Thursday, June 20, 2013

மௌனம் ஓர் மந்திரம்

“பேசாமல்” இருப்பது என்பது உண்மைக்குமே ஒரு பெரிய கலைங்க… நம்ம வடிவேல் சொல்வத போல “சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம்” தெரியுமா…? அதுவும் சில நேரம் கதைக்க வேண்டிய இடங்களில் கதைக்காமல் கண்ணாடிக்கு முன் புலம்புவமே… (இது எனக்கு நானே சொல்லிக்கொள்றனுங்க) அந்நேரம் ஏற்படுமே கடுப்பு… ஆனாலும் பாருங்க பல பிரச்சினைகளுக்கு இந்த பேச்சு தாங்க காரணம். கடுப்பில் சில நேரம் பேசிடுவோம். ஆனால் அதன் பின் ஆறுதலாக சிந்திக்கும் போது மௌனமாக இருந்து பல புதினங்களை பார்த்திருக்கலாம் என்று கூட தோன்றும். என்றாலும் பல வாய்ப்புக்களை அந்நேரம் இழந்திருப்போம்.

அண்மைய சில பிரச்சினைகளுக்கு பின் என்னுடைய தாயாரும் உற்ற நண்பியுமான அம்மாவிடம் அவற்றை பகிர்ந்து கொண்ட போது அறிவுரைகளுடன் கூடவே ஓர் மந்திரமும் சொன்னார். “மௌனமாக இரு” என்பது தான் அந்த மந்திரம்…. இன்று யோசிக்கும் போது மௌனம் ஓர் மந்திரம் தான் என்பது புரிகிறது…. கூடவே மௌனத்தினை பற்றி பா.விஜயின் என்னைத் தொட்ட வரிகள் சில……..

மௌனமாக இருங்கள்
புலன்களை பேசவிடுங்கள்
மலர்கள் எல்லாம்
மௌனமாகத் தானே
மந்திரம் சொல்கின்றன…
அதனால் தான்
அதில் வாசம் வசிக்கின்றது….
.....................................

மௌனம் தான் எவ்வளவு
அழகான மொழி!
மௌனத்தை
மொழியாக கொண்டுள்ள
அனைத்துமே
பாக்கியசாலிகள்
பராக்கிரமசாலிகள்….
......................................

ஆமைக்கு ஓடு
அலங்காரமுமல்ல
சுமையுமில்ல..
மனிதனுக்கு மௌனமும்
அப்படித் தான்…..

பிற்குறிப்பு - இனி மேலாவது மண்டைக்குள் “மௌனம்” மந்திரத்தினை ஏற்றிக்கொள்ள வேண்டும்


No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை