Monday, July 1, 2013

நாய் வால்.....


முன்னர் சில ஆங்கிலேய பாதிரியார்கள் மதமாற்றம் செய்து வந்த காலத்தில் அவர்கள் சரியான மறையறிவை வழங்காது மேலோட்டமாக மதமாற்றம் செய்வதாக புகார் எழுந்தது. இப்புகார் உண்மையில்லை என்று ஒரு பாதிரியார் சாதித்துக்கொண்டிருந்தார். ஒரு தடவை இதை நிரூபித்துக் காட்டுவதாக சவால் விட்டு கூட்டத்திலிருந்த செவ்விந்தியன் ஒருவனை அழைத்தார்.

பாதிரி : நற்கருணை அருட்சாதனம் உனக்கு ஆத்ம திருப்தியளித்ததா?

செவ்விந்தியன் : நிச்சயமாக ஆனா பாதிரியாரே வைனுக்குப் பதிலாக பிராந்தி தந்திருந்தால் இன்னும் நன்றாகவிருந்திருக்கும்...

இது அண்மையில் நான் வாசித்த சிறு கதைங்க…. இப்படித் தாங்க சில பேர் இருக்கிறாங்க… ஏதோ அவர்கள் திருந்த வேண்டும் என்று நினைத்து நாம் சொன்னால் அல்லது அறிவுரை கூறினால் நம்மை கேலிப் பொருளாக்கி விடுவார்கள் சில வேளை அவர்கள் ஹீரோ ஆகிடுவார்கள். உண்மையில் இவர்களைத் திருத்துவது என்பது நாய்வாலை நிமிர்த்துவதை விட கடினமானது.

ஒருவகையில் பார்க்கப் போனால் இவர்களை திருத்தித்தான் நமக்கென்ன ஆகப்போகிறது என்று கூட தோன்றும்…. இன்னும் சிலர் இருக்கிறார்கள் தமது குற்றங்களை மறைக்க அடுத்தவர்களை குறை கூறுவார்கள். (சோடித்ததாகவும் இருக்கும்)

என் அனுபவத்திலும் அவ்வாறான ஒரு “நிமிர்த்த முடியாத (நாய்) வாலை” பார்த்திருக்கின்றேன். அவர் சமூகத்தின் உயர் பதவியிலிருப்பவர் (படித்ததால் மட்டும் போதாது) ஒரு பெண்ணை காதலித்திருக்கின்றார். கூடவே பல பெண்களை பக்கவாட்டிலும்…. காதலித்து திருமணம் செய்யவுள்ளவள் பொறுப்பாளா? இல்லை அவள் குடும்பம் தான் பொறுக்குமா? வேறொரு நல்லவனை திருமணம் செய்து அவள் போய்விட்டாள்.


ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? வீட்டில் திருமண பேச்சு போய்க்கொண்டிருக்கும் போதே இன்னும் பெண்களை விட்டபாடில்லை…. ஓவ்வொருவரிடமும் “முன்னையவள் தன் சாதியைத் தான் பார்த்து தன்னைவிட உயர்சாதியான வேறொருவரை திருமணம் செய்துவிட்டாள்” என்று கதையளந்து கொண்டு ஒவ்வொரு பெண்களின் மனதிலும் இடம்பிடிக்க அலைவது தொடர்ந்திருக்கிறது. இவர் அதிஸ்டம் (???) ஒரு பணக்கார பெண் வலையில் சிக்கியிருக்கின்றாள். இவரது பில்டப்புக்கள் கொஞ்சம் ஓவரா போய்க்கொண்டிருக்கும் போது இவரது செட்டப்புக்களும் அவளுக்கு தெரிய வந்துவிட்டது….அவள் மற்றவள் போல் சும்மாவிருக்கவில்லை. கிழிகிழியென்று கிழித்து மனித உரிமைகள் வரை சென்றிருக்கின்றாள். காலில் விழாக் குறையாக மன்னிப்பு கேட்க… அவளும் எச்சரித்து விட்டிருக்கின்றாள். இவர் சிக்கினாலும் சிரித்துக்கொண்டே “அவள் என் பின்னால் திரிந்தாள்” என்று கூறிக்கொண்டு மறுபடியும் தெருவில் அலைந்து கொண்டிருக்கின்றாராம்.

இதில் பாருங்கோ
•    நிலவைப் பார்த்து நாய் குரைத்ததை போன்று அந்தப் பெண்ணுக்கு இவரால் எந்த களங்கமும் வரப்போவதில்லை…..
•    எப்படியும் இழந்த பெண்களை போன்றதான நல்வாழ்க்கை கிடைக்கப்போவதுமில்லை
•    இருக்கின்ற பல்லையெல்லாம் வெளியில் காட்டிக்கொண்டு திரிந்தாலும் ஒவ்வொரு நொடியும் பயந்து கொண்டும், மனதளவில் அவமானப்பட்டுக் கொண்டும் வாழ்வதை விட துன்பம் வேறேதுமில்லை.

ஆனாலும் அந்த பொண்ணு மாதிரி தட்டிக் கேட்க நினைக்கிறவங்களுக்கும் கொஞ்சம் சொல்லனும்
பெரியார் சொல்லிருக்கார் மானமுள்ளவனுடன் தான் போராடனுமாம்"

பிற்குறிப்பு - “பன்றிக்கு இசை சொல்லிக்கொடுக்காதே. நீயும் காலத்தை விரயமாக்குகிறாய், பன்றிக்கும் எரிச்சல் மூட்டுகிறாய்…”



No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை