Monday, May 13, 2013

மாடி வீட்டு நாயும் ஒரு தெரு நாயும்.....


தெருவழியே ஒரு தெரு நாய் சென்று கொண்டிருந்ததாம். அந்த வழியிலே இருந்த மாடி வீட்டு நாயை கண்டதாம். அந்த வீட்டு நாய் அன்று தான் வீட்டுக்கதவை முதன் முதல் தாண்டி படலையடியில் உலா வந்து கொண்டிருந்ததாம். அந்த தெரு நாயும் படலையடியில் வந்து சிநேகமாய் சிரித்தது. சாறிங்க குரைத்தது. வீட்டு நாயும் பதிலுக்கு சிநேகமாய் குரைத்தது. தெரு நாய்க்கு ஏகப்பட்ட குஷி. லயிட்டா ஒட்டிக்கொள்ள நினைத்தது. தீடீரென எங்கிருந்தோ இதை கண்டுவிட்ட வீட்டு நாயின் சகோதர நாயும், நண்பன் நாயும் தங்கள் வீட்டு பெண் நாயுடன் நாய் மொழில் பேசிக்கொண்டன. “இந்த தெரு நாய் எங்கிருந்து வந்ததோ… பார் உடபெல்லாம் சொறியாக இருக்கிறது. பல தடவை இந்த நாயை பல தெருநாய்களுடன் கண்டிருக்கின்றோம்” என்று எச்சரிக்கை செய்தன. வீட்டு நாயும் அத்துடன் சிநேகமாக சிரித்து விட்டு உள்ளே சென்று விட்டது.

விட்டதா இந்த தெரு நாய்….? கீழிருந்தே பல முறை குரைத்து பார்த்தது. நான் எந்த நாயையும் ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை… மற்ற நாய்களை பார் அவை தான் அப்படி…. எனக்கு பின்னுக்கு எத்தனை பெண் நாய்கள் திரிகின்றன என்று பிதற்றியது. தன் ஜம்பங்களை சொல்லி (கவிதையாக) ஊளையிட்டு பார்த்தது. வேறு தெருக்களில் அலைந்ததை பற்றி கதையளந்தது. எங்கிருந்தோ புதிதாக வந்திருந்த தன் சக நாய்களுக்கும் கீழிருந்தவாறே அந்த வீட்டு நாய் எப்படி இருக்கு என்று காட்டி… அறிமுகம் செய்ய முயன்றது. தன் குடும்ப நாய்களையும் அறிமுகப்படுத்தியது வீட்டு நாய்க்கு தன் மேல் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக… இறுதியாக நீயில்லாட்டி என்னால் இருக்க முடியாது என்று பாவ்லா காட்டியது… கடுப்பேத்த நண்பன் நாயையும் வீட்டு நாயுடன் இணைத்துக் கதைத்து பார்த்தது. சற்றே எட்டிப் பார்த்த வீட்டு நாய் “கொஞ்சம் நேரம் தரமுடியுமா நாயே?” என்று கேட்டது. “அதற்கென்ன காலமெல்லாம் காத்திருக்கும் காவியக்காதல் என்னுடையது” …..மனிதக்காதல் அல்ல அல்ல… அதையும் தாண்டி புனிதமான நாய்க்காதல்… என்று “குணா” கமலஹாசன் ரேஞ்சில் பதில் சொல்லியது.

சிறு வயதிலிருந்தே செல்லமாகவும் பயிற்சியுமளிக்கப்பட்ட அந்த வீட்டு பெண் நாய் மௌனம் சாதிக்க முடிவெடுத்தது. கூடவே கொஞ்சம் நேரம் எடுக்க யோசித்தது. “ஏன் பல பெண் நாய்கள் தன் பின் சுற்றும் போது இந்த நாய் என்னை பார்க்க வேண்டும்.” என்ற சந்தேகம் வீட்டு நாய்க்கு ஏற்பட்டிருந்தது. எப்படியும் (நாயின்) வேஷம் கலைய கொஞ்ச நாள் எடுக்கும் அதுவரை பொறுப்போம் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு காத்திருந்தது.
கொஞ்சம் பொறுத்துப் பார்த்த தெரு நாய் பொறுமை இழந்தது… “என்னடா இந்த வீட்டு நாய் கீழிறங்கி வராதா? ஒரு வேளை வேறு நாயை பார்த்து விட்டதோ அல்லது நமது தெருக்கூத்துகள் விளங்கி விட்டதோ?” என்று லேசாக கலைய ஆரம்பித்தது. அந்த நேரம் பார்த்து வந்த தன் தெரு நாய் சகாக்களிடம் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் “இந்த வீட்டு நாய் தான் என் பின்னால் அலைந்தது. நான் தான் அந்த பைத்தியகார நாயை வேண்டாம் என்டிட்டன்” என்று சொல்லிக்கொண்டது. கூடவே நின்ற சொந்தக்கார நாய்களும் கிடைத்தது போதும் என்று நழுவ தொடங்கின.

சற்றே கோபப்பட்ட வீட்டுநாய் தெருநாய் ஏன் அலைந்தது என்று கேட்க எத்தனித்தது. தடுத்த வீட்டு நாயின் தாய் நாய் சொன்னது “அதனளவு நாம் இறங்கினால் நம் மதிப்பு கெட்டிடும் கண்ணம்மா…எல்லாம் நன்மைக்கே ”

தன் தங்கை நாயுடன் நின்ற ஆண் நாயும் நண்பன் நாயும் அந்த வீட்டு நாயிடம் சிரித்தபடியே “தெரு நாய் என்றும் தெரு நாய் தான். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது தன் குணத்தை ஒரு நாள் காட்டிவிடும். நீயும் அதனுடன் சேர்ந்து சொறி சிரங்கு படாமல் தப்பித்தாய் என்று நினைத்துக்கொள். அந்த நாய் உன்னைப்பற்றி சொல்வதால் நீயொன்றும் குறைவதில்லை. நம் வீட்டிற்கு பண்பாடிருக்கிறது. உன் தகுதிக்கு நல்ல அல்சேஷன் நாயே கிடைக்கும். விடு இந்த தெரு நாயை…” என்று கூறின.

சற்றே எட்டிப் பார்த்த வீட்டு நாய் அந்த தெரு நாய் இன்னொரு நாயுடன் போவதை பார்த்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டது கூடவே மனதுள் பாட்டும் படித்துக்கொண்டது “ இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி மிருகக் காதல்….”

குறிப்பு - தகுதியறிந்து பழக வேண்டும்

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை