Posts

Showing posts from March, 2013

சந்தேகம் எனும் நோய்…..

Image
இன்று உளவியல் தொடர்பானதொரு விடயத்தினை தொட்டுச்செல்ல நினைக்கின்றேன். வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கும் ஒன்று. ஏன் நாம் பிறந்தது இந்தத் தாய்க்குத் தான் என்பது கூட நம்பிக்கையில் தான் தொடங்குகின்றது. அந்த நம்பிக்கை தான் இவர் என் தந்தை என்பது தொடங்கி அனைத்திலும் தொடர்கின்றது. அதற்காக “இவரை அவ்வளவு நம்பினன் ஏமாற்றிவிட்டார்” என்று யாராவது சொன்னால் அவர்களது மண்டையில் 100 தடவை குட்டவேண்டும். நம்பிக்கை என்பதும் மண்குதிரையை நம்பி மோசம் போறதும் வேறு விடயங்கள். ஓகே நம்மோட சப்டருக்கு போவம். பொதுவாக இந்த நம்பிக்கை என்ற விடயம் இன்று காதலர்கள், தம்பதியர் மற்றும் நண்பர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றியே கூற விரும்புகின்றேன். அதிலும் குறிப்பாக காதலர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எவ்வாறு விளைவுகளை தோற்றுவிக்கின்றது என்பதை நான் கூறுவதே என் வயதிற்கு பொருத்தமானது என நான் நினைக்கின்றேன். இவ்வாறான உறவுகளிடையே நம்பிக்கையிழந்து சந்தேகம் தோன்றுவதற்கு சில விடங்களை உளவியலாளர்கள் முன்வைக்கின்றனர். •    உறவுகளிடையேயான தாழ்வுணர்ச்சி •...

நானும் காதலிக்கின்றேன்…

Image
ஏன் நீ காதலிக்கவில்லை என் நண்பர்கள் கேட்கிறார்கள்? யாரோ இரசியமாக இருக்கிறார்கள்…. திமிர்… ஈகோ… உயர்ந்தவனை தேடுகிறேன்… அழகானவனை தேடுகின்றேன்… வீண்பிடிவாதம் - என என் சுயம் பற்றிய வாதங்கள் ஆயிரம் அவர்களிற்குள்… யார் சொன்னது நான் காதலிக்கவில்லையென்று நானும் காதலிக்கின்றேன்… உயிர்வரை காதலிக்கின்றேன்… இயற்கையை காதலிக்கின்றேன் எனக்கு மனவமைதி தருவதால் புத்தகங்களை காதலிக்கின்றேன் என்னுடன் அவை மௌனமாக பேசுவதால் இசையை காதலிக்கின்றேன் காயங்களை வருடிவிடுவதால் என் வீட்டு செல்லப்பிராணிகளை காதலிக்கின்றேன் அவை என் அன்பை சந்தேகிப்பதில்லை பொம்மைகளை காதலிக்கின்றேன் -அவை என்னை இன்னொருவருடன் இணைத்துப் பேசுவதில்லை என் தொழிலை நேசிக்கின்றேன் அது உண்மையாக இருப்பதால் - ஏன் என் வலிகளை கூட காதலிக்கின்றேன் என்னை அவை செதுக்குவதால்…. உயர்ந்த அழகான அறிவுள்ள பகுத்தறிவுள்ள மனிதனை காதலித்து ஏமாறுவதை விட என்றும் நிறம்மாறிடாத என் காதல் அழகானது….. அர்த்தமுள்ளது….

உன்னுள் நான் இருக்கின்றேனா?

