இறுகப்பற்றிக்கொள்!


நான் உன்னை மறுத்த 
நிமிடத்தின் 
நினைவில் அழும் போது 
அழுகையை நிறுத்த என்ன செய்வாய் அன்பே? 
என்று கேட்டேன்

முதலில் புன்னகைத்தான்
பின் அலட்சியமாக - தன்
தலைமுடியை கோதிக்கொண்டான்.
தலையை சற்றே சாய்த்து
திரும்பிக் கேட்டான்
காற்றில்லா இடத்தில் எப்படி சுவாசிப்பாய் நீ?

தடுமாறி நான் 
வார்த்தைகளை கோர்க்கும் முன்பே
அவனே பதிலளித்தான்
காற்றில்லாவிடத்தின் சுவாசம் நின்று விடும்
நீ இல்லாவிடத்தில் நான் 
அசையாமல் நின்று விடுவேன்.... -என் 
கைகளை இறுகப்பற்றிக்கொள்.....என்னருகில்  

மௌனமாக அமர்ந்துவிடு...- அல்லது 
நான் நினைவுகளின் அரூபமாகவேனும் இருந்துவிடு 
என்றான்....
 

அவன் மட்டுமா தொலைந்து போனான்.... - அவன் 
கைளை இறுகப்பற்றிக்கொண்டே நானும்...
வா அன்பே நாம் தொலைந்து போய்விடலாம் -  நீ

என்னை - இறுகப்பற்றிக்கொள் 

 

No comments:

Post a Comment

பதிவுகள்

பிரண்டை (வச்சிரவல்லி) தொக்கு

கொஞ்ச நாளைக்கு முன்னர் நான் ஊர் சுற்றிய போது பிரண்டைச் கொடிகள் கிடைத்திருந்தன. சரிடியென்டு அதனை விட்டுக்கொண்டு வந்து வீட்டிலிருக்கும் அக்காவ...

அதிகம் பார்க்கப்பட்டவை