Wednesday, April 2, 2014

என்னை ஏமாற்றியவள் பற்றி உங்களுக்கு சொல்லி நியாயம் கேக்கலாம்.....

கடந்த இரு தினங்களுக்கு முன்பிருந்து பல இணையத்தளங்களிலும் வெளிவந்து கொண்டு அனைவரின் கவனத்தினையும் ஈர்த்த ஒரு விடயம் இளைஞன் ஒருவனின் தற்கொலையும் அவன் முகநூலில் இறக்கும் முன் இட்டிருந்த பதிவும்…. இங்கு அவன் தற்கொலை பற்றிய விமர்சிப்போ அல்லது அந்தப்பெண் பற்றிய நியாயப்படுத்தல்களோ பற்றியதில்லை இப்பதிவு. அந்த இளைஞர் பதிவிட்டிருந்த விடயத்தில் காணப்படுகின்ற சில நெருடல்கள் பற்றி பேசுவதே இதன் நோக்கம்.

இவள் பத்தாம் வகுப்பு(2006) படிக்கும் போது இவளுடைய உறவினர் ஒருவரை காதலித்தால் அவனுக்கு அச் சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழக அனுமதி கிடைத்த போது இவள் அதற்கு செல்ல வேண்டாம் எனவும் வெளிநாடு செல்லும் படியும் சொன்னதை கேட்டு அவனும் இவளது விருப்பப்படியே வெளிநாடு சென்றுள்ளான்  இந்த பந்தியினை எடுத்துக்கொள்ளுங்கள் அந்தப்பெண் பத்தாம் ஆண்டு படிக்கும் பொது கூறியதை கேட்டு ஒரு இளைஞன் முடிவெடுத்திருக்கின்றான் இது தான் இப்பந்தியின் சாராம்சம். புத்தாம் வகுப்பு படிக்கும் ஒருவருக்கு வயது நிச்சயம் 15 இனை தாண்டியிருக்காது. புதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஒருவரைத்தான் “வயது வந்தவர்” என்ற வரப்பிற்குள் சேர்க்கின்றோம். அதற்கு கீழ்ப்பட்டவர்கள் குழந்தைகள் என்ற வகைக்குள்ளேயே உள்ளடக்கப்படுகின்றனர். பல்கலைக்கழக அனுமதி பெறுகின்ற ஒருவர் 18 வயதினை தாண்டியிருப்பார் என்பது இலங்கை கல்வி அமைப்பின் கட்டாய நிகழ்வு. ஆக வயது வந்த நபர் ஒருவர் குழந்தை ஒன்றின் சொல்லுக்கு இணங்கி தனது முடிவினை மாற்றியிருக்கின்றார். ஒரு குழந்தை நம்மிடம் நஞ்சு போத்தலை கேட்டோ அல்லது பாலத்திலிருந்து குதித்து காட்டு என்றோ அடம்பிடிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இதனை நாம் செய்வோமா?

பின்னர் 2013 March மாதம் முதல் Phone இல் தொடர்புகளை ஏற்படுத்தினோம். ஆனாலும் பிரதீபனுடன் கதைப்பதால் என்னுடன் கதைப்பது மிகக்குறைவு. பின்னர் May மாதத்திலிருந்து பிரதீபன் இவளை விட்டு செல்ல என்னுடன் கதைப்பது அதிகமாயிற்று   இதில் இரண்டாவது வரியை பாருங்கள் “குறிப்பிட்ட நபருடன் கதைப்பதால்….” இதை வாசிக்கும் போது தற்கொலை செய்த இளைஞனுக்கு இந்தப்பெண்ணின் காதல் பற்றி முன்னரே தெரிந்துள்ளது என்பது தெளிவாகின்றது. ஒருவேளை "காரணம் தெரியாது இருந்திருக்கும். இங்குள்ள காலவிகுதிகள் அவசரத்தில் டைப்செய்ததால் இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம்" என்று நீங்கள் சாதிக்க கூடும். ஆனால் இந்த இளைஞர் மாதங்களையும் குறிப்பிட்டு கூறியுள்ளதால் இவர் அந்தப்பெண்ணுடனான உறவில் ஏற்பட்டிருந்த விரிசலினை மனதால் ஆவது உணர்ந்துள்ளார் என்பதை நீங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும். அவர் குறிப்பிட்டுள்ளதன் படி தனது காதல் அந்தப்பெண்ணுடன் அரும்பி இரு மாதங்களுள் வித்தியாசத்தினை உணர்ந்த இந்த இளைஞன் ஏன் உடனேயே விலகவில்லை என்பது இங்கு பெரியதொரு கேள்விக்குறி.

இவ்வாறு இருந்த போது 2013 September இல் இவளுடைய முதல் காதலனின் நண்பி ஒருவர் மூலம் இவளைப்பற்றி தெரிந்து கொண்டேன். (அப்போது இவளுடைய முதல் காதலனுடனும் கதைத்தேன் அவனும் இவள பற்றி சொல்லிஇ இன்னொரு கசநைனெ கிடைக்க உங்களையும் விட்டிடுவாள் எண்டு சொன்னான். நான் இல்லை அவள் என்னோடு ஒழுங்காக பழகுகின்றாள் அப்படி செய்ய மாட்டாள் என்றுசொன்னேன்.)
  இதற்கு முன்னராக நான் மேற்கோள் காட்டியுள்ள இளைஞனின் கூற்றுக்கும் இந்தப்பந்தியில் சுட்டியுள்ள பகுதிக்குமான விலகலினை நன்கு அவதானிக்கலாம். முன்னர் விலகலினை உணர்ந்ததாக கூறும் இளைஞர் இந்தப்பந்தியில் “என்னுடன் ஒழுங்காக பழகினாள்” என்று பல்டி அடித்துள்ளார். இன்னொரு விடயம் ஏப்ரலில் ஹோமா ஸ்டேஜ் க்கு போனதாக சொன்ன முன்னாள் காதலனுடன் செப்டெம்பரில் பேசியுள்ளார் என்பதினையும் கவனிக்குக.

இப்படி எத்தனையோ புரியாத கேள்விகளும் நெருடல்களும் உள்ள போதும் தந்தையுடன் பேசிய போது அவர் சொல்லியதாக சுட்டப்படுகின்ற “செல்ல பிள்ளை” என்கின்ற விடயத்தினை வாசிக்கும் போது பல பிள்ளைகளை வழிநடத்துகின்ற பாடசாலை அதிபர் ஒருவரின் பொறுப்பற்ற பதில் அவர் மீது ஆத்திரத்தினை தான் ஏற்படுத்துகின்றது. எல்லாப் பிள்ளைகளும் தங்கள் பெற்றோருக்கு “செல்லமானவர்கள்” தான் ஆனால் தன் பிள்ளையை கண்டித்தும் அவளது நடவடிக்கைகள் குறித்து விழிப்பாயிராததுடன் அவள் பிழையை நியாயப்படுத்தும் ஒரு தந்தை எவ்வாறு பல்லாயிரம் மாணவர்களை வழிநடத்தப்போகின்றார்?

கிருத்திகா ராஜசேகரம்!  எத்தனையோ பெண்கள் அநியாயமாக உடல் உள சமூக ரீதியாக சிதைக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்காக எத்தனையோ பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்வினையும் பணயம் வைத்து போராடி வருகின்றார்கள். இவ்வாறான அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் உன் போன்றவர்களது கேவலமான நடவடிக்கைகளால் தான் இன்றும் “பெண்” என்றால் இப்படித்தான் என்று ஒட்டுமொத்த சமூதாயமுமே முத்திரை குத்தப்படுவதாக நினைக்கின்றேன். இப்படியிருக்கும் நிலையில் உனது தந்தையின் பதவி, பண, அரசியல் செல்வாக்கில் உன் சுயங்கள் மறைக்கப்படலாம். ஏன் ஒருவேளை வெளிநாட்டிற்கு வாழ்க்கைப்பட்டு போய் கணவன் பிள்ளைகள் என்று வாழக்கூடும் ஆனால் மனதுள் நீ தினம் தினம் தூக்குக்கயிற்றில் தொங்கப்போகின்றாய் என்பது மட்டும் உண்மை

நிரூபனிடம் இறுதியாக சில வினாக்கள்…. ஒரு வருடம் பழகிய காதலை மறக்க முடியாமல் தூக்கிட்டு உன்னை மாய்த்துக்கொண்டாயே பல மாதம் வயிற்றிலும் பல வருடங்கள் மனதிலும் சுமந்த பெற்றோருக்கு நீ என்ன கொடுத்துள்ளாய்? நீ மட்டும் செய்தது துரோகமில்லையா? என்று கேட்க தோனுகின்றது.

தற்கொலை என்பது ஓரிரு நிமிட உந்ததலின் முடிவென்று உளவியல்  சொல்கின்ற போது தகவல்களை திரட்டி , அதை மின்னஞ்சலில் அனுப்பி, முகநூலில் 188 போட்டோக்களை பதிவேற்றி விட்டு தொங்கிய இந்த இளைஞனின் “நிதான தற்கொலை” பெருவியர்ப்பே! காதலில் ஏமாறாத ஆணும் இல்லை பெண்ணும் இல்லை. தோல்விகளுக்கு “தற்கொலை” தான் முடிவெனில் உலகில் யாருமே 19 வயதினை தாண்டிட முடியாது. (முதல் தோல்வி அநேகமாக நம்மை தொடும் வயது எல்லை இது என்பது என் கணிப்பு)

என் மனதுள்ளான கேள்விகள், இளைஞனின் கோழை முடிவு , பெண்ணின் சுயம் குறித்த விமர்சனங்களை தாண்டி நேற்று அவனது இறுதி கிரியை செய்யும் அவன் தகப்பனை பார்த்த போது மனதுள் ஏதோவொரு இனம் புரியாத வலி பரவியது மட்டுமல்ல அவனது தோற்றத்தினை பார்க்கும் போது என் தம்பியின் விம்பமும் மனதுள் வந்து போனது.

2 comments:

அதிகம் வாசிக்கபட்டவை