உன் முதல் குழந்தை
என்னைப் பார்த்த அன்றே கூறினாய் - என் முகம் போன்றே மனமும் குழந்தையென்று.. தினமும் அழ வைத்தே வேடிக்கை பார்ப்பாய் - என் குழந்தை சிணுங்கல்களை… அதிகாலை அழைப்புக்களில் - இரசித்திருக்கின்றாய் என் உறக்கத்தின் மழலை உளறல்களை… என் பிடிவாதங்களில் கூட குழந்தைதனமிருப்பதாக சாடியிருக்கின்றார் - உன் முதல் குழந்தையும் நானென சத்தியம் செய்திருக்கின்றாய் நீ என்னை குழந்தையாகவே நடத்துவதால் பல தடவைகள் ஊடல் கொண்டிருக்கின்றேன் உன்னிடம்… இன்று அதை காலம் கடந்த பின் ஒப்புக்கொள்கின்றேன் - தாயின் காலைச் சுற்றும் குழந்தையாய் - நீ இன்னொருத்திக்கு சொந்தமாகிவிட்ட பின்பும் உன்னையே – என் நினைவுகள் சுற்றி – உன் ஞாபகங்களுடனேயே வாழ – என் மழலை மனம் அடம்பிடிப்பதால்….