Wednesday, July 31, 2013

மௌனப் பொழுதுகளில்....


வார்த்தைகள் கேட்டிடாத......
சுவாசங்கள் சுட்டுவிடாத..... – பல
மைல் தொலைவில் நாம்…. – உன்
நினைவுகள் மட்டும்
பேரூந்தின் ஜன்னல் ஓரத்து நிலவாக
என்னைத் தொடர்கிறது.....
.



எழுத்தில் மட்டுமே
தொடர்கின்ற பிரியங்களில்
உணர்ந்திடா தூரங்கள்…..
மடல் வரைந்திடாத
மௌனப் பொழுதுகளில் மட்டும்
இடைவெளிகளை இடையறாது
இதயத்துள் இழையோடிய படி!!!

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை