அண்மையில் அரசறிவியல் துறை பேராசிரியர் அம்பலவாணர் சிவராசாவின் “ஒப்பீட்டு அரசியல்" (Comparative Politics) எனும் நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆதில் குறிப்பிட்டிருந்த பிளேட்டோவின் கருத்தொன்று என் சிந்தையினை தூண்டியிருந்தது. பிளேட்டோவின் “குடியரசு”(Republic) “அரசியல் சான்றோன்” (The Statesmen) போன்ற நூல்களில் இருந்தான ஒரு விடயத்தினை ஆசிரியர் மேற்கோள் காட்டியிருந்தார்.
அரசாங்கத்துறைகளை பிளேட்டோ வகைப்படுத்தியிருந்ததான அக் கருத்துக்களை ஆராயும் போது என் நாடு “இலங்கை எவ்வகையில் சேர்த்தியாகின்றது?” என்ற மாபெரும் வினா தோன்றியுள்ளது. என் சிந்தை தூண்டிய அக்கருத்துக்கள் பற்றியும் அதற்கு முன் சிறிதாக பிளேட்டோ பற்றி அறிமுகத்தினையும் பதிகின்றேன்.
பண்டையக் கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ, மேலைநாட்டு அரசியல் தத்துவமும், நமது அறிவியல் மற்றும் மெய்விளக்கியல் சிந்தனையும் எழுச்சி பெறுவதற்குத் தோற்றுவாயாக அமைந்தவர் ஆவார். இந்தத் துறைகளில் இவரது அனுமானங்கள் கடந்த 2300 ஆண்டுக்களுக்கு மேலாகப் படிக்கப்பட்டு வருகின்றன.
கி.மு. 387 ஆம் ஆண்டில் "கலைக்கழகம்" (Academy) என்று அழைக்கப்படுகின்ற புகழ் பெற்ற பள்ளியை நிறுவினார். இந்தப் பள்ளி 900 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வந்தது. பிளேட்டோ தமது வாழ்நாளில் கடைசி 40 ஆண்டுகளை ஏதென்சில் கழித்தார். அப்போது அவர் கல்வி கற்பித்தார். தத்துவம் பற்றி நூல்கள் எழுதினார். இவருடைய மாணவர்களில் மிக்க புகழ் பெற்றவர் அரிஸ்டாட்டில் ஆவார். பிளேட்டோ 60 வயதை எய்திருந்த போது அரிஸ்டாட்டில் தமது 17 ஆம் வயதில் பிளேட்டோவிடம் கல்வி பயில்வதற்காக வந்தார். பிளேட்டோ கி.மு. 347 ஆம் ஆண்டில் தமது 80 ஆம் வயதில் காலமானார்.பிளேட்டோ 36 நூல்கள் எழுதினார். அவை பெரும்பாலும் அரசியல், அறவியல் பற்றியவை.
பிளேட்டோ வகைப்படுத்தியுள்ள அரசாங்கத்துறைகள்
இவ்வாறான அரசின் இறைமையை இவ்வரசு பாதுகாத்துக்கொள்ளும். முpகச் சிறந்த இலட்சிய நோக்கம் கொண்ட அரசாக செயற்படும். இதனால் இவ்வாறான அரசுடன் ஒப்பிட்டுத் தான் ஏனைய அரச முறைமைகளை மதிப்பீடு செய்ய முடியும்
பூரண அறிவற்ற அரசு (State where there is Unprotected Knowledge)
இவ்வாறான அரசுகளால் மனிதன் தன் பூரண சுதந்திரத்தினை இழந்தவனாயிருப்பான். இவ்வரசின் சட்டங்கள் மிக அழுத்தம் கொடுப்பனவாகவிருக்கும். இருந்த போதிலும் இவ்வரசின் சட்டமுறைகளுக்கு மனிதன் அடிபணிந்து நடப்பான்.
அறிவற்ற அரசு (State of Ignorance)
இவ்வகையரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட மக்கள் மறுப்பர்.
.......மேற்கூறிய பாகுபடுத்தல் தான் பாரியதொரு வினாவை சிந்தையில் புகுத்திப் போயுள்ளது. பதில் தேடவேண்டியது மிக முக்கியம்....
பிற்குறிப்பு - வினாக்கள் தோன்றும் போது தான் விடைகள் பல கிடைக்கும் தீர்வுகள் பிறக்கும்
அரசாங்கத்துறைகளை பிளேட்டோ வகைப்படுத்தியிருந்ததான அக் கருத்துக்களை ஆராயும் போது என் நாடு “இலங்கை எவ்வகையில் சேர்த்தியாகின்றது?” என்ற மாபெரும் வினா தோன்றியுள்ளது. என் சிந்தை தூண்டிய அக்கருத்துக்கள் பற்றியும் அதற்கு முன் சிறிதாக பிளேட்டோ பற்றி அறிமுகத்தினையும் பதிகின்றேன்.
பிளேட்டோ
ஏதென்ஸ் நகரத்தின் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தில் கி.மு. 427 ஆம் ஆண்டுவாக்கில் பிளேட்டோ பிறந்தார். இவரது இளமைப்பருவத்தில் புகழ்பெற்ற தத்துவஞானியாக விளங்கிய சாக்ரட்டீசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. சாக்ரட்டீஸ் இவருடைய ஆருயிர் நண்பராகவும் வழிகாட்டியாகவும் ஆனார்.பண்டையக் கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ, மேலைநாட்டு அரசியல் தத்துவமும், நமது அறிவியல் மற்றும் மெய்விளக்கியல் சிந்தனையும் எழுச்சி பெறுவதற்குத் தோற்றுவாயாக அமைந்தவர் ஆவார். இந்தத் துறைகளில் இவரது அனுமானங்கள் கடந்த 2300 ஆண்டுக்களுக்கு மேலாகப் படிக்கப்பட்டு வருகின்றன.
கி.மு. 387 ஆம் ஆண்டில் "கலைக்கழகம்" (Academy) என்று அழைக்கப்படுகின்ற புகழ் பெற்ற பள்ளியை நிறுவினார். இந்தப் பள்ளி 900 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வந்தது. பிளேட்டோ தமது வாழ்நாளில் கடைசி 40 ஆண்டுகளை ஏதென்சில் கழித்தார். அப்போது அவர் கல்வி கற்பித்தார். தத்துவம் பற்றி நூல்கள் எழுதினார். இவருடைய மாணவர்களில் மிக்க புகழ் பெற்றவர் அரிஸ்டாட்டில் ஆவார். பிளேட்டோ 60 வயதை எய்திருந்த போது அரிஸ்டாட்டில் தமது 17 ஆம் வயதில் பிளேட்டோவிடம் கல்வி பயில்வதற்காக வந்தார். பிளேட்டோ கி.மு. 347 ஆம் ஆண்டில் தமது 80 ஆம் வயதில் காலமானார்.பிளேட்டோ 36 நூல்கள் எழுதினார். அவை பெரும்பாலும் அரசியல், அறவியல் பற்றியவை.
பிளேட்டோ வகைப்படுத்தியுள்ள அரசாங்கத்துறைகள்
- பூரண அறிவு மிகுந்த அரசு
- பூரண அறிவற்ற அரசு
- அறிவற்ற அரசு
இவ்வாறான அரசின் இறைமையை இவ்வரசு பாதுகாத்துக்கொள்ளும். முpகச் சிறந்த இலட்சிய நோக்கம் கொண்ட அரசாக செயற்படும். இதனால் இவ்வாறான அரசுடன் ஒப்பிட்டுத் தான் ஏனைய அரச முறைமைகளை மதிப்பீடு செய்ய முடியும்
பூரண அறிவற்ற அரசு (State where there is Unprotected Knowledge)
இவ்வாறான அரசுகளால் மனிதன் தன் பூரண சுதந்திரத்தினை இழந்தவனாயிருப்பான். இவ்வரசின் சட்டங்கள் மிக அழுத்தம் கொடுப்பனவாகவிருக்கும். இருந்த போதிலும் இவ்வரசின் சட்டமுறைகளுக்கு மனிதன் அடிபணிந்து நடப்பான்.
அறிவற்ற அரசு (State of Ignorance)
இவ்வகையரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட மக்கள் மறுப்பர்.
.......மேற்கூறிய பாகுபடுத்தல் தான் பாரியதொரு வினாவை சிந்தையில் புகுத்திப் போயுள்ளது. பதில் தேடவேண்டியது மிக முக்கியம்....
பிற்குறிப்பு - வினாக்கள் தோன்றும் போது தான் விடைகள் பல கிடைக்கும் தீர்வுகள் பிறக்கும்
No comments:
Post a Comment