பேசவதற்கென – என்
நிமிடங்களுக்கு சிலர் விலைபேசுவதுண்டு….
பூங்கொத்துடன் காத்திருப்பவர்களுண்டு…..
பேசியே என் விரல்களை
பற்றிட பலருண்டு….. – நான்
இன்று விலை மதிக்க முடியாத
நிமிடங்களை
வெறுமனே வீணடித்துக்கொண்டிருக்கின்றேன்
உன் குரலை கேட்பதற்காக….
தினமும் என்னை
பார்ப்பதற்கென….
என் குரல் கேட்பதற்கென….
மனதில் பொருத்திற்கொள்வதற்கென….
எத்தனை மனிதர்கள்…
எத்தனை அழைப்புக்கள்…
எத்தனை வற்புறுத்தல்கள்… - ஆனால்
உன் முகம் பார்ப்பதற்கும்
குரலை கேட்பதற்குத்தானே
என் - இத்தனை எத்தனங்களும்…..
இன்று மட்டும் நிகழ்த்துகின்ற
நாடகமல்ல இது….
அன்றிலிருந்து….
தொடர்கின்ற தொடர் நாடகம்….
உன் குரல் கேட்பதென்பது……
வறண்டிருக்கும் மனத்தரையில்
சட்டென்று விழுகின்ற கோடை மழை
உன் குரல் கேட்பதென்பது….
பசித்திருப்பவர் முன்
வைக்கப்படுகின்ற இலைச்சோறு…..
உன் குரல் கேட்பதென்பது….
நெரிசலில் கிடைத்துவிடுகின்ற
ஜன்னலோரத்து பேரூந்து இருக்கை…..
ஏன் இந்த அன்பில்
இவ்வளவு முட்டாள்தனம்?
( 22.02.2026 : பி.ப 9.30)

No comments:
Post a Comment