Sunday, December 2, 2012

தொலைத்து விட்டேன்...

எத்தனை கைக்குட்டைகளை தொலைத்திருப்பேன்
எத்தனை சவரன் நகைகளை தொலைத்திருப்பேன் - ஏன்
எத்தனை எத்தனையோ ஆயிரம் ரூபா தாள்களைக் கூட
தொலைத்திருக்கின்றேன் - அப்போதெல்லாம்
அம்மாவின் கடுஞ்சொற்களை விட எதுவும்
வலித்ததில்லை

இன்று உன் கரம்பட்ட
பத்து ரூபா தாளை தொலைத்துவிட்டேன்
வழிகளிலெல்லாம் அலைகின்றன – என்
விழிகள் வலியுடன்

மீண்டும் கிடைக்கவில்லை – அது
உன்னைப்போல் என் வாழ்வில்
எவ்வளவோ முயற்சித்தும்....

இப்போதெல்லாம் - உன்
நினைவுகளைப் போலவே
என்னிலிருந்து தொலைகின்றன – நம்
(காதல்) சின்னங்களும்

2 comments:

  1. அருமையான நெருடும் வாிகள்

    ReplyDelete
  2. அருமையான நெருடும் வாிகள்

    ReplyDelete

அதிகம் வாசிக்கபட்டவை