Thursday, March 21, 2013

உன்னுள் நான் இருக்கின்றேனா?




நீ இல்லை என்பது
நிதர்சனமான பின்பும்
தொலைய மறுக்கிறது
உன் நினைவுகள்….

உன் முன்பும் - என்
மனதில் எவனும்
புதிந்ததில்லை
பின்பும் முயன்று
தோற்றுவிட்டார்கள்….

ஆனால் என்னுள் ஒரு
சிறு கேள்வி…
உன்னுள் நான்
இன்றும் இருக்கின்றேனா…?
பல நாள் வினாவிற்கு
பதிலாகியது…- உன்
மனைவி அருகில்
இருக்கும் போதும் - அவளைக்
கடந்து பார்வையை
என்னில் பதித்து – நீ
உன் குழந்தையின் கன்னத்தில்
அழுந்தப் பதித்த
முத்தம்……

No comments:

Post a Comment

மனசாட்சி

  கடந்த ஒரு வருடமாக வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றேன். விரிவுரையாளர் என்றாலே முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள வேண்டும், பாடத்தை ம...