அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……06

 Feb 07th - Rose Day:  Expression on Admiration  

Feb 08th - Propose Day:  Sharing feelings and Commitment 

Feb 09th - Chocolate Day:  Symbol of Joy  

Feb 10th - Teddy Day:  Gesture of warmth and care

Feb 11th - Promise Day:  Focus on trust and Intention  

Feb 12th - Hug Day:  Emotional closeness and Reassurance 

Hug Day 2023: Wishes, Quotes, And Messages For Your Special One 

குடும்ப உறவுகளாயிருக்கலாம் வாழ்க்கைத்துணையாக இருக்கலாம் ஏன் கூட பயணிப்பவர்களாயிருக்கலாம் உணர்ச்சி நெருக்கமும். “உனக்கு நானிருக்கின்றேன்” என மனதார கொடுக்கின்ற உறுதியும் மிக முக்கியமானது… அவசியமானம் கூட… 

இந்த நெருக்கத்தினையும் உறுதியையும் கொடுப்பதில் “ அணைத்தல்” என்பது முக்கியமானது. குழந்தையாயிருக்கும் போது நம்மால் எமது உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்த வார்த்தைகள் இன்றியிருக்கும் போதும் தாய் அணைத்துவிட்டால் அடங்கிபோயிருப்போம். அடுத்து சகோதரர்கள்…. புல ஆண் சகோதன்களுக்கு ஒரேயொரு பெண்ணாயிருந்து பாருங்கள். ஆண்களின் அணைப்பின் விகல்பங்கள் உங்களுக்கு தெரியாது. ஏன் என்றால் சகோத அணைப்பில் இருக்கும் மெல்லிய கதகதப்பும் ஆறுதலும் போதும் நீங்கள் நள்ளிரவில் கூட நடுத்தெருவில் தனித்து நடப்பதற்கு! அடுத்து துணையின் அணைப்பு. நாம் தடுமாறுகின்ற போது….. ஆழ்ந்த கவலையில் இருக்கும் போது… யாராவது உதவ வரமாட்டார்களா என்று உணர்வு ரீதியாக தடுமாறும் போது நம்மை அணைப்பது தான் துணை! இந்த ஆறுதலை தரமுடியாத எந்த மனிதனும் மனுஷியும் “அன்பு” என்கின்ற பந்தத்தினுள் இணையவே கூடாது. பேசாமல் தூணை கட்டிப்பிடித்துக்கொள்ளலாம். 

 அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….

பக்கம்: 1405 

இனிய நாட்குறிப்பே….
நீண்ட நாட்களின் பின் உன்னில் கிறுக்குகின்றேன். இந்த ஆறு மாதத்தில் வீட்டில் எத்தனை மாற்றங்கள். அப்பாவின் இழப்பிற்கு பின்னர் அம்மாவுடன் இணைந்து இந்த குடும்பத்தை நடத்தியது பெரியண்ணா,  சின்ன அண்ணா தான். நாம் அத்தனை பேரும் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு அச்சாரம் அவாகள்; தான். சின்ன அண்ணா சிறு வயதில் இருந்தே அதிகம் பேச மாட்டார், எம்முடன் பகிடி பண்ண மாட்டார், எந்நேரமும் படிப்பு, வாசிப்பு. வளர்ந்த பின்னர் கூட எம்முடன் அதிகம் அலட்டுவதில்லை. ஆனால் எம் ஒவ்வொருவருக்கும் என்னனென்ன எப்போது செய்ய வேண்டும் என்பது அவருக்குத்தெரியும். நாம் கேட்காமலேயே அதது உரிய நேரத்தில் நடக்கும். மற்ற சகோதரன்கள் என்னுடன் சேட்டை விடுவது, அழவைப்பது என்று இருப்பது போல் இவர் இருப்பதில்லை. இவர் முன்னாள் மற்ற நால்வரும் என்னை சீண்ட கூட மாட்டார்கள். அவ்வளவு பயம், மரியாதை. இவர்கள் என்னை சீண்டினால் பழிவாங்குவதற்கு அண்ணா வரும் வரை காத்திருந்து தான் பொய்யாக அழுது இவர்களை ஏச்சு வாங்க வைத்து கடைசியில் அண்ணாவுடன் ஊர் சுற்றி பொருட்கள் வாங்கி வருவதுண்டு. 

உயர்தரம் படித்துக்கொண்டிருந்த போது ஒருமுறை என்னை கூட்டிச்சென்று இவர் தான் என் வருங்கால துணை என்று முதலில் எனக்கு அறிமுகம் செய்தது இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றது. பின்னர் தான் வீட்டிற்கு கூட்டி வந்து ஏனையவர்களுக்கு அறிமுகம் செய்தார். எனக்கு சின்னண்ணியை முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. அவர் சிங்களவர், பௌத்தமதத்தினை சார்ந்தவர். எங்களனைவருக்கும் இன்னுமொரு அம்மா. அவர்களது திருமணம் இரு சமயத்திலும் நடந்தது, எட்டு வருடங்கள் காத்திருந்து குழந்தைகள் கிடைத்தது எல்லாம் இன்னும் வற்றாத நினைவுகள். எட்டு வருடங்கள் காத்திருந்ததற்கும் சேர்ந்து ஒரே தடவையில் மூவர். அண்ணி அடிக்கடி எங்கள் குழந்தைகளில் ஒருவரை உன் குழந்தைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பகிடியாக கதைப்பதுண்டு. குழந்தைகளை வீடியோ அழைப்பில்; முதன் முதல் காட்டும் போதும் அது தான் சொல்லி சிரித்தார். நானும் பகிடிக்கு அப்போ எங்களுக்கும் மூவர் ஒன்றாக பிறக்க வேண்டும் என்று பதில் சொல்லியிருந்தேன். ஆனால் ஒரு மாதத்திலேயே அவர்கள் குழந்தைகளை எம்மிடமே கொடுத்துவிடுவார்கள் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. 

விபத்து என்பது எவ்வளவு கொடியது. அதிலும் பல மைல் தூரத்தில் எம்மவர்கள் உயிரிழந்திருக்கும் போது அதன் தாக்கம் தான் எத்தகையது…. அண்ணா- அண்ணி எம் முன்னால் சண்டையிட்டு பார்த்தில்லை நாம். இருவரும் எவ்வளவு தான் பணியிருந்தாலும் ஒருவருக்கொருவர் அவ்வளவு அன்னியோன்யம். மரணத்திலும் சேர்ந்து தான் போய்விட்டார்கள், பிரசவம் பார்க்க போயிருந்த அம்மா விபத்தை அறிந்து நெஞ்சுவலியில் வைத்தியசாலையில்… இந்த நாட்கள் கனவாக மட்டும் இருக்க கூடாதா என்று நினைக்கின்றேன். என்னை யாரும் கிள்ளியெழுப்பி கனவிது என்று சொன்னால் நன்றாகவிருக்கும். 

அம்மா மிகவும் உடைந்திருக்கின்றார். அது இலகுவில் ஆறாத வலி என்று எனக்கும் புரிகிறது. ஆனால் குழந்தைகளுக்காவேனும் அம்மா வேணும். அண்ணி மருமக்கள் தருவேன் என்று சொல்லி இன்று என் கையில் இரு மகன்களையும் மகளையும் தந்துவிட்டார். குழந்தைகள் எப்போதும் இனிமையாக சுமை தானே…. இந்தப்பக்கத்தில் கிறுக்கிக்கொண்டிருக்கும் போது குழந்தைகள் என்னருகில் தான் இருக்கின்றார்கள். இந்த முகங்களை பார்க்கும் போது ஓவென்று அழனும் என்று தான் தோன்றுகின்றது. ஆனால் இழந்தவைகளுக்காக அழுது என் அம்மாவையும் இழக்க நான் விரும்பவில்லை. 


பக்கம்: 1435

வணக்கம் நாட்குறிப்பே,

இந்நாட்டின் அனைத்து சட்டரீதியாக விடயங்களையும் முடித்து இன்று குழந்தைகளை சட்டரீதியாக தந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் இந்நாட்டின் பிரஜைகள். இன்னும் இரு வாரத்தில் எம் நாடு திரும்ப வேண்டும். போகும் முன்னர் இவருடன் பேச வேண்டும் என்று நேரம் கேட்டிருந்தேன். இன்றைய சந்திப்பு நிச்சயம் பல தீர்மானங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்த்து தான் சென்றிருந்தேன். 

