Posts

Showing posts from February, 2013

எதை புரிதல் என்கிறாய்......?

Image
எடுத்ததற்கெல்லாம் - என்னை புரியாதவள் நீ என்கிறாய் உன்னளவில் புரிதல் என்றால் என்ன? என்னை விட நீ முகநூலிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை முணுமுணுக்காமலிருப்பதா? உன் அருகில் நிற்கும் கணங்களில் கூட – நீ அடுத்தவளை விமர்சிப்பதை இரசிக்காமலிருப்பதா…? நீ என் அழைப்புக்களை அலட்சியப்படுத்துவதை பற்றி அலட்டாமல் இருப்பதா..? - இல்லை அடுத்தவனை என்னுடன் நீ இணைத்துப் பேசுவதை கூட பொறுக்காமல் துடிப்பதையா? எதை புரிதல் என்கின்றாய்? எனக்கு மட்டுமான உன்னை உன் அன்பை அடுத்தவர்களுடன் பகிர்வது தான் - புரிதல் என்றால்… உன்னளவில் உன்னை புரியாது – என்னளவில் உன்னை பகிராத மௌனங்களே போதும் இறுதிவரை - நம் இருவருக்கிடையான புரிதல்களுக்கு…(பகிர்தல்களுக்கு)

பெற்ற வயிறு

Image
என் பெற்ற வயிறு குளிர்ந்தது – நான் ஈரைந்து மாதங்கள் சுமந்தவனை என்னுள் இருந்து கொண்டு அவன் அசைவுகளால் சிறுகதை பேசி – தான் என்னுள் இருப்பதை - சிறு உதைகள் மூலம் உணர்த்தியவனை எனக்கும் என்னவனுக்குமான - அன்பின் பரிசாக வந்துதித்தவனை – என் தாய்மையை நிரூபித்து – அம்மா என்ற ஸ்தானம் தந்தவனை துணிகளில் சுற்றி - உதிர மணம் மாறாமல் சிறு மலராக தந்த போது -என் பெற்ற வயிறு குளிர்ந்தது அவன் சிறு நெளிவுகள்... திணுக்கிடல்கள் - நான் பட்ட வேதனைகள், வலிகளை - கூட சுகமான சுமைகளாக்கின என் கைகளில் தவழ்ந்தவனை கண்ணுறக்கம் தொலைக்க வைத்தவனை – என் கரம் பற்றி நடை பயின்றவனை சுட்டித்தனங்களால் பிறரை கவர்ந்தவனை முதலாம் மாணவனாக பரிசுகளுடன் - என் முத்தங்களையும் வென்றவனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி வைத்தியராகிடுவான் - என எதிர்பார்க்க வைத்தவனை இப்போதும் தந்தார்கள்.... இரத்தம் தோய்ந்த துணியில் சுற்றி – என் கரங்களிலல்ல சவப்பெட்டியில் - வெறும் சதைப்பிண்டமாக..... (பெண்கள் அமைப்பொன்றினால் நடாத்தப்பட்ட கவிதையில் பரிசு பெற்று பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை - 2012 இதை அரசியல் கைதிகளாக இருந்து உயிர் ந...

நிறம் மாறும் மனிதர்கள்

Image
சூழலுக்கேற்ப மாறும் பச்சோந்திகள்.. படித்ததுண்டு பாடசாலையில் - தன்னைப் பாதுகாக்க தான் மாறுகின்றன.. விஞ்ஞான ஆசிரியர் அளித்தார் விளக்கம் மேற்கோள் காட்டினார் டாவின்சி கோட்பாட்டை விஞ்ஞானம் கற்றுக் கொடுத்தது ஐந்தறிவுகளின் மாறலை – என் அனுபவங்கள் கற்றத் தருகின்றது ஆறறிவுகளின் வேடமிடல்களை… பிறப்பு முதல் இந்நாள் வரை காதல் முதல் நட்பு வரை காலை முதல் மாலை வரை சலித்துவிட்டன (மா) மனிதர்களின் நிறம் மாறல்களைப் பார்த்து…. புகழ்ந்த வாய்கள் இகழ்கின்றன சிரித்த முகங்கள் முறைக்கின்றன அணைத்த கைகள் நேரம் பார்க்கின்றன அடிப்பதற்கு நட்புகள் கூட மறைகின்றன சூழலிலிருந்து தப்புவதற்கு ஐந்தறிவு மாறலுக்குக்குக் கூட இயற்கை சூழல் எதிரியிடமிருந்து பாதுகாப்பு உணவுச் சங்கிலி - என காரணங்கள் பலவுண்டு நிறம் மாறும் மனிதர்களுக்கு….? பணமா? கவர்ச்சிகளா? உயர்ந்ததை தேடுகின்ற இயல்பா? காமமா? காரிய சித்திகளா? - இல்லை காரணமில்லா கர்மங்களா? கேள்வி கேட்க வாழ்க்கைப் பாட ஆசிரியரில்லை கோட்பாடெழுத டாவின்சி இல்லை இப்போதெல்லாம் - கடவுள் கூட சிலையாகி – சில வேளை நிற்பதால் - என் கேள்விகளுக்குப...

கனக்கின்றது மனம்.....

Image
இன்று காலை முதல் இந்நிமிடம் வரை என் மனதில் பாரமாகவே அமைந்துவிட்ட ஒரு விடயத்தினை பகிந்துகொள்ள விரும்புகின்றேன். காலையில் கொழும்பு பொறளை – பலவத்தை வீதியில் பேரூந்தில் பயணிக்கும் போது இடம்பெற்றதொரு சம்பவம். நூன் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து ஐந்தாறு வரிசைகளுக்கு முன்பாக ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தார். தீடீரென நான் ஜன்னலோரம் அமர்ந்து இரசனையிலும் தொலைபேசியில் பாட்டும் கேட்டுக்கொண்டிருந்த போது பெரிய சத்தம் போட்டு ஏதோ கதைத்தார். ஏதோ காசுப் பிரச்சினை போல என்று நினைத்து பழைய படி நானும் பாட்டுக் கேட்கத் தொடங்கிவிட்டேன். பின்னர் அவர் அவரது தந்தையாரிடம் தொலைபேசியில் சொல்லி அழுத போது தான் புரிந்தது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவன் மறைகேடாக நடந்திருக்கின்றான். இந்த பெண் அடித்து விட்டு கூச்சல் போட அவன் இறங்கி போய் விட்டான். ஆனால் அருகிலிருந்த யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. (நானும் உட்பட பாழாய் போன பாட்டு என்ன வேண்டியிருக்கின்றது எனக்கு) அவன் ஒரு குற்றவாளியென்றால் சுற்றியிருந்தும் தட்டிக் கேட்காமல் விட்ட நாமெல்லோரும் கூட ஒருவகையில் குற்றவாளிகள் தான். ஒரு ஆண் கூட இருக்கவில்லையா?.  இல்லை ...

கவிதையாக காதலியுங்கள்

Image
இன்று காதலர் தினம். உள்ளவர்கள் என்ன செய்யலாம் என திட்டமிட்டுக்கொண்டிருக்க இல்லாதவர்கள் யாராவது கிடைக்க மாட்டர்களா? ஏன எதிர்பார்த்துக் கொண்டிருக்க இழந்தவர்கள் தம்மவர்களுடனான இனிய நினைவுகளை (???) நினைத்து கண்களை கசக்கிக்கொண்டுமிருக்க இவ்வருட காதலர் தினம் வந்துவிட்டது. நடைபாதை எங்கும் இயற்கை. செயற்கை ரோஜாக்கள் கண்ணைப் பறிக்க கூடவே சிந்தையிலுதித்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றேன். காதலென்பது தாக்காத உள்ளங்கள் நிச்சயம் இருக்காது. நிச்சயம் ஒருதலைக் காதலாகவென்றாலும் ஒருவரை இது தழுவிச் சென்றிருக்கும் .“எனக்கு காதலே வந்ததில்லை “ என்பவர்கள் நிச்சயம் பொய்தான் சொல்கிறார்கள். அல்லது சிந்தைக்குழப்பத்தில் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். துறவியினுள்ளும் கூட காதலென்ற ஒன்று எட்டிப்பார்த்திருக்கும். ஆனால் அந்தக்காதல் எவரில்? ஏன்? எப்போது? என்பதில் தான் ஆளாளுக்கு வேறுபடுகிறது. இதில் முதலாவது விடயம் நாம் ஏதோவொன்றை எதிர்பார்த்து தான் ஒருவரை விரும்புகின்றோம். அவர்கள் பதில் தரும் வரை பின் தொடர்கின்றோம். அதுவே அவர்களை துன்பப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. “ இவன் இவள் என்னைத் தொ...

சூர்யாவும் காந்த கண்களும்…..

Image
எத்தனை நடிகர்கர்கள் வந்தாலும் இந்த சூர்யா இருக்காரே அவரோட அழகுக்கு யாருமே வரமுடியாதுங்க…. அழகெண்டா அப்படியொரு அழகு… பெண்களே பொறாமைப்படுகின்றளவுக்கு அழகு….கைகொள்ளா முடி.. சிவந்த உதடுகள், கொஞ்சமாக இருக்கின்ற தாடி, சிக்ஸ் பக்ஸ்.. ஐயோ……….அந்தக் கண்கள் இருக்கே அப்படியொரு காந்தக்கண்கள் ம்ம்ம்ம்……….பார்த்ததுமே பத்திக்கொள்ளும் கண்கள்….வாவ் என்னா அழகு பொதுவாகவே எனக்கு சூர்யா என்றால் ரொ..ம்….ம்ம்ம…ப பிடிக்குமுங்க. (வீட்டில சூர்யா படம் ஒட்டி வச்சதும் அத பார்த்து அம்மம்மா யாரோ பொடியன்ட படம் என்டு கிழிச்சு எறிந்ததும் தனிக் கத) அதிலயும் கௌதம் மேனனின் “காக்க காக்க “ பார்த்தில இருந்து சூர்யா என்றோலே ஒரு பைத்தியம்.. இதற்கு இன்னொரு காரணமும் இருக்குது இந்த காக்க காக்க “அன்புச்செல்வன் ஐ.பி.எஸ்” கரெக்டர் இருக்குதே அப்படியே எனக்கு வரப்போகிறவர் பற்றி எனக்குள்ள கற்பனையை கௌதம்மேனன் கண்டுகொண்டு உருவாக்கியது போல் தான் அமைந்திருந்தது. அமைதியான அதேவேளை ரிஸ்க்கான ஐ.பி.ஸ் ஆக என்கவுண்டர் செய்துகொண்டு அந்த த்ரிலிங்கான பாத்திரமேற்றுக்கொண்டு அன்பை காட்டத் தெரியாமல் ஆனால் கண்களால் ( வாவ் கண்களா அது) பேசிக்கொண...

