Posts

Showing posts from July, 2013

மௌனப் பொழுதுகளில்....

Image
வார்த்தைகள் கேட்டிடாத...... சுவாசங்கள் சுட்டுவிடாத..... – பல மைல் தொலைவில் நாம்…. – உன் நினைவுகள் மட்டும் பேரூந்தின் ஜன்னல் ஓரத்து நிலவாக என்னைத் தொடர்கிறது..... . எழுத்தில் மட்டுமே தொடர்கின்ற பிரியங்களில் உணர்ந்திடா தூரங்கள்….. மடல் வரைந்திடாத மௌனப் பொழுதுகளில் மட்டும் இடைவெளிகளை இடையறாது இதயத்துள் இழையோடிய படி!!!

41 வது இலக்கிய சந்திப்பில்........ எனது உரை

Image
கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெண்கள் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் கேள்விக்குட்படுத்தக்கூடிய ஒரு விடயம் கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் 1978 இன் 4 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுச் சட்டம், 1981 இன் 8 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழச் சட்டத்தமின் இரண்டாம் உறுப்புரையின் கீழ் கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இச்சட்டம் 1948 செப்டெம்பர் 8 ஆம் திகதி முதன்முதலாக சட்டமாக்கப்பட்டது. பின்னர் 1950, 1953,1955,1981 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. மேற்படி ஆணைக்குழு பரிசீலனை செய்ய வேண்டுமென ஜனாதிபதியவர்கள் நியமித்த விடயங்கள் வருமாறு2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி அமுலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வி அடைவதற்கான காரணங்கள் மற்றும் 2009 மே 19 வரை இடம்பெற்ற சம்பங்களுக்கான காரணங்கள் யாராவது தனிநபர் , குழுவினர் அல்லது நிறுவனம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இது தொடர்பான பொறுப்புக்களை ஏற்கின்றார்களா? இத்தகைய சம்பவங்கள் மீள ஏற்படாத வகையில் அதனை...

அழகோ அழகு...

Image
“ஒரு ஆணோட கம்பீரத்தினை அவன் கடின வேலை செய்யும் போதும் பெண்ணோட அழகை காணவேண்டுமாயின் காலையில் அவள் விழித்தவுடன் பார்க்க வேண்டும்” என்பார்கள். இவ்விரு சந்தர்ப்பங்களின் போதும் தான் இவர்களது சுயரூபத்தினை அறியலாம் என்பதால் தான் இவ்வாக்கியம் உருவாயிருக்க வேண்டும். நல்ல நேரம் இதை சொன்னவர் இப்போது இல்லை. இருந்திருந்தால் கணணியிலேயே இருக்கும் ஆண்களையும் இரவு படுக்கும் முன் பூசிய நைட் கிறீம் உடன் காலையில் எழுந்து வரும் பெண்களையும் பார்த்து ஏமாந்திருப்பார். (இரண்டாவது சிட்டுவேசன்ல பயந்தும் கத்தியிருப்பார்) இது ஒரு பக்கமிருக்க நாம் பெண்களை அல்லது ஆண்களை சைட் அடிக்கும் போது பெண்ணாயின் உடற்கட்டமைப்புகளையும்….(இன்னும் இருக்கும் எனக்கு தெரியாதுங்க) ஆணாயின் அவனுடைய உயரம், சொட்டைத்தலையா?, நிறமென்ன? (நான் பெண்ணென்பதால் இது எனக்கு நல்லாவே தெரியும்) என்றெல்லாம் பார்ப்போம். இது பொதுவாக ஒருவரை பார்க்கும் போது எதிர்பாலினர் கவனிக்கும் விடயங்கள். ஆனால் பாருங்கோ பாரதி சொல்லியிருக்கான் பெண்ணுக்கு அழகு “வீரம்” தானாம். அதாவது ஒரு பெண்ணுக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய அளவு வீரம் இருக்க வேண்டும். உடனே பர...

படைப்பு

Image
காட்டுச் சிங்கம் ஒன்று தன் குட்டிக்கு நகரத்தினை சுற்றிக்காட்ட புறப்பட்டு நகரக்குள் நுழைந்ததாம். ஓவ்வொன்றாக அதற்குக் காட்டி விளக்கம் கொடுத்துக்கொண்டு வந்ததாம். புத்திசாலியான குட்டிச்சிங்கமும் வினாக்களை எழுப்பி தன் சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொண்டு வந்ததாம். இவ்வாறு உலா வரும் போது பூங்காவொன்றில் சிலையொன்றை குட்டிச் சிங்கம் கண்டதாம். “சிங்கமொன்றின் வயிற்றுப்பகுதியை மனிதனொருவன் ஈட்டியால் குத்திக் கிழிப்பதாகவும் அவன் காலொன்று தலையைத்திருப்பி கடிக்க முயல்கின்ற சிங்கத்தின் பிடிறிப்பகுதியில் அழுத்துவது” போன்றும் அமைந்திருந்ததாம்.  விடுமா அந்த சிங்கக்குட்டி?... “அப்பா அப்பா ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் இந்த சிலையை? நம் இனம் தானே காட்டின் ராஜா… காட்டு விலங்குகள் முதல் காட்டுக்கு வரும் மனிதர்கள் வரை நமது கர்ச்சிப்பை (ஹலோ மூஞ்சு துடைக்கும் துணியில்ல சிங்கத்தின் சவுண்டு)  கேட்டாலே ஓடி விடுகிறார்கள் அல்லது கூட்டாக வந்து பல பொறிகளை பாவித்து பிடிக்கிறார்கள். அப்படியிருக்க இந்த சிலையில் மட்டும் ஏன் தனித்து நின்று எம்மினத்தவனை கொல்லுவது போன்று சிலை வடித்திருக்கிறார்கள்” என்று கேட்டத...

அப்பாவின் இளவரசி!

Image
குடும்பம் என்பது ஓர் பல்கலைக்கழகம் என்பார்கள். ஆனால் என்னளவில் கூறுவேன் அது ஓர் அழகிய குருவிக்கூடு போன்றதென்று.. அதிலும் ஓர் பெண்ணுக்கு இரு கூடுகள் உண்டு. பிறந்த வீடு மற்றது புகுந்த வீடு. புகுந்த வீட்டில் அதிஷ்டத்தினை பொறுத்து மகாராணியாக இருக்கலாம் ஆனால் நிச்சயம் பிறந்த வீட்டில் ஒவ்வொரு பெண்ணும் இளவரசி. அதிலும் அப்பாக்களுக்கு தங்கள் பெண் ஒவ்வொருவரும் குட்டி இளவரசி தான். தன் மனைவி கருத்தரித்தவுடன் மகிழும் ஒவ்வொரு ஆணும் பிறந்திருப்பது பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவார்களாம். அன்று கையிலேந்தி தங்கள் பெண் குழந்தையில் நெற்றியிலிடும் முத்தம் ஒவ்வொரு தந்தையும் தங்கள் பெண் இளவரசிகளுக்கு வைக்கின்ற குட்டி கீரிடம்…. கூடவே அப்பாக்களுக்கு பொறுப்புகளும் அதிகரிக்கும் நாள். ஒருவேளை தமிழ்க்கலாச்சாரத்தில் வரதட்சணை பிரச்சினை இருப்பதால் ஒரு சிலர் பெண் குழந்தைகளை பாரமாக கருதக்கூடும். இது சமூகம் அவர்களுக்கு கொடுக்கின்ற ஒரு விதமான அழுத்தமும் கூட.. ஆயினும் பெண் குழந்தைகளை விரும்பாத, அவர்களது சிறு அசைவுகளைக் கூட குறித்து வைக்காத தந்தையர்கள் மிகமிக குறைவு. கையில் தூக்கிய தங்...

நாய் வால்.....

Image
முன்னர் சில ஆங்கிலேய பாதிரியார்கள் மதமாற்றம் செய்து வந்த காலத்தில் அவர்கள் சரியான மறையறிவை வழங்காது மேலோட்டமாக மதமாற்றம் செய்வதாக புகார் எழுந்தது. இப்புகார் உண்மையில்லை என்று ஒரு பாதிரியார் சாதித்துக்கொண்டிருந்தார். ஒரு தடவை இதை நிரூபித்துக் காட்டுவதாக சவால் விட்டு கூட்டத்திலிருந்த செவ்விந்தியன் ஒருவனை அழைத்தார். பாதிரி : நற்கருணை அருட்சாதனம் உனக்கு ஆத்ம திருப்தியளித்ததா? செவ்விந்தியன் : நிச்சயமாக ஆனா பாதிரியாரே வைனுக்குப் பதிலாக பிராந்தி தந்திருந்தால் இன்னும் நன்றாகவிருந்திருக்கும்... இது அண்மையில் நான் வாசித்த சிறு கதைங்க…. இப்படித் தாங்க சில பேர் இருக்கிறாங்க… ஏதோ அவர்கள் திருந்த வேண்டும் என்று நினைத்து நாம் சொன்னால் அல்லது அறிவுரை கூறினால் நம்மை கேலிப் பொருளாக்கி விடுவார்கள் சில வேளை அவர்கள் ஹீரோ ஆகிடுவார்கள். உண்மையில் இவர்களைத் திருத்துவது என்பது நாய்வாலை நிமிர்த்துவதை விட கடினமானது. ஒருவகையில் பார்க்கப் போனால் இவர்களை திருத்தித்தான் நமக்கென்ன ஆகப்போகிறது என்று கூட தோன்றும்…. இன்னும் சிலர் இருக்கிறார்கள் தமது குற்றங்களை மறைக்க அடுத்தவர்களை குறை கூறுவார்கள். (சோடித்ததாகவு...