Posts

Showing posts from January, 2014

சில கவிஞர்களும் அவர்களின் வழிஞ்சல்களும்……

Image
முன்னர் எல்லாம் என் ஊர் பக்கத்தில் பொம்பள பிள்ளையோ அல்லது மனுஷியோ பஸ்ல ஏறினா பேரூந்து ஆசனத்தில இருக்கிற ஆம்பிளைகள் எழும்பி இடம்கொடுப்பாங்க… அதாவது மத்தப் பொண்ணுகளையும் தாயாக, தங்கையாக மதித்த காலமது…. இப்ப என் ஊர் பக்கம் மட்டுமல்ல இங்க கொழும்புல பஸ்ல ஏறினா கூட யாருமே எழும்பி இடம் தருவதில்லை. கர்ப்பிணிகளுக்கும், பௌத்த பிக்குக்களுக்கும் (இங்கு கவனிக்குக… வேறு மத தலைவர்களுக்கல்ல) மட்டும் தான் இடம் கொடுப்பாங்க… இது பெண்கள் சம உரிமை கேட்டதன் விளைவா இல்லை இப்பத்தைய ஆம்பிளைகள் பொண்ணுகள விட பலவீனமாகிட்டாங்களா என்பது விடையில்லா புதிர். இது ஒரு பக்கமிருக்க இந்த சந்துல சிந்து பாடுறவங்க சிலரும் இருக்கிறாங்க…. அதாங்க நிரம்பி வழியில பஸ்ல பொண்ணுங்களோட உரசிரதக்கென்றே வாறவங்க… அடிக்கடி தெருவில இருக்கிற சொறி நாய்கள் இப்படித்தான் சுவத்திலயும் உரஞ்சுவத பார்த்திருக்கிறன்… இதுல இருக்கிற முக்கிய விஷயம் என்னண்டா இந்த பொம்பள பிள்ளைகயோட உரசிறது இளசுகள் என்டாலும் பரவாயில்ல… சில பழசுகள் தான் உரசுதுகள்….. இது தேவையா இதுகளுக்கு பாடையில் போற வயசுல…??? இதே போல தானுங்க இந்த சமூக ஊடகங்களிலும்….. குறிப்பா முகந...

காதலித்தால் மட்டுமா கவித வரும்….??

Image
என் நண்பர் ஒருவர் கவிதை, இசையில் மிகுந்த ஆர்வமுடையவர். விரைவில் கவிதையாசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை இடம்பெறவுள்ளது குறித்து உரையாடிக்கொண்டிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும் போது “நீங்களும் பங்குபற்றலாமே…?” என்று கேட்டுவிட்டேன். (இன்னம் இந்த முந்திரிக்கொட்டை தனம் குறையல) சிரித்த படியே “ எனக்கு கவிதையெல்லாம் வராது… அது ஒரு காலம். காதலித்த போது எழுதியிருக்கன்…. இப்பெல்லாம் வராது… காதலிக்கும் போது தான் கவிதை வரும்” என்றாரே பார்க்கலாம்….. “எனக்கு கவித வராது" என்று சொன்னது ஓகே…. “காதலித்த போது எழுதியிருக்கன்” …. இது ஓகே….. "இப்பெல்லாம் வராது"…. இதுவும் ஓகே… அதென்ன “காதலிக்கும் போது தான் கவிதை வரும்’??? ஆக காதலிக்கும் ஒருவருக்கு தான் கவி வருமா? இதென்னங்க நியாயம்? முதலாவது வினா காதலிக்காத மனிதன் உண்டா? நிச்சயம் காதலிக்காதவன் மனிதனாக இருக்க முடியாது.  அப்படியென்றால் எல்லோரும் கவிஞர்களாக மாறியிருக்கனுமே.... இரண்டாவது விடயம் காதல் என்பது எதிர்பாலானவர்களிடம் மட்டும் தோன்றும் ஓர் உணர்வா? இல்லை என்பது என் வாதம். காதல் என்பது இசையில் ஏற்படலாம், இயற்கையில் ஏற்படலாம், இறைவனிடம் ஏற்ப...

பின் நிலைமாறுகால நீதியும் தமிழினப் படுகொலையும்

Image
மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 8ஆவது ஆண்டு நினைவு தின நினைவுப் பேருரையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பகுதிநேர விரிவுரையாளர் அருட்தந்தை எழில் றஜன் (யே.ச) ஆற்றிய நினைவுப்பேருரையின் முழுவடிவம். இன அழிப்பு ஒடுக்கு முறைகளிலிருந்து ஒரு சமூகம் விடுபட வேண்டுமாயின் எதிர்ப்பரசியலுக்கான அரசியல் வெளி உருவாக்கப்பட்டு, போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் தமிழ்த் தேசியத்தை வாக்கு அரசியலுக்காக விற்று விடாமல் தமிழின விடுதலைக்காக வாழ்ந்து தான் நேசித்த மக்களின் வாழ்தலுக்காக 2005ம் ஆண்டு நத்தார் தினத்தன்று பேராலயத்தில் படுகொலை செய்யப்பட்டார். தமிழ் பாராளுமன்றத் தலைமைகள் நடத்தி வருகின்ற விட்டுக் கொடுப்பு அரசியலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வாக்கு கேட்பதற்காக மட்டும் தமிழ்த் தேசியத்தை பாவிக்காது ஈழத் தமிழ் மக்களின் விடுவிற்கு தமிழ் தேசியமும் தாயகமுமே ஒரேயொரு தீர்வு என்பதனை மிகத் தெளிவாகவும், காட்டமாகவும் எடுத்துரைத்த குரல்களில் ஒன்றாக வி...