உள்ளங்கவர் கள்வன்
மு தல் காதல் அழியாக்காதல் அவனோடு…. க ள்வனின் பெயர்? என் முதல் கவிதையின் தலைப்பு இ னம்? அவனிடம் கேட்டதில்லை மொ ழி? இதுவரை நேரில் கதைத்ததில்லை மௌனங்கள் பேசியதுண்டு காதலுக்கு மொழியேது.... மு தல் சந்திப்பு? தனிமையின் ஒரு கணத்தில் கண்ணுக்குள் விழுந்தவன் இன்று இதயத்துள் நிறைந்துள்ளவன் - என் கவியின் கதாநாயகன் ச ந்திக்காத நாட்கள்? திங்கள் ஒரு தடவை தொலைகின்றவன்…. கூடவே – என் நினைவுகளை தொலைக்க வைப்பவன் கா தல் பரிசு? அவனிடமிருந்தான இனிய இராப்பொழுதுகள்…. அவனுக்கு நான் கொடுத்த என்னாலான முதல் பரிசு கவிதை!! மு த்தம்? பல முத்தங்கள் பறக்கவிட்டதுண்டு தீண்டிடாத அசைவக்காதல் எம்முடையது!! சீ ண்டல்? சீ…சீ…. எம் - தூரம் போதும் விரதத்திற்கு…. அ வனை பிடிக்காதவர்கள்? என் அம்மா – அப்பா அவன் குறித்தான தனிமைகளை திட்டியதுண்டு ஓரிரவில் அவனுடன் பேசியதற்கு – என் அண்ணா கன்னத்தில் அறைந்ததுண்டு!! நி ச்சயார்த்தம்? குழந்தையே உண்டு!! கு ழந்தை? என் குழந்தைக்கு அவனைக்காட்டி தான் சோறூட்டுகின்றேன் அ வன்? சூரியனின் பகைவன் அல்லியின் காதலன் தினமும் என்னவனின் முக...