என் மானசீக குரு நடேசன் அங்கிள் புகலுடல் எய்தி இன்றுடன் 8 வருடங்கள் - 31.05.2012



தனது சமூகத்தின் நீதிக்காக பேனா முனை கொண்டு போர் தொடுத்த வீர ஊடகவியலாளனை நடு வீதியில் சுட்டுவீழ்த்திய நாள். கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்துறைத் தலைவர் தம்பையாவின் படுகொலை பற்றி காரசாரமாகவும் துணிச்சலாகவும்  கட்டுரை எழுதி தொடரப்போகும் இவ்வாறான கல்விமான்களின் கொலைகளை பார்த்துக்கொண்டிருக்க போகிறோமா? என ஆருடம் கூறி இவர்களின் அடுத்த இலக்கு யார்? என வினா எழுப்பிய இவ்வீரனே விடையாகிப் போன நாள். உயிரைப் பாதுகாக்க வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து தினம் செத்துப்பிழைக்கும் புலம்பெயர் வீரத்தமிழர்கள் மத்தியில் ஒரு நாள் ஒரு கணம் மட்டுமே மரணம் என ஊணுடல் அழிந்தாலும் ஈழத்திற்காகவே வித்தாகி போன என் நடேசன் அங்கிளிற்கு என் வீர அஞ்சலிகள்.

Comments

Popular posts from this blog

நிறம் மாறும் மனிதர்கள்

இரும்பில் முளைக்கின்ற இதயங்கள்

மனம் + மனம் = திருமணம் (02)