சில கிறுக்கல்கள்

"அம்மா" உயிர் கொடுத்து
மெய் காக்கும்
உயிர்மெய்யானவள்
அ – உயிர்
ம் - மெய்
மா – உயிர் மெய்




உன்னை நானும்
என்னை நீயும்
தூறலிலிருந்து
காக்க குடையை
விட்டொதுங்கிய
நிமிடங்களில்
யாரைக் காப்பது
என்ற குழப்பத்தில்
முற்றாக
நனைகிறது அதுவும்...
நம்மை போலவே.....





Comments

Popular posts from this blog

நிறம் மாறும் மனிதர்கள்

இரும்பில் முளைக்கின்ற இதயங்கள்

மனம் + மனம் = திருமணம் (02)