Thursday, June 20, 2013

இல்லாதிருக்கிறாய்….(இல்லை + இருக்கிறாய்)







நீ இருக்கின்றாய் என்பதற்கும்
அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……

அருகில் இருக்கும் போது
உன் வாசனை நுகர்கின்றேன்
இல்லாத போது
காற்றில் உணர்கின்றேன்

காணும் போது
கண்களுள் நிறைக்கின்றேன்
காத்திருக்கையில்
கனவுகளில் சுவைக்கின்றேன்

பக்கத்தில் இருக்கும் போது
ஸ்பரிசிக்கின்றேன்
தொலைதூரமாகும் போது
உன் நினைவுகளை
சுவாசிக்கின்றேன்

நேரில் நீ தருகின்ற
பூக்களை இரசிக்கின்றேன்
இல்லாத போது
உன் புகைப்பட
சிரிப்புக்களுள் சங்கமமாகின்றேன்

இருக்கும் போது
கார் சத்தம் கேட்டு
விடுதி கதவருகில்…..
இல்லாத போது
வரும் நாளுக்காய்
கலண்டரருகில்……..

அருகிலிருக்கும் போது
காதோரம் கிசுகிசுக்கும்
காதல் மொழிகள்…
இல்லாத போது
காது வரை மூடிய
கம்பளிக்குள் கற்பனைகளின் தொல்லை….

நீ உள்ள போது
உன் துணி துவைக்கின்றேன்
இல்லாத போது
உடைகளில் - உன்
வாசம் பிடிக்கின்றேன்

இரவில்…
உனக்குள் தொலைகின்றேன் - நீ
இல்லா ராத்திரிகளில்
தலையணைகளை
இறுக்கிக் கொள்கின்றேன்

நீ உடன் இருப்பதும் சுகம்
அருகில் இல்லாதிருப்பதும் ஒரு சுகம்….
உள்ள போது சேமித்தவை
இல்லாத போது கனவுகளாக…. ஆக
நீ இருக்கின்றாய் என்பதற்கும்
அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……










1 comment:

  1. உணர்வுகளில் ஊறிப்போன நினைவுகளைக் கோர்த்து நிதர்சமான உலகில் அற்புதமான

    ReplyDelete

அதிகம் வாசிக்கபட்டவை