வழமை போன்று சந்திக்க வந்ததிலிருந்து பந்தா பேச்சுக்கள் ஆரம்பமாகிவிட்டது. எனக்கிருந்த மனநிலையில் எழுந்திருந்து கிறீச்சிட்டு கத்த வேண்டும் போலிருந்தது. அம்மாவின் வளர்ப்பு வழமை போன்று தடுத்துவிட்டது. சற்றுப்பொறுத்து சரி மரணவீட்டிற்கு வந்த பிறகு எங்கே ஆளைக்காணவில்லை என்று கேட்டேன். அது தான் அம்மா பற்றி அவருக்கு வைத்தியம் செய்யும் என் நண்பனிடம் விசாரித்தேன் என்றார். இதை விட அம்மாவிடம் நேரில் பேசியிருந்தால் எவ்வளவு நன்றாகவிருந்திருக்கும். பேசிப்பயனில்லை. இந்த இடத்தில் இவர் வீட்டின் எதிர்கால மருமகன் என்கின்ற ரீதியில் அனைத்தையும் முன்னின்று நடாத்தியிருக்க வேண்டாமா? இந்த நேரத்தில் அணைத்துக்கொள்ள முடியாத உறவு என்னத்திற்கு? 
“அண்ணாவின் குழந்தைகள் எம்முடன் வளரட்டும். நான் முடிவை வீட்டில் சொல்லிவிட்டேன்” என்று சொல்லிவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தேன். இவருடனான நிச்சயார்த்தத்தின் இந்த மூன்று வருடங்களில் நான் இதுவரை அதை செய்யவா? இதை செய்யவா? ஏன்று தான் கேட்டு முடிவெடுத்திருக்கின்றேன். இன்று முதன் முதல் நானாக முடிவெடுத்த விடயத்தினை சொல்லிவிட்டேன். இவரின் அனுமதி இந்த விடயத்தில் எனக்கு தேவையில்லை. 

“…… என்னால் முடிவிலிருந்து மாற முடியாது. ஆனால் இக்குழந்தைகளால் நமக்குள் இடைவெளி விழாமல் வளர்ப்பதற்கு என்னால் உறுதியளிக்க முடியும். அவர்களுக்கு இப்போது தேவை பொறுப்பாக வளர்க்க கூடிய சூழல். ஏற்கனவே அம்மா என்னுடன் தான் இருப்பார் என்று சொல்லியிருக்கின்றேன். ஆனால் இனி இவர்கள் மூவரும் கூட இருப்பார்கள். உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் நண்பர்களாக பிரிந்துவிடலாம். ஏன்னுடைய பொறுப்புக்களை ஏற்கும் ஒருவரை நான் வீட்டில் பேச சொல்கின்றேன்.” நானும் சொல்லிவிட்டேன். சொன்ன பின்பு தான் என் பதற்றம் குறைந்தது. 

“நான் யோசிக்க வேண்டும் டார்லிங். இது வாழ்க்கை பிரச்சினை” அவரிடமிருந்து வந்த பதில். இதில் நியாயம் இருப்பதாக எனக்கும் தோன்றியது. குழந்தைகளை பொறுப்பெடுப்பதென்பது இலகுவானதல்ல. இது மனரீதியான விடயமும் கூட. என் இரத்தம் என்னால் இலகுவாக ஏற்க முடியும். அவரால் உடனடியாக முடியாது என்பது தானே யதார்த்தம். இரு நாளில் பதில் சொல்வதாக சொன்னார். 28 வயதில் இத்தனை பொறுப்புக்கள் என்னை அழுத்தியிருக்க வேண்டாம் என்று தோன்றுகின்றது. சரி இரு நாட்கள் தானே பொறுத்திருந்து பார்ப்போம். 


பக்கம்: 1440 

இனிய டயரியே!
இரண்டு நாட்கள் பொறுக்கச்சொன்னது ஐந்து நாளாகிவிட்டதே என யோசனையாகவிருந்தது. சரி அழைப்பெத்து பார்க்கலாம் என்று இரு முறை முயன்று பார்த்தேன் பதிலில்லை. இரண்டு மணித்தியாலங்களின் பின் “எனக்கு எந்தவித ஆட்சேபனையுமில்லை. சேர்ந்து வளர்ப்போம்” என்று மெசேஜ் வந்தது. கடவுளே! சுpல குறைகளை வைத்திருந்தாலும் என் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்காவிட்டாலும் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதே எவ்வளவு மகிழ்வாக இருக்கின்றது. நான் கொடுத்து வைத்தவள் என்று தோன்றுகின்றது. குழந்தைகளை ஏந்தியவாறு அவருடன் நின்று புகைப்படம் எடுக்க வேண்டும். அதை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் வளரும் போது நிச்சயம் கேட்பார்கள். சிறகில்லாமல் பறப்பது போலுள்ளது. இதைவிட என்ன வேண்டும்? உலகில் நீங்கள் தந்த விலை மதிக்க முடியாத பரிசே இது தான். இதன் பெறுமதியை விட தான் ஏனையவற்றின் பெறுமதி இருக்கும். 
மிதக்கின்றேன் நான்!


