கொழு கொழு கன்னங்கள்

நேற்று ஒரு முகநூல் நண்பி மிகவும் மனவழுத்தில் தான் இருப்பதாகவும், தன்னுடைய உடற்பருமனைக்காட்டி ஒருவர் தன்னை நிராகரித்துவிட்டதாகவும் பதிவினை எழுதியிருந்தார். அண்மைக்காலமாக பலரும் இவ்வாறான பதிவுகளின் பின்னர் தம்மை மாய்த்துக்கொள்வதால் சற்று உள்பெட்டியில் போய் உரையாட ஆரம்பித்தேன். தான் ஒருவரை விரும்பியதாகவும் அவரும் தன்னை விரும்புவதாக தான் செய்கைளை மேற்கொண்டதாகவும் ஆனால் தான் நேரடியாக இவ்விடயத்தினை அணுகும் போது அந்தப்பெண்ணின் உடல் பருமனைக்காட்டி மறுத்துவிட்டதாகவும் இது தன்னுள் மிகவும் உளரீதியான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் பகிர்ந்துகொண்டார். உடனடியாக தொலைபேசி இலக்கத்தினை வாங்கி உரையாடத்தொடங்கினேன். இது உடனடியாக மனவழுத்தத்தில் உள்ள ஒருவருக்கு நாம் செய்ய வேண்டியது. உன்னுடன் நானிருக்கின்றேன் என்று முதலில் கொடுக்கின்ற நம்பிக்கை தான் மிகப்பெரியது. இப்படி ஆரம்பித்து இரவும் கதைத்து இன்று ஓரளவு தெளிவாகிவிட்டார். இப்பதிவு இவர்களைப் போன்றவர்களுக்கானது!

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எம்முடைய கட்டடடப்பொறியியல் பிரிவில் நாம் இரு பெணகள் தான் இருந்தோம். அடுத்த மாதத்திலிருந்து மற்ற பெண் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பல்கலைக்கழக படிப்பினை இடைநிறுத்திவிட்டார். ஆக ஆண்கள் குழுவில் தனித்த பெண் நான் தான். எனவே எங்கு போனாலும் என்ன செய்தாலும் கைகோர்த்து திரிய பெண் துணை இருந்திருக்கவில்லை. விரிவுரையுள்ள நாட்களில் கன்டீனில் சாப்பிடுவது, நூலகம் போவது எல்லாமே இந்த தடியன்களுடன் தான். அப்படி ஒன்றாக இருக்கும் நேரங்களில் யாராவது பெண் பிள்ளைகள் போனால் , அல்லது நம்மைக் கடந்தால் சில பிள்ளைகளைப் பார்த்து “முள்ளுக்குத்தும் வேண்டாம்” என்பான்கள். ஏன்டா அப்படி சொல்றீங்க என்று கேட்டால் நீ வளரல இன்னுமு; என்று பகிடி பண்ணுவதுண்டு. இதுவொரு வயது வந்தோருக்கான 18+ கதை, உடலுறவை வைத்து சொல்லப்படுகின்றதொன்று என நான் அறிந்துகொள்ள சில நாட்களாகியிருந்தது. அதாவது மெல்லிய பெண்களது எலும்பு குத்தும் என்ற நோக்கிலேயே இந்த கதையாடல் அமைந்திருந்திருக்கின்றது. 

ஒரு வகையில் இந்த மனநிலை இலங்கையை தாண்டி பயணிக்கும் போது என்னாலும் அவதானிக்க முடிந்திருக்கின்றது. “மெலிந்த” பெண்களை தேடுவது நம்முடைய சமூகத்தில் தான். திருமணத்திற்கு பெண்தேடும் விளம்பரங்களையும் பாருங்களேன். ஆனால் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் Chubby யான பெண்களையே விரும்புவதை அவதானித்திருக்கின்றேன். அவ்வாறு அணுகப்பட்டுமிருக்கின்றேன். 


