எனவும் கொள்ளப்படுகின்றது. (இது தாங்க அண்ணாமாருக்கு தம்பிகளை விடவும் தங்கைகளில் பாசம் அதிகமாயிருக்க காரணம்)

சடங்குகளில் கூட சில பாரம்பரியங்கள் உண்டு. கிறிஸ்தவ சமய திருமணத்தில் பெண்களை தேவாலயத்திற்கு தந்தை தான் கைப்பிடித்து அழைத்து வந்து பீடமருகில் நிறுத்தவார். அதேபோல் இந்து முறைப்படியும் பெண்ணை தந்தை தான் தாரைவார்த்துக் கொடுப்பார்.



உண்மையில் ஒரு பெண்னோட முதல் காதல் தன் தந்தையில் தாங்க.. அம்மா எவ்வளவு தான் தொண்டை கிழிய கத்தினாலும் அப்பாவின் ஒரு சொல்லுக்கு அடிபணிவோம் பாருங்க அது தாங்க பெண்ணுக்கும் அப்பாவுக்குமான காதல்….. தினம் அம்மா சமைத்து தருவதை விட அப்பா செய்து தந்த கறியின் சுவை நாவில் தங்கியிருக்கும் அது தான் அந்த காதல்….. அம்மா அடித்த ஆயிரம் அடிகள் வலித்திருக்காது அப்பா எப்போதோ தந்த கன்னத்து அறை வலிக்கும் பாருங்க அது தான் பெண்ணுக்கும் அப்பாவுக்குமான காதல். ஆனாலும் அந்த கன்னத்து அறை ஒரு சுகமான வலியாகத் தான் மனதில் தங்கியிருக்கும்.

அம்மா என்னைப் பார்க்க வேண்டும் என்று கெஞ்சினாலும் போக மனம் இடந்தராது. ஆனால் அப்பா “மகள் வரவில்லையா?” என்று அம்மாவிடம் கேட்டதாக அறிந்தவுடன் வீடு செல்ல கலண்டரருகில் நின்று நாட்களை எண்ணிப்பார்க்கின்றேனே அது தான் எனக்கு என் அப்பா மீதுள்ள காதல்….


 என்னையும் ஒருவரிடம் கைபிடித்து கொடுக்க போகும் போது என் அப்பாவின் கண்கள் கலங்குமே அது தாங்க எனக்கும் என் அப்பாவிற்குமான காதலின் உச்சமான கவிதை!



நாளை எனக்கு ஒரு பெண் பிறந்து அதை என்னவன் கொஞ்சும் போது எனக்கும் என் அப்பாவிற்குமான அன்பை மனம் மீட்டிப்பார்க்கும் பாருங்க அதுவும் அழகியதொரு கவிதை..!!! அர்த்தமானதும் கூட!!! 







பெண்ணின் முதல் காதலன் அவளின் தந்தை -  அப்பாவின் தேவதை அவரின் பெண்

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை