Posts

Showing posts from August, 2013

காதல் சின்னம்

Image
யார் சொன்னது தாஜ்மஹால் காதலின் சின்னமென்று? அந்தப்புரத்தின் தேவதைகளுள் தன் மனங்கவர்ந்தவளுக்காக கட்டிய கட்டடமது….. எந்தப்பெண்ணாவது அவள் பாரே ஆண்டவளாயினும் பல ஆண்களுடன் தன்னை பகிர்ந்திருக்கின்றாளா? தனக்கென்று அந்தப்புரம் தானில்லை தன் அந்தரங்கத்திலாவது பலரை நினைத்திருப்பாளா? அந்தரப்புரமல்ல அந்தரங்கத்திலும் ஒருவரை நிறைத்துக்கொள்வதன்றோ காதல்……. யார் சொன்னது தாஜ்மஹால் காதலின் சின்னமென்று? பணம் பாதாளம் வரையே பாயும் போது பாராண்ட வேந்தன் பளிங்கினால் கட்டியதில் பெருமையென்ன இருக்கிறது…? வாழும் போது பகிர்ந்திட்ட காதலுக்கு சாவின் பின் சமாதியை பளிங்கினால் கட்டிப் பயனென்ன? தன்னை பகிராமல் இருந்திருந்தால் அதுவன்றோ வாழும் காதல்…. யார் சொன்னது தாஜ்மஹால் காதலின் சின்னமென்று? அவன் காதல் கோட்டையை கட்டிய கரங்களை அறுத்தானாம்… இன்னொரு மஹால் உருவாகிட கூடாதென்று….! கையிழந்தவன் கதறியிருப்பான் - தன் காதல் மனைவிக்கு குடிசை கூட கட்டிட முடியவில்லையென்று.. கண்ணீர் வடித்திருப்பான்… காதலை உணர்ந்து கட்டியிருந்தால் அடுத்தவன் காதலை துச்சமாய் நினைத்திருப்பானா…..? காதல் என்பது அரசனுக்கு மட்டுமா ஆண்டிக்கில்லையா? யார் ...

என் வீட்டு Tom

Image
ஒரு பெண்ணுக்கு எவ்வளவு தான் பொன் பொருள் கொடுத்து அனுப்பினாலும் பெற்றோர் கொடுக்காமலே அவள் புகுந்த வீட்டுக்குச் கொண்டு செல்லும் சொத்து அவளது பிறந்த வீட்டு ஞாபகங்கள்….. அப்பாவின் கோபங்கள் அம்மாவின் திட்டுக்கள் , அண்ணாவின் எச்சரிக்கைகள் , தம்பியின் சண்டைகள் என்று அவளின் ஞாபகக்குறிப்பின் பக்கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். திருமணத்திற்கு முன் அப்பாவின் இளவசிகளாக அம்மாவின் ராஜாத்தியாக வலம் வரும் பெண்கள் திருமணத்தின் பின் நிச்சயம் பிறந்தகத்திலிருந்து ஒரு விலகலை உண்டாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது நிஜம். அதிலும் வீட்டாரை எதிர்த்து திருமணம் செய்தால் கேட்கவே தேவையில்லை… புதிய உறவினால் தாய் - தந்தை – மகள் உறவானது சிறிது விலகிலாலும் அநேகமாக முதல் பிரசவத்துடனோ அல்லது குடும்பத்தின் நல்லது கெட்டதுகளிலோ இணைவதுண்டு. ஆனால் சகோதர பாசமானது பந்த உறவுகளினால் நிச்சயம் பந்தாடப்பட்டு விடுவது பரவலான ஒன்று… நாம் இன்னொரு வீட்டிற்கு விளக்கேற்ற போவது போல் நம் அண்ணன் தம்பி குடும்பத்திலும் விளக்கேற்ற வரும் குத்துவிளக்குகளால் ஒரு நூல் அளவிலான விலகலாவது வராவிட்டால் அது குடும்பமாகவே இருக்காது. தன் தங்கையை முன் ...

அன்பென்றால் உங்கள் பார்வையில் என்னங்க?

Image
கண்ணாடியை பாவிக்கும் போது கவனமாக கையாள வேண்டும் தவறுதலாக விழுந்துவிட்டால் சுக்குநூறாகிவிடும்…. சிலவேளை அதன் பெறுமதி கருதி நாம் சிதறிய துண்டுகளை ஒட்டிக்கொள்வோம். ஆனால் என்ன தான் சொல்லுங்க அதனை பழைய மாதிரியே கையாள முடியாது… வேணுமென்றால் காட்சிப்பொருளாக வைத்துக்கொள்ளலாம்.. கண்ணாடியில் சிறு கீறலோ வெடிப்போ ஏற்பட்டு விட்டால் அவை என்றோ ஒரு நாள் விரிசல்களாக மாறிவிட கூடும்…. அது போல் என்னளவில் நான் எப்போதும் அன்பு என்பதை கண்ணாடிக்கு ஒப்பிடுவதுண்டு…. எவ்வளவு நெருக்கமாக நாம் அடுத்தவர்களுடன் பழகினாலும் சிறு மனவருத்தங்கள் அல்லது சிறு சொற்களே உறவுகளுக்கிடையில் பிளவுகளை உருவாக்கக்கூடும். இப்பிளவுகள் உடனடியாக தரையில் விழந்த கண்ணாடியாக சிதற வேண்டும் என்பது கட்டாயமல்ல.. இன்று சிறிதாக தெரியும் விடயங்கள் நாளை உறவுகளுக்கிடையில் பெரியதொரு பகைமையை நிச்சயம் ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகமொத்தத்தில் “Handle with Care” என்பதாக உறவுகள் அமைய வேண்டும் என்பது என் கருத்து.  இதுதொடர்பில் என் கருத்துடன் மட்டும் நிற்காமல் “அன்பென்றால் உங்கள் பார்வையில் என்னங்க? உங்களுடன் பழகுபவர்கள் அல்லது நீ...

மனம் என்பது.....

Image
கருவறை போன்றது – ஒருவனின் அனுவை சுவைப்பது போன்று ஒருவரின் நினைவை மட்டும் சுமங்கள்…… குழந்தை போன்றது தொலைத்து விடாதீர்கள் தவித்துப்போய் விடுவீர்கள்… சிப்பி போன்றது – சிறு மழைத்துளியை பல்லாண்டு சுமந்து முத்தாவது போன்று சுகமான நினைவுகளை சுமந்து விலையற்ற முத்துக்களை உருவாக்குங்கள்….. கல் போன்றது வலி எனும் உளி கொண்டு சிலை செய்யப்பழகுங்கள்…. பஞ்சு போன்றது – அதற்காக பலரின் நினைவுகளுக்கு பஞ்சனையாக்கிடாதீர்கள்… கண்ணாடி போன்றது சிதறிவிட்டதை சேர்த்தாலும் வெறும் காட்சிப்பொருளாகுமேயன்றி காயங்களை களைந்திடமுடியாது…. மலர் போன்றது மாசில்லாமல் பூத்திருங்கள் மாலையாகும் நாளொன்று வரும்….