Image
நீ இல்லை என்பது நிதர்சனமான பின்பும் தொலைய மறுக்கிறது உன் நினைவுகள்…. உன் முன்பும் - என் மனதில் எவனும் புதிந்ததில்லை பின்பும் முயன்று தோற்றுவிட்டார்கள்…. ஆனால் என்னுள் ஒரு சிறு கேள்வி… உன்னுள் நான் இன்றும் இருக்கின்றேனா…? பல நாள் வினாவிற்கு பதிலாகியது…- உன் மனைவி அருகில் இருக்கும் போதும் - அவளைக் கடந்து பார்வையை என்னில் பதித்து – நீ உன் குழந்தையின் கன்னத்தில் அழுந்தப் பதித்த முத்தம்……

திரைக்கதைகளில் பெண்கள்

Image
பொதுவாக அன்றைய சினிமா முதல் இன்றைய சினிமா வரை நோக்கினால் அவற்றில் “பெண்கள்” கையாளப்படுகின்றமை தொடர்பிலான ஒரு கண்ணோட்டமே இக்கட்டுரையின் நோக்கம். அன்று தொட்டே சினிமா தயாரிப்பில் பெண்களின் பங்கு ஒப்பிட்டளவில் ஆண்களை விட குறைவாகவிருந்தாலும் சினிமா நடிப்புத்துறையிலும் திரைக்கதைகளில் பெண்கள் பற்றிய கதைக்கருக்களும் தாராளமாகவே காணப்பட்டன. அதிலும் தமிழ் இலக்கியங்களைப் போன்றே தமிழ் சினிமாவில் “பெண்கள்” என்பதன் போக்கு விசித்திரமானதாகவே இருக்கின்றது. வேற்றுமொழி திரைப்படங்களில் பெண்கள் நிலை பற்றியும் தமிழ் சினிமாவில் பெண்களின் நிலை பற்றியும் ஒப்பிட்டு நோக்கும் போது பெண்கள் பற்றிய தமிழ் சினிமாவின் போக்கு இன்றும் மாறாமல் இருப்பதும் உலகின் தரம்வாய்ந்த படைப்புக்களில் தமிழ் சினிமா ஏனையவற்றுடன் ஒப்பிட்டளவில் பின்தங்கியிருப்பதற்கு ஒரு காரணமாக இருப்பதாக தோன்றுகின்றது. ஒன்றில் தமிழ் சினிமாவில் பெண்கள் மட்டந்தட்டப்படுகின்றனர். முன்னர் திரைப்படங்கள் “கற்பு பெண்களுக்கு மட்டுந்தான்” என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தன. பின்னரான திரைக்கதைகளில் சமூகத்தில் இழிசெயல் செய்வது பெண்கள் தான் பிரதா...

அம்மாவின் ராஜாத்தி

Image
என் உற்ற நண்பி, ஆலோசகர், பாதுகாவலர், குரு என அனைத்துமான என் அம்மா பற்றி இன்றைய பதிவில் எழுதவுள்ளேன். என் அப்பா காடாறு மாதம் நாடாறு மாதம் என விக்கிரமாதித்தன் போல (அப்பா இதை பார்க்க மாட்டார் என்ற தைரியம் ஒன்று, இதை வாசிக்க முடியாதளவு….. வேலைப்பளு இருக்கும் இது இரண்டு) வெளிநாட்டிலும் வீட்டிலுமாக இருப்பதால் என் தற்காலிக தந்தையாகவும் இருக்கின்ற என் அம்மா பற்றி சில வரிகள் நிச்சயம் இந்த பெண்கள் தினத்தில் எழுதியாக வேண்டும். மேடையேறி பேசுகின்ற, படித்து சாதிக்கின்ற, சமவுரிமைக்காக போராடுகின்ற பெண்கள் மத்தியில் மௌனமாக ஒரு குடும்பத்தலைவியாக, சாதித்துக்கொண்டிருக்கின்ற எனதன்பின் “நளீன்ஸ்” பற்றி பேசியே ஆகவேண்டும். என்னை எனது அம்மா அன்பாக “ராஜாத்தி” என்று தான் அழைப்பார். சின்ன வயதிலிருந்தே பாடசாலையிலோ , விடுதியிலோ , அலுவலகத்திலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ எனக்கு மிகவும் நெருங்கிய தோழிகள் என்று யாருமே இருந்ததில்லை. என்னைத் தமது தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றவர்களாகவே நான் இவர்களை இனங்காண்பதால் எப்போதும் நம்பிக்கையான ஒருவராக நான் நண்பியாக நான் நம்புவதும் பழகுவதும் என்னுடைய நளீன்ஸ் தான். எனக்கு...

