Monday, August 18, 2025

(ஒரு) கல் - கண்ணாடி


காதல் முதல்
மோதல் வரை 
கல் - கண்ணாடி 
பேசப்பட்டாகிட்டு அன்பே
ஆனால் காதல் -மோதல்
இரண்டிலும் என்னவோ
உடைவது கண்ணாடி மட்டும் தான்
கல் எப்படியோ பிழைத்துக்கொள்கிறது
இதை யாராவது எழுதியிருக்கின்றார்களா?

ஆயுதப் போரிலும்
ஆழ்ந்த காதலிலும் கூட
இது தானே தத்துவம்
ஒன்று இழக்கப்பட 
ஒன்று காயப்பட
ஒன்று அழிந்தொழிய 
ஒன்று இல்லாமலாக்கப்பட 
முடிந்தால் மட்டும் தானே 
மற்றொன்று உயிர் பெறுகின்றது – அல்லது
வெற்றி கொள்கின்றது…… 
ஒரு கல் - ஓரு கண்ணாடி போல்
அல்லது நம்மைப் போல்….

கண்ணாடி நிலைத்து நிற்க 
கல் தான் கைளினால் பற்றியெடுக்கப்படுகின்றது…….
இடம்பெயர்க்கப்படுகின்றது…..
வீசப்படுகின்றது………. – ஆனால்
சில்லுச்சில்லாக சிதறடிப்பதென்னவோ 
கண்ணாடியைத்தான்…. 

நான்
மௌனமாக கடந்தாலும் - நீ
வார்த்தைகளால் - என்னை 
காயப்படுத்துவது போல….. – 
அடுத்தவரிடம் விட்டுக்கொடுப்பது போல - அல்லது
காரணமின்றி மனதை உடைப்பது போல….

நீ தான் என்னை 
உடைத்துவிடுகின்ற அந்த கல்லா
அல்லது என்னை நோக்கி
வீசிய கையா – என 
உணருமுன்னே 
சில்லுச்சில்லாகி விடுகின்றேன் நான்!

இனிமேலாவது 
(ஒரு) கல் - கண்ணாடி பற்றி
பேசுவபர்கள்….
கவிதையியற்றுபவர்கள்….
கதையெழுதுபவர்கள்
பேசிக்கொள்ளட்டும் - குறைந்தபட்சம்
நொறுங்கி போய்விட்ட 
கண்ணாடியின் சிதறல்களை பற்றி!
கல் - கண்ணாடி 
உடையாமல் மோதிக்கொள்வதில்லை 
என்பது பற்றி…. – அல்லது 
வேண்டுமானால் வேகக்குறைவினால்
உடையாமல்…. –  ஏற்படுத்தி விடுகின்ற
சிறு விரிசலை  பற்றி….! 

(14.08.2025) 


Friday, August 8, 2025

காதலித்து விடுங்கள்..............

 
யாரையாவது ஒருவரை
அல்லது ஒன்றினை 
வலிக்க வலிக்க காதலித்து விடுங்கள் - அது போதும் 
இந்த குறுகிய வாழ்விற்கு... 

அழகு என்கின்ற எடை போடல்
அறிவென்ற மயக்கம்
பணம் மீதான பேராசை
பதவி மீதான மோகம் 
கண்டதுமான ஈர்ப்பு 
காதலித்தே ஆகவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் 
கட்டமைப்புக்கள்
கடமைகள்
தெரிவுகள் 
உடல்பசி

இதில் எதுவும் வேண்டாம்.
இதில் வந்தது எதுவும் வேண்டாம்......  

 யாரோ ஒருவரை - அல்லது
ஏதாவது ஒன்றை
உயிர் அறுக்க.... 
உள்ளம் வலிக்க.....
மனம் கொதிக்க....
உடல் பொங்க.....
கண்ணில் நீர் கோர்த்தப்படி....
திகட்ட திகட்ட.....
போதும் என்று சொல்லும் அளவுக்கு...... 

எந்தவித சுயநலமும் இல்லாமல்...
நீயில்லை என்று தெரிந்த மறுநிமிடமே 
நானுமில்லை என்று உணர்வால் சொல்வது போல..... 
 தொலைந்து போய்...
கரைந்து
 உருகி
வெந்து தணிந்து.....
மிதப்பது போல   
யாரையாவது ஒருவரை
அல்லது ஒன்றினை 
வலிக்க வலிக்க காதலித்து விடுங்கள் - அது போதும் 
இந்த குறுகிய வாழ்விற்கு... 
அல்லது வாழ்வதற்கு.....!



 

 

Monday, July 21, 2025

அன்பெனும் அறம் !


நேற்று மாலையிலிருந்து ஒருவிதமான வெப்பம் என்னுள் பரவுவதை உணர்கின்றேன். என்னுடைய நெருங்கிய நண்பியொருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையினாலும் குடும்பத்தினரின் அரவணைப்பிலும் காப்பாற்றப்பட்டுவிட்டார். கடந்த சில நாட்களாக நான் நாட்டில் இல்லை என்பதால் குறிப்பிட்ட நண்பி என்னை தொடர்புகொள்ள முயற்சித்தும் முடியாதிருந்துள்ளது என்பது என்னுடைய வட்சப் அழைப்புக்களின் பதிவிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது. 

நானும் அவளும் பதின்ம வயதிலிருந்தே நல்ல தோழிகள். என்னுடைய குடும்ப உறுப்பினர்களை தாண்டியும் ஓர் ஆழமான உறவு உண்டெனில் அவளிடம் மட்டும் தான். நான் இந்த நிமிடம் எங்கிருக்கின்றேன் என்பது தொடங்கி என் மனதிலுள்ள இரகசியங்கள் வரை அறிந்த ஒருத்தி. இருவரும் பேசுவதென்றாலும் மணிக்கணக்கில் பேசுவோம் ஊர் சுற்றுவதென்றாலும் இருவரும் தான் சேர்ந்து சுற்றுவதுண்டு. ஆனால் இரு வீட்டாக்களும் எங்களை பகிடி பண்ணுவது போன்று இருவரும் குணவியல்பில் எதிர்மறையானவர்கள். இரு வீட்டாரும் எப்படித்தான் நீங்கள் இருவரும் சேர்ந்திருக்கின்றீர்களோ என்று வியக்குமளவு இரசனை, பண்பு, அனுகுமுறைகள், தொழில் என சகலமும் வேறுபட்டவை,  எப்போதும் எதிர்முனைகளுக்கிடையில் தானே கவர்ச்சியிருப்பதுண்டு. ஆக நானும் அவளும் எதிர்- எதிர் இயல்புகளுடன் இருந்தும் ஒன்றாக இருப்பதில் வியப்பில்லை தானே.

என்னைப்பொறுத்தளவில் ஆண் நட்புகள் பல இருந்தாலும் நெருக்கம் என்பது பெரும்பாலும் மிக குறைவு. அப்படியே இருந்தாலும் தொழில் ரீதியானதாக மட்டுமே இருக்கும். குறிப்பிட்ட எல்லையை தாண்டவிடுவதுமில்லை. தாண்டுவதுமில்லை. ஓருவரைச் சுற்றியே என் உலகத்தினை அமைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவள் நான். நானும் அவரது உலகமாகவிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவள். எங்கு போனாலும் சொல்லிவிட்டு போகவேண்டும், குடும்ப விடயங்களில் உரிமையுடன் கலந்துகொள்ள வேண்டும், சிறு சிறு பரிசுகள் , பூக்களை கொடுக்க வேண்டும், பிடித்த நிறத்தில் உடுத்த வேண்டும் என நான் நேசிக்கும் ஆண் என் உலகமாகிப்போவான். எம்மிடையான சிறு சண்டைகளை கூட பூ கொடுத்து தீர்க்க வேண்டும் என நினைப்பவள் நான். ஆனால் அவளைப்பொறுத்தளவில் எல்லையெல்லாம் இல்லை. நிறைய நண்பர்கள், எல்லாத்தையும் எல்லாரிடமும் சொல்லுவாள், இதை கேள்விகேட்டால் உயர்மட்ட நாகரீகம் இது தான், மேலைத்தேய கலாசாரம் இது. ஏன் அவர்களது உடைகளை பின்பற்றும் நாம் இதை பின்பற்ற கூடாது என்று ஏடாகூடமாக விவாதம் பண்ணுவாள். அவளது பெற்றோர் சிலவேளைகளில் அவளை சொல்லித்திருத்துமாறு சொல்வதுண்டு. எனக்கு அடுத்தவர்களை திருத்துவதில் உடன்பாடில்லை என்பதால் அவர்கள் முன் தலையாட்டிவிட்டு நகர்ந்துவிடுவேன். குணவியல்பிற்கு ஏற்றாற்போல் புதிய விடயங்களைத் தொடங்கி ஆளுமையாக நடாத்த வேண்டும் என நான் நினைத்தால் வேலைக்கு போனோமா மாதச்சம்பளம் எடுத்தோமா என்று அவள் இருப்பாள். இதுவும் கூட அவளது பல தொடர்புக்கு தளம் அமைக்க போதிய நேரத்தினை கொடுத்திருக்கும் என நான் பலவேளைகளில் நினைப்பதுண்டு. யாராவது ஒரு சொல் பேசிவிட்டால் போதும் நான் அதையே நூறு தடவை நினைத்து ஏன் அப்படி சொல்ல வேண்டும் என மண்டையை பிய்த்துக்கொள்வேன். அவள் டேக் இட் ஈசி பொலிசி கொண்டவள். 

இதையெல்லாம் ஏன் விபரிக்கின்றேன் என்றால் என்னைப் போல் சென்டிமென்டலான ஒருவர், அடுத்தவர்களுடன் இலகுவில் பழகாத ஒருவர் மனவழுத்தத்தில் தற்கொலைக்கு முயற்சிப்பதில் வியப்பில்லை. ஆனால் அவள் முயற்சித்துள்ளது தான் மிகவும் வியர்ப்பிற்குரியதொன்று. சில நாட்களுக்கு முன் கூட இந்தியாவில் தன் கணவனின் பாலியல் துன்புறுத்தல், புகுந்தவீட்டாரின் தொல்லை தாங்காது தன்னை மாய்த்துக்கொண்ட ரிதன்யாவின் தற்கொலை குறித்து இருவரும் விவாதித்திருந்தோம். ரிதன்யாவின் “ ஒருவனுக்கு ஒருத்தி” விடயம் பற்றி எதிர்த்து பெரியதொரு விரிவுரையையே எனக்கு நிகழ்த்தியிருந்தாள். அந்த விவாதம் காதலை பற்றி, கல்யாணம் பற்றி கூட விரிந்திருந்தது. அதன் போது தன்னுடைய நெருங்கிய நண்பர் தன்னை Block  செய்துவிட்டது குறித்தும் கவலைப்பட்டாள். 

பொதுவாகவே WhatsApp இல் Blue Tic  விழாமல் பார்ப்பவர்கள்இல் ஒளிந்திருந்து தெரியாத மாதிரி Status பார்ப்பவர்கள், ஒருவருக்கு பதிலளிக்க முடியாவிட்டால் Block செய்பவர்கள்  குறித்து எனக்கு பெரிதளவு மதிப்பில்லை. இதெல்லாம் ஒருவித கோழைத்தனத்தின் வெளிப்பாடு. தெளிவில்லாத, அறமில்லாத, நேர்மையில்லாத கடந்தகாலம் கொண்டவர்கள் அல்லது நடப்பில் பலருடனும் தகாத, சொல்லிக்கொள்ள முடியாத உறவிலிருப்பவர்கள் தான் இவ்வாறான நடத்தைக் கோலத்துடன் இருப்பார்கள் என்பது என் அசைக்க முடியாத அபிப்பிராயம். ஆகவே அவ்வாறு ஒருவர் செய்தால் நாம் பேசாமல் ஒதுங்கிக்கொள்வது தான் நல்லது என்று கூறியிருந்தேன். ஆனால் தன்னுடைய நண்பன் இவ்வாறு செய்தது தான் தனக்கு மனவழுத்தத்தினை ஏற்படுத்தி குளிசைகளை அள்ளி விழுங்க தூண்டியதாக அவள் அனுப்பிய ஒலிப்பதிவில் கூறியிருந்தாள். 

இன்று உலகம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும்மளவு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. இதனால் தானென்னவோ மனங்களை மனிதர்களும் சுருக்கிவிட்டார்கள் போல. ஆகவே இன்று பல உறவுகளை ஏற்படுத்த தளங்கள் உள்ள போதும் எம் தெரிவுகள் குறித்து நிதானமாக சிந்திக்க வேண்டிய தேவை எமக்குள்ளது தோழி/தோழா. ஒருவர் நம்மை பொதுத்தளத்தில் அறிமுகம் செய்ய மறுக்கின்றார் என்றாலோ அல்லது நம்மை சமூக ஊடகங்களில்  தவிர்க்க நினைக்கின்றார் என்றாலோ இரு விடயத்தினை புரிந்துகொள்ளுங்கள். 

முதலாவது தொழில்நுட்பத்தினையும் தொடர்பாடலையும் கையாளத்தெரியுமளவு ஆளுமையற்ற நபர்கள் இவர்கள். இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்திலும் பல தொடர்புகளை இரகசிய முறையில் பேணுமளவு இத்தகையவர்கள் திறனுடையவர்களாயிருப்பார்கள். எனவே இவர்களுடையதான உறவுமுறை எப்போதும் சிக்கலானதாகவே இருக்கும். அல்லது உடல் தேவைக்கோ பொருள் தேவைக்கோ உங்களை பயன்படுத்திவிட்டு உதறுபவர்களாக இருப்பார்கள். முறையானதொரு உறவை உருவாக்க நினைப்பவர்கள் உங்களை பொதுவெளியில் தன்னுடையவன் / தன்னுடையவன் என அறிமுகம் செய்யவதற்கு ஏன் ஒளியவேண்டும்?  

