மீராவிற்கும் கர்ணனுக்கும் கூட தொடர்புண்டு
மீராவிற்கும் கண்ணனுக்கும் தான் தொடர்புண்டு... இவர்களது காதல் காலம் கடந்த காதல்.... இலக்கியங்கள் இயம்புகின்றன. மீராவிற்கும் கர்ணனுக்கும் கூட தொடர்புண்டு... கர்ணன் கொடையில் சிறந்தவன் மீரா அன்பானவர்களை கொடுப்பதில் சிறந்தவள்... ஒற்றுமையிலும் ஓர் வேற்றுமை அவன் கொடுத்தது உயிரற்ற பொருள் தானம்... மீராவினது.. உயிருள்ளவர்களை கொடுப்பது..... ஒவ்வொரு முறையும் கொடுத்தே தொலைகிறேன் இப்போதெல்லாம் கொடுப்பதிலும்..... தனியே கண்ணீர் வடிப்பதிலும் ஒரு சுகமிருப்பதாகவே தோனுகிறது. திகதி -30.05.2013