மிஸ் பண்ணப் போவதில்லை

இன்று அதிகாலையில் படுக்கையை விட்டெழவே எனக்கு பிடிக்கவில்லை... காரணம் நள்ளிரவு முதல் பெய்கின்ற பலத்த மழை... ஆனாலும்  அலுவலகத்திற்கு செல்வதற்காகவது எழுந்தாகவேண்டிய கட்டாயம். விடுமுறை எடுப்பது கூட இன்று சாத்தமியமில்லை முடிக்கவேண்டிய எனது கடமைகள் மீதம் இருக்கின்றன. பஸ் பிடித்து செல்வதையும் வீதியின் மழை அழுக்கு நீரில் கால் நனைய நடக்கப்போவதை நினைக்கவே மனதுள் இனம் புரியாத ஒரு வெறுப்பு. இன்று குளிப்பதா வேண்டாமா? என்ற சோம்பல் மனதின் வினா மனதில் எழ போர்வையை விலக்காமலேயே தலையணையருகில் துழாவுகின்றேன் என் செல்லிடப்பேசியை. இரவு “அதிர்வு” க்கு மாற்றப்பட்டதன் விளைவு பார்க்கப்படாமல் குவிந்திருக்கின்றன குறுஞ்செய்திகள். அம்மாவின் “எழுந்து விட்டாயா?” பல்கலைக்கழக நண்பர்களின் “காலை வணக்கங்கள்” மற்றும் “கடிகள்” அண்ணாவின் “ நேற்றிரவு படித்தாயா?” என் மேலதிகாரியின் “நான் இன்று வரமாட்டேன் மீதங்களை முடிக்கவும்” என நீளும் பட்டியலில் தேடுகின்றேன் என்னவனின் குறுஞ்செய்தியை....

விடுதி வாழ்க்கையில் தவறவிடுகின்ற அம்மாவின் அதிகாலை முத்தம், சூhடான கோப்பி, அதை தோட்டத்திலமர்ந்து பருகும் இன்பம், சோபாவில் அண்ணாவின் அருகில் அமர்ந்து உணரும் இளஞ்சூடு, நாய்க்குட்டின் பரிஸம்ஈ பல்துலக்காமல் உண்னும் காலையுணவு இப்படியாக தொடரும் என் மழைநாள் பணிகளை ஒரு கணம் நினைத்தவளாக கட்டிலை விட்டு இறங்குகின்றேன். புதிதான இப்புதிய நாளை வரவேற்பதற்கு....

ஆனாலும்  இன்று மாலை அடைமழையிலான எனது நனையலையோ தேங்கி நிற்கும் நீரில் காகித கப்பல்களை விடுவதையோ அம்மாவின் தொலைபேசியினூடான ஏச்சுக்களையோ காய்ச்சல் வராமல் தலையில் ஓடிகொலோன் போட்டு பனடோல் குடிக்கப்போவதையோ நிச்சயம் மிஸ் பண்ணப்போவதில்லை....

Comments

Popular posts from this blog

நிறம் மாறும் மனிதர்கள்

இரும்பில் முளைக்கின்ற இதயங்கள்

மனம் + மனம் = திருமணம் (02)