Posts

Showing posts from September, 2013

கா.மு – கா.பி

Image
தலைப்பினை பார்த்ததும் ஏதோ வேற்று மொழி பேச தொடங்கிவிட்டேன் என்று விகல்பமாக யோசிக்காதீர்கள். கா.மு – என்பது காதலுக்கு முன் கா.பி என்பது காதலுக்குப் பின் என்பவற்றின் சுருக்கமே. இந்தப்பதிவினை இன்றைய காலகட்டத்துடன் சம்மந்தப்படுத்தியும் உளவியல் ரீதியாகவும் அணுகுவதே இக்கட்டுரையின் நோக்கம். இப்பதிவினை என் கண்ணோட்டத்திலும் என் சார்ந்தவர்களை மையப்படுத்தியுமே எழுதுகின்றேன். யாரையும் காயப்படுத்துவதோ அல்லது பெண்ணியம் பேசுவதோ இதன் நோக்கமல்ல. “காதல்” என்பது இன்று பலவித பரிணாமங்களை கடந்துவிட்டது. முன்னர் நம்முடைய தாத்தா – பாட்டி காலத்தில் ஒருவருக்கொருவர் பார்த்துக்கூட இருக்கவில்லை. அவர்களுக்கு இடையில் தொடர்பாடல் சாதனங்களும் இருக்கவில்லை. ஆனாலும் அவர்களது காதல் மிகவும் தூய்மையானதொன்றாக இருந்தது. அவர்கள் காதல் கைகூடாவிட்டால் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது காலம் முழுவதும் ஒருவர் மற்றவருடைய நினைவுகளுடனேயே காலம் கழித்தார்கள். அக்காலத்தில் எல்லாம் ஒரே காதல் என்ற கருத்து தான் நிலவியது. காதலிக்கும் போது எவ்வாறானதொரு புரிந்துணர்வுடன் காதலித்தார்களோ அதே காதல் கைபிடித்த பின்னும் குறைந்திருக்கவில்லை. இ...

பெண்ணுக்கு மறுக்கப்பட்டுள்ள மூன்று விடயங்கள்

Image
இன்றைய சமூகக்கட்டமைப்பில் விளிம்புநிலையில் காணப்படுகின்ற பாலினமான பெண்கள் பல்வேறு வழிகளிலும் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு போராடி வருகின்றனர். பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் பெண்ணியத்திற்கு குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றன பெண்ணுக்கு மறுக்கப்பட்டுள்ள மூன்று விடயங்கள் இன்றைய சமூகக்கட்டமைப்பில் விளிம்புநிலையில் காணப்படுகின்ற பாலினமான பெண்கள் பல்வேறு வழிகளிலும் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு போராடி வருகின்றனர். பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் பெண்ணியத்திற்கு குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். அன்று மூலையில் முடிங்கிக் கிடந்த காலம் போய் இன்று பெண்கள் பல தலைமைப்பதவிகளை வகிக்கின்ற நிலை தோன்றிவிட்டமை பெருமைக்குறியதொரு விடயமே. ஆயினும் அன்று தொட்டு இன்று வரை பெண் வெளிப்படையாக பேசிய முடியாத சில விடயங்கள் இருக்கவே செய்கின்றன. இவற்றுள் முக்கியமானவை மூன்று.......... பெண்ணியம் இணையதளத்தில்

வாழ்வெனும் மலர்……

Image
அழகான பூவொன்றினை கவிஞன் ஒருவன் கண்டான். அரிய வகையான அம்மலரினை கண்டதிலிருந்து கவிஞனுக்கு கவிதை கொட்ட ஆரம்பித்தது. அவனது கவி வரிகளில் தம்மை மறந்த இரசிகர்கள் கற்பனையிலேயே அந்த மலரினை காணத்தொடங்கினதும் அல்லாமல் விரும்பவும் தொடங்கினர். இதே மலரினை ஆராய்ச்சியாளன் ஒருவனும் கண்டான். அந்த மலரை பிரித்து  மேய்ந்து அதன் தாவரவியல் குடும்பம் தொடங்கி மகரந்தம் எப்படி பரவலடைகிறது என்பது வரை துல்லியமான ஆராய்ந்து பலவித ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தான். விருதுகளும் கிடைத்தன. இவ்வகை மலரினை பக்தன் ஒருவன் கண்டான். அண்டாசராசரங்களையும் படைத்து ஆளுகின்ற இறைவனின் பாதகாணிக்கை ஆக்குவதே அம்மலருக்கான சிறப்பு என்று என்று எண்ணிணான். அம்மலரினை பறித்து இறைவனின் பாதமலர் சாற்றினான்.   ஓவியன் ஒருவன் கண்டான். பல கோணங்களிலும் நின்று பார்த்து அதன் அழகை கண்டு பிரமித்தான். தன் ஓவியத்திறமையால் அம்மலரினையே பிரதி எடுத்ததினை போன்று ஓவியம் தீட்டினான். பல கண்காட்சிகளிலும் காட்சிப்படுத்தினான். பலர் அவனை வியந்து பாராட்டினர்.   ஒரு பெண் இப் பூவினை பார்த்தாள். அதன் அழகில் ஈர்க்கப்பட்டாள். பறித்து தலையில் சூட...

முயலாமையால்……

Image
நிலை - 01 ஒரு காட்டில ஒரு முயலும் ஒரு ஆமையும் இருந்திச்சாம். (ஒன்று ஒன்று தானா இருந்தது என்று எடக்குமுடக்கா கேட்க கூடாது சொல்லிப்புட்டன்). இரண்டுக்கும் இடையில் யாரு நல்லா ஓடுவாங்க ? என்ற விடயத்தில் பிரச்சினை வந்தது. இந்த சண்டை முடிவில் ஓட்ட பந்தயம் வைக்கிறது என்று முடிவானது. பந்தயம் தொடங்கியதும் பாஞ்சு விழுந்து ஓடிய முயல் சற்று தூரம் போனதும் திரும்பி பார்த்தது. ஆமை ஆரம்ப புள்ளியிலிருந்து கொஞ்ச தூரம் தான் நகர்ந்திருந்தது தெரிஞ்சுது…..  சப்பா கொஞ்சம் டயடா இருக்கு… ரெஸ்ட் எடுத்துட்டு ஓடுவம் என்று மரத்திற்கு கீழ குந்தின முயல் அப்படியே தூங்கிட்டுது…. தடார் என்று எழும்பி பார்த்தா ஆமை கோல்ட் மெடலோட கையில் பிளவர் பஞ்சோட சிரிச்சுக்கொண்டு போட்டோக்கு போஸ் குடுத்துக்கொண்டிருந்தது. “ஐயோ சோம்பேறிதனத்தால தூங்கிட்டமே” என்று தன்னையே நொந்து கொண்டது முயல். அன்று இரவு புல் பொட்டில் சாராயம், சிக்ரட் பைக்கற் என்று கவலையை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டது. இது முயல்  + ஆமை (யால்) =  முயலாமையால் தோற்கடிக்கப்பட்ட கதை (வெயிட் நீங்க கடுப்பாவது புரியுதுங்க…..) நிலை – 02 எப்...

அண்ணாவின் அழகி

Image
அநேகமாக ஒரு காலத்தில் பலரின் தூக்கங்களை கெடுத்த பெண்கள் பின்னர் சப்பை பிகராவதும் பாடசாலைக்காலத்தில் சப்பை பிகரா இருக்கும் பெண்கள் சூப்பர் பிகராவதும் யதார்த்தமங்க.. ஆனால் பாருங்க எந்தப் பொண்ணும் அவங்க அண்ணன்களுக்கு எப்போதுமே அழகிகள் தான். அது உள்ளுர் கிழவி என்றாலும் அவ கூட ஒரு அண்ணாவிற்கு உலக அழகியாத் தான் இருந்திருப்பா!!! பெரும்பாலும் இளைய சகோதரனுக்கு தன் சகோதரி மேல் இருக்கும் பாதுகாப்பு உணர்வை விட மூத்த சகோதரனுக்கு தங்கை மேல் இருக்கும் பாசமே தனி தாங்க… இதுக்கு உளவியல் காரணம் கூட உண்டு. பெரும்பாலும் நம்மை விட வயதில் மூத்த ஆண் சகோதரனுக்கு தன் வயதை ஒத்த நண்பர்கள் அடுத்த பெண்ணை எவ்வாறு பார்க்கின்றான் என்பது பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும் என்பது தான் அது. (இவருக்கும் ஒரு நண்பன் இருந்திருக்கும்…. அவனுக்கு ஒரு தங்கச்சி இல்லாமலா இருந்திருக்கும்…. நம்ம அண்ணாவும் தன்னுடைய நண்பன் தங்கச்சிய லுக்கு விட்டிருப்பாரில்லையா????)  இனி தான் நான் என் வீட்டுப்பிரச்சினைக்கு வரப்போகின்றேன். நமக்கும் ஒருவர் இருக்காரில்ல…. அவருடைய இம்சை இருக்குதே….. அதிலும் உயர்தரம் படிக்கும் போது பிரத்தியேக வ...

மௌன நிமிடங்கள் அழகானவை

Image
உணர்வுகளை கொல்லும் உறவுகளை விட ஊமைக் கணங்கள் அர்த்தமானவை! பாசங்கள் எல்லாம் வேஷங்கள் ஆகி புனிதங்கள் புதைவதை விடவும் பொய்யான சிரிப்புகள் புறமுதுகின் குத்தல்கள் பழி தீர்க்கும் நட்புகள் - அது கொடுக்கும் கண்ணீர் துளிகள் இவைகளை விடவும் புத்தகங்களுள் தொலைவது பிடித்திருக்கின்றது……. - என் மௌன நிமிடங்கள் அழகானவை! இப்போதெல்லாம் எதிர்பார்ப்புகளை தொலைவிட்டேன் ஏமாற்றங்கள் பழக்கமாகி விட்டன இவையாவும் - என் நாட்குறிப்பின் வெறும் புள்ளிகளே இன்று….  - புத்தகங்களுள் தொலைவது பிடித்திருக்கிறது - என் மௌன நிமிடங்கள் அழகானவை!!! மீண்டும் என் வார்த்தைகளை தேடாதீர்கள்… மீண்டாலும் அவற்றுள் உயிர்ப்பிருக்கப் போவதில்லை நீண்டாலும் அதில் உணர்விருக்கப் போவதில்லை கானல் நீரை விடவும் காணாமல் இருப்பது நன்று… என் புன்னகைக்காக ஏங்குவதாக புழுகாதீர்கள் புண்களை மறைத்து நகைப்பதை விட பூசிமெழுகி நடிப்பதை விட புன்முறுவல் தொலைத்த – என் உதட்டசைவுகள் போதுமானவை!! எனக்கு புத்தகங்களுள் தொலைவது பிடித்திருக்கிறது - என் மௌன நிமிடங்கள் அழகானவை!!!