இதுவொரு கற்பிதம் தான். பெரும்பாலும் காதல், திருமணம் என்றவுடன் நமக்குள் முதலில் கட்டில் தான் நினைவுக்கு வந்து நிற்கின்றது. இதன் நீட்சி தான் மெலிந்த பெண் தேடும் படலம். இன்னும் மேலே பாய்வதைத்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள் பலர். ஆனால் பல பொசிஷன்கள் வந்துட்டு. இன்னுமொரு கற்பிதம் இருக்கின்றது சாப்பாடு தான் உடலளவினை தீர்மானிக்கும் என்று . ஆனால் அப்படியல்ல மகிழ்ச்சியும் உள ஆரோக்கியமும் தான் உடல் பருமனை திர்மானிக்கின்றது. சிலர் பானை கணக்கில் சாப்பிட்டாலும் வெண்டைக்காய் போல் தான் எப்போதும் இருப்பார்கள். 

அதே போல் தான் என்னுடைய நண்பிகள் சிலர் “மொட்டையான” ஆண்களை நிராகரிப்பதுமுண்டு. ஆனால் பாருங்கள் மெலிந்த பெண் திருமணத்தின் பின் குண்டானால் என்ன செய்வது? அல்லது நிறைந்த தலைமுடியுடன் இருப்பவருக்கு திருமணத்தின் பின் முடியுதிர்ந்தால் என்ன செய்வது?  என்னைப்பொறுத்தளவில் மெலிவாகவோ குண்டாகவோ இருப்பது என்று பேசிக்கொள்வதை விட BMI சரியாக இருக்கின்றதா என்று கணக்கிட்டுக்கொள்வது தான் முக்கியம். குளுகுளுவென்று இருந்தாலும் நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும் பெண்கள் இருக்கின்றார்கள். Zero சைசில் உள்ள சோம்பேறிகளும் இருக்கின்றார்கள் (இது எல்லா விடயத்திலும் தான்…. செக்ஸ் டூ)

முக்கிய விடயம் குளுகுளுவென்றிருக்கும் பெண்களை துணையாக கொள்ளும் ஆண்கள் மிகவும் சந்தோசமான மனநிலையில் இருப்பதாகவும் இவ்வாறான இணையங்கள் விவாகரத்தினை பெருமளவில் நாடுவதில்லை எனவும் ஆய்வுகளும் சொல்கின்றன. எங்கள் வீட்டில் வயதானதொரு பெண்மணி இருந்தார். அவர் மெலிந்த பெண்களைக்கண்டால் வஞ்சம் பிடித்தவர்கள் என்பார். இப்போது நினைக்கும் போது இரண்டுக்கும் தொடர்புள்ளதாக படுகின்றது). ஆண்களிலும் பாருங்கள் குண்டான பெடியன்கள் தன்னுடைய பெரும்பாலும் இணையர்களுடன் பாசமாக  இருப்பார்கள். 

எனவே பெண்களே யாராவது உங்களைப்பார்த்து சொல்வதற்கு முன்னர் நீங்களும் வாடலான, சப்பென்றிருக்கின்ற, ஒல்லியான ஆண்களை நிராகரித்துவிடுங்கள். கேட்டால் முள்ளுக்குத்தும் என்று சொல்லிவிடுங்கள். குளுகுளுவென்றிருந்த இட்லி நடிகைக்குத்தானே கோவில் கட்டப்பட்டது. யாராவது அசினுக்கோ இலியானாவிற்கோ கட்டியிருக்கின்றார்களா என்ன? 

குளுகுளுவென்று இருந்தால் தான் நெஞ்சில் சாயலாம், கன்னத்தை கிள்ளலாம், வயிற்றில் செல்லமாக குத்தலாம். நானெல்லாம் அப்பிடித்தான் பார்ப்பேன். வாடலாயிருந்தால் நமக்கும் சோடிப்பொருத்தம் சரி வராது.. பிள்ளைகளும் எலும்பும் தோலுமாகவிருக்கும். நமக்கு எல்லாமே குளுகுளுவென்று இருக்க வேண்டும் . இல்லாட்டி நமக்கும் முள்ளுக்குத்தும் தானே. 

No comments:

Post a Comment

பதிவுகள்

பிரண்டை (வச்சிரவல்லி) தொக்கு

கொஞ்ச நாளைக்கு முன்னர் நான் ஊர் சுற்றிய போது பிரண்டைச் கொடிகள் கிடைத்திருந்தன. சரிடியென்டு அதனை விட்டுக்கொண்டு வந்து வீட்டிலிருக்கும் அக்காவ...

அதிகம் பார்க்கப்பட்டவை