Friday, June 7, 2013

பொருத்தம்....


வாழ்க்கை என்பது ஒன்றுக்கொன்று அல்லது ஒருவருக்கொருவர் பொருந்திப்போவதில் தான் இருக்குது…  கொஞ்ச ஜோடிகளைப் பார்த்துவிட்டு விடயத்திற்கு வருவோமா….?

 முதல்ல நம்ம சூர்யா – ஜோ ஜோடி. என்னா பொருத்தம்.. இருவரும் கண்களையும் பார்த்தே கண்படப்போகுது…. தான் விரும்பிய பொண்ணை ஒத்தக்காலில் நின்றே கைபிடித்தவர்…. ஹட் முதல் வெயிட் வரை அப்படியொரு அம்சம்…. கெமிஸ்ட்ரி இருவருக்குள்ளும். (சூர்யாவின் விசிறி என்பதில் அவர் ஜோவை கைப்பிடித்தில் கொஞ்சம் கடுப்பாகிய கதையும் இருக்கிறது. ம்ம்ம்ம்… அவர் தான் என்னை மிஸ் பண்ணிட்டார்… என்டு சமாதானமாகிட்டன்).


அடுத்து 50 கேஜி தாஜ்மஹால்…. நம்ம ஐஸ் பற்றி சொன்னன்… ஆண்கள் மட்டுமல்ல பெண்களின் தூக்கத்தையும் கெடுத்தவர். வேறென்ன இவர பார்த்தில இருந்து நம்மளயும் ஸ்லிம் ஆக சொல்லி சிலதுகள் பண்ணிய அழிச்சாட்டியத்தில் பல பெண்களின் பகல் தூக்கம் (உடம்பு போட்டுடுமாம்) போனது பழைய கதை. இன்று பிரபலமானதொரு குடும்பத்தின் மருமகள். ஜோடிய பாருங்களேன் என்னதொரு களை….

நெக்ஸ்ட் தலயும் - ஷாலினியும். பேபி ஷாலினியாக வந்து இன்று ஒரு கியூட் பேபிக்கு மம்மி ஆகிட்டாங்க… விட்டுக்கொடுத்து போவதிலும் உடுக்கும் உடையில் கூட நிறம் பார்த்து போடுவதிலும் என்னா ஒற்றுமை. குடும்பத்திற்கே திருஷ்டி சுத்தி போடனும்.. அதிலும் தலயோட பொண்ணுக்கு தனிய சுத்தி போடனும். ஸ்வீட் கண்ணா…



இலங்கையின் மருமகன் அடுத்து. நம்ம தளபதிய சொன்னன். மனைவியுடன் போஸ் குடுப்பது குறைவென்றாலும் எந்தவித இடையூறுகளும் இல்லாம போகுது வாழ்க்கை. படம் காட்டுவதா முக்கியம். இவங்க போல புரிந்துணர்வுடன் வாழ்வது தான் முக்கியம். தளபதி படத்தில மட்டுமல்ல நிஜ வாழ்க்கைக்கும் தளபதி தான்…

 அடுத்து வருவது… நம்ம உத்தமபுத்திரன். சூப்பர் ஸ்டாரின் சூப்பர் மருமகன்… ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கும் பின் ஒரு பெண் இருப்பா என்று சொல்லுவாங்க. (குடிக்கும் பின்னால தான். உண்மையை ஒத்துக்கொண்டு தான் ஆகனும்) தனுஷின் வெற்றிக்குப் பின் அவரது மனைவி இருக்கின்றார். அலட்டல் இல்லாத அமைதியான வாழ்க்கை.

ஓகே அடுத்தவங்க வீட்ட எட்டிப்பாத்திட்டம் நம்ம வாழ்க்கைக்கு வருவமா…?

வாழ்க்கையில் பெற்றோர் இறைவன் தந்த வரம். ஆனால் நமது வாழ்க்கைக்கான துணையினை தெரிகின்ற உரிமை, பொறுப்பு நமது கையில் தான் இருக்கிறது. இந்த துணைக்கான தகுதி எமக்குப் பொருத்தமானதாக தெரியும் போது நம் மணவாழ்க்கை சிறப்பது மட்டுமன்றி நம் குழந்தைகளுடைய வாழ்க்கையும் நன்றாக அமையும் என்பதை மறக்காதீர்கள். 


நமக்குப் பொருத்தமாக இருக்கும் ஒருவன் அல்லது ஒருத்தியை காணும் போது சாதி,மதம் எல்லாம் பார்த்து கோட்டை விட்டுடாமல் நேர்மையான வழியில் அவர்களை கரம்பிடியுங்கள். ஆனால் அங்கே மனப்பொருத்தம் தான் மணப்பொருத்தம் என்பதை மறவாதீர்கள்.


ஆண் பெண்ணின் கழுத்தில் போடுகின்ற மூன்று முடிச்சுகளுக்கும் அர்த்தங்கள் மூன்று

•    முதல் முடிச்சு உரிமைக்கு
•    இரண்டாவது உறவிற்கு
•    மூன்றாவது ஊருக்காக


இவை வெறும் முடிச்சுகளாக மட்டுமல்லாமல் வாழ்விற்கான அத்தியாயங்களையும் எழுதட்டும்.

பிற்குறிப்பு - ஹன்சிக்காவிற்கு எப்பங்க கல்யாணம்… அந்த குளுகுளு ஜோடிய பார்க்கனும்னு ரொம்ப ஆசையாயிருக்கே..



No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை