Thursday, June 13, 2013

உன் மடி மீது நான் உறங்க......

நல் உறக்கம் தரும் என் பஞ்சு மெத்தை மீது காதல்.
நித்திரையில் வரும் நல்ல கனவுகளின் மீது காதல்.

கண்ணில் படும் அத்தனையும் காதலிக்கிறேன்.
கட்டுக்குள் அடங்காத என் கற்பனை கொண்டு கவி வடிக்கிறேன்.

காதலிக்கிறாயா என்று என் கவி கண்டு கேட்டால்
எதை நான் சொல்வேன். எதை நான் மறைப்பேன்.

சுற்றி உள்ள அத்தனையும் என் மனமார காதலிக்கிறேன்.

சுற்றும் பூமி முதல் சூரியன் நிலவு வரை அத்தனையும் காதலிக்கிறேன் ஆத்தமார்த்தமாக..

உயிர் வாழும் கடைசி நொடி வரை உலகில் உள்ள ஒவ்வொன்றையும் காதலிப்பேன் உண்மையாக.
 ....................................................................................................................
 நிதமும் சேகரிக்கிறேன்
என் இரவுகளை
என்றேனும் ஓர் நாள்
உன் மடி மீது நான் உறங்க......

இமைகளிலே வலி
கண்ட போதும்
உறங்கவில்லை எனது நினைவுகள்...

என் நினைவுகள் அனைத்தும்
உன்னை எதிர்நோகியிருந்த காரணத்தினால்....

என் விழிகளோ
இமை மூட மறுக்கின்றது... - அந்த
இமை மூடும் நொடி பொழுதிலாவது
உன் முகம் காண்பேனா என்று....

விடியும் இரவு போல..
விழி மூடா கனவு வேண்டும் - அக்
கனவிலும் உன் முகம் வேண்டும்.....
 எனக்காக (என் வேண்டுகோளிற்காக) என் நண்பன் எழுதிய கவிகள் இரசித்ததில் பிடித்தது....... நன்றி வாசு

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை