Posts

Showing posts from December, 2025

(நான் ) மலர்கள் கேட்டேன்

Image
அணையப்போற விளக்கு சுடர் விட்டெரியும் என்றொரு சொலவடை எங்கட ஊர்களிலுண்டு. இது சரி தான் போல… நேரம் நெருங்க நெருங்க வேலைகள் என் ஒவ்வொரு மணித்துளிகளையும் ஆக்கிரமிப்பதை உணர முடிகின்றது. நேரம் நகர்கின்றதே தவிர வேலைகள் முடிந்த பாடில்லை. இன்றுடன் வருடமும் முடியப்போகின்றது. இன்னும் சில மணித்துளிகள் தான் மீதமுண்டு. இதன் பதற்றம் என்னுள் இருந்தாலும் அடுத்த வருடத்தில் எனக்கென காலம் பல அன்பளிப்புகளை கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கின்றது என்பதனை மட்டும் எனக்குள் உணரமுடிகின்றது. கூடவே அதற்கேற்ப நடக்கின்றவையெல்லாம் இந்த எதிர்கால நன்மைகளுக்கே என்பதை முன்கூட்டிய நிகழ்வுகளும் தெரிவிக்கின்றன.  கடந்த வருடம் நான் எடுத்துக்கொண்ட தீர்மானங்களில் ஒன்று இவ்வருடத்தில் சிறுவர்கள் குறித்து ஏதாவதொரு முன்னெடுப்பினை மேற்கொள்ள வேண்டும் என்பது. குறிப்பாக வீதியோரங்களில் கையேந்தி நிற்கின்ற குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றினை திறக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய நிறுவனங்களில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகள், அடுத்த கட்டம் நோக்கிய நகர்த்தலுக்கான வேலைப்பளுக்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் வாழ்க்கைசார் விடயத்...

அனைத்து Toxic ஆண்களுக்குமானது........

Image
  நீண்ட வேலைப்பளு நிறைந்த நாட்களின் பின்னர் திரைப்படம் பார்ப்பதற்கு இன்றைய நாளை திட்டமிட்டு ஒதுக்கியிருந்தேன். இதற்காக இரு படங்களையும் மனதினுள் நினைத்திருந்தேன். ஒன்று 12 வருடங்களுக்கு முன் வெளிவந்தது மற்றது அண்மையில் வெளிவந்தது.   சில திரைப்படங்கள் எத்தனை தடவைகள் பார்த்தாலும் அலுப்பதில்லை. அல்லது ஏதோவொரு வகையில் நமக்கும் அந்த திரைப்பட பாத்திரங்களுக்குமிடையில் இருக்கின்ற உணர்வுநிலை தொடர்பு திரும்பத்திரும் பார்க்கத் தூண்டுவதுண்டு. அப்படி ஐந்தாவது தடவையாக நான் பார்க்கின்ற திரைப்படம்  Queen ஹிந்தித்திரைப்படம். இன்னும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் ஆங்கில உபதலைப்புகளுடன் இணையத்தில் உள்ளது. 20014 இல் வெளிவந்த இந்த திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பஹ்ல் , இசை அமித் திரிவேதி. மொத்தமே மூன்று பாடல்கள். கதையும் பொருந்துகின்ற பாடல்களும் பயன்படுத்தப்பட்டுள்ள இசைக்கருவிகளும் இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பிளஸ். கங்கணா ரணாவத் இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரமான ராணி மெஹ்ரா இல் நடித்துள்ளார். இதை விட வாழ்ந்துள்ளார் என்பது மிகப்பொருத்தமானது.  ராணியின் திருமணத்திற...

வினாக்களுக்கான பதில்கள் - 03

Image
  வினா 06:  மீரா டார்லிங் உனக்குப் பிடித்த விடயங்கள் 10 ஐ எனக்காக பட்டியலிட முடியுமா? நான் என்ன செய்தால் என்னை திரும்பிப்பார்ப்பாய்? திரும்பத்திரும்ப பார்க்க நான் என்ன செய்ய வேண்டும்.?    பதில் : அதெற்கென்ன இதோ அந்த பட்டியல்…….. 1.    காட்டூன்  மற்றும் க்ரைம் திரைப்படங்கள் பார்ப்பது 2.    புத்தகங்கள் வாசிப்பது 3.    குழந்தைகள் மற்றும் குட்டி நாய்கள்  4.    மழையில் நனைவது, அதற்காக வீட்டில் திட்டு வாங்குவது 5.    குடும்பத்தினருக்காக சமைப்பது, அவர்கள் சாப்பிடுவதற்கு பரிமாறுவது 6.    கடற்கரையில் காலார நடப்பது  7.    முழு நாளும் இசை கேட்பது 8.    குளிக்கும் போது சத்தமாக பாடல் பாடுவது 9.    ஓவியக் கண்காட்சிகளுக்குப் போய் மணிக்கணக்கில் ஓவியநுட்பங்களை இரசிப்பது 10.    பேரூந்து ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணிப்பது 10 மட்டும் தான் கேட்டிருப்பதால் இத்தோடு நிறுத்தி விடுகின்றேன். உண்மையில் 1000 பிடித்தவைகள் உண்டு.  நான் திரும்பிப்பர்க்கனும் என்றால் என்னை பின்னால் இருந...

