Love can carve...................
ஏன் எல்லா வழிகளையும் அடைக்கின்றாய்? சில நேரம் நாம் சிலரிடம் காட்டும் அன்பை, அவர்களுக்காக நாம் விட்டுக்கொடுப்பதை, ஈகோவை விட்டு பிடிவாதங்களை விட்டு அவர்களை நேசிப்பதை சிலர் மலிவாக எடை போடுவதுண்டு. பிரிவென்பது உனக்கு வலிக்கவில்லையா? வலிக்காதது எப்படி காதலாகும்? வலிக்கட்டும் ஆனால் இந்தத்தடவை இரு பக்கமும் வலிக்கட்டும் இரு மனங்களும் வலிக்கட்டும். ஆனால் ஒரு மன்னிப்பு கேட்க முடியாத ஈகோ உள்ள காதல் வாழ்விற்கு தேவையே இல்லை. வறட்டு கௌரவங்கள், பெருமைத்தனம் எல்லாம் காதல் வாழ்விற்கு சரி வராது என்ன செய்யனும்? தன்னை விரும்புபவர்களிடம் தோற்கட்டும், முட்டுக்காலிடட்டும் உன்னை நான் மிஸ் பண்றேன் என்று சொல்லட்டும் எப்படி? அது தான் எல்லாம் அடைத்தாயிட்டே அன்பு உண்மையெனில் அது வழிகளைத் தேடிப்பிடிக்கும் அல்லது வழிகளை உருவாக்கும் ஒருவேளை திரும்பி வராவிட்டால்.........? அவர்களை நம்மை விடவும் ஒருவர் நேசிப்பார் என நினைத்தால் போகட்டுமே.... அன்பை இழுத்து நிறுத்த முடியாது. நம்மை இன்னுமொரு உண்மைக்காதல் வந்தடையும். ஏனென்றால் காதல் எப்போதும் தோற்பதில்லை. ஆனால் காதலிப்பவர...