Monday, June 3, 2013

“வன்முறையில்லாத உலகம்”


மகாத்மா காந்தியின் 125 ஆவது பிறந்த தினத்தினை நினைவுகூறும் வகையில் “வன்முறையில்லாத உலகம்” என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டிற்கு பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டவர் மகாத்மா காந்தியின் பேரனான அருண்காந்தி.

இவர் இளைஞனாக இருந்த பொழுது தனது பாட்டனாரின் ஆச்சிரமத்திற்கு மேற்கொண்ட விஜயம் தன் வாழ்க்கையை மாற்றியமைத்ததாகவும் அதுவே இந்தத் தொகுப்பு நூலை வெளியிடுவதற்கு தூண்டியிருந்தது என்றும் கட்டுரையாளர்களிடம் கூறியிருந்தார். அத்துடன் எளிமையான உதாரணங்கள் ஊடாக தன்னுடன் சில அடிப்படைக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் இவர் குறிப்பிடுகின்றார். சமூகத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைக்கான காரணங்கள் சிக்கலானவை அல்ல என்றும் ஆயினும் இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் பரியவை என்றும் மகாத்மா அருண்காந்தியிடம் தெரிவித்திருந்தார். அவர் சுட்டிக்காட்டுகின்ற “எட்டுத் தவறுகள்” வருமாறு

1.    வேலை செய்யாமல் கிடைக்கும் செல்வம்
2.    மனச்சாட்சி இல்லாமல் அனுபவிக்கும் இன்பம்
3.    ஒழுக்கமற்ற அறிவு
4.    நேர்மையற்ற வியாபாரம்
5.    மனிதநேயமற்ற விஞ்ஞானம்
6.    தியாகமற்ற வணக்கம்
7.    கொள்கையில்லாத அரசியல்
8.    பொறுப்புகளற்ற உரிமைகள்



அருண்காந்தி இவ் விடயங்களின் விரிவாக்கத்தின் தொகுப்பாக “வன்முறையில்லா உலகம்” என்ற ஞாபகார்த்த தொகுப்பினை நெறிப்படுத்த கருதுகோளாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஜோன் றிச்சட்ஸன் இனால் எழுதப்பட்ட “போரின் படிப்பினைகள்” என்ற நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதைப்படித்ததில் பிடித்தது……

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை