மீராவிற்கும் கர்ணனுக்கும் கூட தொடர்புண்டு

மீராவிற்கும் கண்ணனுக்கும் தான்
தொடர்புண்டு...
இவர்களது காதல்
காலம் கடந்த காதல்....
இலக்கியங்கள் இயம்புகின்றன.

மீராவிற்கும் கர்ணனுக்கும் கூட
தொடர்புண்டு...
கர்ணன் கொடையில் சிறந்தவன்
மீரா அன்பானவர்களை கொடுப்பதில்
சிறந்தவள்...

ஒற்றுமையிலும் ஓர் வேற்றுமை
அவன் கொடுத்தது உயிரற்ற
பொருள் தானம்...
மீராவினது..
உயிருள்ளவர்களை
கொடுப்பது.....
ஒவ்வொரு முறையும்
கொடுத்தே தொலைகிறேன்

இப்போதெல்லாம்
கொடுப்பதிலும்.....
தனியே கண்ணீர் வடிப்பதிலும்
ஒரு சுகமிருப்பதாகவே தோனுகிறது.

திகதி -30.05.2013

No comments:

Post a Comment

பதிவுகள்

நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்...

அதிகம் பார்க்கப்பட்டவை