பக்கம்: 1472

 வணக்கம்.

நம் நாட்டிற்கு பறக்க காத்திருக்கும் இந்நேரத்தில் எழுதுகின்றேன் நான். இன்று சற்று நேரத்தில் இங்கிருந்து புறப்பட்டு விடுவோம். பெரியண்ணா- அண்ணி, பிள்ளைகள், அவர், அவரின் அண்ணா என எல்லோரும் வழியனுப்ப வந்திருந்தார்கள். கடந்த முறை நான் இங்கிருந்து புறப்படும் போது சின்ன அண்ணா- அண்ணியும் வந்திருந்தார்கள். அப்போது அண்ணிக்கு நான்காம் மாதம். அன்று அண்ணியினுள் இருந்தவர்கள் இன்று எட்டு மாத குழந்தைகளாக என் கைகளுள் புதைந்து தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

காலம் தான் எத்தனை மாற்றங்களை நொடியில் ஏற்படுத்தி விடுகின்றது. அப்பாவின் இழப்பு, அம்மப்பா திடீரென சுட்டுக்கொல்லப்பட்டது, சின்ன அண்ணா- அண்ணியின் விபத்து என காலத்திற்கு காலம் விதி எம்மை அதன் வலிய கரத்தினால் குட்டிக்கொண்டுதானிருக்கின்றது. இதுவும் கடந்து போகும்.
என்னை அதிகம் அணைத்துகொள்பவர் சின்ன அண்ணா தான். அண்ணாவின் உயரத்திற்கும் அகன்ற தோளுக்கும் அதன் கதகதப்பிலும் என்னை புதைத்துக்கொள்வது எனக்கு பிடிக்கும். அம்மா கூட சிலநேரம் ஏசுவதுண்டு. இந்த வயதிலும் என்ன இது என்று…. எத்தனை வயதானாலும் அவர் அண்ணா தானே…. இன்று அந்த கதகதப்பை இழந்திருப்பதாக தோன்றுகின்றது……! இரண்டு உயிர்களை இழந்து மூன்று உயிர்களை பெற்றிருக்கின்றோம் நாம்…. 

வழியனுப்ப வந்ததிலிருந்து பார்க்கின்றேன் இவர் தன் மடிக்கணணியைத்தான் பார்த்துக்கொண்டிருககின்றார். அம்மாவிடம் ஆறுதலாக பேசுவார் என்று எதிர்பார்த்தேன். வந்தவுடன் ஹாய் ஆண்டி என்றதோடு சரி... சரி என்னிடம் பேசுவார் குழந்தைகளை கொஞ்ச நேரம் தூக்குவார் என்று எதிர்பார்த்தேன் அதுவும் இல்லை. இந்த நேரத்தில் வேலைகள் முக்கியமாக குடும்பம் முக்கியமா? ஏனையவர்கள் முன்னால் காட்டிக்கொள்ளாமல் மெசேஜ் அனுப்பினேன். நான் வேலையாகவிருக்கின்றேன் என்று உடனடியாக பதில் வந்தது. குடும்பத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும் பொது அணைப்பும் அதிகரிக்க வேண்டும். எனக்குள் புதிதாக தாய்மை எனும் பொறுப்பு அதிகரித்துள்ளதை நான் உணர்கின்றேன். இது ஒரு வகையில் தங்கையாக என் கடமையும் கூட.அம்மா, சகோதரன்கள் முதலில் விரும்பாவிட்டாலும் நான் பிடிவாதமாக எடுத்த முடிவிது. சில முடிவும் அப்படித்தான் நான் எடுத்தால் எளிதில் மாற்றிக்கொள்வதில்லை. 

முதல் நாம் இருவர் தற்போது ஐவர். இந்த உடன்படிக்கை இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தானே.   மனம் கனக்க தொடங்குகின்றது. இது இது அவர் எடுத்த  வெறும் முடிவா அல்லது உணர்ந்து, தாற்பரியம் அறிந்து எடுத்த முடிவா? குழப்பமாகவிருக்கின்றது. எனக்கு அணைப்பு தேவைப்படுகின்றது




 

 

 

Comments