தங்க கூடு
நான் எப்போதும் பராமரிக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றேன் தங்கமூலாம் பூசப்பட்டதல்ல என் கூடு நம்புங்கள் முற்றும் தங்கத்தாலானது… எனக்களிக்கப்படும் பாலும், பழமும் அன்றன்று எனக்காகவே பறிக்கப்பட்டவை – அல்லது பணம்கொடுத்து வாங்கப்பட்டவை… பெறுமதிமிக்கவை… என் முன்னுள்ள கிண்ணத்து நீரை நான் பருக நினைக்க முன்னே நிறைத்தும் விடுகின்றார்கள் என்ன குறை எனக்கு…? சற்றே ஏறக்குறைய சொல்வதானால் என் கூட்டின் கம்பிகளுக்கிடையான இடைவெளி மட்டும் நெருக்கமானவை அதற்கும் அவர்களே சொல்லிக்கொள்கின்றார்கள் ஏதாவதொரு பூனை அல்லது ஜந்து என்னை கடித்துவிடாதிருக்கத்தான் இந்த குறைந்த இடைவெளிகள் என்று….. என்ன குறை எனக்கு….? அப்பப்போ என் கூடு கூட திறக்கப்படுகிறது…. நான் வெளியே வரலாம்…. ஏன் முகத்தில் கூட்டுக் கம்பிகளை தாண்டி வரும் காற்றினை தவிர்த்து வெளியே தலை நீட்டும் போது முகத்திலறைகின்ற தென்றலை அனுபவிக்கும் சுதந்திரம் வரை எனக்குள்ளது...... ஆனால் என் உலாத்தும் எல்லைகள் மட்டும் கூண்டுக்கதவு திறக்கும் போது என் காலில் கட்டப்படுகின்ற நூலின் நீளத்தில் மட்டும் தீர்மானிக்கப்பட்டு ...