மீள் நிரப்புதல்...
எண்ணெய் குடுவைக்குள் நீரை நிரப்பிடல் உண்டா? நீரின் மேற்பரப்பில் எண்ணெய் படலமாக உன் நினைவுகள்.... சரமாகும் மல்லிகைக்கு பதில் தாமரையை கோர்த்திடலாமா...? நினைவுச்சரங்களின் ஒவ்வொரு சிக்கிலும் - நம் சந்திப்புக்கள்... விஷச்சாடிக்குள் பாலூற்றிப் பருகுவதும்.. உன் கனவுளை துடைத்தெறிந்து விட்டு இன்னொருவன் நினைவை நிரப்புவதும் சாத்தியமற்றதாகியே விடுகின்றது... கவிதைகள்... கனவுகள்... நினைவுகள்... அனைத்திலும் மீள்நிரப்பிட முடிந்திடா பொருளாகியே போகின்றாய்.... – நீ என்னை (மட்டும்) விட்டே... நாளை என் மண மேடையும் மரண மேடையும் - உன் நினைவுகளாலான மீள் நிரப்பலினால் அலங்கரிக்கப்பட கூடும்... அந்த நிரப்பல்களின் மெல்லிய விளிம்புகள் வரை என் இறுதி மூச்சுக்களே நிரம்பியிருக்கும்....