Tuesday, June 4, 2013

தாய்மை

அண்மையிலான ஒரு அனுபவப்பகிர்வைப் பற்றியும் அந்த அனுபவம் எவ்வாறானதொரு தாக்கத்தினை என்னுள் ஏற்படுத்தியிருந்தது என்பதையும் பற்றி இந்தப் பதிவில் கூறவிருக்கின்றேன்.

என்னுடைய அம்மாவினுடைய தோழி ஒருவருக்கு மார்பகப்புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். என்னுடைய அம்மாவிற்கு அலுவலக நண்பிகள் என்று பலருள்ள போதும் அம்மாவின் நெருங்கிய வட்டத்தில் மூவர் இருக்கிறார்கள். (நளீன்ஸ் ட ஹாங்) நால்வரும் தான் எப்போதும் ஒன்றாக திரிவார்கள்;. வீட்டு விசேஷங்களிலும் கூட நான்கு குடும்பமும் இணைந்திருக்கும். இந்த நிமிடத்தில் இவர்கள் பற்றி ஒன்று கட்டாயம் சொல்லியே தீரவேண்டும். நால்வரும் ட்ரான்ஸர் கூட ஒரே அலுவலகத்திற்கு தான் எடுப்பார்கள். (இவர்கள் தொல்லைகளை எமது வீடுகள் மட்டுமின்றி மட்டுநகரே அறியும்) சம்பள நாட்களில் சின்ன பிள்ளைகள் (????) எங்களையெல்லாம் டியூஷனுக்கு அனுப்பிவிட்டு கடையில் ஜஸ்கிறீம் குடிப்பார்கள் (அப்பாவிடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்).

அம்மாவினுடைய இந்த நண்பி வட்டத்தில் தோழி ஒருவருக்கு மார்பகப்புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். எனது பல்கலைக்கழகம் , வேலை நிமிர்த்தம் நான் மட்டக்களப்பிற்கு செல்வதெல்லாம் எப்போதாவது அத்தி பூத்தாற் போல் தான். அம்மா என்னிடம் தனது நண்பியின் நோய் பற்றிக் கூறி அழுதிருந்த போதும் அவரை பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்கு மார்பகத்தினை அகற்றிய பின் தான் கிடைத்திருந்தது. சும்மாவே வைத்தியசாலை , ஊசியென்றாலே இனம் புரியாத நடுக்கம் இந்தக் கோழை மீராவிற்கு. டொக்டர்கள் அனைவருமே யமன் தான் என் கண்களுக்கு. அதையும் தாண்டி அண்ணாவின் கையைப்பிடித்துக்கொண்டு சென்றிருந்தேன்.

என்னைக்கண்டவுடன் பாய்ந்து கட்டிப்பிடித்து அழத்தொடங்கிவிட்டார். ஏன் அன்டா அழறீங்க? எல்லாம் முடிந்து ஒன்று பிரச்சினையில்லை என்று சொல்லிட்டாங்க தானே என்று கேட்டேன்…. இல்லடா …… சாமத்தியப்பட்டுட்டா நான் பக்கத்தில இல்ல பிள்ள என்ன செய்தோ தெரியாது… என்று விம்மி வெடித்தழுதார். (இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தான் இவரது பொண்னு பருவமெய்திருந்திருந்தாள்) இப்போது இவர் ஆண்டவன் கிருபையால் குணமாகிவிட்டார்.

அன்று வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் ஏன் அம்மா இதற்கு அவ அழனும் மற்றவங்க பார்த்துக்கொள்வாங்க தானே என்று கேட்டேன். “ஒரு தாய் மூன்று சந்தர்ப்பத்தில் தன் பெண் அருகில் இருக்க விரும்புவாராம்” என்று அம்மா சொன்னார்…. அந்த மூன்றும் (கொஞ்சம் வெட்கமாயிருக்கு…..)


1.    பருவமெய்தும் போது – (தாயாகும் தகுதி பெறுகிறாள்)
2.    புகுந்த வீட்டிற்கு அனுப்பும் போது – (தாரமாகிறாள்)
3.    தன் மகள் பிரசவ வலியில் துடிக்கும் போது – (தாயாகின்றாள்)


இப்போதும் குட்டி மீரா அன்று பருவமெய்து திருதிரு என்று முழித்துக்கொண்டு நின்றதும் அம்மாவும், அம்மம்மாவும் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழுததும் இன்றும் ஞாபகத்திலிருக்கின்றது. (அதன் பின் வேப்பணெய், பச்சை முட்டை குடிக்கச் சொல்லி அதற்கு நான் அழிச்சாட்டியம் பண்ணியது வேறு கத). அண்ணாமார், தம்பி பார்வையில் கூட ஒரு வித்தியாசத்தினை உணர்ந்த அந்த நாள் மறக்குமா? (அண்ணாக்கள் தங்கச்சியை கடலைகளிடம் சொறி விடலைகளிடமிருந்து காப்பாற்ற அலட் ஆகிய நாள்), பிறந்ததிலிருந்து சேர்ந்து விளையாடிய என் நண்பனிடம் திடீர் விலகலும் ஒருவிதமான உரிமைக் கோபமும் ஒட்டிக்கொண்ட அந்த தினம்….(நடக்கட்டும் நடக்கட்டும்…. )

உண்மைதாங்க ஒரு பெண் உடல் , உளரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகின்ற மறக்கமுடியாத ரொம்ப….. சென்டிமெனட் நிறைந்த நாட்கள் இவை…. நிச்சயம் ஒரு பெண் தன் தாய் அருகில் இருக்க வேண்டுமென நினைக்கின்ற தினங்கள். அன்று தான் ஒவ்வொரு பெண்ணுள்ளும் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள், ஒருவித பயம் குடியேறியிருக்கும். பொண்னைக் கொடுக்கப்போகின்றோம் என்ற கவலையும் கூடவே அவள் வாழ்க்கைக்கான ஆரம்பம் என்கின்ற ஆனந்தமும் இணைந்ததான கலவையுணர்வுகள் நிறைந்த தருணங்கள் இவை…. தாய்மை என்பது உண்மைக்கும் சுவீட் தானுங்க…. எங்கள் அதிகாரமும் அது தான் அந்தஸ்தும் அதுதான் பெண்ணுக்கான அடிப்படையும் அது தாங்க.

பிற்குறிப்பு – கிடைக்கும் கணவரிடமும் என் அன்னையின் சாயல் இருக்க வேண்டுமென இப்போதெல்லாம் கடவுளிடம் அப்ளிகேஷன் போட தொடங்கிவிட்டேன். (அப்ப தான் ஊசி போடக்குள்ள கட்டிப்பிடிச்சி அழலாம்)



2 comments:

  1. உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்த்து விட்டு கருத்திடுங்கள் சகோ

    http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_3.html

    ReplyDelete
  2. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!

    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்

    "உள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…!!!"

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துகளுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (எனது இன்றைய பதிவு "அவன் ஒரு குடையைத் தேடி" (சிறு கதை)
    படித்திட வேண்டுகிறேன்.)

    ReplyDelete

அதிகம் வாசிக்கபட்டவை