Posts

Showing posts from October, 2012

ரகசியத்தை சொல் கிளியே – அநுராதாரமணன்

Image
அன்றாடம் நாம் பலவித விடயங்களை கடந்து செல்கின்றோம். என்றாலும் சில விடயங்கள் நம் உள்ளங்களில் ஏதோவொரு புள்ளியை தொட்டு தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அவ்வாறான ஒரு தாக்கத்தினை என் மனதில் ஏற்படுத்திய ஒரு படைப்பு தான்  அண்மையில் நான் வாசித்த ஒரு புத்தகம். “ரகசியத்தை சொல் கிளியே” என்ற பிரபல இந்திய எழுத்தாளர் அநுராதாரமணன் எழுதிய இந்நூல் கங்கை புத்தக நிலையத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. இந்நூலில் “ரகசியத்தை சொல் கிளியே” “உனக்காக உமா” என்கின்ற இரு நாவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இரண்டுமே வரதட்சனை எவ்வாறு திருமண சந்தையிலும் காதலிலும் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை வௌ;வேறு கோணங்களில் விளக்கியிருந்தது. ரகசியத்தை சொல் கிளியே இம் முதல் கதையில் தன் தங்கை குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து அவளது மகளை தனது மகனுக்கு மணமுடித்துக் கொடுக்க நினைக்கின்றார் ஒரு தாராள மனப்பான்மை உடைய தந்தை. ஆனால் ஒரு காலகட்டத்தில் பொருளாதார அழுத்தங்கள் தாளாமல் மற்றதொரு பணக்கார தங்கையின் மகளுக்கு மகனை மணமுடித்து கொடுத்து விடுகிறார். இக்கதையின் நாயகி “கிளி” சிறு வயது முதல் அத்தானுக்காக வாழ்ந்து வரும் ஒரு...

கடவுள் ஏன் சிலையானான்.....?

Image
இன்றைய நவீன உலகில் கடவுள் நம்பிக்கை என்பது மிகவும் அரிதாகிக் கொண்டிருக்கின்றது. கடற்கரை, கடைகள், பூங்காக்கள் என சுற்றி வருகின்ற இளந்தலைமுறையினர் வழிபாட்டுத்தலங்களை நினைத்துப்பார்ப்பது சமயவிழா நாட்களில் மட்டுமே. அதுவும் தமது புதிய உடைகளை காட்டுவதற்காகவோ அல்லது வீட்டிலிருக்கும் முதியோர்களின் நச்சரிப்புகளை தாங்கமுடியாமையினாலோ மட்டுமே. எவ்வாறாயினும் இன்று இறைவழிபாடென்பது அரிதாகிக்கொண்டிருக்கின்றது. ஆனால் எம் முன்னோர்களை எடுத்துக்கொண்டால் அதிகாலை எழும்புவது முதல் இரவில் உறங்குவது வரை இறைவனுக்கும் இறைவழிபாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். ஒவ்வொரு வீடுகளிலும் கடவுளின் படங்களோ அல்லது சிலைகளோ இருந்திருக்கின்றது. அதிலும் முன்னைய காலங்களில் சிலை வழிபாடென்பது முக்கியமானதொன்றாக காணப்பட்டது. சிலைகள் செய்வதற்கான கல்லினை தேர்ந்தெடுப்பது முதல் அவற்றினை சிற்பங்களாக வடிப்பது வரை சாஸ்திரங்களை பின்பற்றியதுடன் அவற்றிற்கான வழிபாட்டு முறைகளுக்கும் கூட பலவித அபிஷேக முறைகளையும் ஐதீகங்களையும் வகுத்திருந்தனர். இவற்றை உருவாக்குவதை பிரதானப்படுத்தி இனங்கள் .தொழில்கள் என்பனவும் பாகுபடுத்தப்பட்டன. இதனைய...