என் மௌனம்….



என் மௌனங்களின்
வலி நீயறிவாயா?
என் வலிகளையெல்லாம்
பெருக்கித்தந்தால்
வைத்திருக்க முடியுமா
உன்னால்……

சிறு சந்தேகங்களும்
வார்த்தை அம்புகளும்
என்னிதயம்
துளைத்ததை நீயறிவாயா?
உன் புறக்கணிப்புக்கள்
என்னை புண்படுத்தியதை
நீயறிவாயா…..

நம்மிடையான ஊடல்களும்
அதன் கடுமைகளும்
என் தலையணையறியும்…..
நாட்குறிப்பேடு அறியும்……
விடுதி குளியலறை அறியும்……
என் பேனையறியும்….
கடதாசி கிறுக்கல்களில் புரிந்திடும்….
நீயறிவாயா…..?
சேர்த்து தந்திடவா
இவற்றையெல்லாம்…….?

வலி வாங்கும் எனக்கு…
வலிக்கும் வார்த்தைகளை
தந்திட முடியும்…
வாங்கிட முடியுமா
உன்னால்…..?

என்றோ ஒருநாள்
என் கையளவான
வார்த்தைகளை மட்டும்
தந்திடுவேன்….
பாறையின் கனத்தோடும்…..
குழந்தையின் மென்மையோடும்….
பூவின் வாசனையோடும்….







No comments:

Post a Comment

பதிவுகள்

நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்...

அதிகம் பார்க்கப்பட்டவை