Skip to main content
விதி போலும்….
தொடர்ந்தவன்
தொலை தூரம்
சென்ற போது தான்
மனதையே
தொட்டது
ஏதோவொன்று …..
துரத்தியவன் தூர விலகிய
போது தான் - என்
காதலே எனக்கு
வலித்தது…
புரியாத பிரியம்
பிரியும் போது தான்
புரிந்தது….
மீராவின் காதல்
கவிதையிலேயே
கருவாகி
கருகிட
வேண்டுமென்பது
விதி போலும்….

Comments
Post a Comment