அன்பானவர்களுக்காக சில நிமிடங்கள்
இன்று உலகம் ரொம்ப சுருங்கி விட்டது என்கின்றோம். ஆனால் அதனுடன் கூடவே அன்பும் சுருங்கிவிட்டது என்று நினைக்கத் தோன்றுகின்றது. முன்னர் எல்லாம் தொடர்பாடல் வசதிகள் ஈரக்கவில்லை ஆனாலும் அன்பு பறிமாற்றல்கள் நிறைந்திருந்தன. எனது குடும்பத்தில் அநேகமானவர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்கள் தங்களவர்களுக்கு செய்த அன்பின் பரிமாற்றங்களை இன்றும் கூறி பெருமைப்பட்டுக் கொள்வதை பார்த்திருக்கின்றேன். ( அம்மா கூட அப்பா தன்னை கிறிக்கட் விளையாடும் சாட்டில் சைட் அடித்ததாக கூறியிருக்கிறார்) எனினும் இன்று பலவித தொழில்நுட்ப தொடர்பாடல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ள போதும் அன்புப்பறிமாற்றல்கள் மிகவும் குறைந்தளவே காணப்படுகிறது. அன்புக்கு “நீர்த்தன்மை” இருக்குதுங்க. மரத்திற்கு ஒரு வேளை நீர் ஊற்றாவிட்டால் இறந்து விடாதாயினும் வாடல் நிச்சயம் ஏற்படும் அதேபோன்று எந்த உறவுமுறையிலும் அவர்களுக்கான நேர ஒதுக்கல்கள் குறையும் போது புரிந்துணர்வுகள் குறைந்து அன்பில் விரிசல்கள் ஏற்பட தொடங்குகின்றன. நாம் எவ்வளவோ பெரிய மேலதிகாரியாக கூட இருக்கலாம் ஆனால் குடும்பத்திற்கும் , நமது நண்பர்களுக்கும் , உறவுகளுக்கும் அது அப்பாற்பட்...