நான் உன்னை மறுத்த
நிமிடத்தின்
நினைவில் அழும் போது
அழுகையை நிறுத்த என்ன செய்வாய் அன்பே?
என்று கேட்டேன்
முதலில் புன்னகைத்தான்
பின் அலட்சியமாக - தன்
தலைமுடியை கோதிக்கொண்டான்.
தலையை சற்றே சாய்த்து
திரும்பிக் கேட்டான்
காற்றில்லா இடத்தில் எப்படி சுவாசிப்பாய் நீ?
தடுமாறி நான்
வார்த்தைகளை கோர்க்கும் முன்பே
அவனே பதிலளித்தான்
காற்றில்லாவிடத்தின் சுவாசம் நின்று விடும்
நீ இல்லாவிடத்தில் நான்
அசையாமல் நின்று விடுவேன்.... -என்
கைகளை இறுகப்பற்றிக்கொள்.....என்னருகில்
மௌனமாக அமர்ந்துவிடு...- அல்லது
நான் நினைவுகளின் அரூபமாகவேனும் இருந்துவிடு
என்றான்....
அவன் மட்டுமா தொலைந்து போனான்.... - அவன்
கைளை இறுகப்பற்றிக்கொண்டே நானும்...
வா அன்பே நாம் தொலைந்து போய்விடலாம் - நீ
என்னை - இறுகப்பற்றிக்கொள்

No comments:
Post a Comment