உள்ளங்கவர் கள்வன்

முதல் காதல்
அழியாக்காதல்
அவனோடு….

ள்வனின் பெயர்?
என் முதல்
கவிதையின் தலைப்பு

னம்?
அவனிடம் கேட்டதில்லை

மொழி?
இதுவரை நேரில்
கதைத்ததில்லை
மௌனங்கள் பேசியதுண்டு
காதலுக்கு மொழியேது....

முதல் சந்திப்பு?
தனிமையின் ஒரு கணத்தில்
கண்ணுக்குள் விழுந்தவன்
இன்று இதயத்துள்
நிறைந்துள்ளவன் - என்
கவியின் கதாநாயகன்

ந்திக்காத நாட்கள்?
திங்கள் ஒரு தடவை
தொலைகின்றவன்…. கூடவே – என்
நினைவுகளை
தொலைக்க வைப்பவன்

காதல் பரிசு?
அவனிடமிருந்தான
இனிய இராப்பொழுதுகள்….
அவனுக்கு நான்
கொடுத்த என்னாலான
முதல் பரிசு கவிதை!!

முத்தம்?
பல முத்தங்கள் பறக்கவிட்டதுண்டு
தீண்டிடாத அசைவக்காதல்
எம்முடையது!!

சீண்டல்?
சீ…சீ…. எம் - தூரம்
போதும்
விரதத்திற்கு….

வனை பிடிக்காதவர்கள்?
என் அம்மா – அப்பா
அவன் குறித்தான
தனிமைகளை திட்டியதுண்டு
ஓரிரவில் அவனுடன்
பேசியதற்கு – என்
அண்ணா கன்னத்தில்
அறைந்ததுண்டு!!

நிச்சயார்த்தம்?
குழந்தையே உண்டு!!

குழந்தை?
என் குழந்தைக்கு
அவனைக்காட்டி தான்
சோறூட்டுகின்றேன்

வன்?
சூரியனின் பகைவன்
அல்லியின் காதலன்
தினமும் என்னவனின்
முகவரி சொல்லும்
சந்திரன்!!!

ட?
உள்ளங்கள் தான்
மோதிக்கொள்ளுமா…- என்
இனிய தனிமை
இரவு
விடுதி முற்றம் - அவனை
காதலிக்க இது போதாதா….??


Comments

Popular posts from this blog

நிறம் மாறும் மனிதர்கள்

இரும்பில் முளைக்கின்ற இதயங்கள்

மனம் + மனம் = திருமணம் (02)