கருவாகிறது மௌனம்….

Image
இப்போதெல்லாம் வார்த்தைகள் தோற்கும் போது தான் மௌனத்தின் வலிமை புரிகின்றது. மனதிலுள்ளதை கொட்டிவிடுவது அழுகி நாற்றமெடுப்பதை விட அப்பட்டமாக சொன்னால் வாயாடி என்கிறார்கள் - சற்றுக் குரலுயர்த்தி விட்டால் திமிர் என்கிறார்கள் குறைத்துச் சொன்னால் முனுமுனுக்கின்றேனாம்… இவற்றையெல்லாம் விட மௌனமே மேலெனத் தோன்றுகின்றது.. தட்டிக்கேட்டால் தற்பெருமை என்கிறார்கள் - அதையே தடவிக்கேட்டால் காக்காய் பிடிக்கிறேனாம் தட்டியும் தடவாமலும் மௌன மொழிகளே – எனக்குப் பிடிக்கின்றன இப்போதெல்லாம்…. மலர்கள் மௌனமாகத் தான் மணம் வீசுகின்றன மணற்தரை மௌனமாகத் தான் தாங்குகின்றது…. மரங்கள் கூட மௌனமாகத்தான் வளர்கின்றன.. எனக்குள் மட்டும் - ஏன் மௌனமில்லை…? எதிர்பார்ப்புகள் புதைந்திருப்பதாலா…? ஆறறிவு படைத்திருப்பதாலா…? மனதினுள் பதிந்துவிட்ட – பாரதியின் புதுமைப்பெண் எட்டிப்பார்ப்பதாலா? அதனால் தட்டிக்கேட்க நினைப்பதாலா…? என்னுடைய கனவுகளுக்கு என்றும் மொழிகளிருந்ததில்லை என்னுடன் எந்த காலதேவதையும் பேசியதுமில்லை…. சித்தன் முதல் சிறுபிள்ளை வரை தொட்டுவிட்ட மௌனத்தினை பார்க்கின்றேன்… குற்றங்களாகி...

சில வினாக்கள்….

Image
எல்லோருடைய மனதிலுமே நிச்சயம் எப்போதும் சில வினாக்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். வினா இல்லா மனம் வெற்றுத்தாளுக்கு சமம் என்று கூட கூறலாம். சில வினாக்களுக்கு விடைகள் இருப்பதில்லை. காரணம் இந்த வினாக்களுக்கு விடை தெரிந்தவனான கடவுள் வாய் திறப்பதில்லை என்பதால்.. இன்னும் சில வினாக்களுக்கு தேடியலைந்து விடையை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். விடைகள் சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கக்கூடும். மேலும் சில கேள்விகளுக்கு பதிலே தெரியாமல் இருப்பது நல்லதே என்று கூட நினைக்கத் தோன்றும். இந்தப் பதிவில் நான் சொல்ல விழைகின்ற விடயம் “ நாம் ஒர் விடயத்தினை செய்யும் முன் எம்முள் வினா எழ வேண்டும்” என்பதே. அண்மையில் என் நண்பருக்கும் எனக்குமிடையில் முகநூலில் கருத்து பகிர்வது தொடர்பில் சிறு பிரச்சினை ஒன்று தோன்றியிருந்தது. நான் முகநூலில் இட்ட பதிவினை அவர் இருமுறை நீக்கிவிட்டார். நான் ஏன் என கேட்ட போது தன்னுடைய சகோதரன் யாரென கேட்பார் என பதிலளித்தார். நான் எதிர் கேள்வியாக மற்றவர்கள் “Dear” போடுவதைப் பற்றி அவர் கேட்கமாட்டாரா? என்று கேட்டு மூன்று நாட்களாக போரொன்றையே (????) தொடுத்திருந்தேன். இது மிகச்சிறியதொரு விடயம் ஆனால் எ...