நானும் ஒரு தாய்

Image
ஆலயத்தில் புறமுதுகு காட்டி விளக்கேற்றிக் கொண்டிருந்தேன் என் சேலை நுனியில் - ஓர் தூண்டில் இழுவை திரும்பிப் பார்த்தேன் யாருமில்லை – சற்றே குனிந்து பார்த்தேன்… ஓர் பூக்குவியல் என் சேலையை தொட்டபடி… யாரிந்த செல்லக்கண்ணன்… மீராவின் சேலை தொடுவது.. வாரியெடுத்து உச்சிமோர்ந்து – அதன் கூர் விழிகளை பார்த்தேன் மூளையில் சிறு மின்னல் இந்தக்கண்கள்….? இதனுடன் கனவுகளில் வாழ்ந்திருக்கின்றேன் இதே கண்களுடன் மௌமொழிகள் பேசியிருக்கின்றேன். எங்கே…..? – என் சிந்தைத்தேடலுக்கு பதிலாக குழந்தையை தேடியபடி அதன் அன்னை… சந்தேகமேயில்லை..- இக் கண்கள் என்னுடையவனுடையது…. அட இது என்னவனின் குழந்தையா…? உன் குழந்தைக்கு கூட தெரிகிறது என்னை..- என் நினைவுகளுடன் - உண்மையில் ஒருநாளாவது – நீ வாழ்ந்திருந்தால்…- மனதால் நானும் உன் குழந்தைக்கு தாய் தான்… இதோ உன் மனைவி – அன்று உன்னிடமிருந்து என் நினைவுகளை கொள்ளை கொண்டவள் - இன்று அவள் குழந்தைக்காக கரம் நீட்டுகின்றாள் உனக்கான என் கனவு முத்தமொன்றை – அவன் பட்டுக்கன்னங்களில் கொடுத்து அதன் மொட்டு உதடுகளினால் செல்லக்கடி வாங்கி என் கன்னத்து எச்...

என்னவனே எங்கிருக்கின்றாய்?

Image
என் விடியல்களை பகிர்வதற்கும் பொழுதுகளில் கைகோர்ப்பதற்கும் கனவுகளின் கதவை திறப்பதற்கும் என்னவனே எங்கிருக்கின்றாய் நீ? என் சிறு நகர்வுகளை கூட கூற பருவ சந்தேகங்களை வினவ காலைக் கனவுகளையும் - என்னைக் கடக்கின்ற ஒவ்வொரு கணங்களையும் உன்னிடம் சொல்ல ஆசிக்கின்றேன் என்னவனே எங்கிருக்கின்றாய் நீ? அடுத்தவர்கள் என்னை விமர்சிக்கும் போதும் சந்தேகிக்கும் போதும் என்னவன் இங்கிருக்கின்றான் என சுட்டுவிரல் நீட்ட தேடுகின்றேன்…. கைகோர்த்து நடப்பதற்கும் கவலைகளில் தோளில் சாய்வதற்கும் - என் கஷ்டங்களில் கைநீட்டுவதற்கும் வலிபட்ட இடங்களை வருடி விடுவதற்கும் - உன்னை தேடுகின்றேன் என்னவனே எங்கிருக்கின்றாய் நீ? சீண்டுவதற்கும் சிறு சண்டைகள் போடுவதற்கும் - அடுத்தவள் உன்னைப் பார்க்கும் போது உரிமைச்சட்டம் வாசிப்பதற்கும்… ஊடல் கொள்வதற்கும் கூடல் செய்வதற்கும் கெஞ்சுவதற்கும் - குழந்தையாக உன்னைக் கொஞ்சுவதற்கும் தேடுகின்றேன் என்னவனே எங்கிருக்கின்றாய் நீ? சிறு காயம்பட்ட இடத்தில் வருடுகின்ற அம்மாவின் பரிவையும் கண்டிப்பாக பேசி - என்னை வழிநடத்துகின்ற அப்பாவின் சாயலையும் கூட்டத்தில் கூட பார்வைய...