இரண்டாவது ஒருவர் குறைந்த பட்ச அடிப்படையான அன்புள்ளவர் என்றால் இத்தகைய எளிய இழிவான வேலைகள் செய்யமாட்டார்கள். சில நாட்கள் நீங்கள் மௌனித்திருந்து பாருங்கள். உண்மையில் உங்களை நேசித்தால் எப்படியாவது உங்களுக்கு ஏதும் நடந்துவிட்டதா என அறிய முயற்சிப்பார்கள். அப்படி நடக்கவில்லை என்றால் நீங்கள் அவரளவில் பலருள் ஒருவர் என்பது தான் அர்த்தம். நீயில்லை என்றால் என்ன? எனும் போக்கின் நீட்சி தான் இது. நீங்கள் தற்கொலை செய்தால் என்ன ? இன்னொருவருடன் போனால் தான் என்ன?  

வாழ்தலில் நேர்மையான அன்பு முக்கியமானது. ஒருவருடனான காதல் நம்மை செதுக்க வேண்டும். நம்மை கையைப் பிடித்து கூட்டிச்செல்ல வேண்டும். முக்கியமாக நம்மவர்களை சமூகத்திற்கு அறிமுகஞ்செய்ய வேண்டும். ஒருவருக்கு நாம் தெரிவாக மட்டும் இருந்துவிட கூடாது. "do not be an option, be a priority" நான் என்னை ஒருவர் Block  செய்தால் ஏன் என் அன்புக்குரியவருக்கு நான் சுமையாக இருக்க வேண்டும் என மௌனமாக விலகிவிடுவேன். இது தான் என்னுடைய சுயகௌரவம்,  அவர் மீதான உச்சபட்ச அன்பு எனவும் நான் நினைக்கின்றேன். ஏதோவொரு நாள், அல்லது சந்தர்ப்பம் அல்லது நிமிடம் என்னுடனான வாழ்தலை இழந்துள்ளதை அவருக்கு உணர்த்தாமல் போய்விடுமா என நினைத்துக்கொள்வேன் அவ்வளவே! எந்த உறவென்றாலும் நேர்மையாயிருங்கள். நேர்மையற்ற ஓருவர் என தெரிந்தால் விலகுவதில் தப்பில்லை. உண்மையான அன்பு நம் கண்களிலிருந்து நீர் வழிந்து கன்னம் தாண்டி நாசிக்கு வருமுன் உள்ளங்கையில் ஏந்திக்கொள்ளும். இப்படியானதொரு அன்பு கிடைத்தால் எல்லாவற்றையும் உதறிவிட்டு போய்விடுங்கள். (என்னைப் போல்) ஏனென்றால் வாழ்தலுக்கு அன்பு பிரதானம். அது மட்டுமே பிரதானம். அன்பற்ற உறவுளை கடக்க பழகுங்கள். 

அப்படியென்றால் எம்மை ஏமாற்றுபவர்களுக்கு, “நீ இல்லாமல் வலிக்கிறது” என்று நாம் கண்ணீர் வழிய நிற்கும் போது நம்மைத்தவிர்த்து நமது வலியை உணராது இருப்பவர்களுக்கு தண்டணை இல்லையா? என நீங்கள் கேட்கலாம். Delayed justice is denied justice  எல்லாம் நீதிமன்றத்தில் தான். இயற்கையும் காலமும் எப்போதும் சமநிலையை மீறுவதில்லை. நின்று கொல்லும் சக்தி இவை இரண்டுக்கும் உண்டு. நீங்கள் மௌனமாக நகருங்கள் பிரபஞ்சம் நீதி வழங்கியே தீரும். Every force has an equal and opposite reaction

 

பிற்குறிப்பு : வாழ்தலுக்கு எத்தனையோ பேர் தினம் தினம் போராடும் போது இதற்கெல்லாம் தற்கொலை செய்ய வேண்டும் என முடிவெடுத்தால் தயவுசெய்து பனடோல், மண்ணெண்னெய் போன்றவற்றினை குடிக்காதீர்கள். ஏனென்றால் இவற்றினால் பெரும்பாலும் நீங்கள் செத்துவிட மாட்டீர்கள். நீங்கள் இவ்வாறு முயற்சித்து தப்பித்தால் சுற்றியுள்ளவர்கள் உங்களை நினைத்து தினம் தினம் சாகவேண்டியிருக்கும். எனவே குடிப்பதாயின் குறோடான் போன்ற வலுவான பூச்சி மருந்தினை பயன்படுத்துமாறு ஆவணசெய்கின்றேன்
 


அதிகம் வாசிக்கபட்டவை