வினாக்களுக்கான பதில்கள் 02

Image
 முற்பகுதி     வினா 03:  மீரா நீங்கள் கோவக்காரி, பிடிவாதக்காரி என்றறிந்தேன் இதில் உண்மையுள்ளதா? கோபம் போன பின் என்ன செய்வீர்கள்? உங்கள் சமூகஊடகங்களை பின்தொடர்ந்த வகையில் அப்படித்தெரியவில்லையே அன்பே…. பதில்  : சமூக ஊடகங்களில் பின்தொடர்ந்தால் தெரியாது தான். என்னை நேரில் தொடர்ந்தால் தான் என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். எல்லோரும் நடத்தைப் பிறழ்வு காட்டுவது போன்று நானும் சிலநேரங்களில் அந்நியன் போல் நடப்பதுண்டு. நீங்கள் அறிந்ததை போன்று கோபம், பிடிவாதம் கொஞ்ஞ்ஞ்ஞ்…….சம் கூட தான். ஆனால் எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும், எல்லோரிடமும் நான் கோபம் கொள்வதில்லை, பிடிவாதம் பிடிப்பதில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது மாதிரி எப்போதாவது கோபத்தின் உச்சத்திற்கு போவதுண்டு. நிச்சயம் இச்சந்தர்ப்பங்களில் சுற்றியுள்ளவர்களை ஆழமாக காயப்படுத்துவதும் உண்டு. ஆனால் பிடிவாதம் மட்டும் எப்போதும் உண்டு. சின்னச்சின்ன விடயங்களில் கூட பிடிவாதம் பிடிப்பதுண்டு. நான் குழப்படி செய்து அம்மாவிடம் வாங்கிய அடிகளை விட பிடிவாதம் பிடித்து வாங்கிக்கட்டிக்கொண்டவை அதிகம்.  அநேகமாக கோபத்தில் யாரை...

வினாக்களுக்கான பதில்கள் -01

Image
  வணக்கம் நண்பர்களே> நீண்ட நாட்களின் பின்னர் நேரங்கிடைத்துள்ளது. பயணங்களினாலும் குடும்பத்திற்கான நேர ஒதுக்கல்களினாலும் நிரம்பிவிட்டது என்னுடைய நாட்குறிப்பு. இந்த இடைவெளியில் 177 வினாக்களை அனுப்பியுள்ளீர்கள். அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றிகள். அதில் பெரும்பாலானவை ஒத்த தொனியிலானவை மேலும் சில பதிலளிக்க முடியாதவை.  எனவே அனுப்பியவற்றிலிருந்து பதினைந்து முக்கிய கேள்விகளை தேர்ந்து அதற்கு பதிலளிக்க விழைகின்றேன்.  வினா 01: மீரா நீங்கள் இரு கைகளாலும் எழுதுபவர். வரைபவர் என்று அறிந்தேன் உண்மையாகவா? AK எனும் பெயரில் நீங்கள் பல வருடங்களாக வரைந்து வந்ததாகவும் தற்போது வரைவதில்லை என்றும்> உங்கள் ஓவியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் அறிகின்றேன். இது உங்கள் காதலுடன் தொடர்புடையது என்றும் கூறப்படுகின்றதே இவையெல்லாம் உண்மையா? பதில்: பரவாயில்லையே நண்பரே என்னை குறித்து ஆய்வே செய்துள்ளீர்கள் போல. நீங்கள் அறிந்தது உண்மையே.  எ ன்னால் இரு கைகளாலும் வரைய முடியும். ஆனால் இடது கையால் தெளிவாக எழுத முடியாது. இவ்வாறு இரு கைகளாலும் எழுதுபவர்கள் உலகில் ஒரு சதவீதமானவர்கள் என்று குறிப்பிடப்படுக...